Friday, May 31, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1998 ஆம் ஆண்டு)


கடந்த பதிவில் தமிழ் சினிமாவின் பொற்காலம்(1999 ஆம் ஆண்டு) என்ற தலைப்பில் 1999 இல் வெளிவந்த எனக்கு பிடித்த திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை வழங்கியிருந்தேன்.அதன் தொடர்ச்சியா இப்பதிவில் 1998 ஆம் ஆண்டில் வெளியான என்னை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை பகிரவுள்ளேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

1. காதல் மன்னன் 


அஜித்-சரண் கூட்டனியில் உருவான இரண்டாவது திரைப்படம். முழுநீள காதல் திரைப்படம். வெறும் ஒருரூபாய்க்காக பந்தயம் பிடித்துவரும் ஹீரோ ஹீரோயினின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு போட்டோகிராபரா சென்று இறுதியில் அந்த பெண்ணையே கரம் பிடிக்கிறார்.. இதுதான் படத்தின் கதை.பாரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அருமை.

2. மூவேந்தர்


ஹீரோ,ஹீரோவின் அப்பா, தாத்தா என சண்டியர்களாகவே காலத்தை கழிக்கும் இவர்கள், சரத்குமார் தேவயானியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சரத்,மற்றுமிருவரும் எவ்வாறு திருந்துகிறார்கள்? என்பதே படத்தின் கதை. வித்தியாசமான கதைக்கருவில் உருவான குடும்பத்திரைப்படம்.

3. மறுமலர்ச்சி 


மம்முட்டி,தேவயாணி நடிப்பில் உருவான முழுநீள கிராமத்து குடும்பக்கதை. வழமையான கதைக்களம் என்றாலும் இயக்குனர் பாரதி சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

4. நினைத்தேன் வந்தாய் 


வழமையான முக்கோண காதல் கதையாகினும், படத்தில் அமைந்த அனைத்துப்பாடல்களும் சுப்பரோ சூப்பர்.. மேலும் காமெடி காட்சிகளை அதிகம்கொண்டிருப்பதாலும் வழமையான முக்கோண காதல் கதையிலும் கொஞ்சம் மாறுபட்டதாகவே பார்ப்போரை மகிழ்விக்கும்.

5. ஜீன்ஸ் 


இருவேடங்களில் பிரஷந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்த திரைப்படம். கதை பெரிதாக சொல்லுமளவுக்கு புதிதாயில்லாவிடினும் சங்கரின் பிரமாண்டம் மற்றும் இசைப்புயலின் அதிரடி பாடல்களுக்காக எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.

6. நட்புக்காக 



கே.எஸ் ரவிக்குமார் தனக்கேயுரிய பாணியில் அசத்திக்காட்டிய திரைப்படம். நட்பை சித்தரித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் அவை பொதுவாக கல்லூரி நண்பர்களின் நட்பு அல்லது நடுத்தர வயதினருடைய நட்பையே சித்தரிக்கும். இது வயதுபோன காலத்திலும் விஜயகுமார்-சரத்குமாரின் நட்பு எப்பிடி வலிமையானது?? என்பதை அழகாகவே இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கார்.

7. உன்னிடத்தின் என்னை கொடுத்தேன் 


அஜித்,கார்த்திக்,ரோஜா நடிப்பில் உருவான நகைச்சுவை+காதல்+குடும்ப திரைப்படம். பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத திரைப்படம். பாடல்கள் அனைத்தும் இன்றும் எல்லோர் வாயில் முணுமுணுத்தபடியே இருக்கின்றது..

8. கண்ணெதிரே தோன்றினாள்


உயிருக்குயிரா நேசிக்கின்ற நண்பனின் தங்கையை காதலிக்கலாமா? அதனால் எப்பிடியான பிரச்சினைகள் நட்புக்குள் வரும்.. என்பது பற்றிய திரைப்படம்தான் இது. பிரஷாந்த்,சிம்ரன் நடிப்பில் உருவான மற்றுமொரு அற்புதமான திரைப்படம்.

