Friday, December 20, 2013

என்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்


நடிகர்கள்- ஜீவா, வினய், சந்தானம்,திரிஷா,ஆண்ட்ரியா 
இயக்கம்- அஹமட் 
இசை- ஹரிஸ் ஜெயராஜ் 
ஒளிப்பதிவு-மதி 
தயாரிப்பு- தமிழ் குமரன், ராமதாஸ் 
வெளியீடு- ரெட் ஜெயிண்ட்ஸ் 

"கோ"விற்கு பின்னர் தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து மீளுவாரா ஜீவா? என்றிருந்த வேளையில் "ஹிட்" என்று சொல்லுமளவுக்கு என்றென்றும் புன்னகை திரைப்படம் இன்று ரிலீசாகியிருக்கு. படம் வெளிவருவதற்கு முன்னராகவே இப்படம் பற்றிய பாஸிட்டிவ் அபிப்பிராயங்கள் மீடியாக்களில் வெளிவந்ததால் நிச்சயம் பலருக்கு இப்படத்தை பார்க்க தூண்டியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்ல. 

படத்தின் கதை இதுதான், சிறுவயதிலிருந்தே நண்பர்களான ஜீவா-வினய்-சந்தானம் வளர்ந்ததும் விளம்பர கம்பனியொன்றை நடாத்தி வருகின்றனர். சிறுவயதில் ஜீவாவின் தாயார் தந்தையை விட்டு சென்றுவிடவே அந்த விரக்தியில் வாழ்ந்துவந்த ஜீவாவின் தந்தை நாசர் ஜீவாவிற்கு பெண்கள் பற்றிய நம்பிக்கையீனங்களை சொல்லி சொல்லி வளர்க்கவே பெண்கள், காதல், திருமணம் இதிலெல்லாம் நாட்டமில்லாமலே ஜீவா வளர்ந்து வருகின்றார், அதுபோலவே தனது நண்பர்களும் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கிறார்... பின்னர் ,ஜீவா ஜீவாவின் நண்பர்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா? இதுவே படத்தின் பிற்பாதி, இதை திரையில் சென்று பார்த்து மகிழுங்கள்.


ஜீவா,திரிஷா - வினய்,சந்தானம் கூடவே இருந்தாலும் தனியாளாய் படத்தை தாங்கி நிற்கின்றார். படத்தின் கதைக்கேற்ப அழகான, இளமையான, துடிப்பான, தேவைப்ப்படுமிடத்தில் காமெடித்தனமான ஹீரோவாக ஜீவா திரையில் தோன்றுகின்றார். நீதானே என் பொன்வசந்தம் சுமாராயினும் ஜீவா-சமந்தாவுக்காக எவ்வாறு ஓரளவுக்கேனும் ரசித்ததுபோல இதிலும் ஜீவா-திரிஷா ஜோடி கலக்கலாக இருக்கிறது. இடைவேளைக்குமுதல் திரிஷாவுக்கு முக்கியத்துவம் பெரிதாக கொடுக்கப்படவில்லை என்றாலும் இடைவேளைக்கு பின்னர் திரிஷாவின் பங்கு சிறப்பானதே!

வினய், சந்தானம்- படத்தில் ஜீவாவின் கரக்டர் கொஞ்சம் சீரியசானதாக இருப்பதால் வினய், சந்தானம் ஆகிய இருவரும் ஆடியன்சை நன்றாகவே சிரிக்கவைத்துவிட்டனர். கிடத்தட்ட "உன்னாலே உன்னாலே" போலவே வினய்க்கு கரக்டர். சந்தானமும் தன்பங்கிற்கு சிறப்பாகவே நடித்துள்ளார். அண்மைய படங்களில் இவரின் மொக்கை காமெடிகலால் நொந்துபோனவர்களுக்கு இப்படம் பெரிய திருப்தியை கொடுக்கும். இயக்குனர் ராஜேஷ் போல சந்தானத்தை முதன்மைப்படுத்தாது திரைக்கதை,காட்சியமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சந்தானத்தால் நொந்துபோனவர்கள் இங்கே பயப்பிட தேவையில்லை.. தாராளமாகவே படத்தை பார்க்கலாம்.


இசையமைப்பாளர்- பாடல்கள் இதட்குமுதல் கேட்கவில்லை. படத்திற்கான பின்னணி இசை சிறப்பானதாகவே இருந்தது. வழக்கமாக இயக்குனர் கேட்ட பாடல்களின் எண்ணிக்கையைவிட குறையவே பாட்டை இசையமைக்கும் ஹாரிஸ் இந்தப்படத்துக்கு தானாகவே முன்வந்து மேலதிகமாக ஒரு பாடலை இசையமைத்து கொடுத்துள்ளாராம்.

