Showing posts with label திரைப்பட விமர்சனங்கள். Show all posts
Showing posts with label திரைப்பட விமர்சனங்கள். Show all posts

Friday, December 20, 2013

என்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்


நடிகர்கள்- ஜீவா, வினய், சந்தானம்,திரிஷா,ஆண்ட்ரியா 
இயக்கம்- அஹமட் 
இசை- ஹரிஸ் ஜெயராஜ் 
ஒளிப்பதிவு-மதி 
தயாரிப்பு- தமிழ் குமரன், ராமதாஸ் 
வெளியீடு- ரெட் ஜெயிண்ட்ஸ் 

"கோ"விற்கு பின்னர் தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து மீளுவாரா ஜீவா? என்றிருந்த வேளையில் "ஹிட்" என்று சொல்லுமளவுக்கு என்றென்றும் புன்னகை திரைப்படம் இன்று ரிலீசாகியிருக்கு. படம் வெளிவருவதற்கு முன்னராகவே இப்படம் பற்றிய பாஸிட்டிவ் அபிப்பிராயங்கள் மீடியாக்களில் வெளிவந்ததால் நிச்சயம் பலருக்கு இப்படத்தை பார்க்க தூண்டியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்ல. 

படத்தின் கதை இதுதான், சிறுவயதிலிருந்தே நண்பர்களான ஜீவா-வினய்-சந்தானம் வளர்ந்ததும் விளம்பர கம்பனியொன்றை நடாத்தி வருகின்றனர். சிறுவயதில் ஜீவாவின் தாயார் தந்தையை விட்டு சென்றுவிடவே அந்த விரக்தியில் வாழ்ந்துவந்த ஜீவாவின் தந்தை நாசர் ஜீவாவிற்கு பெண்கள் பற்றிய நம்பிக்கையீனங்களை சொல்லி சொல்லி வளர்க்கவே பெண்கள், காதல், திருமணம் இதிலெல்லாம் நாட்டமில்லாமலே ஜீவா வளர்ந்து வருகின்றார், அதுபோலவே தனது நண்பர்களும் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கிறார்... பின்னர் ,ஜீவா ஜீவாவின் நண்பர்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா? இதுவே படத்தின் பிற்பாதி, இதை திரையில் சென்று பார்த்து மகிழுங்கள்.


ஜீவா,திரிஷா - வினய்,சந்தானம் கூடவே இருந்தாலும் தனியாளாய் படத்தை தாங்கி நிற்கின்றார். படத்தின் கதைக்கேற்ப அழகான, இளமையான, துடிப்பான, தேவைப்ப்படுமிடத்தில் காமெடித்தனமான ஹீரோவாக ஜீவா திரையில் தோன்றுகின்றார். நீதானே என் பொன்வசந்தம் சுமாராயினும் ஜீவா-சமந்தாவுக்காக எவ்வாறு ஓரளவுக்கேனும் ரசித்ததுபோல இதிலும் ஜீவா-திரிஷா ஜோடி கலக்கலாக இருக்கிறது. இடைவேளைக்குமுதல் திரிஷாவுக்கு முக்கியத்துவம் பெரிதாக கொடுக்கப்படவில்லை என்றாலும் இடைவேளைக்கு பின்னர் திரிஷாவின் பங்கு சிறப்பானதே!

வினய், சந்தானம்- படத்தில் ஜீவாவின் கரக்டர் கொஞ்சம் சீரியசானதாக இருப்பதால் வினய், சந்தானம் ஆகிய இருவரும் ஆடியன்சை நன்றாகவே சிரிக்கவைத்துவிட்டனர். கிடத்தட்ட "உன்னாலே உன்னாலே" போலவே வினய்க்கு கரக்டர். சந்தானமும் தன்பங்கிற்கு சிறப்பாகவே நடித்துள்ளார். அண்மைய படங்களில் இவரின் மொக்கை காமெடிகலால் நொந்துபோனவர்களுக்கு இப்படம் பெரிய திருப்தியை கொடுக்கும். இயக்குனர் ராஜேஷ் போல சந்தானத்தை முதன்மைப்படுத்தாது திரைக்கதை,காட்சியமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சந்தானத்தால் நொந்துபோனவர்கள் இங்கே பயப்பிட தேவையில்லை.. தாராளமாகவே படத்தை பார்க்கலாம்.


இசையமைப்பாளர்- பாடல்கள் இதட்குமுதல் கேட்கவில்லை. படத்திற்கான பின்னணி இசை சிறப்பானதாகவே இருந்தது. வழக்கமாக இயக்குனர் கேட்ட பாடல்களின் எண்ணிக்கையைவிட குறையவே பாட்டை இசையமைக்கும் ஹாரிஸ் இந்தப்படத்துக்கு தானாகவே முன்வந்து மேலதிகமாக ஒரு பாடலை இசையமைத்து கொடுத்துள்ளாராம்.

இயக்குனர்- இயக்குனர் அஹமெட்டுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் "வாமணன்" சரிவர போகாவிடினும் இந்தப்படத்தை சிறப்பாகவே எடுத்துள்ளார். ராஜீவ் மேனன், மறைந்த இயக்குனர் ஜீவா(அவரின் கீழ் உதவி இயக்குனரா இருந்தவர்???), கௌதம் மேனனின் மேக்கிங் சாயல் இவரிலும் இருக்கின்றது. 'ஈகோ கொண்ட ஆணின் வாழ்க்கை எப்பிடி போகிறது?' ஒருவரிக்கதையை மையமாக வைத்து வித்தியாசமான காட்சியமைப்புடன் படத்தை மெருகேற்றியிருக்கிறார். 

படத்தில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு குறைகள் இல்ல, மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழக்கூடிய படம்... 

Wednesday, October 30, 2013

ஆரம்பம் திரைப்பட விமர்சனம்- சும்மா அதிருதல்லே!


அப்பாடா? ஒருவழியாக ஆரம்பம் பார்த்து முடிச்சாச்சு, எத்தனை நாள் கனவுகள்? எத்தனை ஏக்கங்கள்? எல்லாத்துக்கும் இன்று நம்ம தல+விஷ்ணு கூட்டணியினர் அட்டகாசமாக விருந்தளித்துவிட்டார்கள். ஆரம்பம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 18 நாடுகளில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீசாகிறது. சில நாடுகள், தமிழகத்தின் சில பகுதிகளில் இதற்கு முன்னைய ரிலீசை விளுங்குமளவுக்கு அதிக ஸ்கிரீனில் ரிலீசாகிறது, அதுமட்டுமில்ல அட்வான்ஸ் புக்கிங் வேற விண்ணை பிளக்கிறது. சரி படத்துக்கு வருவம். அதற்குமுதல் பலரின் எதிர்வுகூறல்போல இதிண்டும் சுவாட்பிஸ்சின் தழுவல் இல்ல. சரி அப்பிடி என்னதான் கதை? அதை நீங்களே திரையரங்குக்கு சென்று பாருங்கள்.....


சரி படத்தின் நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்களின் ஸ்பெசாலிட்டி என்ன எண்டதை பார்ப்பம்...

அஜித்- சொல்லவே வேணாம். சூரியனை சுற்றி எத்தனை கோள்கள் இருந்தாலும் சூரியனை மையமாகவே அவை சுற்றுகிறது. அதேபோல பவர் கூடியதும் சூரியன்தான்.. அதேபோலவே அஜித்தும். அஜித்தின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம். இரண்டு கரக்டர்ஸ். முதலாம் பாகத்தில் ஒருவிதமான அஜித்தையும், பிற்பாதியில் அஜித்தின் இன்னொரு முகத்தையும் பார்க்கலாம். ஸ்கிரீனில் அஜித் பிரசன்னமாகும் ஒவ்வொரு கணமுமே சூப்பர்.. புகுந்து விளையாடிட்டார் தல. இரண்டாம் பாதியில் நீண்ட நாளுக்குப்பிறகு சமுகத்தின் பொறுப்பு வாய்ந்த, மசேஜ் சொல்லும் அஜித்தை பார்க்கக்கூடியதாயிருந்தது. 

ஆர்யா, தப்சீ- இன்னொரு இண்டரெஸ்டிங்கான கரக்டர். ஆர்யாவின் கதாபாத்திரம் காமெடி+சீரியசான கரக்டர். தல ஆக்சன், ஸ்டைலால் கிளாப்ஸ் வாங்க ஆர்யா நகைச்சுவையான கதைகளால் படத்தை மேலும் மெருகேற்றுகிறார். அதேபோல நயன்தாராவும் தன்பங்கை நல்லாவே செய்துள்ளார். அவரின் கரக்டரும் வழமையான படங்களைவிட வித்தியாசமானது. கிட்டத்தட்ட பில்லாவில் வந்த கரக்டர் போல..


யுவன்- பின்னணி இசை, பாடல்கள் என பின்னி எடுத்துள்ளார். 
பாடல்கள்- பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன.. காட்சியமைப்பும் குறை சொல்லும்படியாக இல்ல. ஹோலி சாங் எல்லாத்தையும்விட ஸ்பெசல்.
ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாகவே இருந்தது.

இயக்குனர்- அஜித் ரசிகர்களா விஸ்ணுவிற்கு மிகப்பெரிய சல்யூட். ஏற்கனவே 2007 இல் கொடுத்த பில்லா பாக்ஸ் ஆபிசில் வசூல் கொட்டோ கொட்டென்னு கொட்டிச்சு, அதுமட்டுமில்ல புதியதோர் அஜித்தை உருவாக்கினார் பில்லா மூலம். அதேபோல் இப்படத்திலும் அவரின் கதை,காட்சியமைப்பு சிறப்பாகவே இருந்தது. படம் தொடக்கி முதல் 45 நிமிடங்கள்வரை பல கரக்டர்களின் அறிமுகம் இருப்பதால் அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? செயற்பாடுகள் என்ன என்பதை இயக்குனர் செவ்வனே சித்தரித்துள்ள்ளார் அதன்பின்னர் திரைக்கதையில் அனல் பறக்கும்..