இது தவிர அவள் வருவாளா,சிம்மராசி,பூவேலி,தாயின் மணிக்கொடி, உதவிக்கு வரலாமா போன்ற படங்களும் என்னை மிகவும் கவர்ந்த படங்களாகும். இவ்வாண்டு மொத்தமாக 67 திரைப்படங்கள் வெளியாகின.

Saturday, May 25, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1999 ஆம் ஆண்டு)


நான் தமிழ் சினிமா பார்க்கத்தொடங்கியது கிட்டத்தட்ட 1997,1998,1999 காலப்பகுதியில். அந்தக்காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் டீவி இல்லை, எங்கையாவது திருமணவீடு,பூப்புனித நீராட்டுவிழா என்றால் இரவில் அந்த வீட்டில் படம் போடுவார்கள். ஒரு ஊரே அங்கு திரண்டுவரும் படம் பார்க்க. அப்பவெல்லாம் படம் பார்க்கும்போது அநேகமாக ஒன்றும் புரியாது. சண்டைக்காட்சிகள் வந்தா மட்டும் மும்முரமா கண் டீ.வியை நோக்கி இருக்கும். மற்றும்படி நண்பர்களுடன் அரட்டை. கிட்டத்தட்ட அந்த நினைவுகள் கடந்து இன்றைக்கு பதினைந்து வருடங்கள் ஆகினும், அந்தக்காலத்தில் வெளியான படங்களே எப்போதும் எனது விருப்பத்தெரிவில் முதலிடம். அவற்றுள் 1999 இல் வெளியான என்னை கவர்ந்த சில படங்களின் தொகுப்பை பகிரலாம் என்று நினைக்கிறேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

படையப்பா 

நீ வயசானாலும் உன் அழகும்,ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை என்று ரஜினியைப்பார்த்து சொந்தர்யா ஒரு வசனம் சொல்வார். அதேபோலவே திரைப்படமும் பதினைந்து வருடங்கள் தாண்டியும் இன்னும் எல்லோரினதும் விருப்பத்துக்குரிய படமாகவே இருக்கிறது. படம் தொடக்கத்தில் சாதாரண கல்லூரி மாணவனா இருக்கும் ரஜினி படம் முடியும்போது தனது பிள்ளைகளுக்கே திருமணம் செய்துவைத்துவிடுவார். இளமை கெட்டப்பில் இருந்து முதுமை கெட்டப் வரை ரஜினிகாந்தை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் செவ்வனே நடித்திருக்கமுடியாது.

உன்னைத்தேடி 



சுந்தர்சி இயக்கத்தில் அஜித், மாளவிகா,விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். குடும்ப கதையம்சத்துடன்கூடிய திரைப்படம். தேவா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

வாலி 

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் எண்டதை விட அசத்திய திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டி குடுக்கையில் தன்னுடைய கரியரில் தான் நடித்த படங்களில் தன்னுடைய நடிப்பால் வெற்றியடைந்தது என்று பெருமைப்படக்கூடிய முதலாவது திரைப்படம் வாலி என்றார். அந்தளவுக்கு பின்னி எடுத்திருப்பார். அண்ணன் தம்பியாக கெட்டப் வேறுபாடின்றி வாயசைவு,கண்ணசைவில் கதாபாத்திரங்களை வேறுபடுத்தி துல்லியமாக நடித்திருப்பார். இந்தப்படத்துக்காக அஜித்துக்கு இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது.

ஆனந்த பூங்காற்றே



ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்,கார்த்திக்,மீனா நடிப்பில் வெளியான குடும்ப சித்திரம். பலமானதொரு திரைக்கதையை வைத்து இயக்குனர் சிறப்பாகவே காட்சியமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் அருமை.

