Wednesday, February 8, 2012

அஜித்தை கட்டிப்போடும் இமேஜ் வட்டம்... அதிலிருந்து மீளுவாரா அஜித்?



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிடையே இமேஜ் வட்டம் என்பது ஓரிருவரை தவிர்த்து மிகுதி எல்லோரையும் கட்டிபோட்டுள்ளண்டே சொல்லலாம். இது இன்று மட்டுமல்ல எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது. அந்த வட்டத்தில் சிக்கப்படும் நடிகர்கள் அதிலிருந்து மீளமுடியாது, அவ்வாறு மீண்டு வித்தியாசம் வித்தியாசமா ஏதாவது நடித்தாலும் அந்த படங்கள் பெரிதா போகாததும் கண்கூடு. இது தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய மைனஸ் என்றுகூட சொல்லலாம். குறிப்பாக மாஸ் அந்தஸ்துள்ளவர்களே இந்த வட்டத்தினுள் அடக்கப்படுகிறார்கள். கமல், விக்ரம் போன்ற ஒருசிலர் மட்டும் இதற்கு விதிவிலக்காக கருதப்படுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் அமையும். கமல், விக்ரம் படங்கள் என்றால் இந்த பார்முலாவில்தான் இருக்கும் என்று சொல்லேலாது, அவரது ரசிகர்களும் அவர்களிடமிருந்து வித்தியாசமான படைப்புக்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ரஜினி,அஜித்,விஜய் போன்றோரின் படங்கள் பெரும்பாலும் ஒரே பார்முலாவில்தான் பெரும்பாலும் இருக்கும். அத்தோடு அவர்களது ரசிகர்களும் தமது கதாநாயகர்கள் இப்படித்தான் இருக்கணும் என்று முதல்லே ஒரு எதிர்பார்ப்பை கொண்டிருப்பார்கள், குறிப்பாக ஹீரோயிசத்தை அவர்களது ரசிகர்கள் கூடுதலாக எதிபார்க்கிறார்கள், ரஜினி,அஜித்,விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் முடிவில் இறந்துபோவதுபோல படம் எடுத்தால் எத்தனை ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே! தியேட்டர் ஸ்கிரீன் கிழியிறதுதான். இது அவர்களை வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நடிப்பதற்கு இடையுறாக அமைகின்றது. இந்தவகையில் அஜித்தின் இன்றைய நிலையை பார்த்தா ரஜினிக்கு அப்புறம் "கிங் ஆப் ஒபெநிங்" என்று எல்லோராலும் கருதப்படுபவர், அதிகமான இளையோர் பட்டாளத்தை ரசிகர்களா கொண்டுள்ளதால் இவருக்கு கிடைக்கும் ஒபெநிங் இவரின் ரஜினிக்கு அப்புறம் வேற எவருக்குமே எதிர்பார்க்கேலாது.