மொத்தத்தில் படம் சூப்பர்.. தல ரசிகர்களுக்கு ஆரம்பமே போதும் தீபாவளி ரீட்டுக்கு.. தீபம் ஏத்தி பட்டாசு கொளுத்தியெல்லாம் தீபாவளி கொண்டாடவேணாம்.. எல்லாம் ஆரம்பம் பார்க்க தியேட்டருக்கு செல்லுங்கள்.

Friday, July 19, 2013

மரியான்- சுருக்கமான விமர்சனம்


பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தனுஷ்,பார்வதி நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீசானது. அண்மையில் ஹிந்தியில் வெளியான ரஞ்சனா பெரும் வரவேற்பை கொடுத்ததையிட்டு அதன்மூலம் தமிழ் தவிந்த வடஇந்தியாவிலும் மரியானுக்கு ஓரளவு கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் கதைக்குள் செல்வோமாயின் கதாநாயகன்,கதாநாயகி இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருதலைக்காதலில் ஆரம்பித்து இருவரும் காதலர்களாகி, கதாநாயகியின் குடும்ப கடனை தீர்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சூடானுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனுஸ். அப்புறம் அங்கு அவர் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே படத்தின் கதை.


படத்தில் தனுஷ் வழமைபோல தனது அபரிதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். எனினும் சில சீனில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். அதைவிட ஆடுகளம் பட பாஷைபோல் கதைப்பது சில இடங்களில் விளங்கவில்லை. ஆடுகளம் கொடுத்த விருதுகளின் தாக்கத்தில் இருந்து தனுஷ் இன்னமும் மீளவில்லை என்றே தோணுகிறது. மற்றும் பார்வதி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். பாடல்கள், பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாமே மிகமெதுவாக செல்வது கொஞ்சம் போர். அதேபோல ஒளிப்பதிவும் அருமை, எனது கருத்துப்படி தனுஷின் பங்களிப்பின் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவும் செவ்வனே அமைந்துள்ளது. கடற்கரைக்காட்சிகளை துல்லியமாகவே படம்பிடித்துள்ளனர். நேரில் அந்த சூழலை அனுபவிப்பதுபோல் ஒரு உணர்வு.


இதைவிட இயக்குனரின் பங்களிப்பு என்று பார்த்தால் மேலே சொன்னதுபோல நடிகர்கள்,நடிகைகள், இசை,ஒளிப்பதிவு இவற்றையெல்லாம் சிறப்பாகவே ஒருங்கமைத்துள்ளார். ஸ்கிரீன்பிளேயும் ஓகே, ஆனால் கதை விடயத்தில் மிகப்பெரும்பிழையை விட்டுள்ளார். கதை தவிர மற்ற விடயங்கள் சிறப்பாக இருந்ததால் சிலருக்கு கதையில் உள்ள ஓட்டைகள் தெரியவில்லை. கதை விடயத்தில் விட்ட பிழை என்னவெனில், இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக ஆபிரிக்கா செல்லும் ஒருவர் அங்கு படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் ஸ்ரோறி. ஆனா இந்தப்படத்தை பார்த்தாப்பிறகு கதாநாயகன் அப்பிடி என்னதான் அங்கை கஸ்டப்பட்டார்? என்று பார்த்தால் அதன் உள்ளடக்கம் மிக மிக குறைவே.


தனுஸ் இரண்டு ஆண்டுகள் அங்குவேலை செய்கிறார். ஆனா என்ன வேலை செய்கிறார்? வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை?? அவை ஒன்றுமே காட்டப்படவில்லை. சரி, இயக்குனரின் நோக்கம் அதுவல்லாமல் இருக்கும் என்று தொடந்து பார்த்தால் ஆபிரிக்காவில் இருந்து தனுஸ் இந்தியாவை நோக்கி வெளிக்கிடுகிறதிலிருந்து ஆபிரிக்க காட்சிகள் தொடங்குகின்றது. அவ்வேளையில் அங்குள்ள தீவிரவாதிகள் தனுஸ் உட்பட அவரின் குழுவை பிடித்து கடுமையாக தாக்குகிறது, பிறகு வேற இடத்தில் கொண்டுபோய் தாக்குகிறது .. இப்பிடி மாறி மாறி அடிப்பதை தீவிரவாதிகள் தாக்குவதையே காட்டியிருக்கிறார்கள். இன்னமும் இதை சிறப்பாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். மற்றும் படம் ஆமை வேகத்தில் செல்வதும் கொஞ்சம் போர். இந்தப்படத்தின் உள்ளடக்கத்தை துல்லியமாக படக்குழுவினர் அறிந்துவிட்டனர்போலும், அதனால்தான் "3" படத்துக்கு செய்ததுபோல் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பவில்லை. எனினும் கதையளவில் உள்ள ஓட்டைகள் மற்றைய விடயங்களின் நேர்த்தியான தொகுப்பினால் பார்வையாளர்களை அந்தளவுக்கு வெறுக்கவைக்கவில்லை. எனது கருத்துப்படி படம் அவரேஜ். வணிக ரீதியாக ஹிட்டாவதும் சந்தேகமே!                        


Friday, July 5, 2013

சிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே!)


ஒருவழியாக பலரும் எதிர்பார்த்த சிங்கம் 2 திரைப்படமானது உலகமெங்கும் 2000 இற்கு அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகிவிட்டது. 2010 இல் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் அதன் தொடர்ச்சியாகவே சிங்கம் 2 திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் ஹரி கூறுகையில் இதுவரை சிங்கம் 2 இற்காக பாடுபட்டதுபோல் எந்தவொரு திரைப்படத்திற்கும் பாடுபடவில்லை, இனியும் பாடுபடப்போவதில்லை என்றார். சூர்யாவின் கடந்த இரு படங்களும் பெரிதாக எடுபடாத நிலையில் இந்த படத்தை நிச்ச்சயம் ஹிட்டாக்கவேணும் என்ற முனைப்பில் ஹரி சூர்யாவை வைச்சு செவ்வனே செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லணும். இந்தப்படத்தின் டெயிலர்,டீசர் போன்றவற்றில் உரத்த சத்தங்களுடனான வசனங்கள், காரமசாலா அம்சங்கள் இருந்ததால் இந்தப்படம் தேறாதெண்டே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனா மெயின் பிக்சர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது. அடுத்ததாய் விமர்சனத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.


நடிகர்கள்- சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், ரஹ்மான்,                             ராதாரவி, நாசர்
இயக்கம்- ஹரி
இசை-தேவிசிறீ பிரசாத்
ஒளிப்பதிவு- பிரியன்
தயாரிப்பு- லக்ஸ்மன் குமார்
வெளியீடு- பிரின்ஸ் பிக்சர்ஸ்(தமிழில்), ஸ்ரூடியோ கிரீன்(தெலுங்கு)

கதைக்குள் போவோமாயின் சிங்கம் படத்தின் இறுதியில் போலிசை ராஜினாமா பண்ணிவிட்டு மளிகைக்கடை வைக்கப்போவாதாக சொல்வார் சூர்யா, ஆனா உண்மையில் அவர் பொதுமக்களின் பார்வையில் போலிசை ராஜினாமா பண்ணியதுபோல் பாவனை செய்துகொண்டு தூத்துக்குடியில் ஆயுதம் கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அப்புறம் ஒரு கட்டத்தில் பப்ளிக்கா டி.ஜி ஆகி கடத்தல்காரர்களை வேட்டையாடுகிறார். இதுவே ஒன் லைன் கதை. அவர் எப்பிடி வேட்டையாடுகிறார் என்பதை திரைக்கு சென்று பாருங்கள்.


சூர்யா- போலிசுக்கேற்ற எடுப்பான,மிடுக்கான தோற்றம், ஆவேசம், வேகமான உரத்த தெளிவான வசன உச்சரிப்பு, டான்ஸ் என சீனுக்கு சீன் பின்னி எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் முக்கியமான பிளசே சூர்யாதான்.

ஹரி- வழமைபோலவே இப்படத்திலும் சிறப்பாக செயற்பட்டுள்ளார், எனினும் கதையில் பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி சற்று குழப்பமடைய செய்துவிட்டார். படத்தின் நீளமும் கூட. எனினும் வேகமான ஸ்கிரீன்பிளே, கமெர்சியல் அம்சங்களின் சரியானா கலைவையினால் பார்ப்பவர்களை சலிப்படைய செய்யவில்லை.

அனுஷ்கா,ஹன்சிகா- அனுஸ்காவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவிற்கு காட்சிகள் அதிகம். heavy role என்று இல்லை. ஆதலால் வழமைபோலவே படத்தை மெருகேற்றியுள்ளனர்.

விவேக்,சந்தானம்- இப்பகுதியில் சந்தானத்துக்கு விவேக்கைவிட அதிக காட்சிகள். சிங்கம் ஒருபுறம் வேட்டையாட அவ்வப்போது இவர்களின் காமெடி பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியது.

பாடல்கள்- ஆடியோ, வீடியோ இரண்டுமே அவரேஜ். சூர்யாவை மட்டும் ஓரிரு பாடல் காட்சிகளில் வழமைக்கு மாறான டான்ஸ்சில் ரசிக்கலாம்.