இயக்குனர்- இயக்குனர் அஹமெட்டுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் "வாமணன்" சரிவர போகாவிடினும் இந்தப்படத்தை சிறப்பாகவே எடுத்துள்ளார். ராஜீவ் மேனன், மறைந்த இயக்குனர் ஜீவா(அவரின் கீழ் உதவி இயக்குனரா இருந்தவர்???), கௌதம் மேனனின் மேக்கிங் சாயல் இவரிலும் இருக்கின்றது. 'ஈகோ கொண்ட ஆணின் வாழ்க்கை எப்பிடி போகிறது?' ஒருவரிக்கதையை மையமாக வைத்து வித்தியாசமான காட்சியமைப்புடன் படத்தை மெருகேற்றியிருக்கிறார். 

படத்தில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு குறைகள் இல்ல, மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழக்கூடிய படம்... 

Wednesday, October 30, 2013

ஆரம்பம் திரைப்பட விமர்சனம்- சும்மா அதிருதல்லே!


அப்பாடா? ஒருவழியாக ஆரம்பம் பார்த்து முடிச்சாச்சு, எத்தனை நாள் கனவுகள்? எத்தனை ஏக்கங்கள்? எல்லாத்துக்கும் இன்று நம்ம தல+விஷ்ணு கூட்டணியினர் அட்டகாசமாக விருந்தளித்துவிட்டார்கள். ஆரம்பம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 18 நாடுகளில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீசாகிறது. சில நாடுகள், தமிழகத்தின் சில பகுதிகளில் இதற்கு முன்னைய ரிலீசை விளுங்குமளவுக்கு அதிக ஸ்கிரீனில் ரிலீசாகிறது, அதுமட்டுமில்ல அட்வான்ஸ் புக்கிங் வேற விண்ணை பிளக்கிறது. சரி படத்துக்கு வருவம். அதற்குமுதல் பலரின் எதிர்வுகூறல்போல இதிண்டும் சுவாட்பிஸ்சின் தழுவல் இல்ல. சரி அப்பிடி என்னதான் கதை? அதை நீங்களே திரையரங்குக்கு சென்று பாருங்கள்.....


சரி படத்தின் நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்களின் ஸ்பெசாலிட்டி என்ன எண்டதை பார்ப்பம்...

அஜித்- சொல்லவே வேணாம். சூரியனை சுற்றி எத்தனை கோள்கள் இருந்தாலும் சூரியனை மையமாகவே அவை சுற்றுகிறது. அதேபோல பவர் கூடியதும் சூரியன்தான்.. அதேபோலவே அஜித்தும். அஜித்தின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம். இரண்டு கரக்டர்ஸ். முதலாம் பாகத்தில் ஒருவிதமான அஜித்தையும், பிற்பாதியில் அஜித்தின் இன்னொரு முகத்தையும் பார்க்கலாம். ஸ்கிரீனில் அஜித் பிரசன்னமாகும் ஒவ்வொரு கணமுமே சூப்பர்.. புகுந்து விளையாடிட்டார் தல. இரண்டாம் பாதியில் நீண்ட நாளுக்குப்பிறகு சமுகத்தின் பொறுப்பு வாய்ந்த, மசேஜ் சொல்லும் அஜித்தை பார்க்கக்கூடியதாயிருந்தது. 

ஆர்யா, தப்சீ- இன்னொரு இண்டரெஸ்டிங்கான கரக்டர். ஆர்யாவின் கதாபாத்திரம் காமெடி+சீரியசான கரக்டர். தல ஆக்சன், ஸ்டைலால் கிளாப்ஸ் வாங்க ஆர்யா நகைச்சுவையான கதைகளால் படத்தை மேலும் மெருகேற்றுகிறார். அதேபோல நயன்தாராவும் தன்பங்கை நல்லாவே செய்துள்ளார். அவரின் கரக்டரும் வழமையான படங்களைவிட வித்தியாசமானது. கிட்டத்தட்ட பில்லாவில் வந்த கரக்டர் போல..


யுவன்- பின்னணி இசை, பாடல்கள் என பின்னி எடுத்துள்ளார். 
பாடல்கள்- பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன.. காட்சியமைப்பும் குறை சொல்லும்படியாக இல்ல. ஹோலி சாங் எல்லாத்தையும்விட ஸ்பெசல்.
ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாகவே இருந்தது.

இயக்குனர்- அஜித் ரசிகர்களா விஸ்ணுவிற்கு மிகப்பெரிய சல்யூட். ஏற்கனவே 2007 இல் கொடுத்த பில்லா பாக்ஸ் ஆபிசில் வசூல் கொட்டோ கொட்டென்னு கொட்டிச்சு, அதுமட்டுமில்ல புதியதோர் அஜித்தை உருவாக்கினார் பில்லா மூலம். அதேபோல் இப்படத்திலும் அவரின் கதை,காட்சியமைப்பு சிறப்பாகவே இருந்தது. படம் தொடக்கி முதல் 45 நிமிடங்கள்வரை பல கரக்டர்களின் அறிமுகம் இருப்பதால் அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? செயற்பாடுகள் என்ன என்பதை இயக்குனர் செவ்வனே சித்தரித்துள்ள்ளார் அதன்பின்னர் திரைக்கதையில் அனல் பறக்கும்..

