Showing posts with label சினி அலசல். Show all posts
Showing posts with label சினி அலசல். Show all posts

Monday, August 12, 2013

அஜித்துக்கு போட்டி சூர்யாவா? விஜயா?


கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத போட்டி நடிகர்களாக அஜித்-விஜய் இருந்துவந்தனர். ஆரம்பகாலங்களில் இருவருக்குமே கிட்டத்தட்ட இளைஜர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என ஒரேமாதிரியான ரசிகர் மட்டங்கள் இருந்தனர்.ஆனால் போகப்போக இருவருக்குமிடையேயான ரசிகர் பரம்பல்கள் மாறத்தொடங்கிவிட்டன. அமர்க்களத்தை தொடந்து தீனா,அட்டகாசம்,பில்லா போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் நடித்ததாலும் அவரின் சினிமாவுக்கு வெளியேயான அவரின் வெளிப்படையிலான பேச்சுக்கள் இளைஜர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதே காரணிதான் அஜித் "கிங் ஆப் ஒபெநிங்" ஆயிருப்பதற்கு காரணம். அதேபோல டான்ஸ், காமெடி என்று மசாலா படங்களில் நடித்ததால் சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என அவரின் ரசிகர் வட்டம் வேறுபடத்தொடங்கியது. ஆதலால் அஜித், விஜய் ஆகியோர் தொடர்ந்தும் இதே பாணியில் பயணித்துக்கொண்டிருந்ததால் எத்தனை படங்கள் தோல்வியுற்றாலும் ரசிகர்கள் மாறவில்லை, காரணம் வேறு தெரிவு இல்லை. இடையிடையே வேறு நடிகர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் மாற்றம் ஏற்படும் வகையில் 2007/08 இற்கு பின்னரான காலப்பகுதியில் சூர்யாவின் வளர்ச்சி அமைந்தது. சரி, சூர்யாவின் வளர்ச்சியால் அஜித்துக்கு ஆப்பா? விஜய்க்கு ஆப்பா எண்டு பார்ப்போம்.


ஒரு நடிகனுக்கு இருக்கும் சிறுவர், பெண், குடும்ப ரசிகர்களானது எப்போதுமே நிரந்தரமானதல்ல. காரணம் சிறுவர்கள் அறியாமை காலப்பகுதியில் ஒரு ஹீரோவை ரசிப்பார்கள் பிறகு வயது ஏற ரசிப்புத்தன்மை மாறுபடவே தங்களது ஹீரோவையும் மாற்றிக்கொள்வார்கள். இன்று விஜயகாந்தை கழுவி ஊத்தும் அநேகப்பேர் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சிறுவயதா இருக்கும்போது சண்டைக்காட்சிகளுக்காக அதே விஜயகாந்த் படங்களைத்தான் முண்டியடித்து பார்த்தார்கள். அதேபோலவே அர்ஜுனையும் ரசித்தார்கள். இன்று அதே அர்ஜினுக்கு யார் ரசிகர்கள்? அதேபோல மோகனை ரசித்த பெண்கள் பிறகு அரவிந்தசாமி வர அவர் பக்கம் போனார்கள், பிறகு அஜித், பிரஷாந்த் வர அவர்களை ரசித்தார்கள். பிறகு கொஞ்சக்காலம்முதல் வரை விஜயை ரசித்தார்கள்... அப்போ இனி??? வெயிட் பண்ணுங்க சொல்றேன்.... அடுத்தது குடும்ப ரசிகர்கள், ஐம்பது,அறுபது வயதுக்காரர் எல்லாம் சூர்யா, விஜய் ரசிகர்களா? சப்பா முடியல. ரஜினி-கமல் காலத்து ஆக்கள் சூர்யா ,விஜய் படத்தை விரும்பி பார்க்கலாம், அதுக்காக அவர்களை சூர்யா, விஜய் ரசிகர்கள் என்றா சொல்வது?? அதுபோக சுருங்க சொன்னா பெண்களுக்கு எப்ப ஒரு அழகான ஹீரோ தென்படுகிராரோ அப்போதே அவர்களுக்கு ரசிகர்களாகின்றனர்.. அதேபோலவே குடும்ப ரசிகர்கள், இவர்கள் அநேகம்பேர் இந்த ஹீரோக்குதான் ரசிகர் என்றில்ல. சிம்பு,தனுஷ் போன்றோர் குடும்ப ரசிகர்களை கவரும்விதமாக படம் நடித்தாலே அவர்களின் படங்களை முண்டியடித்து பார்ப்பார்கள். அப்பிடி இருக்கேக்க எங்க ஹீரோக்கு சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என எல்லா மட்டத்திலையும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வெட்டித்தனமாக சுயதம்பட்டம் அடிப்பது காமேடித்தனம். இதே அந்தக்ஹீரோ தொடர்ச்சியாக நாலைஞ்சு மொக்கைப்படங்கள் குடுத்து அந்த இடைவெளியில் போட்டியா வேறு ஹீரோக்கள் வந்திட்டா இந்தக்கூட்டங்கள் அப்பிடியே மற்ற ஹீரோக்கு மாறிடுவார்கள். இளைஜர்களின் நாயகனாக எந்த ஹீரோ இருக்கிறாரோ அவர்தான் எப்பவுமே கிங்!