படத்தில் வெளிப்படையா சொல்லுமளவுக்கு குறை என்னவென்றால் கடத்தல்காரர்கள் சர்வதேச வலையமைப்பில் இருந்து தூத்துக்குடிக்கு போதைபொருட்களை கடத்துவதாகவே கதை, ஆனா இவற்றை கண்காணிக்கும் சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏதோ பக்கத்து வீட்டில என்ன நடக்கிறது என்பதை வேலி துவாரத்தின் ஊடாக ஒட்டி நின்று பார்ப்பதுபோல அவதானிக்கிறார். இது சற்று நடைமுறைச்சாத்தியமற்றதே!! நிறைகள் என்று பார்த்தால் சந்தானம் எந்திரன்,தசாவதாரம்,சிங்கம் பட காட்சிகள் போல் வருபவை, இடைவேளைக்கு பின்னரான அனல் தெறிக்கும் வேகம்.... இவ்வாறு குறைகளை விட நிறைகளை சொல்லிட்டே போகலாம். எனது கருத்துப்படி படம் சூப்பர். மிஸ் பண்ணிடாதீங்க..

*கடந்த வாரம் இயக்குனர் ஹரி பற்றி நான் எழுதிய பதிவு, தவறாமல் இதையும் ஒருதடவை படிக்கவும்.

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா- சுருக்கமான விமர்சனம்.

பாக்கியராஜின் "இன்று போய் நாளை வா" திரைப்பட கதையை அனுமதியின்றி திருடி படம் எடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து சந்தானம்-பாக்கியராஜ் இடையேயான சமரசத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. படத்தின் கதை என்னவென்றா ஊரில வெட்டித்தனமா சுத்தித்திரியும் மூன்று பசங்க ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அந்தப்பெண் யாரை காதலிக்கிறாள் என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்... முன்று பசங்களாக சந்தானம்,பவர்ஸ்டார்,சேது ஆகியோரும் ஹீரோயினாக விசாகா சிங் உம், கௌரவத்தோற்றத்துக்கு சிம்புவும் மற்றும் பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

சந்தானம்- சொல்லவே தேவையில்ல, ஓகேஓகே, கலகலப்புக்கு பிறகு மீண்டும் ஒரு முழு நீள திரைப்படம் ஒன்று சந்தானத்தை நம்பியே எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றாட்போல் பின்னி எடுத்திருக்கிறாரெண்டே சொல்லணும். பவர்ஸ்டாரின் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரும்புதிருமாக சந்தானம் அடிக்கும் பஞ் தியேட்டரையே அதிரவைக்கிறது. 

பவர்ஸ்டார்- இன்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னாள் இப்பிடி ஒராள் இருக்கிறாரா? என்று கேட்டால் சினிமாவில் பைத்தியமா ஈடுபபாடுடையவர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. குறுகிய காலத்தில் கோமாளித்தனத்தாலும், அப்பாவித்தனத்தாலும், அனுதாபத்தாலும்(நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு) பெரிய ஸ்டாராக????... இல்லீங்க இல்லீங்க.... எல்லோருக்கும் அறிமுகமானார். நான் பார்த்த திரையரங்கின் பவர்ஸ்டார் அறிமுகமாகும் காட்சியின்போது எழுந்த ஆர்ப்பரிப்பு வேறு நடிகர்களின் படத்துக்கு இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். (இத்தனைக்கும் அவரின் எந்த படத்தை பார்த்து இம்பிரஸ் ஆனீங்க என்று ஒரு வார்த்தை நச்சென்று கேட்டா?..வேணாம் கேக்குறவனுக்கே வலிச்சிடும்.)
சரி, படத்தில் எப்பிடி என்று பார்த்தால். கஷ்டப்பட்டு நடிக்கிறது புரிகிறது..என்றாலும் படத்துக்கு தன்னால் மைனஸ் வராதவாறு தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்...

இதுதவிர இந்தப்படத்தில் நடித்த அனைத்து இதர நடிகர்,நடிகைகளும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.....பாடல்களும் பரவாயில்ல, குறிப்பாக பழைய பாடல்களின் ரிமேக் செய்யப்பட்ட பாடல்கள் நன்றாகவே இருந்தது. பின்னணி இசையும் நன்றாகவே இருந்தது...


படத்தின் பிளஸ் என்று பார்த்தால்....

தொடங்கியதிலிருந்து முடியும்வரை ஆடியன்சுக்கு அலுப்பு தட்டாமல்,எரிச்சலூட்டாமல் திரைக்கதையை இயக்குனர் மணிகண்டன் சிறப்பாகவே நகர்த்துகின்றார்...

குறிப்பாக கதாபாத்திரங்களுக்கான பாத்திரத்தேர்வு மிகப்பெரிய வெற்றியை முதல்லே அளித்துவிட்டது என்றுதான் சொல்லணும். குறிப்பாக சந்தானம்,பவர்ஸ்டார்,கணேஷ் ஆகியோர் திரையில் தென்படும்போது அவர்களின் கதைவசனங்களை கேட்கமுன்னரே ஆடியன்ஸ் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு வந்துகொண்டே இருந்தது.. இவ்வாறாக பாத்திரத்தேர்வு நேர்த்தியாக இருந்தா என்னதான் படத்தில் இடையிடையே ஓட்டைகள் இருப்பினும் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

முழுக்க முழுக்க காமெடிப்படம் மற்றும் முன்னணி ஹீரோக்கள் இல்லாததால் ரசிகர்களால் லாஜிக் பிழைகள் மற்றும் விதண்டாவாதமான எதிர்க்கருத்துக்கள் வெளிவராது............

எது எப்பிடியோ இந்த பொங்கலில் மூன்று படங்கள் வெளிவந்தாலும் இந்த ஒரு படமே போதும் பொங்கல் பொங்கி வழிய... சினிமா ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீர்கள்... குடும்பத்தினர்,நண்பர்களுடன் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்....

Friday, December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம்- திரைப்பட விமர்சனம்

ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லுமளவுக்கு ஹிட் படங்களை தனக்கேயுரிய பாணியில் ஸ்டைலிசா கொடுத்துவந்த கௌதம் வாசுதேவ மேனனுக்கு யார் கண் பட்டுதோ, இப்பவெல்லாம் இறங்குமுகமாகவே இருக்கின்றது. இறுதியாக விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்கு பிறகு வந்த "நடுநிசி நாய்கள்", "ஏக் திவானா தா" (விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்) இந்த இரண்டும் தோல்வியடைந்ததது. அதுமட்டுமல்ல திரைக்கதை,இயக்கத்தில தனது பிடிவாதமான போக்கால் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய்,சூர்யாவின் படங்களும் கைநழுவி போய்விட்டன. எது எப்பிடியோ எனினும் கௌதமின் படங்களுக்கான கிரேஸி இன்னமும் குறையவில்லை. இந்தப்படத்துக்கான இசையமைப்பாளரை தேர்வுசெய்வதில் ரஹுமான், ஹரிஸ் என போய் இறுதியில் இளையராயாவிடமே அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் இசைவெளியீட்டு விழாவை வேற மிகப்பிரமாண்டமாக செய்தார்கள். இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்க செய்துவிட்டது. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முன்று மொழிகளும் எடுக்க தீர்மானித்தார்கள். அப்புறமாக ஹிந்தியை கைவிட்டு தமிழ்,தெலுங்கில் மட்டும் எடுக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தெலுங்கில் ஜீவாவின் கரக்டருக்கு பதிலாக "நானீ" நடிக்கிறார்.
அடுத்ததாய் பட விமர்சனத்துக்கு போவோம்..


நடிகர்கள்- ஜீவா,சமந்தா,சந்தானம் 
இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் 
இசை- இளையராஜா 
ஒளிப்பதிவு- எம்.எஸ்.பிரபு, ஓம் பிரகாஷ்
தயாரிப்பு- ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்றேட் குமார்,ஜெயராம், கௌதம் மேனன்.
வெளியீடு- போட்டான் காதாஸ், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.

படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இது கௌதம் மேனனின் படங்களில் எதிர்பார்க்கமுடியாது.. அவரின் படங்களை பொறுத்தவரை கதையை நம்பி படம் எடுப்பதில்லை, சிறியதொரு கருவை வைச்சு தனது மேக்கிங்கால் வித்தியாசமான முறையில் ஆடியன்ஸிடம் கொண்டுபோய் சேர்ப்பார். மணிரத்தினம்,ராஜீவ் மேனன்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு பட இயக்குனர்) பாணியிலான இவரது மேக்கிங் வேற இயக்குனர்களிடம் காணக்கிடைக்காததாலும், மணிரத்தினத்தின் படங்கள் இப்போதெல்லாம் பெரிதா வராததாலும் இவரின் இயக்கம் ஒரு தனித்துவமானதாகவே இருக்கின்றது. கதையின்படி ஜீவா,சமந்தா இருவருமே சிறுவயதிலிருந்து பாடசாலை,காலேஜ் என ஒன்றாக படித்து பழகியவர்கள், காதல் வயப்படுகிறார்கள்.. அவ்வப்போது இருவரிடையே ஈகோ பிரச்சினை. பின்னர் பிரிந்து சென்றுவிடுகிறார்கள், சமந்தாவுடனான காதல் சரிப்பட்டுவராதெண்டு தெரிந்த ஜீவா பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்... அப்புறம் என்ன நடக்கிறது?? இதுதான் சுவாரிஸ்யம்.. வழமையான கௌதம் படங்களிலிருந்து கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. இதை படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளுங்கள்.......  
ஜீவா,சமந்தா- இந்த படத்தின் பெரிய பிளசே இவர்கள் இருவரும்தான். ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக இளமையாக, அழகாக சும்மா லட்டுமாதிரி இருக்கிறார்கள். அதனால படம் பிடிக்காதவர்களும் இவர்களை பார்த்தே ஓரளவு திருப்திப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பதிலாக ஹாண்ட்சம் இல்லாத ஹீரோவையும், அட்டு பிகரையும் போட்டிருந்தா முப்பது நிமிடத்துக்குமேல எவரும் பொறுமையாக திரையரங்கில் இருந்திருக்கமாட்டார்கள்.

