Friday, July 19, 2013

மரியான்- சுருக்கமான விமர்சனம்


பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தனுஷ்,பார்வதி நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீசானது. அண்மையில் ஹிந்தியில் வெளியான ரஞ்சனா பெரும் வரவேற்பை கொடுத்ததையிட்டு அதன்மூலம் தமிழ் தவிந்த வடஇந்தியாவிலும் மரியானுக்கு ஓரளவு கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் கதைக்குள் செல்வோமாயின் கதாநாயகன்,கதாநாயகி இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருதலைக்காதலில் ஆரம்பித்து இருவரும் காதலர்களாகி, கதாநாயகியின் குடும்ப கடனை தீர்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சூடானுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனுஸ். அப்புறம் அங்கு அவர் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே படத்தின் கதை.


படத்தில் தனுஷ் வழமைபோல தனது அபரிதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். எனினும் சில சீனில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். அதைவிட ஆடுகளம் பட பாஷைபோல் கதைப்பது சில இடங்களில் விளங்கவில்லை. ஆடுகளம் கொடுத்த விருதுகளின் தாக்கத்தில் இருந்து தனுஷ் இன்னமும் மீளவில்லை என்றே தோணுகிறது. மற்றும் பார்வதி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். பாடல்கள், பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாமே மிகமெதுவாக செல்வது கொஞ்சம் போர். அதேபோல ஒளிப்பதிவும் அருமை, எனது கருத்துப்படி தனுஷின் பங்களிப்பின் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவும் செவ்வனே அமைந்துள்ளது. கடற்கரைக்காட்சிகளை துல்லியமாகவே படம்பிடித்துள்ளனர். நேரில் அந்த சூழலை அனுபவிப்பதுபோல் ஒரு உணர்வு.


இதைவிட இயக்குனரின் பங்களிப்பு என்று பார்த்தால் மேலே சொன்னதுபோல நடிகர்கள்,நடிகைகள், இசை,ஒளிப்பதிவு இவற்றையெல்லாம் சிறப்பாகவே ஒருங்கமைத்துள்ளார். ஸ்கிரீன்பிளேயும் ஓகே, ஆனால் கதை விடயத்தில் மிகப்பெரும்பிழையை விட்டுள்ளார். கதை தவிர மற்ற விடயங்கள் சிறப்பாக இருந்ததால் சிலருக்கு கதையில் உள்ள ஓட்டைகள் தெரியவில்லை. கதை விடயத்தில் விட்ட பிழை என்னவெனில், இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக ஆபிரிக்கா செல்லும் ஒருவர் அங்கு படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் ஸ்ரோறி. ஆனா இந்தப்படத்தை பார்த்தாப்பிறகு கதாநாயகன் அப்பிடி என்னதான் அங்கை கஸ்டப்பட்டார்? என்று பார்த்தால் அதன் உள்ளடக்கம் மிக மிக குறைவே.


தனுஸ் இரண்டு ஆண்டுகள் அங்குவேலை செய்கிறார். ஆனா என்ன வேலை செய்கிறார்? வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை?? அவை ஒன்றுமே காட்டப்படவில்லை. சரி, இயக்குனரின் நோக்கம் அதுவல்லாமல் இருக்கும் என்று தொடந்து பார்த்தால் ஆபிரிக்காவில் இருந்து தனுஸ் இந்தியாவை நோக்கி வெளிக்கிடுகிறதிலிருந்து ஆபிரிக்க காட்சிகள் தொடங்குகின்றது. அவ்வேளையில் அங்குள்ள தீவிரவாதிகள் தனுஸ் உட்பட அவரின் குழுவை பிடித்து கடுமையாக தாக்குகிறது, பிறகு வேற இடத்தில் கொண்டுபோய் தாக்குகிறது .. இப்பிடி மாறி மாறி அடிப்பதை தீவிரவாதிகள் தாக்குவதையே காட்டியிருக்கிறார்கள். இன்னமும் இதை சிறப்பாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். மற்றும் படம் ஆமை வேகத்தில் செல்வதும் கொஞ்சம் போர். இந்தப்படத்தின் உள்ளடக்கத்தை துல்லியமாக படக்குழுவினர் அறிந்துவிட்டனர்போலும், அதனால்தான் "3" படத்துக்கு செய்ததுபோல் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பவில்லை. எனினும் கதையளவில் உள்ள ஓட்டைகள் மற்றைய விடயங்களின் நேர்த்தியான தொகுப்பினால் பார்வையாளர்களை அந்தளவுக்கு வெறுக்கவைக்கவில்லை. எனது கருத்துப்படி படம் அவரேஜ். வணிக ரீதியாக ஹிட்டாவதும் சந்தேகமே!                        