அவரின் பார்முலாவை பார்த்தால், ஆரம்ப காலங்களில் சாக்லேட் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபல்யமாயிருந்தவருக்கு 1999 இல் அவர் நடித்து சக்கைப்போடு போட்ட "அமர்க்களம்" என்ற படம் அவருக்கு முதல் "மாஸ்" ஹிட். ரஜினி-கமல் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் மாஸ் அந்தஸ்துள்ள நடிகரா முதலில் கருதப்பட்டவர் அஜித்தான், அமர்க்களம் படம் மூலம். பொதுவா படங்களில் எந்தவகையான கதாபாத்திரத்தை ஒரு நடிகர் ஏற்று நடிக்கிறாரோ அதே பாத்திரத்தோடு ரசிகர்கள் ஒன்றித்துபோவது தமிழ்சினிமா ரசிகர்களிடையே தவிர்க்கமுடியாதொன்றாகிவிட்டது. என்னதான் கமல் போன்ற நடிகர்கள் சிறந்த நடிப்பாற்றலை வெளிக்காட்டும் வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்களை மக்களுக்கு தந்தாலும் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள், ஒபெநிங் பெரிதா சொல்வதற்கில்லை, காரணம் முதற்சொன்னதுதான், அவர் தெரிவுசெய்து நடிக்கும் படங்களின் தன்மை.  அந்தவகையில் அமர்க்களம் படத்தில் அஜித்தின் "தாதா" கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தாலும் 2001 இல் வெளிவந்த தீனா திரைப்படம் அவருக்கு பெருமளவில் வெறித்தனமான ரசிகர்களை உருவாக்கியதுடன் ரசிகர்கள் அஜித்தை ஒருவட்டத்தினுள் சிக்கவைச்சிட்டார்கள். தீனா இயக்குனர் முருகதாஸ் ஓரிடத்திற்கு சென்றவேளை அங்குள்ள ஒரு தாதாக்கும்பல் தங்கள் தலைவனை பார்த்து "தல" என்று அழைப்பதை அவதானிச்ச்சபின்னரே அந்த இரண்டெழுத்து பெயரை படத்தினுள் அஜித்தின் கதாபாத்திரத்தினுள் புகுத்தினார், அன்றிலிருந்துதான் அஜித் ரசிகர்களிடையே "தல" என்று பிரபல்யமானார். அதன்பிறகு அஜித்திடம் இந்தவகையான(அக்சன்+நெகடிவ்) படங்களையே அவரது ரசிகர்கள் எதிபார்க்க தொடங்கினார்கள்.



அதுக்கப்புறம் சிட்டிசன், வில்லனில் அவரது நடிப்புக்கும் ரசிகர்கள் சரியான அங்கீகாரத்தை கொடுக்க தவறவில்லை. அதைத்தொடந்து ௨௦௦௪ இல் மீண்டும் தனது ரசிகர்களுக்கு அவர்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் விருந்துவைச்சார், ஆமாம் அட்டகாசம் படத்தின்மூலம், தடாரிப்பாளரின் பணப்பிரச்சனைக்கு மத்தியில் வெறும் முப்பதாயிரம் ரூபாவை சம்பளமா வாங்கி அடிச்சு தூள் கிளப்பயிருந்தார். இந்தப்படத்தின் தாக்கம் இன்றும் தூத்துக்குடி பக்கம் போனால் தெரியும் அது "தல" ஏரியான்னு, அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்த படம். அப்புறமாக 2006 இல் வெளிவந்தது "வரலாறு"  என்ற மிகப்பெரும் காவியம்,  அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் அசத்தலா நடிச்சிருந்தார். இதில் எந்தளவுக்கு நடிப்பில பொதுவான ரசிகர்களை கவர்ந்தாரோ அந்தளவுக்கு அதிலுள்ள ஒரு நெகடிவ் ரோல் மூலம் தனது ரசிகர்களுக்கும் ஒரு கிக்கை கொடுத்தார். இந்தப்படம் வேறு ஐந்து படங்களுடன் பொங்கலுக்கு வெளியாகி பட்டையை கிளப்பியதுடன், அந்த வருடத்தின் அனைத்து படங்களின் வசூலையும் அடித்து நொறுக்கி பாக்ஸ்ஆபீசில் முதலிடத்தை பெற்றது. இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தை அழைத்து விருந்துவைத்தார், அந்தவேளையில்தான் "பில்லா" பட ரீமேக் உரிமையை  சூப்பர்ஸ்டார் அவர்களிடமிருந்து அஜித் வாங்கிக்கொண்டார்.