சந்தானம்- கௌதமின் கைகிளாஸ் படத்துக்கு சந்தானம் மாதிரியான காமெடியன்கள் அவ்வளவு பொருத்தமில்லை எண்டாலும் ஆமை வேகத்தில் செல்லும் ஸ்கிரீன்பிளேக்கு சந்தானத்தின் காமெடிதான் ஆடியன்சை நித்திரை கொள்ளவிடாமலாவது வைச்சிருந்தது.
இயக்குனர் கௌதம் மேனன்- கௌதமிடமிருந்து எதிர்பார்த்தளவு இல்லை. முதற்பாகம் மெதுவாகவே நகருகிறது, அதைவிட எடிட்டிங்கில் படு சொதப்பல். நிறைய காட்சிகள் துண்டாடப்பட்டுவிட்டது.  இரண்டாம் பாகம்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. 

இசையமைப்பாளர்- ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை சொதப்பலெண்டே சொல்ல தோன்றுகிறது. குறிப்பாக பின்னணியில் இவர் கொடுக்கும் குரல் தாங்கமுடியல... அதை வேறு பாடகர்களைக்கொண்டு குரல் கொடுக்கவைத்திருக்கலாம். பாடல்கள் மட்டும் பார்க்கக்கூடியதாயுள்ளது.

சுருக்கமா சொல்லப்போனால் இந்தப்படத்தில் ஜீவா,சமந்தா, சந்தானம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். பாடல்கள் நல்லாயுள்ளன. பின்னணி இசை சொதப்பலாயுள்ளது... கௌதமின் இதற்கு முன்னைய முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்ககூடியதாயுள்ளது..
எனது கருத்துப்படி முதற்பாகம் அவரேஜ், இரண்டாம் பாகம் சூப்பர்.... மொத்தத்தில் ஓகே ரகம்.... 
கௌதமின் வழமையான ஹிட் படங்களே "ஏ" சென்றரில்தான் வசூலில் கல்லா கட்டும். "பி","சி" ஆடியன்சை பெரிதாக கவருவதில்லை. அப்பிடி இருக்கும்போது இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தேறுவது சந்தேகம்தான்..

Friday, May 11, 2012

கலகலப்பு- கலக்கலான விமர்சனம்..


ஒரு கல் ஒரு கண்ணாடி வந்து ஒரு மாதங்களே ஆகவில்லை, அதற்குள் மீண்டுமொரு முழுக்க முழுக்க காமெடியிலான படம்... சுந்தர்சியின் இருபத்தைந்தாவது படமும்கூட.. எல்லோருக்கும் வாற அந்த கதாநாயகன் ஆசைதான் சுந்தர்சியின் இயக்குனர் எண்ட சினிமா பயணத்திற்கு இடையே சின்ன தடங்கல் ஏற்பட்டாலும், மனுஷன் நல்லா பட்டு தெளிந்துவிட்டார்போலும்.. மீண்டும் இயக்குனராகவே விஸ்வருபம் எடுத்திட்டார். சுந்தர்சி ஹீரோவாக நடிக்கும்போது அந்த படங்கள் தோல்வியடையவேணும் என்று நான் நினைத்ததுண்டு, ஏனென்டா அப்பதானே மீண்டும் முழுநேர இயக்குனராக மாறுவார் எண்ட அந்த ஆசைதான்.... மணிரத்தினம்,சங்கர்,பாலா,அமீர் போன்ற முதல்தர இயக்குனர் இல்லாவிடினும் ரசிகர்களை ஏமாற்றாத இயக்குனர்களில் இவர் முதன்மையானவர்... உள்ளத்தை அள்ளித்தா, வின்னர்,கிரி,லண்டன்,ரெண்டு என்று சந்ததி சந்ததியா பேசும் அளவுக்கு நகைச்சுவைகளை இவரின் படங்களில் அவதானிக்கலாம்.. அதே வரிசையில்தான் இந்த "கலகலப்பு" திரைப்படமும்.....................


சரி இனி விமர்சனத்துக்கு போவோம்.....


நடிகர்கள்- விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா
இயக்கம்- சுந்தர்சி
இசை- விஜய் எபநிசியர்
ஒளிப்பதிவு- சுந்தர்
தயாரிப்பு- குஸ்பு சுந்தர்சி
வெளியீடு- திருப்பதி பிரதர்ஸ்(UTV)

முதற்பாகம்..................
விமலுக்கு சொந்தமான மசாலா கபேயானது சந்ததி சந்ததியாக சிறப்பாக பேணிபாதுகாக்கப்பட்டுவந்ததொன்றாகும்.. ஆனால், விமலால் அந்த பெருமையை கட்டிக்காக்கமுடியேல.. எப்பிடியாவது கபேயை முன்னுக்கு கொண்டரனுமெண்டு ஊர் ஊரா கடன் வாங்கியும் முடியல... இதற்கிடையில திருட்டு குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிவாவும் சிறையிலிருந்து வெளிவருகிறார். விமல் இருக்கும் ஊரிலுள்ள போலிஸ்டேசனில் ஒவ்வொருநாளும் கையெழுத்துபோடணும் எண்டதால விமலோடையே சேர்ந்து இருக்கிறார்... அப்பிடியே ரெண்டு அழகுப்பதுமைகளும் விமலுக்கு அஞ்சலியும், சிவாக்கு ஓவியாவுமாக ஆளுக்கொன்றாக செட் ஆகுறார்கள்.. இதற்கிடையில் அஞ்சலிக்கு ஊரில மாப்பிளை பார்க்க, அவசரம் அவசரமாக அஞ்சலிட ஊருக்கு கிளம்புறார் விமல்.... இதோட முதற்பகுதி ஓவர்......................


இரண்டாம் பாகம்...
இந்தப்பட கதையை ரெண்டு பகுதியா பிரிச்சு எழுத காரணமே சந்தானம்தான்... காரணம், அவர் முதற்பாதியில் இல்லை... அவர் இல்லாத அந்த முதற்பாதி என்னைப்பொறுத்தவரையில் பெரிதாக இல்லை எண்டே சொல்லத்தோன்றுகிறது.. சிவாவின் மொக்கை ஜோக்குகளை முதற்பாதியில சகிக்கவே முடியல.. ஏதோ ஜோக் அடிக்கிறேன் எண்டு கோவம் வாறமாதிரி காமெடி பண்ணினார்.... ரெண்டாம் பாகத்தில சந்தானத்திண்ட அறிமுகத்தோட படமும் விறுவிறுப்பாக நகரத்தொடங்கியது.. குறிப்பாக சந்தானத்திண்ட அறிமுகமே செமையா இருந்திச்சு, ரஜினி,அஜித்,விஜய்க்கே இல்லாத ஒரு மாஸ் இன்ட்ரோடக்சன்.. ஆனா அவர் மாசா இல்ல தூசா எண்டு படத்தை பார்த்து அறிந்துகொள்ளுங்க..........


சந்தானம்- ஒருவிதத்தில் நோக்கும்போது சூப்பர்ஸ்டாருக்கும் சந்தானத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. ரஜினிட படங்களை பார்த்தால் தெரியும், கிட்டத்தட்ட மல்டிஸ்டார்ஸ்ட படம்போலவே இருக்கும், படத்தில வாற ஒவ்வொருத்தருமே அடிக்கடி திரையில் பார்த்த முகங்களாய் இருக்கும்.. ஆனால், எத்தனை பேர் வந்தாலும் படம்பார்த்துமுடிய ரஜினி மட்டுமே மனதுக்குள் நிற்பார்.. அதுபோலவே சந்தனமும்.. மற்ற எல்லா நடிகர்களையும் பின்தள்ளிவிட்டு அவற்றை காட்சிகளே படம் பார்த்துமுடிந்தபின் மனதில் நிற்கும்... ஓகேஓகே கு பிறகு மீண்டும் கலக்கியிருக்கிறார்..... இந்தப்படத்திலும் இடைவேளையின்பின் சந்தானத்தின் வருகைக்குப்பிறகுதான் படம் செம கலாட்டாவா போகுது.....

சுந்தர்சி- இடைவேளைக்கு பிறகு காமெடியுடன் விறுவிறுப்பாகவும் எடுத்திருக்கிறார். பரவாயில்ல ரகமே குடுக்கலாம்... இன்னமும் அவருடைய பழையபாணியிலே நிக்கிறார்... சந்தானம் எண்ட ஒராள் படத்தில் இருப்பதால் சுந்தர்சிட தலை தப்பிக்கும்போல இருக்கு...

விமல்- விமலுக்கு முழுநீள காமெடிப்படம் சரிப்பட்டுவராதுபோலவே தோன்றுகிறது... சீரியசான கதாபாத்திரத்துடன் அப்பப்ப சில காமெடி சீன்களே இவருக்கு மிகப்பொருந்தும்.. என்றாலும் பரவாயில்ல.. சொதப்பல் என்று சொல்வதற்கில்லை. இயன்றளவு முயற்சித்திருக்கின்றார்...