மொத்தத்தில் படம் சூப்பர்.. தல ரசிகர்களுக்கு ஆரம்பமே போதும் தீபாவளி ரீட்டுக்கு.. தீபம் ஏத்தி பட்டாசு கொளுத்தியெல்லாம் தீபாவளி கொண்டாடவேணாம்.. எல்லாம் ஆரம்பம் பார்க்க தியேட்டருக்கு செல்லுங்கள்.

Monday, August 12, 2013

அஜித்துக்கு போட்டி சூர்யாவா? விஜயா?


கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத போட்டி நடிகர்களாக அஜித்-விஜய் இருந்துவந்தனர். ஆரம்பகாலங்களில் இருவருக்குமே கிட்டத்தட்ட இளைஜர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என ஒரேமாதிரியான ரசிகர் மட்டங்கள் இருந்தனர்.ஆனால் போகப்போக இருவருக்குமிடையேயான ரசிகர் பரம்பல்கள் மாறத்தொடங்கிவிட்டன. அமர்க்களத்தை தொடந்து தீனா,அட்டகாசம்,பில்லா போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் நடித்ததாலும் அவரின் சினிமாவுக்கு வெளியேயான அவரின் வெளிப்படையிலான பேச்சுக்கள் இளைஜர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதே காரணிதான் அஜித் "கிங் ஆப் ஒபெநிங்" ஆயிருப்பதற்கு காரணம். அதேபோல டான்ஸ், காமெடி என்று மசாலா படங்களில் நடித்ததால் சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என அவரின் ரசிகர் வட்டம் வேறுபடத்தொடங்கியது. ஆதலால் அஜித், விஜய் ஆகியோர் தொடர்ந்தும் இதே பாணியில் பயணித்துக்கொண்டிருந்ததால் எத்தனை படங்கள் தோல்வியுற்றாலும் ரசிகர்கள் மாறவில்லை, காரணம் வேறு தெரிவு இல்லை. இடையிடையே வேறு நடிகர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் மாற்றம் ஏற்படும் வகையில் 2007/08 இற்கு பின்னரான காலப்பகுதியில் சூர்யாவின் வளர்ச்சி அமைந்தது. சரி, சூர்யாவின் வளர்ச்சியால் அஜித்துக்கு ஆப்பா? விஜய்க்கு ஆப்பா எண்டு பார்ப்போம்.


ஒரு நடிகனுக்கு இருக்கும் சிறுவர், பெண், குடும்ப ரசிகர்களானது எப்போதுமே நிரந்தரமானதல்ல. காரணம் சிறுவர்கள் அறியாமை காலப்பகுதியில் ஒரு ஹீரோவை ரசிப்பார்கள் பிறகு வயது ஏற ரசிப்புத்தன்மை மாறுபடவே தங்களது ஹீரோவையும் மாற்றிக்கொள்வார்கள். இன்று விஜயகாந்தை கழுவி ஊத்தும் அநேகப்பேர் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சிறுவயதா இருக்கும்போது சண்டைக்காட்சிகளுக்காக அதே விஜயகாந்த் படங்களைத்தான் முண்டியடித்து பார்த்தார்கள். அதேபோலவே அர்ஜுனையும் ரசித்தார்கள். இன்று அதே அர்ஜினுக்கு யார் ரசிகர்கள்? அதேபோல மோகனை ரசித்த பெண்கள் பிறகு அரவிந்தசாமி வர அவர் பக்கம் போனார்கள், பிறகு அஜித், பிரஷாந்த் வர அவர்களை ரசித்தார்கள். பிறகு கொஞ்சக்காலம்முதல் வரை விஜயை ரசித்தார்கள்... அப்போ இனி??? வெயிட் பண்ணுங்க சொல்றேன்.... அடுத்தது குடும்ப ரசிகர்கள், ஐம்பது,அறுபது வயதுக்காரர் எல்லாம் சூர்யா, விஜய் ரசிகர்களா? சப்பா முடியல. ரஜினி-கமல் காலத்து ஆக்கள் சூர்யா ,விஜய் படத்தை விரும்பி பார்க்கலாம், அதுக்காக அவர்களை சூர்யா, விஜய் ரசிகர்கள் என்றா சொல்வது?? அதுபோக சுருங்க சொன்னா பெண்களுக்கு எப்ப ஒரு அழகான ஹீரோ தென்படுகிராரோ அப்போதே அவர்களுக்கு ரசிகர்களாகின்றனர்.. அதேபோலவே குடும்ப ரசிகர்கள், இவர்கள் அநேகம்பேர் இந்த ஹீரோக்குதான் ரசிகர் என்றில்ல. சிம்பு,தனுஷ் போன்றோர் குடும்ப ரசிகர்களை கவரும்விதமாக படம் நடித்தாலே அவர்களின் படங்களை முண்டியடித்து பார்ப்பார்கள். அப்பிடி இருக்கேக்க எங்க ஹீரோக்கு சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என எல்லா மட்டத்திலையும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வெட்டித்தனமாக சுயதம்பட்டம் அடிப்பது காமேடித்தனம். இதே அந்தக்ஹீரோ தொடர்ச்சியாக நாலைஞ்சு மொக்கைப்படங்கள் குடுத்து அந்த இடைவெளியில் போட்டியா வேறு ஹீரோக்கள் வந்திட்டா இந்தக்கூட்டங்கள் அப்பிடியே மற்ற ஹீரோக்கு மாறிடுவார்கள். இளைஜர்களின் நாயகனாக எந்த ஹீரோ இருக்கிறாரோ அவர்தான் எப்பவுமே கிங்!