Saturday, July 6, 2013

ஹாப்பி பேர்த்டே மகேந்திரசிங் டோனி:))


*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டோனி*
எனக்கு பிடித்த தென்னாபிரிக்க அணி வீரர்களைப்பற்றிக்கூட இதுவரை எந்தவொரு பதிவும் இடவில்லை கிரிக்கட்டில் தனியொருவரைப்பற்றி நான் எழுதும் முதல் ஆக்கம் இதுவே. வேடிக்கை என்னவெனில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முதலெல்லாம் இந்திய டீமில பிடிக்காத பிளேயர் யாரெண்டு கேட்டா டோனி எண்டுதான் முதலில் சொல்வேன். இதுக்காகவாவது இந்தியா தோற்கணும், டோனி வேளைக்கு அவுட் ஆகணும் என்று விருப்பப்படுவேன். காரணம், கங்குலி மீது எனக்கிருந்த பிடிப்புத்தான். நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கிய காலத்தில் கங்குலி இந்திய அணித்தலைவராயிருந்தார். அக்காலகட்டத்தில் அதாவது அசாருதீன், ஜடேயா, மொங்கியா போன்ற வீரர்கள் இந்திய அணியிலிருந்து விலகிய சமயத்தில் இந்திய அணி பலங்குன்றியதாகவே இருந்தது. துடுப்பாட்டவரிசையில் சச்சின், கங்குலி, திராவிட் தவிர எவருமே சிறப்பான, தொடர்ச்சியான பெறுபேற்றை வழங்குபவர்களல்ல. அதேபோலவே பந்துவீச்சும் சொதப்பல், களத்தடுப்பு ஆகலும் மோசம். அப்பவெல்லாம் பந்தை விழுந்து பிடிப்பதற்கே வீரர்களிடம் போதிய பயிற்சி இல்ல, கீப்பர் திராவிட், அஜய் ராத்ரா, விஜய் டஹியா எண்டு ஆள்தான் அவ்வப்போது மாறினார்களே தவிர உருப்படியான ஹீப்பர் என்று சொல்ல எவருமில்ல. அப்பிடி மோசமாக இருந்த காலத்திலும் இந்திய அணியினர் மண்டித்து கீழே விழவில்லை. இயலுமானவரை போட்டி கொடுத்தனர். அதற்கு முக்கிய காரணம் துடுப்பாட்டத்தில் அக்காலத்தில் கங்குலியின் ஆதிக்கமும், வெறித்தனமான தலைமைத்துவமும்தான். இதனால்தான் எனக்கு இன்றுவரை கங்குலியை மறக்கமுடியவில்லை. கங்குலி போய் ராவிட்டின் தலைமைப்பதவி போகும்வரையிலும் இந்தியாவின் சிறந்த கப்டன் என்றால் கங்குலிதான் என்று மீடியாக்கள், ரசிகர்கள் கங்குலியை புகழ்ந்தன.


ஆனால் டோனியின் அணித்தலைமை பிரவேசம் எப்போது ஆரம்பிச்சோ அன்றிலிருந்து எல்லாமே டோனிமேனியா ஆகிவிட்டது. டோனி கப்டனா வந்த காலப்பகுதியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது, அதுமட்டுமில்ல கங்குலி காலப்பகுதியைவிட தோனி காலப்பகுதியில் மற்றைய அணிகளும் பலவீனமடைந்துவிட்டன. அதனால் என்னிடம் ஒரு கேள்வி நல்ல டீம் இருந்தா எந்த கப்டனாலும் ஜெயிக்கலாம். டாடா மோசமான அணியை வைச்சே எவ்வளவு சாதிச்சிட்டார்.. அப்பிடி இருக்கேக்க தோனிக்கு இவ்வளவு புகழா?? இதுதான் நம்ம கடுப்பு. இந்த கடுப்பெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது சென்னைக்கு வெறித்தனமா சப்போட் பண்ணத்தொடங்கினேனோ அதிலிருந்து முற்றுமுழுதாக போய்விட்டது. இண்டைக்கு தோனியை ஹீரோவாக நினைக்கிற ரசிகர்களில் நானும் ஒருத்தன்.