இவ்வாறு 2007 இல் டான் கதாபாத்திரத்துடன் வெளிவந்த பில்லா திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றையே ஒருதடவை புரட்டிப்போட்டதெண்டு சொல்லலாம், அதுவரை அப்பிடியொரு ஸ்டைலிசான படத்தை மக்கள் பார்த்ததே இல்லை, அந்தளவுக்கு அஜித்தின் ஒவ்வொரு அசைவையும்  ஸ்டைலிசா காட்டினார் இயக்குனர் விஸ்ணுவர்த்தன். படமும் சக்கைபோடு போட்டது. அதே காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் வசூல் லிஸ்டில் "சிவாஜி"க்கு அடுத்ததா அதிகூடிய வசூலை பெற்ற படமாக பில்லா அமைந்தது. இவ்வாறு நெகடிவ் ரோலில் நடிச்சு பல வெற்றிகளை சுவைத்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களாயிருந்து (வாலி,அட்டகாசம்,வரலாறு,பில்லா) ஏதோ ஒரு ரோலில் நல்லவராகவும், மற்றயதில் கெட்டவராகவும் சித்தரித்தார்கள். அமர்க்களம், தீனா போன்ற படங்களும் நெகடிவ் ரோலை ஆரம்பத்தில் காட்டி பிறகு திருந்திறமாதிரி அல்லது காதல்,செண்டிமெண்ட் என்று அதை மழுப்பி படத்தை லாஜிக்காக முடித்தார்கள், இதுக்கெல்லாம் காரணம் நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக பார்க்காது நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது, மற்றும் சினிமாவில் வரும் கதாநாயகர்களை நிஜ கதாநாயகர்களாக பாவனைசெய்து பார்த்தல், வில்லன் என்றால் படமுடிவில் தண்டிக்கப்படவேணும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு. எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தா தெரியும் அநேக படங்களில் அவர் வில்லனை கொலைசெய்யமாட்டார், கிளமைக்ஸ்ல பார்த்தா போலிஸ் வந்து அரஸ்ட் பண்ணுறமாதிரியே படம் முடியும். இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் கடந்த ஆண்டு (2011) வந்ததுதான் மங்காத்தா, படம் முழுக்க நெகடிவ் ரோலில் நடித்து அசத்தினார் அஜித். தமிழ்சினிமா வரலாற்றில் எந்தவொரு மாஸ் ஹீரோவுமே இப்படி ஒரு வேடத்தில் படம் முழுவதுமே நெகடிவ் ரோலில் நடித்ததில்லை,  



இந்தப்படத்தில் இறுதியில்கூட அஜித் தண்டனைக்குள்ளாகிறமாதிரியோ! அல்லது திருந்திறமாதிர்யோ! காட்டப்படவில்லை மாறாக 500 கோடி ரூபாவை அலாக்கா அர்ஜுனுடன் சேர்ந்து கடத்தி நாட்டைவிட்டு தப்பிச்செல்லுகின்றமாதிரியான கிளைமாக்ஸ், இந்தப்படம் தொடங்கமுதலே இயக்குனர் வெங்கட்பிரபு இந்தக்கதையை அஜித்திடம் சொல்லி "இதில நீங்க முழுக்க முழுக்க கெட்டவனாய் வருவதுபோல படம் அமையும் இதை ரசிகர்கள் எப்பிடி எதிர்கொள்வார்களோ தெரியேல" என்று சந்தேகத்துடன் கேட்க.. அதுக்கு அஜித் "பிரபு நான் CM ஆக விரும்பல, நான் ஒரு நடிகன்.. எனக்கு விதம்விதமா தீனி தேவை, நீங்கள் எடுங்க" என்று தன்னுடைய ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து கூறினார். படமும் வெளியாகி மிகப்பெரிய ஒபெநிங்குடன் சக்கைப்போடு போட்டு ரஜினி-கமல் படங்களுக்கு அடுத்ததாய் பாக்ஸ்ஆபீசில் அதிக வசூலிச்ச படமா அமைந்திட்டு. தான் "கிங் ஆப் ஒபெநிங்" மட்டுமல்ல "கிங் ஆப் பாக்ஸ்ஆபீஸ்" என்பதையும் உணர்த்தினார். இவ்வாறு அஜித் அநேகமான படங்களில் நெகடிவ் ரோலில் நடிப்பதால் ரசிகர்களும் அதே பார்முலாவுக்கு உள்வாங்கப்பட்டுவிட்டனர் என்றே சொல்லணும், சமூகவலைத்தளங்களான முகப்புபுத்தகங்களில்கூட அஜித் ரசிகர்களின் இதேமாதிரி படங்களுக்கான எதிர்பார்ப்பை அறியமுடிகிறது. இப்படியான எதிர்பார்ப்பு அஜித்தை எந்தளவுக்கு எதிர்காலத்தில் தூக்கிவைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். எவ்வளவு காலத்துக்கு தீனா, அட்டகாசம், மங்காத்தா மாதிரியான நெகடிவ்+அக்சன் படங்கள் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே!! அஜித்தை பொறுத்தளவில் நடிப்பை வெளிக்காட்டும் படங்களில் சிறப்பாக நடிக்கக்கூடிய ஒரு நடிகர், இவ்வாறான இமேஜ் வட்டத்தில் சிக்கியுள்ளதால் அதிலிருந்து மீளமுடியாமல் தவிர்க்கிறார். "சிட்டிசன்" படம்கூட எல்லோரும் பாராட்டும் விதத்தில அற்புதமாய் நடித்திருந்தார். படம் ஓடினாலும் பெரிய வெற்றியை அவரால அந்தப்படத்தின்மூலம் பெறமுடியவில்லை. அதேபோலவே "கிரீடம்" திரைப்படமும் பொதுவான ரசிகர்களை நன்கு கவர்ந்தபோதிலும் அஜித் ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை முழுக்க முழுக்க திருப்தி செய்யாததால சராசரியாகவே ஓடிச்சு. இதனால் அஜித் தனது ரசிகர்களின் வழிக்கே செல்லத்தொடங்கினார் அதன்விளைவே பில்லா, மங்காத்தா போன்ற பட வெற்றிகளை அவரால் சுவைக்கமுடிந்தது. தொடந்தும் பில்லா2 , விஸ்ணுவின் படம் போன்றவையும் தனது ரசிகர்களை இலக்குவைச்சே அவர் தெரிவுசெய்தார்போல தெரிகிறது..