சிவா- கடுப்பேத்திட்டார் மைலோட்..... இவரு மேடையில நிகழ்ச்சி தொகுத்துவழங்கும்போது எப்பிடி இருப்பாரோ! அதேபோலவே படத்திலும் ஒவ்வொரு dialog delivery and face reactions. எனக்கு சிவாவின் நடிப்பில் திருப்தியில்லை.... நான் படம் பார்த்த திரையரங்கில் கொஞ்சப்பேர்தான் இருந்தபடியால் மற்றவர்களின் response எப்பிடி என்று சொல்லமுடியாதுள்ளது....

அஞ்சலி,ஓவியா- அசத்திட்டாங்க... (எல்லாத்திலையும்)

இசையமைப்பாளர், பாடல்கள்- முதன்முதலா தியேட்டர்ல படம் பார்க்கும்போதுதான் பாடல்கள் கேட்டேன்.. நல்லாய் இருந்ததுபோன்றதொரு உணர்வு.... பின்னணி இசையும் நன்றாகேவே இருக்கின்றது..

ஒளிப்பதிவு- குறை சொல்வதற்கில்ல... சிறப்பாகவே உள்ளது.


படத்தில் மேலும்சில குறைநிறைகள்...

எடிட்டிங் படு சொதப்பல்.. காட்சிகள் திடீர் திடீரென துண்டாடப்படுகின்றது. interest ஆக ஒரு சீன் போய்க்கொண்டிருக்கையில் திடீரென துண்டாடப்பட்டு மற்ற சீன் வருகிறது. எடிட்டரின் பிழை என்றாலும் சுந்தர்சி இதை திருத்தியிருக்கணும்... கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பார்முலாவில் இதுவொரு பெரிய பிழையாக தெரியாது..காரணம் ரசிகர்கள் அப்போது கதைக்கும்,நடிப்புக்குமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. பிலிம் மேக்கிங்,ஸ்கிரீன்பிளே தொடர்பில் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள்... ஆனால், இப்போ காலம் மாறிட்டு, சுந்தர்சிதான் இன்னும் மாறேல.. இது சுந்தர்சியின் update ஆகாத direction formula ஐயே காட்டுகின்றது.....

சந்தானம்,விமல், மனோபாலா இந்த மூன்றுபேரும் தங்களுக்கிடையில் வாகனத்தில் துரத்துப்படும் காட்சி எல்லோரையும் ரசிக்கவைக்கிறது.....
படத்தில் வரும் காமெடி பஞ்வசனங்களும் சூப்பரா இருக்கு....

படத்தில பஞ்ச சுப்பு குழுவினரின் ஆரம்பகாட்சிகள், குறிப்பாக வைரக்கடை வைத்திருந்து பின் வைரத்தை எடுத்திட்டு தாங்களே கடைக்கு நெருப்புவைத்திட்டு, அவங்க போடுற சீன்கள் ரெம்ப போரா இருந்திச்சு......


காமெடி படம் என்றபடியால் லாஜிக் பிழைகள் பெரிதாக அவதானிக்கப்படாது... இது இந்தப்படத்துக்கு ஒரு பிளசாக இருக்கும்... மேலும்,
பொதுவாக காமெடி படங்கள் பெரிதாக சூப்பர்ஹிட்டோ, பிளாக்பஸ்டர் ஹிட்டோ அடித்ததாய் இல்லை.. அந்தளவுக்கு தமிழக ரசிகர்கள் விரும்பி பார்க்கமாட்டார்கள்.. ஆனால், எதிர்பாராதவிதமாக ஓகேஓகே வெளிவந்து தற்சமயம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கு.. இன்னிலையில் ஓகேஓகே வெளிவந்து ஒருமாதமே ஆகாதநிலையில் இன்னொரு முழுநீள காமெடிப்படமான கலகலப்பு படத்தின் வெளியீடு வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது......

ஓகேஓகே அளவுக்கு இல்லையென்றாலும் ஓகே அளவுக்கு இருக்கின்றது..
மொத்தத்தில் எனது கருத்துப்படி படம் என்ஜாய் பண்ணி பார்க்கலாம்........


Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9 விமர்சனம்...


சே இப்பிடியொரு நல்ல படத்தை வெறும் ஒன்றே முக்கால் மணிநேரத்தில ஏன்தான் முடித்தாங்களோ தெரியேல... மூன்று மணிநேரம் என்றாலும் சலிக்காம பார்த்துக்கொண்டிருக்காலாம்... படம் கமெர்ஷியல் படமோ, ஆக்சன் படமோ அல்லது commedy sequence அதிகம் உள்ள படமோ இல்லை... கிட்டத்தட்ட அங்காடித்தெருபோல நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கதையை பக்காவா எடுத்திருக்கிறார்கள்... சாமுராய், காதல், கல்லூரிக்கு பிறகு பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் வழக்கு எண் 18/9.. முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றே சொல்லலாம், முக்கியமான பாத்திரங்கள் எல்லாவற்றையுமே புதுமுகங்களை வைத்து பின்னியிருக்கிறார்...


சரி இனி கதைக்கு வருவோம்....

நடிகர்கள்- மிதுன் முரளி, சிறீ, ஊர்மிளா மகன்தா, மகேஷ் யாதவ்.
இயக்கம்- பாலாஜி சக்திவேல்.
இசை- ஆர்.பிரசன்னா.
ஒளிப்பதிவு- விஜய் மில்டன்.
தயாரிப்பு- சுபாஸ் சந்திரபோஸ், ரூனி ஸ்கிரீவ்லா.

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன்(இந்த படத்தின் ஹீரோ) வீட்டு கஷ்டத்தை உணர்ந்து கடனை அடைப்பதற்காக படிப்பை கைவிட்டு வெளியூர் செல்கிறான்.. அங்கே ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வரும்போது அவனின் பெற்றோர் ஊரில் இறந்த செய்தியை ஊரில் இருந்து தொலைபேசியில் ஹோட்டல் முதலாளிக்கு தெரியப்படுத்தியும் முதலாளி அவனுக்கு சொல்லாமல் வேலைவாங்கிட்டு இருக்கையில் அங்கு வந்த நண்பன் மூலம் நிலைமையை கேட்டறிந்து அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் வேளையில் சேர்ந்து பிளாட்பாரத்திலே வாழ்க்கையோ செலுத்திக்கொண்டிருக்கிறான்....


அப்போது அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்குகின்றான்... இதற்கிடையில் அந்த பெண்ணும் இன்னொரு வீட்டை வேலை செய்யும் ஒரு வேலைக்காரி என்பது குறிப்பிடத்தக்கது.. இதற்கு சமாந்தரமாக ஹீரோவின் காதலி பணிபுரியும் வீட்டு பெண்ணுக்கும், இன்னொரு பையனுக்குமிடையிலான காதல்வேற போய்க்கொண்டிருக்கும்.. அதை காதல் எண்டு சொல்லேல்லாது, காதலிக்கிற மாதிரி அவன் நடிச்சு ஏமாத்த முயற்சிக்கிறான்... இவ்வாறே சமாந்தராமாக இரு கதைகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும்.... அதற்கப்புறம் ஹீரோவின் ஒருதலைக்காதல் ஜெயிக்குதா? மற்ற ஜோடிகளுக்கு என்ன ஆச்சு என்பதே படத்தின் தொடர்ச்சி.. அதை படத்தை பார்த்தே அனுபவியுங்கள்.....


இயக்குனர்- சாமுராய்,கல்லூரி என்ற தோல்விப்படத்தையும் காதல் என்ற வெற்றிப்படத்தையும் வழங்கிய பாலாஜி சக்திவேலுக்கு நிச்சயம் இது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.. முழுக்க முழுக்க இயக்குனரின் ஆதிக்கம்தான் இந்தப்படத்தில்.... ஸ்கிரீன்பிளே, பிலிம் மேக்கிங் இரண்டுமே சூப்பர்... தரமான பாத்திரத்தெரிவு, குறிப்பாக தன்னை மட்டும் நம்பி புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் தரமானதொரு படைப்பை வழங்கியிருக்கின்றார்... அவருக்கு ஒரு சல்யூட்.....

ஒளிப்பதிவாளர்- இயக்குனருக்கு அடுத்ததாய் இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான்... அவருடைய ஒவ்வொரு காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றது. குறிப்பாக படம் தொடங்கையில் ஒரு பெண் கண்சிகிச்சைக்காக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது கண்ணுக்குள் இருந்து கமெரா பிடிக்கப்பட்டதுபோல் ஒரு காட்சி எடுத்திருந்தார்... மற்றும் சமையல் செய்யும்போது அடுப்பினுள் இருந்து கேமரா ஷாட் எடுத்ததுபோன்ற சீன்.... இதைவிட background colour எல்லாமே சூப்பராக இருந்தது..


ஹீரோ- சங்கர்,கே.வி ஆனந்த, முருகதாஸ் போன்றோரின் படமெண்டால் இவரை பாட்டு சீனுக்கு ஹீரோக்கு பின்னால நின்று ஆடவிடுவாங்க என்று சொல்வதே சந்தேகம்தான்... சராசரியான படம் ஒன்றின் ஹீரோவுக்குரிய தோற்றப்பாடு இல்லாவிடினும், இந்த படக்கதைக்கு மிக நன்றாகவே பொருந்துகின்றார், ஒவ்வொரு அசைவும் படத்துடன் நன்றாகவே ஒட்டிக்கொள்கிறது.... சொல்லப்போனால் ஆடுகளம் படத்தில் தனுஷ்ட body language எவ்வாறு படத்துடன் ஒன்றித்துப்போனதோ அதேபோல கிட்டத்தட்ட இந்தபட ஹீரோவும் சிறப்ப்பனதொரு perfomanceஐ வழங்கினார்.. மற்றைய நடிகர்களும் தத்தமது பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்...