சரி சூர்யா மேட்டருக்கு வருவோம், இப்பவெல்லாம் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதைவிட சூர்யாவையே அதிகம் கலாய்க்கிறார்கள். காரணம் விஜய் எந்தவகையில் எந்த மட்ட ரசிகர்களை கவரும்வகையில் படங்கள் நடித்தாரோ! அதே வழியில் சூர்யா விஜயிலும் பன்மடங்கு தரமான படங்களை குடுத்து அதிக படங்களை வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார். 2007 இல் போக்கிரி என்ற கிளீன் ஹிட்டை குடுத்த விஜயால் ஐந்து வருடங்களின்பின்னர், எட்டு படங்களின் பின்னரே துப்பாக்கி என்ற கிளீன் ஹிட்டை கொடுக்க முடிந்துள்ளது. இப்போ மறுபடியும் தலைவா என்ற மொக்கை காவியத்தை கொடுத்திருக்கிறார். இடையே வந்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களிற்கு வழமைபோலவே செயற்கை மரக்கட்டை விஜய் தரப்பு கொடுத்து ஹிட்..ஹிட் என்று சொன்னாலும் அவை மூன்றுமே அவரேஜ் ரக படங்கள்தான். விஜய் ரசிகர்கள் மட்டும் தங்கள் மனசந்தோசத்துக்கு வேணும்னா ஹிட் என்று மார்தட்டலாம். மற்றயவர்களும் ஏற்றுக்கொள்ளனுமே! ஒருநடிகனுக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமே ஹிட் என்று சொன்னா உண்மையான ஹிட்டாகிவிடாது. அப்பிடி பார்த்தா அஜித் ரசிகர்களுக்கு அசல்,ஏகன் எல்லாமே ஹிட்தான். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நிறைந்த இக்காலத்தில் ஆரம்பகாலங்கள்போல விஜய் தரப்பால் இனியும் ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா வைத்து ரசிகர்களை முட்டாளாக்க முடியாது.


ஆரம்பத்தில் நடிப்பு, பைட், டான்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத சூர்யா இன்று காமெடியை தவிர மிகுதி எல்லாவற்றிலுமே பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக பார்வைக்கு கட்டுமஸ்த உடல்வாகு மற்றும் முகவசீகத்துடன் இருக்கின்றார். விஜயும் தான் அழகுதான் எண்டதுக்காக முகத்துக்கு மேக்கப் பண்ணி எவ்வளவோ முயற்சி செய்கிறார் என்பது அண்மையில் வந்த ஒருசில படங்களில் தெரிகிறது, ஆனா பாவம் முடியல. மேக்கப்புக்கு செலவு செய்யும் நேரம், காட்டும் கரிசனையில் பாதியளவாவது நடிப்பதில் கவனம் செலுத்தினால் இன்றைக்கு இன்னும் உயரத்தை எட்டியிருக்கலாம். கண் இமையையும், வாயையும் தவிர தளபதியின் முகத்தில் வேறு எதுவுமே அசையாது. அது சோகமோ, காதலோ, சந்தோசமோ, கோபமோ!! என்ன உணர்வென்றாலும்... படத்தில் அவர் அழுதால் அழுகிறாரா சிரிக்கிறாரா என்ற சந்தேகம் வேற மக்களுக்கு வரும், "எல்லா நாம்பனும் ஓடுதெண்டு கந்தையற்றை பேத்தைக்கண்டும் ஓடிச்சாம்" என்று ஊருக்க சொல்லி நக்கலடிப்பாங்களே!! அதுபோல அஜித்தின் "பில்லா"க்கு பிறகு வந்த சில விஜய் படங்கள் சிலவற்றில் அதேபாணியை பின்பற்றி தளபதி நோண்டியானது நினைவுக்கு வருது. அதன் ஒரு தாக்கம் மறுபடியும் தலைவாவில் இரண்டாம் பாகத்தில் தெரிந்தது. அவரு தலைவராம்... கிட்டத்தட்ட டான் கரக்டர்... முகத்தை முறைப்பா வைச்சிருக்கிறாராம்!! சப்பா கோபம் வந்தா இப்பிடியா முக ரியாக்சன் இருக்கும்? மூன்று வயசு குழந்தைக்கு கோபம் வந்தாலே இதைவிட பயங்கரமா முகத்தை வைச்சிருக்கும். ரெண்டரை, மூன்று மணிநேர படத்தில் எவ்வளவு நாளைக்குதான் நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை மட்டும் பிளாசா வைச்சு படம் நடிப்பாங்க? காலம் மாறிச்சு தளபதி அவர்களே!!! இப்பெல்லாம் புதுசா வாற கத்துக்குட்டியளே விழுந்து புரண்டு ஆடுது.