அஜித்தை பொறுத்தவரையில் இன்றைய சினிமாவில் தவிர்க்கமுடியாத சக்தி. எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுவதில்லை, ரசிகர் மன்றங்கள் இல்லை, ரசிகர்களை சந்திப்பதில்லை, தன்னுடைய படம் ஓடவேணும் என்பதற்காக ஒவ்வொரு இடம் இடமாய் சென்று புரோமோஷன் செய்வதில்லை ஆனாலும் இஅவருக்கிருக்கும் ரசிகர்பலம், ஒபெநிங் சகலரையும் வாய்பிளக்கவைக்கிறது. படம் நடித்ததும் சிவனே என்று தன்பாட்டிலிருக்கும் இவரால மட்டும் எப்பிடி இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கமுடிகிறது? என்பதுதான் எல்லோருடைய அங்கலாய்ப்பு!! அவ்வளவு எதிர்பார்ப்புடைய அஜித் இமேஜ் வட்டத்திலிருந்து வெளியேறி வித்தியாசம் வித்தியாசமா படங்கள் நடிக்கவேணும் என்ற எதிர்பார்ப்பை எத்தனை ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதுதான் இன்றைய எனது சந்தேகம்....
- நன்றி -

52 comments:

  1. Thala will surely do different roles in future..his passion towards acting is huge..he made every one turn his side by acting in a negative role in mankatha..we can expect more such different films from him..

    ReplyDelete
    Replies
    1. sure.. I also expect// thanks for ur opinion

      Delete
    2. yes true... I also waiting for that... unmani words from our actor...

      Delete
    3. nanri kan ungalin varukaikku...

      Delete
  2. Thala POla varuma....... Thala no one cant even touch ur hair................. Keep rocking the cini platform is urs

    ReplyDelete
  3. superb post........... 100% true.. thala da.........

    ReplyDelete
  4. 6 ku aparam 7 da, thalaiku aparam evenda...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கு..

      Delete
  5. Thanks for your great contribution for our thala.. he rocks others sucks..