இசையமைப்பாளர்- இசையமைப்பாளரும் படத்திற்கேற்ப சிறப்பாகவே பணிபுரிந்திருக்கிறார்.. சிலசில சீன்களில் வேறு படப்பாடல் வரிகளை background music ஆக போட்டு அசத்தியிருக்கிறார்(அதை சிறப்பாக கருதமுடியாது)... rinhing tone கு அவர் குடுத்த பாடல்வரி, மற்றும் கவுண்டமணியின் ஜோக் வரிகள் தியேட்டரில் நிறைய கைதட்டல்களை வாங்கியிருக்கின்றது....படத்தில் இரண்டு பாடல்கள், இரண்டுமே பின்னணியில் செல்லும்... அதில் ஒரு பாடல் சிறப்பானதாக அமைந்திருக்கின்றது...


படத்தில் ஒருசில குறைநிறைகள்.......

படத்தின் இரண்டாவது ஹீரோ எப்பிடிப்பட்டவர் என்று அவரின் சீன் வந்து கொஞ்ச நேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிகிறது, அப்பிடி இருக்கும்போது தொடந்தும் அவர் நல்ல பிள்ளைபோல காதலியிடம் கொஞ்சிகுலாவுவதை நீண்ட நேரம் காட்டுவது சலிப்பை ஏற்படுத்துகிறது... அவர் எப்பிடிப்பட்டவர் என்றதை கடைசியிலே காண்பித்திருக்கலாம்...

அண்மையில் வெளிவந்த தனுசின் 3 படத்தின் இரண்டாம்பாகம் நிறையப்பேருக்கு பிடிக்காமல் போனதுபோன்றதொரு பிழையை இப்பட இயக்குனர் விடவில்லை.படம் என்னதான் சீரியஸா போய்க்கொண்டிருந்தாலும், இடையிடையே சிலசில வசனங்கள், நடிகர்களின் அசைவுகள் பார்வையாளர்களை சிரிக்கவைக்கிறது, மேலும் படம் ஓரளவு வேகத்துடன் திரில்லிங்காயும் நகர்கிறது.. இதுவும் ஒரு பிளஸ் என்றே சொல்லணும்.....


படம் வெறும் 1.45 மணிநேரத்தில் முடிவடைகிறது... ஏன் இவர்களுக்கு இந்த விபரீத முடிவோ தெரியவில்லை...குறைந்தது 2.15 மணிநேரமாவது இருந்திருக்கணும்...

எப்பவும் படத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது இலகுவான விடயம்..இந்தப்படத்துக்கு நிறைகளை சொல்லப்போனால் இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் தேவைப்படும்...... மொத்தத்தில் படம் சூப்பர்.. தமிழ் சினிமா மீண்டும் ஒரு நல்ல படைப்பை ரசிகர்களுக்கு தந்திருக்கின்றது......

Saturday, March 31, 2012

"3" பட விமர்சனம்: எனது அலசலில்....


அப்பாடா ஒரு மாதிரி எங்கள் எல்லோரையும் பிடித்துக்கொண்டிருந்த கொலைவெறி கொஞ்சம் ஆறிவிட்டது என்றுதான் சொல்லணும்.....இந்த படத்தில் அமைந்த "வை திஸ் கொலைவெறி" என்ற ஒரு பாடல் ஒரு படத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் என்று கொஞ்சம்கூட படக்குழுவினர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.. "தமிங்கிலத்தில்" தனுஷ் எழுதி, பாடிய இந்த பாடல், வழமையான பார்முலாவுக்கு அப்பால் அதன் compose பண்ணுகின்ற வீடியோவை பரீட்சார்த்த முயற்சியாக படம் ரிலீஸ் ஆவதற்கு(Mar 30, 2012) பலமாதங்கள் முன்னதாகவே வெளியிட்டார்கள்(Nov 16,2011)... பாடலும் எதிர்பார்ப்பிற்கு பலமடங்கு மேலாக மொழி,நாடு கடந்து சகலதரப்பாலும் youtube மூலம் பார்க்கப்பட்டது... இறுதியில் படத்தின் வியாபாரத்தையே இந்த ஒரு பாடல்தான் நிர்ணயித்திருக்கின்றது... சுமார் 20 கோடிகளுக்கு உட்பட்ட செலவில் எடுத்துமுடிந்த படம், அதன் மூன்றுமடங்கிலும் அதிகமாக(65-70crores) தமிழ்,தெலுங்கு,ஹிந்தியில் விநியோக்கிக்கப்பட்டிருக்கின்றது.......





சரி இனி படத்தை ஒருக்கா அலசித்தான் பார்ப்போமே!.....

நடிகர்கள்- தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன், சுந்தர், பிரபு, பானுப்பிரியா, ரோகினி
இயக்கம்- ஐஸ்வர்யா.R.தனுஷ்.
இசை- அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
தயாரிப்பு-கஸ்தூரி ராஜா.

வாழ்க்கையின் மூன்று பருவங்களில் ஆண்- பெண் இடையே நிகழும் காதல் பற்றிய கதையைத்தான் "3" படம் பெயருக்கேற்றாற்போல் சித்தரிக்கின்றது.. காலேஜ் பருவம், திருமண வயதுப்பருவம், திருமணத்துக்கு பிந்திய வாழ்க்கை என்பனவே அந்த மூன்று பருவங்களும்.. ஒரு மரண வீட்டில் ஸ்ருதி அழுதுகொண்டிருப்பதிலிருந்து ஆரம்பமான கதை தொடர்ச்சியாக ஸ்ருதியின் பிளாஸ்பேக்காயே படம் நகர்ந்துகொண்டிருக்கின்றது... ஒருபுறம் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பித்திட்டு இருக்கும் ஸ்ருதி குடும்பம், மறுபுறம் தனுஷ், சிவா, சுந்தர் என கலக்கல் கூட்டணியின் பிரசன்னம் என படத்தின் முதல்பாதி சுவாரிசயமாக போகின்றது, தனது காதலை ஸ்ருதியிடம் சொல்லி, இரு வீட்டாரின் அரைகுறை சம்மதத்துடன் கிளப் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.......... அதன்பின், படத்தின் இரண்டாம்பாதியில் பல திருப்புமுனைகள் நிகழ்கின்றன... தனுஷ் ஒரு bipolar disorder நோயாளி என்பது தெரிய வருகின்றது.. இந்நோய் உடையவர்கள் பொதுவாக உளவியல் ரீதியாய் இருமுனை சீர்குலைவு உள்ளவர்களாக இருப்பார்கள்.. இப்பிடியான மனநிலையுடைய தனுஷ் எப்பிடி குடும்பத்தை கொண்டு செல்கிறார்? அவரின் இந்த நோயின் தாக்கம் மனைவி, நண்பர்களை எப்பிடி பாதிக்கின்றது? இறுதியில் தனுசுக்கு என்ன நிகழ்கிறது? என்பதுவே படத்தின் தொடர்ச்சி.........


தனுஷ்.....
இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாவதற்கு முதலாவது காரணமே தனுஷ் எழுதி, பாடிய அந்த கொலைவெறி பாடல்தான்.. சரி அதை விடுத்து திரையில் அவரது பங்கை பார்ப்போமாயின், மிகச்சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிக்காட்டியுள்ளார்... "வேங்கை" படத்தில் அரிவாள் சைசிலிருந்து சுத்தி இருக்கிற வில்லன்களை எல்லாம் போட்டுத்தள்ளி எங்களையும் கடுப்பேத்தினமாதிரி அல்லாமல், தனது வழமையான பாணியில் மிகத்தத்ரூபமாக காமெடி,சோகம்,கோவம்,ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் மனுஷன் பின்னி எடுத்துள்ளார்..  "வேங்கை" தவிர எந்தவொரு படத்திலுமே தனுஷ் தன்னுடைய நடிப்பால் படத்தை சொதப்பியதே இல்லை.. இதிலும் அப்பிடித்தான்.... ஒரு தேசிய விருது பெற்ற நாயகன் என்பதை நடிப்பால் உணர்த்தியுள்ளார்............


ஸ்ருதி ஹாசன்....
என்னவோ தெரியேல,பிரபல நடிகர்களின் படங்கள் என்றால் பொதுவா ஹீரோக்களை மையமா வைத்துதான் கதை போகும், ஹீரோயின்களை ஊறுகாய் போலவே பயன்படுத்துவார்கள், ஆனா ஸ்ருதிக்கு மட்டும் தொடர்ச்சியா இரண்டாவது படத்திலும் heavy role ஒன்று வழங்கப்பட்டுள்ளது.. இடைவேளைக்குமுதல்வரை திருப்தியாக இருந்த ஸ்ருதியின் பிரசன்னம், இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் கடுப்பேத்தியதுபோல இருக்கு.... காரணம் இயல்புக்கு அப்பால் மிகைப்படுத்திய நடிப்பு, இன்னொன்று கதை... கதைக்கேற்றாற்போல இடைவேளைக்கு பிறகு ஒன்றரை மணிநேரமா அழுமூஞ்சியுடனே காணப்படுகின்றார்.... பார்க்கவே சினம் கொள்ளவைத்தது...