சரி மேட்டருக்கே போவம் இன்றைய பெண்களின் கனவுநாயகன் யாரெண்டு கேட்டால் நிச்சயப்படுத்தி சொல்லலாம் சூர்யாதான் எண்டு. அதேபோலவே தரமான கதையம்சங்களுடனான படங்களை தேர்வுசெய்து நடிப்பதால் விஜய் போன்ற பொம்மை நடிகர்களை ரசித்தவர்கள் எல்லாம் சூர்யாவை ரசிக்க தொடங்கிவிட்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு இருக்கும் இடம், ரசிகர்பலம் எப்போதுமே நிரந்தரம். சூர்யா, விஜயில் ஒருவர் தொடர்ச்சியா ரெண்டு படங்கள் பிளாப் கொடுத்து மற்றயவர் அந்த இடைவெளியில் ஹிட் குடுத்தால் எல்லாமே தலைகீழாகிடும். அண்மையில் சிங்கம் 2 பெரு வெற்றியை அடைந்தது. மறுபக்கம் தலைவா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. விஜய்க்கு ஜில்லாவும் சொதப்பி சூர்யாவுக்கு இன்னொரு ஹிட் கிடைக்குமாயின் நிச்சயம் ரஜினி-கமலுக்கு பிறகு அஜித்-சூர்யாதான்... அதில் சந்தேகமில்ல.

Friday, June 28, 2013

மீடியாக்களால் அஜித் படும் பாடு


எந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே! அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.



சில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் "படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா? சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.


Billa 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை! ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.


ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு யார் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா?? காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68%  வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.




ஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.
                                         

Wednesday, June 26, 2013

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


இந்தப்பதிவை எழுத கொஞ்சம் தர்மசங்கடமாய்தான் இருக்கிறது, ஏன்னா சமுகவலைத்தளங்களில் சினிமா ரசிகர்களாக,விமர்சகர்களாக இருப்பவர்கள் அனேகமாக மணிரத்தினம், பாலா, பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் ரசிகர்களாகவே தங்களை காட்டிக்கொள்வார்கள் அதுமட்டுமல்ல மசாலா இயக்குனர்களையும் ஓரங்கட்டிவிடுவார்கள். அப்பிடி மசாலா பேர்வழிகளை பிடித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாம கொஞ்சம் வித்தியாசம்தான் பேரரசு போன்ற காரமசாலா இயக்குனர்களையும் விரும்பமாட்டம், பாலா போன்றவர்களையும் விரும்பமாட்டம். இடைநிலை மசாலா இயக்குனர்களான சங்கர்,ரவிக்குமார்,ஹரி,முருகதாஸ்,கே.வி ஆனந்த் போன்றோரே நம்ம பேவரைட். உண்மையை சொல்லப்போனால் அதிகப்படியானோர் ரசிப்பது இவர்களின் படங்களைத்தான். அதில் இந்தப்பதிவில் ஹரியைப்பற்றி பார்ப்போம்.