அமர்க்களம்

சொல்லவே தேவையில்ல. நவீன அஜித்குமாரை செதுக்கிய திரைப்படம். தமிழ் சினிமாவில் மாஸ் மாஸ் மாஸ் என்று சொல்வார்களே! அதுக்கு வித்திட்டதே இந்த திரைப்படம்தான். முகத்தில் லேசான தாடி, அழகு,வெறித்தனம்,தாதாயிசம் என எல்லாமே உருவாக இந்தப்படத்தில் அஜித் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார். அஜித்தின் ரசிகர் வட்டத்தின் மிகப்பெரும் ஏற்றம் இந்தப்படத்துக்குப்பிறகே!

நீ வருவாயென 

பார்த்தீபன்,அஜித்,தேவயானி நடிப்பில் உருவான காதல் காவியம். பாடல்கள் அனைத்துமே இன்றைக்கும் பட்டையை கிளப்பவல்லது.

ஜோடி 

பிரசாந்த்,சிம்ரன் நடிப்பில் வெளிவந்த காதல்+குடும்ப காவியம். ஹீரோயினின் பெற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோவும், ஹீரோவின் பற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோயினும் என்ன செய்கிறார்கள்? இதுவே இப்படத்தில் சுவாரிசியம்.

ஆசையில் ஓரு கடிதம் 



பிரசாந்த்,கௌசல்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான அருமையான திரைப்படம். கௌசல்யாவில் வாழ்க்கையில் பிரசாந்தின் காமெடித்தனம் எவ்வாறு வினையாகிறது..இதுவே படத்தின் ஹைலைட்.

கண்ணுபடப்போகுதையா



பாரதி கணேஷ் இயக்கத்தில் விஜயகாந்த்,சிம்ரன்,கரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். எத்தனை தடவை வேணும்னாலும் சலிக்காம பார்க்கக்கூடிய குடும்பச்சித்திரம். பாடல்கள்,காட்சியமைப்பு எல்லாமே பிரமாதம். செண்டிமென்தான் கொஞ்சம் ஓவர். இது தற்கால சந்ததியினருக்கு ஒரு மைனசாவும் இருக்கலாம்.

துள்ளாத மனமும் துள்ளும்.



எனக்கு பொதுவா விஜயின் அக்சன் படங்கள் பிடிக்கிறேலை. இன்றுவரை விஜயின் பிடித்த முதல் ரெண்டு படம் எதுவென்று கேட்டா ஒன்று பிரியமானவளே மற்றயது துள்ளாத மனமும் துள்ளும். தகுந்த கதைக்களத்துடன் எழில் அவர்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள்,சிம்ரனின் அபரிதமான நடிப்பின் துணையோடு மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்.

பாட்டாளி 



சரத்குமார்,தேவயாணி,ரம்யாகிரிஷ்ணன் நடிப்பில் உருவான முழுநீள காதல்+குடும்ப திரைப்படம். தேவயானியை காதலித்துக்கொண்டு ரம்யாவுடன் குடும்பம் நடத்தும் சரத்குமார் படும்பாடு என்ன?? இதுவே படத்தின் ஹைலைட்.

காதலர் தினம்

ரஹ்மானின் மந்திர இசையில் குணால்,சோனாலி பிந்துவே நடிப்பில் வெளியான அற்புதமான திரைப்படம். ஒரு பிள்ளையை வளர்க்கிற அளவுக்கு பெற்றோரிடம் பணவசதி இல்லை என்றால் பிள்ளையை பெறவேகூடாது. இதுவே படத்தில் கடைசியில் நாயகன் சொல்லும் தத்துவம். எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.


இதுதவிர இவ்வாண்டு வெளியான சூரியப்பார்வை, என்சுவாசக்காற்றே,கனவே கலையாதே,சேது உட்பட படங்களும் என்னை நன்றாக கவர்ந்த படங்கள். இதேபோல் இதுவரை பார்க்காத 1999 இல் வெளிவந்த படங்களும் உண்டு. இவ்வாண்டு மொத்தமாக 81 படங்கள் வெளிவந்தன.