சரி டோனியில் அப்பிடி என்ன ஸ்பெசல்? என்னுடைய மனதில் தோன்றியதை அப்பிடியே பகிர்ந்துக்கிறேன். (வரலாற்றுத்தகவல்களின் உதவியில்லாமல் எழுதுகிறேன், பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்)

1. இந்தியாவின் நம்பர் ஒன் வெற்றிகரமான கப்டன் இவர்தான். இவரின் காலப்பகுதியில்தான் அதிகப்படியான வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

2. இவரின் அணித்தலைமையின்கீழ் 50/50, T20, Chambion trophy ஆகிய மூன்று கிண்ணங்களும் இந்திய அணிக்கு கிடைத்தன.

3. போட்டியை அணுகும் முறை, அதாவது போட்டியின் எத்தருணத்திலும் குழப்பமடையமாட்டார். வீரர்களை மைதானத்தில் கண்டிப்பதில்லை. வெற்றி பெற்றால் துள்ளிக்குதிப்பதுமில்ல, தோல்வி என்றால் துவள்வதுமில்லை. ஒரு அணித்தலைவருக்கு திறமைக்கு அப்பால் இருக்கவேண்டிய உளவியல் சிறப்புக்கள் முழுவதும் டோனியிடம் உண்டு.


4. இந்திய கிரிக்கட் வரலாற்றிலேயே துடுப்பாட்டம், பந்துவீச்சுக்கு அப்பால் களத்தடுப்புக்கு அதிக சிரத்தை எடுத்தவர் டோனிதான். அண்மையில் Chambion trophy கிண்ணத்தை வென்றுவிட்டு வெற்றிக்கு முதலாவது காரணம் என்றுமில்லாத திறமையான களத்தடுப்புத்தான் என்று டோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

5. நான் அறிந்தவரையில் இந்திய கிரிக்கட் வரலாற்றிலே சிறந்த விக்கட் காப்பாளர் டோனிதான். அது மட்டுமல்ல இந்திய விக்கட் காப்பாளர்களிடையே சிறப்பாக துடுப்பெடுத்தாடவல்லவர்களில் டோனி முதலாமவர். (ராவிட்டை முழுநேர விக்கட் கீப்பாளராக கருதமுடியாதெனின்)

6. இளையோருக்கு ஊக்கப்படுத்தல், வெற்றிக்காக ரிஸ்க் எடுத்தல்.. அதாவது அண்மையில் நடந்த Chambion trophy போட்டிக்கான குழாமில் துணிச்சலாக கம்பீர், சேவாக், யுவராஜ், சஹீர்கான், ஹர்பஜன் போன்ற சிரேஸ்ட வீரர்களை நீக்கி சாதிச்சும் காட்டினார்.


இவ்வாறான அம்சங்கள்தான் இன்று தோனியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இங்கிலாந்து, அவுஸ்டேலிய மண்ணில் இடம்பெற்ற தொடர்ச்சியான டெஸ்ட் தோல்வியை அடுத்து டோனி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகணும் என்று அறிக்கைகள் விட்ட கங்குலி, கவாஸ்கர் போன்றோர் தற்போது டோனியின் தொடர்ச்சியான அணித்தலைவர் பங்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்றைய இந்திய அணியில் டோனி ஒரு தவிர்க்கமுடியாத வீரர். இவரின் அணித்தலைமைப்பதவிக்கு போட்டிக்கு இப்போதுள்ள வீரர்களிடையே எவருக்கும் சரியான தகுதி இல்ல. ஆகவே இன்னும் நீண்ட காலத்துக்கு அணித்தலைவர் அரியாசனத்தில் டோனியை பார்க்கலாம்.


((தற்போது காயத்தில் இருக்கும் டோனியின் மீள்வருகைக்காக காத்திருப்போம்:))

Friday, July 5, 2013

சிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே!)