சரி சூர்யா மேட்டருக்கு வருவோம், இப்பவெல்லாம் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதைவிட சூர்யாவையே அதிகம் கலாய்க்கிறார்கள். காரணம் விஜய் எந்தவகையில் எந்த மட்ட ரசிகர்களை கவரும்வகையில் படங்கள் நடித்தாரோ! அதே வழியில் சூர்யா விஜயிலும் பன்மடங்கு தரமான படங்களை குடுத்து அதிக படங்களை வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார். 2007 இல் போக்கிரி என்ற கிளீன் ஹிட்டை குடுத்த விஜயால் ஐந்து வருடங்களின்பின்னர், எட்டு படங்களின் பின்னரே துப்பாக்கி என்ற கிளீன் ஹிட்டை கொடுக்க முடிந்துள்ளது. இப்போ மறுபடியும் தலைவா என்ற மொக்கை காவியத்தை கொடுத்திருக்கிறார். இடையே வந்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களிற்கு வழமைபோலவே செயற்கை மரக்கட்டை விஜய் தரப்பு கொடுத்து ஹிட்..ஹிட் என்று சொன்னாலும் அவை மூன்றுமே அவரேஜ் ரக படங்கள்தான். விஜய் ரசிகர்கள் மட்டும் தங்கள் மனசந்தோசத்துக்கு வேணும்னா ஹிட் என்று மார்தட்டலாம். மற்றயவர்களும் ஏற்றுக்கொள்ளனுமே! ஒருநடிகனுக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமே ஹிட் என்று சொன்னா உண்மையான ஹிட்டாகிவிடாது. அப்பிடி பார்த்தா அஜித் ரசிகர்களுக்கு அசல்,ஏகன் எல்லாமே ஹிட்தான். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நிறைந்த இக்காலத்தில் ஆரம்பகாலங்கள்போல விஜய் தரப்பால் இனியும் ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா வைத்து ரசிகர்களை முட்டாளாக்க முடியாது.


ஆரம்பத்தில் நடிப்பு, பைட், டான்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத சூர்யா இன்று காமெடியை தவிர மிகுதி எல்லாவற்றிலுமே பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக பார்வைக்கு கட்டுமஸ்த உடல்வாகு மற்றும் முகவசீகத்துடன் இருக்கின்றார். விஜயும் தான் அழகுதான் எண்டதுக்காக முகத்துக்கு மேக்கப் பண்ணி எவ்வளவோ முயற்சி செய்கிறார் என்பது அண்மையில் வந்த ஒருசில படங்களில் தெரிகிறது, ஆனா பாவம் முடியல. மேக்கப்புக்கு செலவு செய்யும் நேரம், காட்டும் கரிசனையில் பாதியளவாவது நடிப்பதில் கவனம் செலுத்தினால் இன்றைக்கு இன்னும் உயரத்தை எட்டியிருக்கலாம். கண் இமையையும், வாயையும் தவிர தளபதியின் முகத்தில் வேறு எதுவுமே அசையாது. அது சோகமோ, காதலோ, சந்தோசமோ, கோபமோ!! என்ன உணர்வென்றாலும்... படத்தில் அவர் அழுதால் அழுகிறாரா சிரிக்கிறாரா என்ற சந்தேகம் வேற மக்களுக்கு வரும், "எல்லா நாம்பனும் ஓடுதெண்டு கந்தையற்றை பேத்தைக்கண்டும் ஓடிச்சாம்" என்று ஊருக்க சொல்லி நக்கலடிப்பாங்களே!! அதுபோல அஜித்தின் "பில்லா"க்கு பிறகு வந்த சில விஜய் படங்கள் சிலவற்றில் அதேபாணியை பின்பற்றி தளபதி நோண்டியானது நினைவுக்கு வருது. அதன் ஒரு தாக்கம் மறுபடியும் தலைவாவில் இரண்டாம் பாகத்தில் தெரிந்தது. அவரு தலைவராம்... கிட்டத்தட்ட டான் கரக்டர்... முகத்தை முறைப்பா வைச்சிருக்கிறாராம்!! சப்பா கோபம் வந்தா இப்பிடியா முக ரியாக்சன் இருக்கும்? மூன்று வயசு குழந்தைக்கு கோபம் வந்தாலே இதைவிட பயங்கரமா முகத்தை வைச்சிருக்கும். ரெண்டரை, மூன்று மணிநேர படத்தில் எவ்வளவு நாளைக்குதான் நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை மட்டும் பிளாசா வைச்சு படம் நடிப்பாங்க? காலம் மாறிச்சு தளபதி அவர்களே!!! இப்பெல்லாம் புதுசா வாற கத்துக்குட்டியளே விழுந்து புரண்டு ஆடுது.