சரணின் அசிஸ்டெண்ட்டா இருந்து 2002 இல் தமிழ்சினிமாவில் இயக்குனராக காலடி வைத்த இவர் இன்றுவரை 11 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 ஆவது திரைப்படமான சிங்கம் 2 எதிர்வரும் ஜூலை 5 இல் வெளியாகவுள்ளது. இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் தரமுன் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துதல் சிறந்ததென்று நினைக்கிறேன். ஒரு கூட்டத்தில் இயக்குனர் சேரன் உரையாற்றுகையில் மசாலா இயக்குனர்கள் எப்பபாரு ஒரே விடயத்தையே திரும்ப திரும்ப படமா எடுக்கிறார்கள், வித்தியாசமா எந்தவொரு படைப்பையும் வழங்குறார்கள் இல்லை என்றார். அதற்கு ஹரி சொன்ன பதில் "வித்தியாசமா எடுக்கணும் என்றால் சொந்தமா முதல் போட்டு படத்தை எடுங்கள், அடுத்தவனின் முதலை அழிக்காதீர்கள். என்னுடைய படங்கள் எப்போதுமே இயக்குனர்களுக்கு நஷ்டத்தை குடுப்பதில்லை என்றார்."..... இதுதான் ஹரி.


இன்றைய இயக்குனர்களில் மினிமம் கரண்டி இயக்குனர்களில் ஹரியும் முதன்மையானவர். இவரின் படங்களை பார்த்தீர்களாயின் படம் முழுக்க முழுக்க பக்கா கமெர்சியல் அம்சங்களை கொண்டிருக்கும், திரைக்கதையில் எப்போதுமே ஒரு வேகம் இருக்கும். இது ஆங்காங்கே வரும் பிழைகளையும் மூடி மறைத்துவிடும், மேலும் படங்கள் பொதுவா கிராமத்துப்படங்களே. வெளிநாடுகளில் பொதுவா சூட்டிங் எடுப்பதில்லை (சிங்கம் பாடல் காட்சிகள், சிங்கம் 2 தவிர), மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது குறுகிய காலப்பகுதியில் படத்தை எடுத்து முடித்துவிடுவார், மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள். இப்பிடியான அம்சங்களால் இவரின் படங்களால் பொதுவாக விநியோகிஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் வருவதில்லை. (வேங்கை திரைப்படம் மட்டும் சிலவேளைகளில் சில தரப்பினர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கலாம். மற்றய படங்கள் அவ்வாறில்லை.)


இவர் இதுவரை எடுத்த 11 திரைப்படங்களில் தமிழ், சாமி, ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் ஆகிய ஆறு படங்கள் கிளீன் ஹிட். கோவில், அருள், ஆறு, சேவல் ஆகிய நான்கும் அவரேஜ். வேங்கை மட்டுமே வந்ததே தெரியாமல் சென்ற திரைப்படம். இந்த படத்துக்கு தனுஷை ஹீரோவாக தேர்வு செய்ததே முதலாவது பிழை, அத்துடன் கதைக்களத்திலும் ஹரி விட்ட தவறு படத்தை தோல்வியடைய செய்துவிட்டது.

ஹரியின் படங்களில் எனக்கு பிடித்த டாப் 5

5. தாமிரபரணி


மற்றைய ஹரி படங்களுடன் ஒப்பிடும்போது இதில் ஆக்சன் குறைவு. விஷாலின் ஹீரோ வால்யுவை துல்லியமா மதிப்பிட்டு குடும்ப செண்டிமெண்டை வைச்சே படத்தை ஹிட் குடுத்துவிட்டார்.

4. சாமி


இந்தப்படம் வந்த காலப்பகுதியில் விக்ரமுக்கு இருந்த செல்வாக்கின் பாதியளவுகூட இப்போ விக்ரமுக்கு இல்லை என்றே சொல்லலாம். போலீஸ் கதையில் உருவான இந்த திரைப்படம் "காக்க காக்க" எப்பிடி மக்கள் மத்தியில் இன்னொரு ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல மசாலா போலீஸ் படங்களில் என்னுடைய ரசனையில் இதுவொரு வித்தியாசமான திரைப்படம். மேலும் இப்படத்தில் விவேக்கின் காமெடி, காதல் காட்சிகள் எல்லோரையும் கவருபவையாகவே இருந்தது. தற்போது இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி ரிலீசாகப்போகிறது.

3. தமிழ் 


பிரஷாந்த்,சிம்ரன் என்ற அழகான இரு ஜோடிகளை வைத்து காதலுக்கு கொஞ்சம் கூடுதலா முன்னுரிமை கொடுத்த திரைப்படம். 