ஒருவழியாக பலரும் எதிர்பார்த்த சிங்கம் 2 திரைப்படமானது உலகமெங்கும் 2000 இற்கு அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகிவிட்டது. 2010 இல் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் அதன் தொடர்ச்சியாகவே சிங்கம் 2 திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் ஹரி கூறுகையில் இதுவரை சிங்கம் 2 இற்காக பாடுபட்டதுபோல் எந்தவொரு திரைப்படத்திற்கும் பாடுபடவில்லை, இனியும் பாடுபடப்போவதில்லை என்றார். சூர்யாவின் கடந்த இரு படங்களும் பெரிதாக எடுபடாத நிலையில் இந்த படத்தை நிச்ச்சயம் ஹிட்டாக்கவேணும் என்ற முனைப்பில் ஹரி சூர்யாவை வைச்சு செவ்வனே செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லணும். இந்தப்படத்தின் டெயிலர்,டீசர் போன்றவற்றில் உரத்த சத்தங்களுடனான வசனங்கள், காரமசாலா அம்சங்கள் இருந்ததால் இந்தப்படம் தேறாதெண்டே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனா மெயின் பிக்சர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது. அடுத்ததாய் விமர்சனத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.


நடிகர்கள்- சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், ரஹ்மான்,                             ராதாரவி, நாசர்
இயக்கம்- ஹரி
இசை-தேவிசிறீ பிரசாத்
ஒளிப்பதிவு- பிரியன்
தயாரிப்பு- லக்ஸ்மன் குமார்
வெளியீடு- பிரின்ஸ் பிக்சர்ஸ்(தமிழில்), ஸ்ரூடியோ கிரீன்(தெலுங்கு)

கதைக்குள் போவோமாயின் சிங்கம் படத்தின் இறுதியில் போலிசை ராஜினாமா பண்ணிவிட்டு மளிகைக்கடை வைக்கப்போவாதாக சொல்வார் சூர்யா, ஆனா உண்மையில் அவர் பொதுமக்களின் பார்வையில் போலிசை ராஜினாமா பண்ணியதுபோல் பாவனை செய்துகொண்டு தூத்துக்குடியில் ஆயுதம் கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அப்புறம் ஒரு கட்டத்தில் பப்ளிக்கா டி.ஜி ஆகி கடத்தல்காரர்களை வேட்டையாடுகிறார். இதுவே ஒன் லைன் கதை. அவர் எப்பிடி வேட்டையாடுகிறார் என்பதை திரைக்கு சென்று பாருங்கள்.


சூர்யா- போலிசுக்கேற்ற எடுப்பான,மிடுக்கான தோற்றம், ஆவேசம், வேகமான உரத்த தெளிவான வசன உச்சரிப்பு, டான்ஸ் என சீனுக்கு சீன் பின்னி எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் முக்கியமான பிளசே சூர்யாதான்.

ஹரி- வழமைபோலவே இப்படத்திலும் சிறப்பாக செயற்பட்டுள்ளார், எனினும் கதையில் பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி சற்று குழப்பமடைய செய்துவிட்டார். படத்தின் நீளமும் கூட. எனினும் வேகமான ஸ்கிரீன்பிளே, கமெர்சியல் அம்சங்களின் சரியானா கலைவையினால் பார்ப்பவர்களை சலிப்படைய செய்யவில்லை.

அனுஷ்கா,ஹன்சிகா- அனுஸ்காவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவிற்கு காட்சிகள் அதிகம். heavy role என்று இல்லை. ஆதலால் வழமைபோலவே படத்தை மெருகேற்றியுள்ளனர்.

விவேக்,சந்தானம்- இப்பகுதியில் சந்தானத்துக்கு விவேக்கைவிட அதிக காட்சிகள். சிங்கம் ஒருபுறம் வேட்டையாட அவ்வப்போது இவர்களின் காமெடி பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியது.

பாடல்கள்- ஆடியோ, வீடியோ இரண்டுமே அவரேஜ். சூர்யாவை மட்டும் ஓரிரு பாடல் காட்சிகளில் வழமைக்கு மாறான டான்ஸ்சில் ரசிக்கலாம்.