சரி மேட்டருக்கே போவம் இன்றைய பெண்களின் கனவுநாயகன் யாரெண்டு கேட்டால் நிச்சயப்படுத்தி சொல்லலாம் சூர்யாதான் எண்டு. அதேபோலவே தரமான கதையம்சங்களுடனான படங்களை தேர்வுசெய்து நடிப்பதால் விஜய் போன்ற பொம்மை நடிகர்களை ரசித்தவர்கள் எல்லாம் சூர்யாவை ரசிக்க தொடங்கிவிட்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு இருக்கும் இடம், ரசிகர்பலம் எப்போதுமே நிரந்தரம். சூர்யா, விஜயில் ஒருவர் தொடர்ச்சியா ரெண்டு படங்கள் பிளாப் கொடுத்து மற்றயவர் அந்த இடைவெளியில் ஹிட் குடுத்தால் எல்லாமே தலைகீழாகிடும். அண்மையில் சிங்கம் 2 பெரு வெற்றியை அடைந்தது. மறுபக்கம் தலைவா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. விஜய்க்கு ஜில்லாவும் சொதப்பி சூர்யாவுக்கு இன்னொரு ஹிட் கிடைக்குமாயின் நிச்சயம் ரஜினி-கமலுக்கு பிறகு அஜித்-சூர்யாதான்... அதில் சந்தேகமில்ல.

Friday, July 19, 2013

மரியான்- சுருக்கமான விமர்சனம்


பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தனுஷ்,பார்வதி நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீசானது. அண்மையில் ஹிந்தியில் வெளியான ரஞ்சனா பெரும் வரவேற்பை கொடுத்ததையிட்டு அதன்மூலம் தமிழ் தவிந்த வடஇந்தியாவிலும் மரியானுக்கு ஓரளவு கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் கதைக்குள் செல்வோமாயின் கதாநாயகன்,கதாநாயகி இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருதலைக்காதலில் ஆரம்பித்து இருவரும் காதலர்களாகி, கதாநாயகியின் குடும்ப கடனை தீர்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சூடானுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனுஸ். அப்புறம் அங்கு அவர் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே படத்தின் கதை.


படத்தில் தனுஷ் வழமைபோல தனது அபரிதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். எனினும் சில சீனில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். அதைவிட ஆடுகளம் பட பாஷைபோல் கதைப்பது சில இடங்களில் விளங்கவில்லை. ஆடுகளம் கொடுத்த விருதுகளின் தாக்கத்தில் இருந்து தனுஷ் இன்னமும் மீளவில்லை என்றே தோணுகிறது. மற்றும் பார்வதி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். பாடல்கள், பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாமே மிகமெதுவாக செல்வது கொஞ்சம் போர். அதேபோல ஒளிப்பதிவும் அருமை, எனது கருத்துப்படி தனுஷின் பங்களிப்பின் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவும் செவ்வனே அமைந்துள்ளது. கடற்கரைக்காட்சிகளை துல்லியமாகவே படம்பிடித்துள்ளனர். நேரில் அந்த சூழலை அனுபவிப்பதுபோல் ஒரு உணர்வு.


இதைவிட இயக்குனரின் பங்களிப்பு என்று பார்த்தால் மேலே சொன்னதுபோல நடிகர்கள்,நடிகைகள், இசை,ஒளிப்பதிவு இவற்றையெல்லாம் சிறப்பாகவே ஒருங்கமைத்துள்ளார். ஸ்கிரீன்பிளேயும் ஓகே, ஆனால் கதை விடயத்தில் மிகப்பெரும்பிழையை விட்டுள்ளார். கதை தவிர மற்ற விடயங்கள் சிறப்பாக இருந்ததால் சிலருக்கு கதையில் உள்ள ஓட்டைகள் தெரியவில்லை. கதை விடயத்தில் விட்ட பிழை என்னவெனில், இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக ஆபிரிக்கா செல்லும் ஒருவர் அங்கு படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் ஸ்ரோறி. ஆனா இந்தப்படத்தை பார்த்தாப்பிறகு கதாநாயகன் அப்பிடி என்னதான் அங்கை கஸ்டப்பட்டார்? என்று பார்த்தால் அதன் உள்ளடக்கம் மிக மிக குறைவே.