அனிருத்
இசை சிறப்பாகவே இருக்கின்றது.. குறை சொல்ல இடமில்ல, இடைவேளைக்கு பிறகு கதைக்கேற்றாட்போல மெதுவான அவரின் இசை திகிலாக செல்லும் கதைக்கு நன்றாகவே ஒத்துப்போகின்றது... மேலும் பாடல்கள் பெரும்பாலானவை முதலே ஹிட் ஆகிவிட்டன. 


ஐஸ்வர்யா தனுஷ்
என்ன செய்தாலும் இந்த பெண்மணிக்கு பெரிய மனசுதான் பாருங்க, தன்னுடைய புருசனை வைத்தே என்னமாதிரி ஸ்ருதியுடன் நெருக்கமா எடுத்திருக்கின்றார்???? அறிமுக இயக்கம் என்பதால் ஒருசில பிழைகள் இருந்தும், பெரியதொரு அனுபவ முதிர்ச்சி படத்தில் தென்படுகின்றது... உண்மையிலே முழுக்க முழுக்க ஐஸ்வர்யாவின் கற்பனைதானா? அல்லது நியூட்டனின் கண்டுபிடிப்புக்களைப்போலவா? என்பது கொஞ்சம் சந்தேகமாய்த்தான் இருக்கு..
இந்தப்படத்தில் ஆரம்பத்தில் ஸ்ருதிக்கு பதிலாக அமலபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு கால்ஷீட் பிரச்சனையால்(??) அமலா மாற்றப்படார், இந்த நிகழ்வின்பின் ஐஸ்வர்யாவின் சினிமா ஆளுமை பற்றி கடுமையா விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. 


வேல்ராஜ்(ஒளிப்பதிவாளர்)
இந்தப்படத்தில் தனுசின் நடிப்புக்கு அடுத்ததாக வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவே மிகத்துல்லியமாகவும்,சிறப்பானதாகவும் அமைந்திருக்கின்றது. குறிப்பாக மாலை,இரவு, மழைகாட்சிகளை இயற்கையுடன் ஒன்றித்துப்போகும்வாறு சிறப்பாகவே அமைத்துள்ளார்... 

பாடல்கள் 
நான் புதுப்பாடல்கள் கேட்பதில்லை என்பதால் இதிலிருந்து "எஸ்" ஆகிறேன்.... ஆனால், ஊடங்கங்களில் படித்ததன் அடிப்படையில் பாடல்கள் அனைத்துமே ஹிட்தான்... குறிப்பா "கொலைவெறி" பாடல் டெரா ஹிட்............

கதை
கதை என்று பெரிதா சொல்வதற்கில்லை, சின்னதொரு கதைக்கருவை வைத்து நடிகர்களின் நடிப்புக்கு களம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கின்றது....


படத்தின் சில குறை நிறைகள்......
1. தனுஸ், ஸ்ருதிக்கு அப்பால் நடித்த துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.. குறிப்பாக சிவாவின் நையாண்டி நடிப்பும்,ஸ்ருதியின் தங்கையா நடித்தவரின் குழந்தைத்தனமான நடிப்பும் , அதைவிட சுந்தரின் சீரியசான நடிப்பும் படத்துக்கு வெகுவாகவே உயிரூட்டியுள்ளது... குறிப்பாக தனுசுக்கு bipolar disorder என்ற நோய் இருப்பது தெரியவந்ததன்பின் சுந்தரின் பங்கு எல்லோரையும் வெகுவாகவே கவர்ந்துள்ளது....

2. மூன்று பருவங்களிலும் தனுஷ், ஸ்ருதியின் தோற்றத்தை (look) சிறப்பாகவே காட்டியிருக்கார்கள்.. காலேஜ் பருவத்தில் தனுஷ், ஸ்ருதி ஆகியோர் ரெம்பவே இளமையாக தோன்றுகிறார்கள். lunch box உடன் தனுஷ் செல்வது, ரெட்டைப்பின்னலுடன் காலேஜ் சீருடையில் ஸ்ருதி தோற்றமளிப்பது எல்லோரையும் ரசிக்கவைத்திருக்கின்றது. மேலும் போகப்போக வயது முதிர்ச்சிக்கேற்ப முகத்தோற்றத்தையும் சிறப்பாக இயக்குனர் காட்டியிருக்கிறார்..

3. படத்தின் பிரதான குறை என்னவென்றால், இந்த படம் பார்க்கும்போது இடைவேளைக்கு பின்னரான சீன் முழுவதும் தனுசின் இதற்கு முதல் படமான "மயக்கமென்ன" படத்தை நினைவுபடுத்தியது.... அடுத்தடுத்து இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ஒரே பாணியில் வந்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது....


4. படத்தின் இரண்டாம் பாகம் ஆமைவேகத்தில் செல்லுகின்றது, இது எனது பார்வையில் சரியாக இருந்தாலும் சரியான அளவு கமெர்ஷியல் காட்சிகள் இல்லாததால் சிலருக்கு பிடிக்காமல் போய்விடலாம்... மேலும் இரண்டாம் பாகத்தின் கதை,தனுசின் அபரித நடிப்பு  திகிலானதாக இருக்கின்றது, பார்க்கிற எங்களுக்கே அந்த நோய் வந்திடும்போல இருக்கின்றது..... இது படத்தின் கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாகம் முழுவதும் அப்பிடியே காட்சி நகருவது கொஞ்சம் ஓவராய்த்தான் போச்சு, குறிப்பாக பதினைந்து-இருபது வயதுக்கு இடைப்பட்டவர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கேலாது.......... படம் என்னதான் நல்லா இருந்தாலும் அதை ஆடியன்ஸ் ரசித்து பார்க்கும்படி இருக்கவேணுமென்பதே மிகமுக்கியம்... அந்த விடயத்தில் படக்குழுவினர் தோற்றுப்போய்விட்டார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது....

5. முதல்பாதியில் படத்தின் காட்சியமைப்பும் சிறப்பாக சொல்லுமளவுக்கு இல்லை என்றே சொல்லவேணும், குறிப்பாக மணிரத்தினம்,கௌதம்மேனன் போன்றோரின் படங்களின் மேக்கிங் உடன் ஒப்பிட்டுபார்க்கும்போது அதன் குறைகளை தெரிந்துகொள்ளலாம். சிவா+தனுஷ் காம்பினேஷன் சிறப்பா இருந்ததால் விறுவிறுப்பாய் போனது.... முதற்பாதியில் டியுசன் சீன் நிறையத்தரம் தொடர்ச்சியா வந்தமையும் சற்று தொய்வை ஏற்படுத்தியது. 

6. படம் ரிலீஸ் ஆவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முதல்லே இந்த படத்தில் தனுசுக்கு இறுதியில் என்ன நடக்குது என்று மீடியாக்களில் கசியவந்தது.. பிறகு அம்முடிவு சூப்பர்ஸ்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் பின்னர் அது மாற்றப்பட்டதெண்டும் செய்திகள் வெளியாகின...  மேலும் படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலே இறுதியில் தனுசுக்கு என்ன நடக்குதென்று ஊகிக்கக்கூடியதாயிருக்கின்றது.. இதுவும் சில ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.


படத்துக்கு இன்னுமொரு நெருக்கடி என்னவென்றால் இதன் உச்சக்கட்ட வியாபாரம்தான்.... நான் மேலே சொன்னதுபோல் போட்ட பட்ஜெட்டின் மூன்று மடங்குக்கு தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, (மலையாளம்????) என பரவலாக விற்றுவிட்டார்கள்.... இதனால் கஸ்தூரிராஜாவுக்கு செம இலாபம், மாட்டிக்கொள்ளப்போவது விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்தான்... படத்தை பார்த்துவிட்டுத்தான் விநியோகிஸ்தர்கள் வாங்கினார்களா? அல்லது கொலைவெறி பாடலின் ஹிட்டை வைத்துத்தான் இந்த விலைக்கு வாங்கினார்களா? என்பது சந்தேகமே!! காரணம் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்றால் குறைந்தது 80 கோடிகளையாவது வசூலிக்கவேணும்..  குறிப்பாக ஆக்சன் படங்கலால்தான் அவ்வாறானதொரு வசூலை பெறமுடியும்... இந்தப்படம் நாற்பது கோடிகளை தொடும் என்பதே சந்தேகமாய்த்தான் இருக்கு..இறுதியில் ரஜினியின் பாபா படத்துக்கு வந்த நிலைமையும் வரலாம்...... எதற்கும் கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் பார்ப்போம்... ஹிந்தி,தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் சிலவேளை இந்த படம் எடுபடுதோ தெரியவில்ல... "அவன் இவன்" படம்கூட தமிழில் சரிவர போகவில்லை, ஆனால் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.....


 படத்தில் என்னதான் குறைகள் இருந்தாலும் என்னுடைய கருத்துப்படி படம் சூப்பர்.. எவ்வளவு நாளைக்குத்தான் ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், காமெடியை பார்க்கிறது???..... சமூகத்திலே வெளிவாரத சில பிரச்சினைகள், குறிப்பாக bipolar disorder நோயாளி பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்??? இவ்வாறான படங்களின் மூலம்தான் சில பிரச்சனைகள் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்படுகின்றன.... எனக்கு அஜித்துக்கு அப்புறம் பிடித்த இரு நடிகர்களில் தனுசும் ஒருவர்... தனுஷ் இந்தப்படத்தில் எத்தனைபேரை ஏமாற்றினாலும் என்னை ஏமாற்றவில்லை............. தனுஷ் ராக்கிங்......