படத்தில் வெளிப்படையா சொல்லுமளவுக்கு குறை என்னவென்றால் கடத்தல்காரர்கள் சர்வதேச வலையமைப்பில் இருந்து தூத்துக்குடிக்கு போதைபொருட்களை கடத்துவதாகவே கதை, ஆனா இவற்றை கண்காணிக்கும் சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏதோ பக்கத்து வீட்டில என்ன நடக்கிறது என்பதை வேலி துவாரத்தின் ஊடாக ஒட்டி நின்று பார்ப்பதுபோல அவதானிக்கிறார். இது சற்று நடைமுறைச்சாத்தியமற்றதே!! நிறைகள் என்று பார்த்தால் சந்தானம் எந்திரன்,தசாவதாரம்,சிங்கம் பட காட்சிகள் போல் வருபவை, இடைவேளைக்கு பின்னரான அனல் தெறிக்கும் வேகம்.... இவ்வாறு குறைகளை விட நிறைகளை சொல்லிட்டே போகலாம். எனது கருத்துப்படி படம் சூப்பர். மிஸ் பண்ணிடாதீங்க..

*கடந்த வாரம் இயக்குனர் ஹரி பற்றி நான் எழுதிய பதிவு, தவறாமல் இதையும் ஒருதடவை படிக்கவும்.

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


Friday, June 28, 2013

மீடியாக்களால் அஜித் படும் பாடு


எந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே! அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.



சில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் "படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா? சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.


Billa 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை! ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.


ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு யார் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா?? காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68%  வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.




ஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.
                                         

Wednesday, June 26, 2013

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


இந்தப்பதிவை எழுத கொஞ்சம் தர்மசங்கடமாய்தான் இருக்கிறது, ஏன்னா சமுகவலைத்தளங்களில் சினிமா ரசிகர்களாக,விமர்சகர்களாக இருப்பவர்கள் அனேகமாக மணிரத்தினம், பாலா, பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் ரசிகர்களாகவே தங்களை காட்டிக்கொள்வார்கள் அதுமட்டுமல்ல மசாலா இயக்குனர்களையும் ஓரங்கட்டிவிடுவார்கள். அப்பிடி மசாலா பேர்வழிகளை பிடித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாம கொஞ்சம் வித்தியாசம்தான் பேரரசு போன்ற காரமசாலா இயக்குனர்களையும் விரும்பமாட்டம், பாலா போன்றவர்களையும் விரும்பமாட்டம். இடைநிலை மசாலா இயக்குனர்களான சங்கர்,ரவிக்குமார்,ஹரி,முருகதாஸ்,கே.வி ஆனந்த் போன்றோரே நம்ம பேவரைட். உண்மையை சொல்லப்போனால் அதிகப்படியானோர் ரசிப்பது இவர்களின் படங்களைத்தான். அதில் இந்தப்பதிவில் ஹரியைப்பற்றி பார்ப்போம்.


சரணின் அசிஸ்டெண்ட்டா இருந்து 2002 இல் தமிழ்சினிமாவில் இயக்குனராக காலடி வைத்த இவர் இன்றுவரை 11 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 ஆவது திரைப்படமான சிங்கம் 2 எதிர்வரும் ஜூலை 5 இல் வெளியாகவுள்ளது. இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் தரமுன் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துதல் சிறந்ததென்று நினைக்கிறேன். ஒரு கூட்டத்தில் இயக்குனர் சேரன் உரையாற்றுகையில் மசாலா இயக்குனர்கள் எப்பபாரு ஒரே விடயத்தையே திரும்ப திரும்ப படமா எடுக்கிறார்கள், வித்தியாசமா எந்தவொரு படைப்பையும் வழங்குறார்கள் இல்லை என்றார். அதற்கு ஹரி சொன்ன பதில் "வித்தியாசமா எடுக்கணும் என்றால் சொந்தமா முதல் போட்டு படத்தை எடுங்கள், அடுத்தவனின் முதலை அழிக்காதீர்கள். என்னுடைய படங்கள் எப்போதுமே இயக்குனர்களுக்கு நஷ்டத்தை குடுப்பதில்லை என்றார்."..... இதுதான் ஹரி.


இன்றைய இயக்குனர்களில் மினிமம் கரண்டி இயக்குனர்களில் ஹரியும் முதன்மையானவர். இவரின் படங்களை பார்த்தீர்களாயின் படம் முழுக்க முழுக்க பக்கா கமெர்சியல் அம்சங்களை கொண்டிருக்கும், திரைக்கதையில் எப்போதுமே ஒரு வேகம் இருக்கும். இது ஆங்காங்கே வரும் பிழைகளையும் மூடி மறைத்துவிடும், மேலும் படங்கள் பொதுவா கிராமத்துப்படங்களே. வெளிநாடுகளில் பொதுவா சூட்டிங் எடுப்பதில்லை (சிங்கம் பாடல் காட்சிகள், சிங்கம் 2 தவிர), மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது குறுகிய காலப்பகுதியில் படத்தை எடுத்து முடித்துவிடுவார், மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள். இப்பிடியான அம்சங்களால் இவரின் படங்களால் பொதுவாக விநியோகிஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் வருவதில்லை. (வேங்கை திரைப்படம் மட்டும் சிலவேளைகளில் சில தரப்பினர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கலாம். மற்றய படங்கள் அவ்வாறில்லை.)