Thursday, May 23, 2013

மறக்கமுடியாத தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தோல்விகள்

தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் பரமரசிகர்களில் நானும் ஒருத்தன். எத்தனையோ வெற்றிகளை தென்னாபிரிக்க அணி பெற்றபோது கைதட்டி குதூகலித்தாலும் ஒருசில தோல்விகள் என்றுமே மறக்கமுடியாதவை. அதில் பெரும்பாலானவை உலகக்கிண்ண போட்டித்தொடர் மற்றும் சம்பியன் டிராபிக் போட்டித்தொடர்களில் பெற்ற தோல்விகளை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் முக்கியமான 2000 ஆண்டிற்கு பிறகேயான ஒருநாள் போட்டிகளை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

1. ICC Champions Trophy, 2002/03 / இந்தியா vs தென்னாபிரிக்கா (Scorecard)




கொழும்பில் நடைபெற்ற சம்பியன் கிண்ண அரையிறுதிப்போட்டியில், எதிரணி இந்திய அணி என்றதால் மிகுந்த ஆர்வத்துடனும் வெறியோடும் பார்த்த போட்டி. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்தில் மிக வேகமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தாலும் பிற்பாடு 261 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 262 என்ற வெற்றியிலக்கை நோக்கி தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடியபோது கிப்ஸ் சிறப்பானதொரு சதத்தை பெற்றும்,இறுதியில் கலீசின் மந்தமான துடுப்பாட்டத்தால் அநியாயமாக தோல்வியடைந்தது. என்னவோ தெரியேல இந்தப்போட்டிக்குப்பின் கலீசில் பயங்கர கடுப்பு.

2. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs மேற்கிந்தியா (Scorecard)


முதலில் துடுப்பெடுத்தாடிய மேட்கிந்தியதீவுகள் இறுதி இருபது ஓவர்களில் 170 ஓட்டங்கள்வரை எடுத்தது. இப்போ இது சாதரமான விடயம் எண்டாலும் பத்து ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு ரன்ஸ் எடுப்பது பெரியவிடயமே! தென்னாபிரிக்க அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும்போது முதலில் தாமதமாக பந்து வீசியதுக்காக ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே இறுதியில் தோல்விக்கும் காரணமாச்சு, ஆம் மூன்று ஓட்டங்களால் தோல்வி.

3. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs இலங்கை (Scorecard)


டக்வோர்த்-லூயிஸ் முறையில் வெற்றியிலக்கை களத்தில் நின்ற துடுப்பாட்டவீரர்களுக்கு தவறாக வழங்கியதால் முதற்சுற்றுடனேயே தென்னாபிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியது. டக்வோர்த்-லூயிஸ் முறையில் இரண்டு பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எண்டிருந்தது. அணித்தலைவர் பொலக் இரண்டு பந்தில் ஆறு ஓட்டங்கள் எடுத்தாலே போதும் என்று களத்தில் துடுப்பெடுத்தாடிய வீரர்களுக்கு தவறுதலாக சொல்ல,பட்டிங் செய்துகொண்டிருந்த பவுச்சர் கடைசிக்கு முதல் பந்தில் சிக்சர் அடித்துவிட்டு, வெண்டாச்சுதானே எண்டு கடைசிப்பந்தில் ஓட்டம் பெறாமல் பந்தை மறித்துவிட்டார். ஆனா பிற்பாடுதான் போலக்குக்கு தெரிந்தது இந்தவிடயம். ஆகவே போட்டி சமநிலையில் முடிவடைந்து, தென்னாபிரிக்க அணி முதல் சுற்றோடே தொடரை விட்டு வெளியேறியது.
(மழை பெய்யத்தொடங்கியதால், 45 ஓவர்களில் போட்டி கைவிடப்ப்படுமாயின் டக்வேர்த்-லூயிஸ் முறைப்படி 230 runs எடுத்தா வெற்றி பெறலாம் என்றிருந்தது.மற்றும்படி தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாட தொடங்குகையில் 45 ஓவர்களில் target 230 runs எண்டல்ல.... மழை இடையில்தான் வந்தது.)

4. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs நியுசிலாந்து (Scorecard)


306 என்ற உயர்வான ஓட்ட எண்ணிக்கையை முதலில் துடுப்பெடுத்தாடி பெற்றும், டக்வேர்த்-லூயிஸ் முறையில் நியுசிலாந்து வெற்றி பெற்றது.            

5. ICC World Cup, 2006/07 / தென்னாபிரிக்கா vs பங்களாதேஷ் (Scorecard)


கடைக்குட்டி அணியான பங்களாதேசுடன் 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

6. ICC World Cup, 2006/07 / தென்னாபிரிக்கா vs நியுசிலாந்து (Scorecard)



தென்னாபிரிக்கா அணிக்கு உலகக்கிண்ணம் என்றா என்னவோ தெரியேல முக்கியமான போட்டிகளில் பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாகிடுவார்கள். இது ஒவ்வொரு உலகக்கிண்ணபோட்டித்தொடரிலும் நடக்கிறது. பெரும்பாலும் தூரதிஸ்டத்தாலேயே வெளியேறிக்கொண்டுவந்தது. ஆனா கடந்தமுறை உலகக்கிண்ண போட்டியில் காலிறுதியில் கடைக்குட்டி அணியான நியுசிலாந்திடமே தோல்வியுற்றது எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. பார்க்கப்போனா காலிறுதியோ/அரையிறுதியோ நெதர்லாந்து,அயர்லாந்து அணி வந்தாலும் தென்னாபிரிக்காவால் வெற்றிபெறமுடியாதுபோல, அந்தளவுக்கு ஜென்மத்துசனியன் தென்னாபிரிக்காவை தொடர்ந்துகொண்டே போகிறது.


Wednesday, May 1, 2013

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 3 (பிறந்தநாள் ஸ்பெசல்)


இன்று மே 1, உழைக்கும் வர்க்கத்தின் நாயகன், தன்னிகரில்லா நாயகன் தன்னம்பிக்கை,தனிவழி, எளிமைக்கு பெயர்போன கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் எங்கள் நாயகன் தல அஜித்துக்கு எமது பிறந்ததின நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் எல்லாம் இணையத்தளங்கள் பார்ப்பதில்லை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தவிர்ந்து எந்தவொரு நடிகரையும் பற்றி அப்போது எனக்கு தெரியாது, தெரிய விரும்பியதுமில்லை. பத்திரிகை படிக்கும்போது நடுப்பக்கம் வருகுதென்றால் அதற்கு முந்தய பக்கத்தை பார்த்துவிட்டு அடுத்து நடுப்பக்கத்தை அண்டிய இரு பக்கத்தையும்  சேர்த்து திருப்புவேன். அந்தளவுக்கு அப்போ அஜித் ரசிகனாயிருந்தும் சினிமா நடிகர்கள் மீது சினிமாவுக்கு வெளியே பிடிப்பு இருந்ததில்லை. சினிமாவில் மட்டும் அஜித்தை பிடிக்கும். சினிமா என்றாலே வெறுமனே கூத்தாடிகளின் கூடாரம் என்ற எண்ணம். ஆனால் பிற்பாடு ஒரு நடிகர் சினிமாவில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் ரசிகனுக்கு முன்னுதரணமாக இருக்கிறார் என்றதை இன்றுவரை அவதானித்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அது அஜித்தில் மட்டும்தான்.



மன்றங்களை வைத்து ரசிகர்களின் பணத்திலும் ,உழைப்பிலும், அறியாமையிலும் பிழைப்பு நடத்தவில்லை, தன்னுடைய படத்தை வந்து பாருங்கள் என்று கூவவில்லை, ஆடியோ வெளியீட்டுவிழா,மற்றும் தன்னுடைய தனிப்பட்ட பட சார்பான விழாக்களை நடத்தி ரசிகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லை, தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல தவறவில்லை... மேலும் இம்முறை தனது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டவுட்,களியாட்டங்களை கைவிடுமாறும் கூறியுள்ளார். இவ்வாறு அவரின் நேர்த்தியான செயற்பாடுகளை சொல்லிட்டே போகலாம். 