2. சிங்கம் 


ஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம். மூடிய நிலையில் இருந்த தமிழகத்து திரையரங்குகள் சில சிங்கத்தால் ரீ.என்றி அடைந்தன.

1. வேல்


ஒரு மசாலா திரைப்படம் எப்பிடி இருக்கவேணும், எல்லா தரப்பையும் கவருமாறு எப்பிடி படம் எடுக்கவேணும் எண்டதுக்கு உதாரணமாக சொல்லவைத்த திரைப்படம் இது. 2007 இல் வெளிவந்த ஆக்சன்,கதை,குடும்ப செண்டிமெண்ட்,காதல்,காமெடி என்று எதிலுமே சளைக்காமல் நேர்த்தியான ஸ்கிரீன்பிளேயில் உருவான திரைப்படம்.

*இதேபோல சிங்கம் 2 உம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்* 

Tuesday, June 4, 2013

தீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)


பண்டிகைக்காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் எப்பவுமே தமிழ் பட விநிகியோகிஸ்தர்களுக்கு அலாதி பிரியம்தான். காரணம் இல்லாமலல்ல, சாதாரண நாட்களிலும் பார்க்க பண்டிகைக்காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அதிகமே! இதனால்தான் எத்தனை போட்டிப்படங்கள் வந்தாலும் அனேகமா துணிந்து தங்கள் தங்கள் படங்களை பண்டிகைக்கலங்களில் வெளியிட விரும்புவார்கள். அந்தவகையில் 2002 இற்கு பிறகு தீபாவளியன்று வெளியான திரைப்படங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை...

2012


இவ்வாண்டு துப்பாக்கி, போடாபோடி, நீர்ப்பறவை, அம்மாவின் கைபேசி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் துப்பாக்கி விஜய்க்கு போக்கிரிக்கு பிறகு(2007) தொடர்ச்சியான ஐந்து தோல்விகள், மூன்று அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு கிடைத்த கிளீன் ஹிட். நீர்ப்பறவை அவரேஜ். மற்றைய இருபடங்களும் வந்ததே தெரியாதவாறு காணாமல் போயின.

2011



இவ்வாண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் விஜயின் வேலாயுதம் ஆகியன வெளிவந்தன. ஆரம்பத்தில் திரையரங்க ஒதுக்கீட்டுலிருந்து இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியதால் படம் வெளிவந்து ஓடிமுடியும்வரை வாய்ச்சத்தம்தான் அதிகமாக கேட்டதே தவிர இவ்விரண்டு படங்களுமே சரிவர ஓடவில்லை. ஒப்பீட்டளவில் ஏழாம் அறிவு அதிக கலக்சனை கல்லா கட்டியது.

2010


இம்முறை மைனா, உத்தம புத்திரன், வா குவாட்டர் கட்டிங் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் மைனா வசூல்,விமர்சன ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது, உத்தம புத்திரன் அவரேஜ், வா குவாட்டர் கட்டிங் படுதோல்வியை அடைந்தது.

2009


இம்முறை சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆதவன் அதன் தயாரிப்பாளர் உதயநிதியால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் உண்மைநிலவரப்படி அவரேஜ் ஹிட்தான். பேராண்மையும் இதேநிலைதான்..

2008


இம்முறை தல அஜித்தின் ஏகன், பரத்+ஹரியின் சேவல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பில்லா என்ற மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு வந்தபடம் ஏகன் என்றதால் கிங் ஆப் ஒபெநிங் அஜித்தின் வழமையான படங்களையே விழுங்குமளவுக்கு எதிர்பார்ப்பு,ஒபெநிங் இருந்தும் மோசமான கதையமைப்பால் தோல்வியை அடைந்தது. மற்றைய படமான சேவலும் பிளாப்தான்.

2007


இம்முறை சூர்யாவின் வேல், விஜயின் அழகிய தமிழ் மகன், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் பொல்லாதவன் சூப்பர் ஹிட்டாக,ஹரியின் ஆக்சன்+குடும்ப கதை நிறைந்த வேல் ஹிட்டாக, அழகிய தமிழ் பிளாப் ஆனது.

2006


அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ,சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்தின் தர்மபுரி, ஆர்யாவின் வட்டாரம், அர்ஜுனின் வாத்தியார், எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் வரலாறு மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டும் இதுவே. இதுதவிர அவ்வாண்டு வெளியான மற்றைய அனைத்துப்படங்கலுமே பிளாப்தான்.