இவர் இதுவரை எடுத்த 11 திரைப்படங்களில் தமிழ், சாமி, ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் ஆகிய ஆறு படங்கள் கிளீன் ஹிட். கோவில், அருள், ஆறு, சேவல் ஆகிய நான்கும் அவரேஜ். வேங்கை மட்டுமே வந்ததே தெரியாமல் சென்ற திரைப்படம். இந்த படத்துக்கு தனுஷை ஹீரோவாக தேர்வு செய்ததே முதலாவது பிழை, அத்துடன் கதைக்களத்திலும் ஹரி விட்ட தவறு படத்தை தோல்வியடைய செய்துவிட்டது.

ஹரியின் படங்களில் எனக்கு பிடித்த டாப் 5

5. தாமிரபரணி


மற்றைய ஹரி படங்களுடன் ஒப்பிடும்போது இதில் ஆக்சன் குறைவு. விஷாலின் ஹீரோ வால்யுவை துல்லியமா மதிப்பிட்டு குடும்ப செண்டிமெண்டை வைச்சே படத்தை ஹிட் குடுத்துவிட்டார்.

4. சாமி


இந்தப்படம் வந்த காலப்பகுதியில் விக்ரமுக்கு இருந்த செல்வாக்கின் பாதியளவுகூட இப்போ விக்ரமுக்கு இல்லை என்றே சொல்லலாம். போலீஸ் கதையில் உருவான இந்த திரைப்படம் "காக்க காக்க" எப்பிடி மக்கள் மத்தியில் இன்னொரு ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல மசாலா போலீஸ் படங்களில் என்னுடைய ரசனையில் இதுவொரு வித்தியாசமான திரைப்படம். மேலும் இப்படத்தில் விவேக்கின் காமெடி, காதல் காட்சிகள் எல்லோரையும் கவருபவையாகவே இருந்தது. தற்போது இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி ரிலீசாகப்போகிறது.

3. தமிழ் 


பிரஷாந்த்,சிம்ரன் என்ற அழகான இரு ஜோடிகளை வைத்து காதலுக்கு கொஞ்சம் கூடுதலா முன்னுரிமை கொடுத்த திரைப்படம். 

2. சிங்கம் 


ஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம். மூடிய நிலையில் இருந்த தமிழகத்து திரையரங்குகள் சில சிங்கத்தால் ரீ.என்றி அடைந்தன.

1. வேல்


ஒரு மசாலா திரைப்படம் எப்பிடி இருக்கவேணும், எல்லா தரப்பையும் கவருமாறு எப்பிடி படம் எடுக்கவேணும் எண்டதுக்கு உதாரணமாக சொல்லவைத்த திரைப்படம் இது. 2007 இல் வெளிவந்த ஆக்சன்,கதை,குடும்ப செண்டிமெண்ட்,காதல்,காமெடி என்று எதிலுமே சளைக்காமல் நேர்த்தியான ஸ்கிரீன்பிளேயில் உருவான திரைப்படம்.

*இதேபோல சிங்கம் 2 உம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்* 

Tuesday, June 4, 2013

தீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)


பண்டிகைக்காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் எப்பவுமே தமிழ் பட விநிகியோகிஸ்தர்களுக்கு அலாதி பிரியம்தான். காரணம் இல்லாமலல்ல, சாதாரண நாட்களிலும் பார்க்க பண்டிகைக்காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அதிகமே! இதனால்தான் எத்தனை போட்டிப்படங்கள் வந்தாலும் அனேகமா துணிந்து தங்கள் தங்கள் படங்களை பண்டிகைக்கலங்களில் வெளியிட விரும்புவார்கள். அந்தவகையில் 2002 இற்கு பிறகு தீபாவளியன்று வெளியான திரைப்படங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை...