தனுஸ் இரண்டு ஆண்டுகள் அங்குவேலை செய்கிறார். ஆனா என்ன வேலை செய்கிறார்? வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை?? அவை ஒன்றுமே காட்டப்படவில்லை. சரி, இயக்குனரின் நோக்கம் அதுவல்லாமல் இருக்கும் என்று தொடந்து பார்த்தால் ஆபிரிக்காவில் இருந்து தனுஸ் இந்தியாவை நோக்கி வெளிக்கிடுகிறதிலிருந்து ஆபிரிக்க காட்சிகள் தொடங்குகின்றது. அவ்வேளையில் அங்குள்ள தீவிரவாதிகள் தனுஸ் உட்பட அவரின் குழுவை பிடித்து கடுமையாக தாக்குகிறது, பிறகு வேற இடத்தில் கொண்டுபோய் தாக்குகிறது .. இப்பிடி மாறி மாறி அடிப்பதை தீவிரவாதிகள் தாக்குவதையே காட்டியிருக்கிறார்கள். இன்னமும் இதை சிறப்பாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். மற்றும் படம் ஆமை வேகத்தில் செல்வதும் கொஞ்சம் போர். இந்தப்படத்தின் உள்ளடக்கத்தை துல்லியமாக படக்குழுவினர் அறிந்துவிட்டனர்போலும், அதனால்தான் "3" படத்துக்கு செய்ததுபோல் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பவில்லை. எனினும் கதையளவில் உள்ள ஓட்டைகள் மற்றைய விடயங்களின் நேர்த்தியான தொகுப்பினால் பார்வையாளர்களை அந்தளவுக்கு வெறுக்கவைக்கவில்லை. எனது கருத்துப்படி படம் அவரேஜ். வணிக ரீதியாக ஹிட்டாவதும் சந்தேகமே!                        


Saturday, July 6, 2013

ஹாப்பி பேர்த்டே மகேந்திரசிங் டோனி:))


*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டோனி*
எனக்கு பிடித்த தென்னாபிரிக்க அணி வீரர்களைப்பற்றிக்கூட இதுவரை எந்தவொரு பதிவும் இடவில்லை கிரிக்கட்டில் தனியொருவரைப்பற்றி நான் எழுதும் முதல் ஆக்கம் இதுவே. வேடிக்கை என்னவெனில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முதலெல்லாம் இந்திய டீமில பிடிக்காத பிளேயர் யாரெண்டு கேட்டா டோனி எண்டுதான் முதலில் சொல்வேன். இதுக்காகவாவது இந்தியா தோற்கணும், டோனி வேளைக்கு அவுட் ஆகணும் என்று விருப்பப்படுவேன். காரணம், கங்குலி மீது எனக்கிருந்த பிடிப்புத்தான். நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கிய காலத்தில் கங்குலி இந்திய அணித்தலைவராயிருந்தார். அக்காலகட்டத்தில் அதாவது அசாருதீன், ஜடேயா, மொங்கியா போன்ற வீரர்கள் இந்திய அணியிலிருந்து விலகிய சமயத்தில் இந்திய அணி பலங்குன்றியதாகவே இருந்தது. துடுப்பாட்டவரிசையில் சச்சின், கங்குலி, திராவிட் தவிர எவருமே சிறப்பான, தொடர்ச்சியான பெறுபேற்றை வழங்குபவர்களல்ல. அதேபோலவே பந்துவீச்சும் சொதப்பல், களத்தடுப்பு ஆகலும் மோசம். அப்பவெல்லாம் பந்தை விழுந்து பிடிப்பதற்கே வீரர்களிடம் போதிய பயிற்சி இல்ல, கீப்பர் திராவிட், அஜய் ராத்ரா, விஜய் டஹியா எண்டு ஆள்தான் அவ்வப்போது மாறினார்களே தவிர உருப்படியான ஹீப்பர் என்று சொல்ல எவருமில்ல. அப்பிடி மோசமாக இருந்த காலத்திலும் இந்திய அணியினர் மண்டித்து கீழே விழவில்லை. இயலுமானவரை போட்டி கொடுத்தனர். அதற்கு முக்கிய காரணம் துடுப்பாட்டத்தில் அக்காலத்தில் கங்குலியின் ஆதிக்கமும், வெறித்தனமான தலைமைத்துவமும்தான். இதனால்தான் எனக்கு இன்றுவரை கங்குலியை மறக்கமுடியவில்லை. கங்குலி போய் ராவிட்டின் தலைமைப்பதவி போகும்வரையிலும் இந்தியாவின் சிறந்த கப்டன் என்றால் கங்குலிதான் என்று மீடியாக்கள், ரசிகர்கள் கங்குலியை புகழ்ந்தன.


ஆனால் டோனியின் அணித்தலைமை பிரவேசம் எப்போது ஆரம்பிச்சோ அன்றிலிருந்து எல்லாமே டோனிமேனியா ஆகிவிட்டது. டோனி கப்டனா வந்த காலப்பகுதியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது, அதுமட்டுமில்ல கங்குலி காலப்பகுதியைவிட தோனி காலப்பகுதியில் மற்றைய அணிகளும் பலவீனமடைந்துவிட்டன. அதனால் என்னிடம் ஒரு கேள்வி நல்ல டீம் இருந்தா எந்த கப்டனாலும் ஜெயிக்கலாம். டாடா மோசமான அணியை வைச்சே எவ்வளவு சாதிச்சிட்டார்.. அப்பிடி இருக்கேக்க தோனிக்கு இவ்வளவு புகழா?? இதுதான் நம்ம கடுப்பு. இந்த கடுப்பெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது சென்னைக்கு வெறித்தனமா சப்போட் பண்ணத்தொடங்கினேனோ அதிலிருந்து முற்றுமுழுதாக போய்விட்டது. இண்டைக்கு தோனியை ஹீரோவாக நினைக்கிற ரசிகர்களில் நானும் ஒருத்தன்.