2005


இவ்வாண்டு விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவகாசி ஹிட்டாக, வித்தியாசமாக காமெடி டிராக்கில் முயற்சித்த விக்ரமுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

2004


இம்முறை அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் தல தீபாவளிதான். அஜித்தின் அட்டகாசம் மற்றும் அஜித் ரசிகரான சிம்புவின் மன்மதன் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

2003


அஜித்தின் ஆஞ்சநேயா,விஜயின் திருமலை, விக்ரம்+சூர்யாவின் பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இறங்குமுகத்திலிருந்த விஜய்க்கு திருமலை திருப்புமுனை ஹிட்டாக அமைந்தது. பிதாமகனும் ஆரம்பத்தில் கல்லா கட்டாவிடினும் மீடியாக்களின் உதவியோடு பிற்பாடு பிக்கப் ஆகி ஹிட் ஆனது. ஆஞ்சநேய பிளாப் ஆனது.

2002


இவ்வாண்டு அஜித்தின் வில்லன், விஜயகாந்தின் ரமணா, விஜயின் பகவதி ஆகிய படங்கள் வெளிவந்தன. அஜித்தின் ரெட்டை வேட அசத்தல் நடிப்பில் உருவான வில்லன் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதேபோல ரமணாவும் விஜயகாந்துக்கு பெரும் வெற்றியை கொடுத்தது,மேலும் அவரின் அரசியல் பாதைக்கு இந்தப்படம் சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. மூன்றாவது படமான பகவதி தோல்வியடைந்தது.

Friday, May 31, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1998 ஆம் ஆண்டு)


கடந்த பதிவில் தமிழ் சினிமாவின் பொற்காலம்(1999 ஆம் ஆண்டு) என்ற தலைப்பில் 1999 இல் வெளிவந்த எனக்கு பிடித்த திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை வழங்கியிருந்தேன்.அதன் தொடர்ச்சியா இப்பதிவில் 1998 ஆம் ஆண்டில் வெளியான என்னை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை பகிரவுள்ளேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

1. காதல் மன்னன் 


அஜித்-சரண் கூட்டனியில் உருவான இரண்டாவது திரைப்படம். முழுநீள காதல் திரைப்படம். வெறும் ஒருரூபாய்க்காக பந்தயம் பிடித்துவரும் ஹீரோ ஹீரோயினின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு போட்டோகிராபரா சென்று இறுதியில் அந்த பெண்ணையே கரம் பிடிக்கிறார்.. இதுதான் படத்தின் கதை.பாரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அருமை.

2. மூவேந்தர்


ஹீரோ,ஹீரோவின் அப்பா, தாத்தா என சண்டியர்களாகவே காலத்தை கழிக்கும் இவர்கள், சரத்குமார் தேவயானியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சரத்,மற்றுமிருவரும் எவ்வாறு திருந்துகிறார்கள்? என்பதே படத்தின் கதை. வித்தியாசமான கதைக்கருவில் உருவான குடும்பத்திரைப்படம்.

3. மறுமலர்ச்சி 


மம்முட்டி,தேவயாணி நடிப்பில் உருவான முழுநீள கிராமத்து குடும்பக்கதை. வழமையான கதைக்களம் என்றாலும் இயக்குனர் பாரதி சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

4. நினைத்தேன் வந்தாய் 


வழமையான முக்கோண காதல் கதையாகினும், படத்தில் அமைந்த அனைத்துப்பாடல்களும் சுப்பரோ சூப்பர்.. மேலும் காமெடி காட்சிகளை அதிகம்கொண்டிருப்பதாலும் வழமையான முக்கோண காதல் கதையிலும் கொஞ்சம் மாறுபட்டதாகவே பார்ப்போரை மகிழ்விக்கும்.

5. ஜீன்ஸ் 


இருவேடங்களில் பிரஷந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்த திரைப்படம். கதை பெரிதாக சொல்லுமளவுக்கு புதிதாயில்லாவிடினும் சங்கரின் பிரமாண்டம் மற்றும் இசைப்புயலின் அதிரடி பாடல்களுக்காக எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.

6. நட்புக்காக 



கே.எஸ் ரவிக்குமார் தனக்கேயுரிய பாணியில் அசத்திக்காட்டிய திரைப்படம். நட்பை சித்தரித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் அவை பொதுவாக கல்லூரி நண்பர்களின் நட்பு அல்லது நடுத்தர வயதினருடைய நட்பையே சித்தரிக்கும். இது வயதுபோன காலத்திலும் விஜயகுமார்-சரத்குமாரின் நட்பு எப்பிடி வலிமையானது?? என்பதை அழகாகவே இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கார்.