2012


இவ்வாண்டு துப்பாக்கி, போடாபோடி, நீர்ப்பறவை, அம்மாவின் கைபேசி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் துப்பாக்கி விஜய்க்கு போக்கிரிக்கு பிறகு(2007) தொடர்ச்சியான ஐந்து தோல்விகள், மூன்று அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு கிடைத்த கிளீன் ஹிட். நீர்ப்பறவை அவரேஜ். மற்றைய இருபடங்களும் வந்ததே தெரியாதவாறு காணாமல் போயின.

2011



இவ்வாண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் விஜயின் வேலாயுதம் ஆகியன வெளிவந்தன. ஆரம்பத்தில் திரையரங்க ஒதுக்கீட்டுலிருந்து இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியதால் படம் வெளிவந்து ஓடிமுடியும்வரை வாய்ச்சத்தம்தான் அதிகமாக கேட்டதே தவிர இவ்விரண்டு படங்களுமே சரிவர ஓடவில்லை. ஒப்பீட்டளவில் ஏழாம் அறிவு அதிக கலக்சனை கல்லா கட்டியது.

2010


இம்முறை மைனா, உத்தம புத்திரன், வா குவாட்டர் கட்டிங் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் மைனா வசூல்,விமர்சன ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது, உத்தம புத்திரன் அவரேஜ், வா குவாட்டர் கட்டிங் படுதோல்வியை அடைந்தது.

2009


இம்முறை சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆதவன் அதன் தயாரிப்பாளர் உதயநிதியால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் உண்மைநிலவரப்படி அவரேஜ் ஹிட்தான். பேராண்மையும் இதேநிலைதான்..

2008


இம்முறை தல அஜித்தின் ஏகன், பரத்+ஹரியின் சேவல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பில்லா என்ற மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு வந்தபடம் ஏகன் என்றதால் கிங் ஆப் ஒபெநிங் அஜித்தின் வழமையான படங்களையே விழுங்குமளவுக்கு எதிர்பார்ப்பு,ஒபெநிங் இருந்தும் மோசமான கதையமைப்பால் தோல்வியை அடைந்தது. மற்றைய படமான சேவலும் பிளாப்தான்.

2007


இம்முறை சூர்யாவின் வேல், விஜயின் அழகிய தமிழ் மகன், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் பொல்லாதவன் சூப்பர் ஹிட்டாக,ஹரியின் ஆக்சன்+குடும்ப கதை நிறைந்த வேல் ஹிட்டாக, அழகிய தமிழ் பிளாப் ஆனது.

2006


அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ,சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்தின் தர்மபுரி, ஆர்யாவின் வட்டாரம், அர்ஜுனின் வாத்தியார், எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் வரலாறு மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டும் இதுவே. இதுதவிர அவ்வாண்டு வெளியான மற்றைய அனைத்துப்படங்கலுமே பிளாப்தான்.

2005


இவ்வாண்டு விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவகாசி ஹிட்டாக, வித்தியாசமாக காமெடி டிராக்கில் முயற்சித்த விக்ரமுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

2004


இம்முறை அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் தல தீபாவளிதான். அஜித்தின் அட்டகாசம் மற்றும் அஜித் ரசிகரான சிம்புவின் மன்மதன் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

2003


அஜித்தின் ஆஞ்சநேயா,விஜயின் திருமலை, விக்ரம்+சூர்யாவின் பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இறங்குமுகத்திலிருந்த விஜய்க்கு திருமலை திருப்புமுனை ஹிட்டாக அமைந்தது. பிதாமகனும் ஆரம்பத்தில் கல்லா கட்டாவிடினும் மீடியாக்களின் உதவியோடு பிற்பாடு பிக்கப் ஆகி ஹிட் ஆனது. ஆஞ்சநேய பிளாப் ஆனது.

2002


இவ்வாண்டு அஜித்தின் வில்லன், விஜயகாந்தின் ரமணா, விஜயின் பகவதி ஆகிய படங்கள் வெளிவந்தன. அஜித்தின் ரெட்டை வேட அசத்தல் நடிப்பில் உருவான வில்லன் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதேபோல ரமணாவும் விஜயகாந்துக்கு பெரும் வெற்றியை கொடுத்தது,மேலும் அவரின் அரசியல் பாதைக்கு இந்தப்படம் சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. மூன்றாவது படமான பகவதி தோல்வியடைந்தது.