    ReplyDelete
  6. ThaLaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa daaaaaaaaaaaaaaaa veraaaaaaaaaaaaaaaaaaaaaaa evannnnnnnnnnnn daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  7. ThaLaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa daaaaaaaaaaaaaaaa veraaaaaaaaaaaaaaaaaaaaaaa evannnnnnnnnnnn daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  8. ThaLaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa daaaaaaaaaaaaaaaa veraaaaaaaaaaaaaaaaaaaaaaa evannnnnnnnnnnn daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
    Replies
    1. T KING MAKER................................
      THALAAAAAAAA

      Delete
  9. REALLY UR WORDS ARE TRUE. FANS LIKE US, EXPECTING VILLAGE SUBJECT(LIKE THEVAR MAGAN,NATTAMAI), SUBJECT LIKE INDIAN,ABOORVA SAGOTHARARKAK FROM THALA. ANY HOW WE WILL BE WITH HIM ALWAYS. BECAUSE WE LOVE AJITHKUMAR(ORDINARY HUMAN BEING), THAN ACTOR AJITH.
    HE IS NOT JUST AN ACTOR, HE IS LIKE OUR BROTHER.

    ReplyDelete
    Replies
    1. ya vivek.. i also expect different different acting frm thala///

      Delete
    2. nanri thalaakash ungalin varukaikku...

      Delete
  10. தயவுசெய்து ரசிகர்கள் என அவர்களை சிறுமை படுத்திவிடாதீர்கள். அவர் நடனத்தையோ,காமடியயோ,நவரசத்தையும் காட்டும் நடிப்பையோ எதிர்பார்க்காமல், அவரின் தன்னம்பிக்கையையும், பாசாங்கில்லாத இயல்பான குணத்தையும், தலையே போகும் என்றாலும் தலை வணங்காத தைரியத்தையும் பார்த்து தான் அவர் பெயரை மந்திரம் போல் கூறி திரிகின்றனர். fans இல்லை, followers என்பதே சரி.

    ReplyDelete
  11. machi ummmaaaa kalakitada ur are greate thala always mass thaan

    ReplyDelete
  12. This Kind of Roles are only suitable For our THALA.... Because he is always Donnnnnnnnnnnnn......................................

    ReplyDelete
  13. thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  14. THALA yentha padam nadithalum yengaluku k thaan . Yengaluku theva THALA screen la pakanum avalavu thaan ....

    Yenna .... Fan s ....?

    Na sonnathu (1) write ha ..... (2) wrong ha ....

    ReplyDelete
    Replies
    1. remba remba correct Antony boss... nanri ungalin varukaikku...

      Delete
  15. THALA yentha padam nadithalum yengaluku k thaan . Yengaluku theva THALA screen la pakanum avalavu thaan ....

    Yenna .... Fan s ....?

    Na sonnathu (1) write ha ..... (2) wrong ha ....

    ReplyDelete
  16. thala thala than...........thanks for all friends

    ReplyDelete
  17. I personally believe that thala will do different roles...:)

    ReplyDelete
  18. Thala...........u r always great.

    ReplyDelete
  19. mass forever ..thala yeppadi nadithalum hit mass hit than yaralum maatha mudiyathu ..i like that statement angalaippu padum matha nadigargal fans too mankaatha da!

    ReplyDelete
  20. thala puranam.......................

    ReplyDelete
    Replies
    1. Athav///puriyuthalle! pidikkaaddi paakkavenaam....

      Delete
  21. ethukku Ajith unakku Evvalavu kaasu thanthavar

    ReplyDelete
  22. He is a real person in that cini world from tamilnadu compare from other big mass heros... In our future surelly they will get more information from ajith

    ReplyDelete
  23. thala enna padam nadiththaalum naan paarpam kadavul tharisanam kudukkumpothu vendaam endurathukku naan enna maangava,illai madaiyanaa.....?:p

    ReplyDelete
  24. குட் போஸ்ட் நண்பா ...தல எந்த மாதிரியான கதாபாத்திரத்திலும் பட்டையகிளப்ப கூடிய நடிகர் ... உங்கள் பதிவின் ஒவ்வொரு வரியையும் ஆமோதிக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கு..

      Delete
  25. MY THALA THAN BEST NEXT SUPER STAR TAHALA POLA VARUMA...........................................THALA DAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA THALA DAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    ReplyDelete
  26. Thanking for above Post Saji.
    these are really superb
    Each and every THALA fans wants to know that u post it above.

    ReplyDelete

comment