7. உன்னிடத்தின் என்னை கொடுத்தேன் 


அஜித்,கார்த்திக்,ரோஜா நடிப்பில் உருவான நகைச்சுவை+காதல்+குடும்ப திரைப்படம். பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத திரைப்படம். பாடல்கள் அனைத்தும் இன்றும் எல்லோர் வாயில் முணுமுணுத்தபடியே இருக்கின்றது..

8. கண்ணெதிரே தோன்றினாள்


உயிருக்குயிரா நேசிக்கின்ற நண்பனின் தங்கையை காதலிக்கலாமா? அதனால் எப்பிடியான பிரச்சினைகள் நட்புக்குள் வரும்.. என்பது பற்றிய திரைப்படம்தான் இது. பிரஷாந்த்,சிம்ரன் நடிப்பில் உருவான மற்றுமொரு அற்புதமான திரைப்படம்.

இது தவிர அவள் வருவாளா,சிம்மராசி,பூவேலி,தாயின் மணிக்கொடி, உதவிக்கு வரலாமா போன்ற படங்களும் என்னை மிகவும் கவர்ந்த படங்களாகும். இவ்வாண்டு மொத்தமாக 67 திரைப்படங்கள் வெளியாகின.

Saturday, May 25, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1999 ஆம் ஆண்டு)


நான் தமிழ் சினிமா பார்க்கத்தொடங்கியது கிட்டத்தட்ட 1997,1998,1999 காலப்பகுதியில். அந்தக்காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் டீவி இல்லை, எங்கையாவது திருமணவீடு,பூப்புனித நீராட்டுவிழா என்றால் இரவில் அந்த வீட்டில் படம் போடுவார்கள். ஒரு ஊரே அங்கு திரண்டுவரும் படம் பார்க்க. அப்பவெல்லாம் படம் பார்க்கும்போது அநேகமாக ஒன்றும் புரியாது. சண்டைக்காட்சிகள் வந்தா மட்டும் மும்முரமா கண் டீ.வியை நோக்கி இருக்கும். மற்றும்படி நண்பர்களுடன் அரட்டை. கிட்டத்தட்ட அந்த நினைவுகள் கடந்து இன்றைக்கு பதினைந்து வருடங்கள் ஆகினும், அந்தக்காலத்தில் வெளியான படங்களே எப்போதும் எனது விருப்பத்தெரிவில் முதலிடம். அவற்றுள் 1999 இல் வெளியான என்னை கவர்ந்த சில படங்களின் தொகுப்பை பகிரலாம் என்று நினைக்கிறேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

படையப்பா 

நீ வயசானாலும் உன் அழகும்,ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை என்று ரஜினியைப்பார்த்து சொந்தர்யா ஒரு வசனம் சொல்வார். அதேபோலவே திரைப்படமும் பதினைந்து வருடங்கள் தாண்டியும் இன்னும் எல்லோரினதும் விருப்பத்துக்குரிய படமாகவே இருக்கிறது. படம் தொடக்கத்தில் சாதாரண கல்லூரி மாணவனா இருக்கும் ரஜினி படம் முடியும்போது தனது பிள்ளைகளுக்கே திருமணம் செய்துவைத்துவிடுவார். இளமை கெட்டப்பில் இருந்து முதுமை கெட்டப் வரை ரஜினிகாந்தை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் செவ்வனே நடித்திருக்கமுடியாது.

உன்னைத்தேடி 



சுந்தர்சி இயக்கத்தில் அஜித், மாளவிகா,விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். குடும்ப கதையம்சத்துடன்கூடிய திரைப்படம். தேவா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

வாலி 

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் எண்டதை விட அசத்திய திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டி குடுக்கையில் தன்னுடைய கரியரில் தான் நடித்த படங்களில் தன்னுடைய நடிப்பால் வெற்றியடைந்தது என்று பெருமைப்படக்கூடிய முதலாவது திரைப்படம் வாலி என்றார். அந்தளவுக்கு பின்னி எடுத்திருப்பார். அண்ணன் தம்பியாக கெட்டப் வேறுபாடின்றி வாயசைவு,கண்ணசைவில் கதாபாத்திரங்களை வேறுபடுத்தி துல்லியமாக நடித்திருப்பார். இந்தப்படத்துக்காக அஜித்துக்கு இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது.