Friday, May 31, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1998 ஆம் ஆண்டு)


கடந்த பதிவில் தமிழ் சினிமாவின் பொற்காலம்(1999 ஆம் ஆண்டு) என்ற தலைப்பில் 1999 இல் வெளிவந்த எனக்கு பிடித்த திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை வழங்கியிருந்தேன்.அதன் தொடர்ச்சியா இப்பதிவில் 1998 ஆம் ஆண்டில் வெளியான என்னை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை பகிரவுள்ளேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

1. காதல் மன்னன் 


அஜித்-சரண் கூட்டனியில் உருவான இரண்டாவது திரைப்படம். முழுநீள காதல் திரைப்படம். வெறும் ஒருரூபாய்க்காக பந்தயம் பிடித்துவரும் ஹீரோ ஹீரோயினின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு போட்டோகிராபரா சென்று இறுதியில் அந்த பெண்ணையே கரம் பிடிக்கிறார்.. இதுதான் படத்தின் கதை.பாரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அருமை.

2. மூவேந்தர்


ஹீரோ,ஹீரோவின் அப்பா, தாத்தா என சண்டியர்களாகவே காலத்தை கழிக்கும் இவர்கள், சரத்குமார் தேவயானியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சரத்,மற்றுமிருவரும் எவ்வாறு திருந்துகிறார்கள்? என்பதே படத்தின் கதை. வித்தியாசமான கதைக்கருவில் உருவான குடும்பத்திரைப்படம்.

3. மறுமலர்ச்சி 


மம்முட்டி,தேவயாணி நடிப்பில் உருவான முழுநீள கிராமத்து குடும்பக்கதை. வழமையான கதைக்களம் என்றாலும் இயக்குனர் பாரதி சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

4. நினைத்தேன் வந்தாய் 


வழமையான முக்கோண காதல் கதையாகினும், படத்தில் அமைந்த அனைத்துப்பாடல்களும் சுப்பரோ சூப்பர்.. மேலும் காமெடி காட்சிகளை அதிகம்கொண்டிருப்பதாலும் வழமையான முக்கோண காதல் கதையிலும் கொஞ்சம் மாறுபட்டதாகவே பார்ப்போரை மகிழ்விக்கும்.

5. ஜீன்ஸ் 


இருவேடங்களில் பிரஷந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்த திரைப்படம். கதை பெரிதாக சொல்லுமளவுக்கு புதிதாயில்லாவிடினும் சங்கரின் பிரமாண்டம் மற்றும் இசைப்புயலின் அதிரடி பாடல்களுக்காக எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.

6. நட்புக்காக 



கே.எஸ் ரவிக்குமார் தனக்கேயுரிய பாணியில் அசத்திக்காட்டிய திரைப்படம். நட்பை சித்தரித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் அவை பொதுவாக கல்லூரி நண்பர்களின் நட்பு அல்லது நடுத்தர வயதினருடைய நட்பையே சித்தரிக்கும். இது வயதுபோன காலத்திலும் விஜயகுமார்-சரத்குமாரின் நட்பு எப்பிடி வலிமையானது?? என்பதை அழகாகவே இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கார்.

7. உன்னிடத்தின் என்னை கொடுத்தேன் 


அஜித்,கார்த்திக்,ரோஜா நடிப்பில் உருவான நகைச்சுவை+காதல்+குடும்ப திரைப்படம். பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத திரைப்படம். பாடல்கள் அனைத்தும் இன்றும் எல்லோர் வாயில் முணுமுணுத்தபடியே இருக்கின்றது..

8. கண்ணெதிரே தோன்றினாள்


உயிருக்குயிரா நேசிக்கின்ற நண்பனின் தங்கையை காதலிக்கலாமா? அதனால் எப்பிடியான பிரச்சினைகள் நட்புக்குள் வரும்.. என்பது பற்றிய திரைப்படம்தான் இது. பிரஷாந்த்,சிம்ரன் நடிப்பில் உருவான மற்றுமொரு அற்புதமான திரைப்படம்.

இது தவிர அவள் வருவாளா,சிம்மராசி,பூவேலி,தாயின் மணிக்கொடி, உதவிக்கு வரலாமா போன்ற படங்களும் என்னை மிகவும் கவர்ந்த படங்களாகும். இவ்வாண்டு மொத்தமாக 67 திரைப்படங்கள் வெளியாகின.

comment