Wednesday, May 1, 2013

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 3 (பிறந்தநாள் ஸ்பெசல்)


இன்று மே 1, உழைக்கும் வர்க்கத்தின் நாயகன், தன்னிகரில்லா நாயகன் தன்னம்பிக்கை,தனிவழி, எளிமைக்கு பெயர்போன கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் எங்கள் நாயகன் தல அஜித்துக்கு எமது பிறந்ததின நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் எல்லாம் இணையத்தளங்கள் பார்ப்பதில்லை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தவிர்ந்து எந்தவொரு நடிகரையும் பற்றி அப்போது எனக்கு தெரியாது, தெரிய விரும்பியதுமில்லை. பத்திரிகை படிக்கும்போது நடுப்பக்கம் வருகுதென்றால் அதற்கு முந்தய பக்கத்தை பார்த்துவிட்டு அடுத்து நடுப்பக்கத்தை அண்டிய இரு பக்கத்தையும்  சேர்த்து திருப்புவேன். அந்தளவுக்கு அப்போ அஜித் ரசிகனாயிருந்தும் சினிமா நடிகர்கள் மீது சினிமாவுக்கு வெளியே பிடிப்பு இருந்ததில்லை. சினிமாவில் மட்டும் அஜித்தை பிடிக்கும். சினிமா என்றாலே வெறுமனே கூத்தாடிகளின் கூடாரம் என்ற எண்ணம். ஆனால் பிற்பாடு ஒரு நடிகர் சினிமாவில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் ரசிகனுக்கு முன்னுதரணமாக இருக்கிறார் என்றதை இன்றுவரை அவதானித்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அது அஜித்தில் மட்டும்தான்.



மன்றங்களை வைத்து ரசிகர்களின் பணத்திலும் ,உழைப்பிலும், அறியாமையிலும் பிழைப்பு நடத்தவில்லை, தன்னுடைய படத்தை வந்து பாருங்கள் என்று கூவவில்லை, ஆடியோ வெளியீட்டுவிழா,மற்றும் தன்னுடைய தனிப்பட்ட பட சார்பான விழாக்களை நடத்தி ரசிகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லை, தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல தவறவில்லை... மேலும் இம்முறை தனது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டவுட்,களியாட்டங்களை கைவிடுமாறும் கூறியுள்ளார். இவ்வாறு அவரின் நேர்த்தியான செயற்பாடுகளை சொல்லிட்டே போகலாம். 



முன்னணி நடிகர்கள் எல்லோருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் அஜித் எப்பவுமே ஸ் பெசலானவர். இவரின் ரசிகர் வட்டத்தை பார்த்தால் 90% இளைஜர்களே!!! இவர்களில் பெரும்பாலானோர் அஜித் படம் ரிலீசானால் மூன்று, நான்கு தடவை போய் பார்த்துவிடுவார்கள். இவர்கள் முதல் மூன்று தொடக்கம் ஏழு நாள் வரை கொடுக்கும் ஒபெநிங்கால் முதல் ஏழு எட்டு நாளிலே படத்தை விற்ற தொகையின் முக்கால்வாசி தொகையை தியேட்டர் அதிபர்கள் பெற்றுவிடுவார்கள். சிறுவர்கள்,பெண்களை அதிகப்படியாக ரசிகர்களை வைத்திருந்தா இப்பிடியெல்லாம் எதிர்பார்க்கேலாது. அவங்க ஒருதடவை படம் பார்க்கப்போவதே சந்தேகமாச்சே!! இதனால்தான் அஜித் படங்கள் கையை கடிப்பதில்லை. இதுவரை எந்தவொரு தியேட்டர் உரிமையாளர்களும் அஜித் படத்தால் நஷ்டம் என்று ஆர்ப்பாட்டம் செய்யவுமில்லை.



1. அஜித் துணிச்சலாக மன்றங்களை கலைத்தபோதே......


2. நரைச்ச தலையுடன் பப்ளிக்கில் தென்ப்படும்போதும், ஏன் நரைத்த தலைமயிர், தாடியுடன் எதுக்கும் கவலைப்படாமல் நடிக்கும்போதும்..

3. ஆடியோ வெளியீட்டுவிழா, இதர படம் சார்ந்த புரோமோசன்களுக்கு செல்லாமல் இருக்கையிலே....

இவை சொல்வது ஒன்றைத்தான், இவை எவையும் அஜித்துக்கு தேவையில்லை, இவற்றை செய்யாமல் இருந்தால்தான் பிழைக்கலாம் என்ற எல்லையை அஜித் தாண்டிவிட்டார். நடிகன் என்ற வட்டத்தை தாண்டி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்பது வெளிப்படை உண்மையாக தெரிந்துவிட்டது. இதே தைரியம் அஜித்தைவிட ரஜினிக்கு மட்டுமே இருக்கின்றது. ஆனா அவர் கூட படத்தில் தனது உண்மையான வயதை காட்ட இன்றுவரை தயங்குகிறார். சும்மா சிந்தித்து பாருங்கள் மேற்கூறியதுபோல ஏனைய நடிகர்கள் இருந்தா என்னவாகும் என்று? அந்தளவுக்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் நிரந்தரமாகவே அவரை நேசிக்கிறார்கள். அவற்றில் ஒருவனாக நானும் இருப்பதில் பெருமையடைகிறேன். 
தல ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.... 


கடந்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெசலாக நான் எழுதியவை. (கிளிக் செய்யவும்)


இன்று வெளியான அஜித்தின் 53 வது படத்துக்கான டெயிலர் இதோ! 

Ajith 53 - Official Teaser 


unofficial linkகிலுள்ள டெயிலரை பார்க்கவோ, share செய்யவோ வேணாம். அஜித் ரசிகர்களே! அவற்றிற்கெதிராக செய்யவும் 

2 comments:

comment