Monday, February 20, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்- எப்பொழுதும் உன் கற்பனைகள்: விமர்சனம்-




நடிகர்கள்- அதர்வா, அமலாபால், ஜெயப்பிரகாஸ், நாசர், சந்தானம் 
இயக்கம்-எல்றேட்குமார்
இசை- ஜீவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு-ஆர்.எஸ்.இன்போர்டைன்மென்ட்

எல்றேட்குமாரின் இயக்கத்தில் அதர்வா, அமலாபால்,ஜெயப்பிரகாஷ்,நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் "முப்பொழுதும் உன் கற்பனைகள்". இந்த திரைப்படம் வரமுதல் படத்துக்கு பாரிய எதிர்பார்ப்பிருந்தது, இதற்கு இயக்குனரோ அல்லது நடிகரோ காரணம் இல்ல, படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போர்டைன்மென்ட் தான், காரணம் இவர்கள் இதற்குமுதல் வெளியிட்ட "கோ" மற்றும் "விண்ணைத்தாண்டி வருவாயா" ஆகிய இருபடங்களுமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற படங்கள். இந்த நிறுவனத்துக்கு கீழே வரும் படங்களுக்கு கதை அந்நிறுவனமே தெரிவுசெய்வது வழக்கம், அப்புறம் அவர்கள் அதற்கேற்றாற்போல தகுந்த இயக்குனரை தேர்வுசெய்வார்கள். இந்தப்படமும் ஆரம்பத்தில் வேறொரு இயக்குனர் இயக்கிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பு நிறுவனத்துடனான முரண்பாட்டையடுத்து படம் எல்றேட்குமாரின் கைக்கு மாறியது. இயக்குனர் எல்றேட்குமாருக்கு உதவியாக முதலிரு பட இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் தமது இணை இயக்குனர்கள் ஒருசிலரை இவருக்கு துணையாக அனுப்பினார்கள். அதனால்தான் என்னவோ படத்திலும் கௌதம் மேனன்ட பட சாயல் தெரிகிறது. 




படத்தை சுருக்கமா பார்ப்போமாயின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவரின் அன்பில் சாய்ந்திருக்க துடிக்கும் ஒரு ஆணின் கதைதான் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதல் காட்சிகளில் குறிப்பாக சைக்கோ காதலையே இயக்குனர் படம் பிடித்து காட்டியிருக்கார். இவ்வாறான கதையம்சமுள்ள படங்கள் நிறைய தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், இதில் இயக்குனர் பழைய ரெண்டிலிருந்து விலகி சற்று சூடாகவே படைத்திருக்கிறார்..  
 சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆறுதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.  ஆனால் அவளோ வெறும் நட்பாகவே பழகுகிறாள். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமலாபால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும்(கற்பனையில்) என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.


அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, அப்போதுதான் ஒருத்தி இல்லாமலே அவ இருப்பதாக கருதும் அதர்வாவின் சைக்கோ காதல் அமலாவால் உணரப்படுகிறது. அதன்பிறகு மாமனார் ஜெயப்பிரகாசுடன் சேர்ந்து அதர்வாவை எப்பிடி குணப்படுத்தலாம் என்று சிந்தித்து முதல் கட்டமாக அதர்வாவின் ஆரம்ப வாழ்க்கையை அறிந்துகொள்வதற்காக அவரின் சொந்த ஊருக்கு சென்று கடந்தகால விடயங்களை நாசர் மூலம் கேட்டகின்றனர், அப்போதுதான் அதர்வா சிறுவயதிலிருந்தே அம்மாவின் பாசமிகு அரவணைப்பில் வாழ்ந்தது, பின்னர் தாயாரின் இழப்பு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாரோ ஒருவரின் அன்பு அவனுக்கு தேவைப்படுகின்றது என்ற விடயம் அமலா மற்றும் ஜெயப்பிரகாசால் உணரப்படுகிறது. அதன்பின் ஜெயப்பிரகாசின் அறிவுரைக்கமைய அமலா அதர்வாவை குணப்படுத்தும் நோக்கோடு அவன் வீட்டிலேயே இருந்து அவரை காதலிக்கிறமாதிரி நடிக்கத்தொடங்கினார்.. அச்சமயம் அமலாவுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மணமகனின் இரு நண்பர்கள் அமலாவை கடத்தி கொலைசெய்ய முயற்சிக்கின்றனர், காரணம் அவர்கள் மூன்று பேரும் ஆண்-ஆண் உறவுமுறைப்பழக்கம் உடையவர்கள்.. அமலாவின் வருகை தங்கள் உறவை பாதித்துவிடும் என்பதற்காகவே கொலைசெய்ய முயற்சித்தார்கள், அச்சமயம் அதர்வா வந்து சண்டைபோட்டு, அதன்பிறகு அதர்வா-அமலா சேர்வதோடு படமும் ஓவர்...


என்னுடைய பார்வையில் படத்தின் சில குறை நிறைகள்.

1 என்னதான் பழைய கதை என்றாலும் சிறப்பான மேக்கிங் உடன் சுடச்சுட இயக்குனர் தந்திருக்கார்.. ஒவ்வொரு சீனையும் பார்க்கும்போது இது அறிமுக இயக்குனரின் படமா என வியக்கத்தோன்ருகிறது. முதல் படத்திலே பாரியதொரு சுமையை இயக்குனர் ஏற்றுள்ளதால் சில சில தவறுகளும் வெளிப்படையாகவே தெரிகின்றது. 

2 ஒரு சில சீனைத்தவிர படம் எந்தவொரு கணத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய செய்யவில்ல, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை..

3 இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றாலும் அதர்வா, அமலாபாலின் நடிப்பு சிறப்பானதாக இருந்தது குறிப்பாக அதர்வாவின் இரண்டாம் படம் என்று சொல்லமுடியாதளவுக்கு முதிர்ச்சியான நடிகராக தென்பட்டார்.

4 சந்தானத்தின் காமெடி பெரிதாக இல்லையென்றே சொல்லணும், அவருக்கு ஏற்கனவே ரசிகர்களின் அமோக ஆதரவு இருப்பதால் அவர் வரும் சீன்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் கிடைத்ததே தவிர(நான் பார்த்த திரையரங்கில்), மற்றும்படி ஒன்றுமில்லை.. சந்தானத்தை இந்தப்படத்தில் உள்ளடக்கியதால் படத்தின் ஸ்கிரீன்பிளேயில் தொய்வு ஏற்பட்டிப்பது போன்ற உணர்வு. எந்த இடத்தில் எப்பிடியான காமெடி சீனை வைப்பதெண்ட இயக்குனரின்  குழப்பம் வெளிப்படையாகவே தெரிகின்றது. 

5 படம் முழுக்க முழுக்க A கிளாஸ்  ஆடியன்ஸ்சுக்குரிய படம், கிராமப்புற மக்களில் எத்தனைபேர் இந்த படத்தை விரும்புவார்கள் என்பது சந்தேகமே! 



6 இடைவேளைக்குமுதல் சப்பா..... எவ்வளவு டுவீஸ்ட், இடைவேளை வரைக்கும் என்ன நடக்குதென்றே சொல்லமுடியாதளவுக்கு குழப்பம், அமலாபால் இருவேடங்களில் நடிக்கிராவோ என்ற சந்தேகம்... இடைவேளையின் போது படம் பார்க்கவந்தவர்கள் பெரும்பாலானோர் எவருமே திருப்தியுறாதமாதிரி இருப்பதை காணமுடிந்தது..

7 தங்களின் ஆண்-ஆண் உறவு குழம்பிடும் எண்டதுக்காக அமலாவை அதர்வாவின் நண்பர்கள் கொலை செய்ய முயற்சிப்பது(ஏற்கனவே மூன்று பெண்களை இதே காரணத்துக்காக கொலை செய்துவிட்டார்கள்) கொஞ்சம் ஓவராய்த்தான் இருந்தது.. இந்த உண்மையை சொன்னாலே ஒரு தமிழ் பெண் தானாகவே கல்யாணம் வேண்டாம் ஆளைவிட்டாபோதும் என்று ஓடிவிடுவாங்க.. இப்பிடியெல்லாம் கொலைதான் செய்யவேண்டும் என்றில்ல...

8 ஜீவிபிரகாசின் படத்துக்கான பின்னணி இசை பரவாயில்லை, பாடல்கள் பற்றி நான் சொல்லவிரும்பேல, காரணம் நான் புதிய பாடல்கள் கேட்பதில்லை.. ஆனால் படத்தில் அளவுக்கதிகமான பாடல்கள் சலிப்படைய செய்தன.. பெரும்பாலான பாடல்கள்(நான்கு) ஒரே பார்முலாவில் காட்சியமைக்கப்பட்டமை இன்னொரு மைனஸ்...

9 படத்தில்வரும் சண்டைக்காட்சிகள் ரஜினி, அஜித்,விஜய் போன்றோரின் படங்களில் இருப்பதுபோல கொஞ்சம் ஓவரா இருக்கின்றது..இதை ரஜினி, அஜித்,விஜய் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஆனா அதர்வாவை அப்பிடியொரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சந்தேகமே! 


படத்தில் குறைகளைத்தான் அதிகம் சுட்டிக்காட்டிவிட்டேன்போல தோன்றுகிறது, என்ன செய்ய நிறைகளை சொல்லபோனால் இன்னும் இரண்டு பதிவுகள்வரை நீண்டுவிடும்.. மொத்தத்தில் என்னுடைய கருத்துப்படி படம் சூப்பர்... இந்தப்படம் சிறப்பான வெற்றியடையுமானால்   அதர்வாக்கு பெரியதொரு திருப்புமுனை கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை///  
 

comment