ஆனந்த பூங்காற்றே



ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்,கார்த்திக்,மீனா நடிப்பில் வெளியான குடும்ப சித்திரம். பலமானதொரு திரைக்கதையை வைத்து இயக்குனர் சிறப்பாகவே காட்சியமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் அருமை.

அமர்க்களம்

சொல்லவே தேவையில்ல. நவீன அஜித்குமாரை செதுக்கிய திரைப்படம். தமிழ் சினிமாவில் மாஸ் மாஸ் மாஸ் என்று சொல்வார்களே! அதுக்கு வித்திட்டதே இந்த திரைப்படம்தான். முகத்தில் லேசான தாடி, அழகு,வெறித்தனம்,தாதாயிசம் என எல்லாமே உருவாக இந்தப்படத்தில் அஜித் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார். அஜித்தின் ரசிகர் வட்டத்தின் மிகப்பெரும் ஏற்றம் இந்தப்படத்துக்குப்பிறகே!

நீ வருவாயென 

பார்த்தீபன்,அஜித்,தேவயானி நடிப்பில் உருவான காதல் காவியம். பாடல்கள் அனைத்துமே இன்றைக்கும் பட்டையை கிளப்பவல்லது.

ஜோடி 

பிரசாந்த்,சிம்ரன் நடிப்பில் வெளிவந்த காதல்+குடும்ப காவியம். ஹீரோயினின் பெற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோவும், ஹீரோவின் பற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோயினும் என்ன செய்கிறார்கள்? இதுவே இப்படத்தில் சுவாரிசியம்.

ஆசையில் ஓரு கடிதம் 



பிரசாந்த்,கௌசல்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான அருமையான திரைப்படம். கௌசல்யாவில் வாழ்க்கையில் பிரசாந்தின் காமெடித்தனம் எவ்வாறு வினையாகிறது..இதுவே படத்தின் ஹைலைட்.

கண்ணுபடப்போகுதையா



பாரதி கணேஷ் இயக்கத்தில் விஜயகாந்த்,சிம்ரன்,கரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். எத்தனை தடவை வேணும்னாலும் சலிக்காம பார்க்கக்கூடிய குடும்பச்சித்திரம். பாடல்கள்,காட்சியமைப்பு எல்லாமே பிரமாதம். செண்டிமென்தான் கொஞ்சம் ஓவர். இது தற்கால சந்ததியினருக்கு ஒரு மைனசாவும் இருக்கலாம்.

துள்ளாத மனமும் துள்ளும்.



எனக்கு பொதுவா விஜயின் அக்சன் படங்கள் பிடிக்கிறேலை. இன்றுவரை விஜயின் பிடித்த முதல் ரெண்டு படம் எதுவென்று கேட்டா ஒன்று பிரியமானவளே மற்றயது துள்ளாத மனமும் துள்ளும். தகுந்த கதைக்களத்துடன் எழில் அவர்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள்,சிம்ரனின் அபரிதமான நடிப்பின் துணையோடு மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்.

பாட்டாளி 



சரத்குமார்,தேவயாணி,ரம்யாகிரிஷ்ணன் நடிப்பில் உருவான முழுநீள காதல்+குடும்ப திரைப்படம். தேவயானியை காதலித்துக்கொண்டு ரம்யாவுடன் குடும்பம் நடத்தும் சரத்குமார் படும்பாடு என்ன?? இதுவே படத்தின் ஹைலைட்.

காதலர் தினம்

ரஹ்மானின் மந்திர இசையில் குணால்,சோனாலி பிந்துவே நடிப்பில் வெளியான அற்புதமான திரைப்படம். ஒரு பிள்ளையை வளர்க்கிற அளவுக்கு பெற்றோரிடம் பணவசதி இல்லை என்றால் பிள்ளையை பெறவேகூடாது. இதுவே படத்தில் கடைசியில் நாயகன் சொல்லும் தத்துவம். எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.


இதுதவிர இவ்வாண்டு வெளியான சூரியப்பார்வை, என்சுவாசக்காற்றே,கனவே கலையாதே,சேது உட்பட படங்களும் என்னை நன்றாக கவர்ந்த படங்கள். இதேபோல் இதுவரை பார்க்காத 1999 இல் வெளிவந்த படங்களும் உண்டு. இவ்வாண்டு மொத்தமாக 81 படங்கள் வெளிவந்தன.

comment