சரி டோனியில் அப்பிடி என்ன ஸ்பெசல்? என்னுடைய மனதில் தோன்றியதை அப்பிடியே பகிர்ந்துக்கிறேன். (வரலாற்றுத்தகவல்களின் உதவியில்லாமல் எழுதுகிறேன், பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்)

1. இந்தியாவின் நம்பர் ஒன் வெற்றிகரமான கப்டன் இவர்தான். இவரின் காலப்பகுதியில்தான் அதிகப்படியான வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

2. இவரின் அணித்தலைமையின்கீழ் 50/50, T20, Chambion trophy ஆகிய மூன்று கிண்ணங்களும் இந்திய அணிக்கு கிடைத்தன.

3. போட்டியை அணுகும் முறை, அதாவது போட்டியின் எத்தருணத்திலும் குழப்பமடையமாட்டார். வீரர்களை மைதானத்தில் கண்டிப்பதில்லை. வெற்றி பெற்றால் துள்ளிக்குதிப்பதுமில்ல, தோல்வி என்றால் துவள்வதுமில்லை. ஒரு அணித்தலைவருக்கு திறமைக்கு அப்பால் இருக்கவேண்டிய உளவியல் சிறப்புக்கள் முழுவதும் டோனியிடம் உண்டு.


4. இந்திய கிரிக்கட் வரலாற்றிலேயே துடுப்பாட்டம், பந்துவீச்சுக்கு அப்பால் களத்தடுப்புக்கு அதிக சிரத்தை எடுத்தவர் டோனிதான். அண்மையில் Chambion trophy கிண்ணத்தை வென்றுவிட்டு வெற்றிக்கு முதலாவது காரணம் என்றுமில்லாத திறமையான களத்தடுப்புத்தான் என்று டோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

5. நான் அறிந்தவரையில் இந்திய கிரிக்கட் வரலாற்றிலே சிறந்த விக்கட் காப்பாளர் டோனிதான். அது மட்டுமல்ல இந்திய விக்கட் காப்பாளர்களிடையே சிறப்பாக துடுப்பெடுத்தாடவல்லவர்களில் டோனி முதலாமவர். (ராவிட்டை முழுநேர விக்கட் கீப்பாளராக கருதமுடியாதெனின்)

6. இளையோருக்கு ஊக்கப்படுத்தல், வெற்றிக்காக ரிஸ்க் எடுத்தல்.. அதாவது அண்மையில் நடந்த Chambion trophy போட்டிக்கான குழாமில் துணிச்சலாக கம்பீர், சேவாக், யுவராஜ், சஹீர்கான், ஹர்பஜன் போன்ற சிரேஸ்ட வீரர்களை நீக்கி சாதிச்சும் காட்டினார்.


இவ்வாறான அம்சங்கள்தான் இன்று தோனியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இங்கிலாந்து, அவுஸ்டேலிய மண்ணில் இடம்பெற்ற தொடர்ச்சியான டெஸ்ட் தோல்வியை அடுத்து டோனி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகணும் என்று அறிக்கைகள் விட்ட கங்குலி, கவாஸ்கர் போன்றோர் தற்போது டோனியின் தொடர்ச்சியான அணித்தலைவர் பங்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்றைய இந்திய அணியில் டோனி ஒரு தவிர்க்கமுடியாத வீரர். இவரின் அணித்தலைமைப்பதவிக்கு போட்டிக்கு இப்போதுள்ள வீரர்களிடையே எவருக்கும் சரியான தகுதி இல்ல. ஆகவே இன்னும் நீண்ட காலத்துக்கு அணித்தலைவர் அரியாசனத்தில் டோனியை பார்க்கலாம்.


((தற்போது காயத்தில் இருக்கும் டோனியின் மீள்வருகைக்காக காத்திருப்போம்:))

Friday, July 5, 2013

சிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே!)


ஒருவழியாக பலரும் எதிர்பார்த்த சிங்கம் 2 திரைப்படமானது உலகமெங்கும் 2000 இற்கு அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகிவிட்டது. 2010 இல் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் அதன் தொடர்ச்சியாகவே சிங்கம் 2 திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் ஹரி கூறுகையில் இதுவரை சிங்கம் 2 இற்காக பாடுபட்டதுபோல் எந்தவொரு திரைப்படத்திற்கும் பாடுபடவில்லை, இனியும் பாடுபடப்போவதில்லை என்றார். சூர்யாவின் கடந்த இரு படங்களும் பெரிதாக எடுபடாத நிலையில் இந்த படத்தை நிச்ச்சயம் ஹிட்டாக்கவேணும் என்ற முனைப்பில் ஹரி சூர்யாவை வைச்சு செவ்வனே செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லணும். இந்தப்படத்தின் டெயிலர்,டீசர் போன்றவற்றில் உரத்த சத்தங்களுடனான வசனங்கள், காரமசாலா அம்சங்கள் இருந்ததால் இந்தப்படம் தேறாதெண்டே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனா மெயின் பிக்சர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது. அடுத்ததாய் விமர்சனத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.


நடிகர்கள்- சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், ரஹ்மான்,                             ராதாரவி, நாசர்
இயக்கம்- ஹரி
இசை-தேவிசிறீ பிரசாத்
ஒளிப்பதிவு- பிரியன்
தயாரிப்பு- லக்ஸ்மன் குமார்
வெளியீடு- பிரின்ஸ் பிக்சர்ஸ்(தமிழில்), ஸ்ரூடியோ கிரீன்(தெலுங்கு)

கதைக்குள் போவோமாயின் சிங்கம் படத்தின் இறுதியில் போலிசை ராஜினாமா பண்ணிவிட்டு மளிகைக்கடை வைக்கப்போவாதாக சொல்வார் சூர்யா, ஆனா உண்மையில் அவர் பொதுமக்களின் பார்வையில் போலிசை ராஜினாமா பண்ணியதுபோல் பாவனை செய்துகொண்டு தூத்துக்குடியில் ஆயுதம் கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அப்புறம் ஒரு கட்டத்தில் பப்ளிக்கா டி.ஜி ஆகி கடத்தல்காரர்களை வேட்டையாடுகிறார். இதுவே ஒன் லைன் கதை. அவர் எப்பிடி வேட்டையாடுகிறார் என்பதை திரைக்கு சென்று பாருங்கள்.


சூர்யா- போலிசுக்கேற்ற எடுப்பான,மிடுக்கான தோற்றம், ஆவேசம், வேகமான உரத்த தெளிவான வசன உச்சரிப்பு, டான்ஸ் என சீனுக்கு சீன் பின்னி எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் முக்கியமான பிளசே சூர்யாதான்.

ஹரி- வழமைபோலவே இப்படத்திலும் சிறப்பாக செயற்பட்டுள்ளார், எனினும் கதையில் பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி சற்று குழப்பமடைய செய்துவிட்டார். படத்தின் நீளமும் கூட. எனினும் வேகமான ஸ்கிரீன்பிளே, கமெர்சியல் அம்சங்களின் சரியானா கலைவையினால் பார்ப்பவர்களை சலிப்படைய செய்யவில்லை.

அனுஷ்கா,ஹன்சிகா- அனுஸ்காவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவிற்கு காட்சிகள் அதிகம். heavy role என்று இல்லை. ஆதலால் வழமைபோலவே படத்தை மெருகேற்றியுள்ளனர்.

விவேக்,சந்தானம்- இப்பகுதியில் சந்தானத்துக்கு விவேக்கைவிட அதிக காட்சிகள். சிங்கம் ஒருபுறம் வேட்டையாட அவ்வப்போது இவர்களின் காமெடி பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியது.

பாடல்கள்- ஆடியோ, வீடியோ இரண்டுமே அவரேஜ். சூர்யாவை மட்டும் ஓரிரு பாடல் காட்சிகளில் வழமைக்கு மாறான டான்ஸ்சில் ரசிக்கலாம்.


படத்தில் வெளிப்படையா சொல்லுமளவுக்கு குறை என்னவென்றால் கடத்தல்காரர்கள் சர்வதேச வலையமைப்பில் இருந்து தூத்துக்குடிக்கு போதைபொருட்களை கடத்துவதாகவே கதை, ஆனா இவற்றை கண்காணிக்கும் சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏதோ பக்கத்து வீட்டில என்ன நடக்கிறது என்பதை வேலி துவாரத்தின் ஊடாக ஒட்டி நின்று பார்ப்பதுபோல அவதானிக்கிறார். இது சற்று நடைமுறைச்சாத்தியமற்றதே!! நிறைகள் என்று பார்த்தால் சந்தானம் எந்திரன்,தசாவதாரம்,சிங்கம் பட காட்சிகள் போல் வருபவை, இடைவேளைக்கு பின்னரான அனல் தெறிக்கும் வேகம்.... இவ்வாறு குறைகளை விட நிறைகளை சொல்லிட்டே போகலாம். எனது கருத்துப்படி படம் சூப்பர். மிஸ் பண்ணிடாதீங்க..

*கடந்த வாரம் இயக்குனர் ஹரி பற்றி நான் எழுதிய பதிவு, தவறாமல் இதையும் ஒருதடவை படிக்கவும்.

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


Friday, June 28, 2013

மீடியாக்களால் அஜித் படும் பாடு


எந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே! அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.



சில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் "படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா? சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.


Billa 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை! ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.


ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு யார் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா?? காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68%  வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.




ஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.
                                         

comment