முன்னணி நடிகர்கள் எல்லோருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் அஜித் எப்பவுமே ஸ் பெசலானவர். இவரின் ரசிகர் வட்டத்தை பார்த்தால் 90% இளைஜர்களே!!! இவர்களில் பெரும்பாலானோர் அஜித் படம் ரிலீசானால் மூன்று, நான்கு தடவை போய் பார்த்துவிடுவார்கள். இவர்கள் முதல் மூன்று தொடக்கம் ஏழு நாள் வரை கொடுக்கும் ஒபெநிங்கால் முதல் ஏழு எட்டு நாளிலே படத்தை விற்ற தொகையின் முக்கால்வாசி தொகையை தியேட்டர் அதிபர்கள் பெற்றுவிடுவார்கள். சிறுவர்கள்,பெண்களை அதிகப்படியாக ரசிகர்களை வைத்திருந்தா இப்பிடியெல்லாம் எதிர்பார்க்கேலாது. அவங்க ஒருதடவை படம் பார்க்கப்போவதே சந்தேகமாச்சே!! இதனால்தான் அஜித் படங்கள் கையை கடிப்பதில்லை. இதுவரை எந்தவொரு தியேட்டர் உரிமையாளர்களும் அஜித் படத்தால் நஷ்டம் என்று ஆர்ப்பாட்டம் செய்யவுமில்லை.



1. அஜித் துணிச்சலாக மன்றங்களை கலைத்தபோதே......


2. நரைச்ச தலையுடன் பப்ளிக்கில் தென்ப்படும்போதும், ஏன் நரைத்த தலைமயிர், தாடியுடன் எதுக்கும் கவலைப்படாமல் நடிக்கும்போதும்..

3. ஆடியோ வெளியீட்டுவிழா, இதர படம் சார்ந்த புரோமோசன்களுக்கு செல்லாமல் இருக்கையிலே....

இவை சொல்வது ஒன்றைத்தான், இவை எவையும் அஜித்துக்கு தேவையில்லை, இவற்றை செய்யாமல் இருந்தால்தான் பிழைக்கலாம் என்ற எல்லையை அஜித் தாண்டிவிட்டார். நடிகன் என்ற வட்டத்தை தாண்டி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்பது வெளிப்படை உண்மையாக தெரிந்துவிட்டது. இதே தைரியம் அஜித்தைவிட ரஜினிக்கு மட்டுமே இருக்கின்றது. ஆனா அவர் கூட படத்தில் தனது உண்மையான வயதை காட்ட இன்றுவரை தயங்குகிறார். சும்மா சிந்தித்து பாருங்கள் மேற்கூறியதுபோல ஏனைய நடிகர்கள் இருந்தா என்னவாகும் என்று? அந்தளவுக்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் நிரந்தரமாகவே அவரை நேசிக்கிறார்கள். அவற்றில் ஒருவனாக நானும் இருப்பதில் பெருமையடைகிறேன். 
தல ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.... 


கடந்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெசலாக நான் எழுதியவை. (கிளிக் செய்யவும்)


இன்று வெளியான அஜித்தின் 53 வது படத்துக்கான டெயிலர் இதோ! 

Ajith 53 - Official Teaser 


unofficial linkகிலுள்ள டெயிலரை பார்க்கவோ, share செய்யவோ வேணாம். அஜித் ரசிகர்களே! அவற்றிற்கெதிராக செய்யவும் 

Tuesday, March 26, 2013

அஜித்தும் சமூக போராட்டங்களும்


தற்போது தமிழகம் ,முழுவதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதராவாக மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். இவ்வளவு நாளும் மூச்சு பேச்சில்லாம இருந்த நடிகர் சங்கமும் ஏப்ரல் 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. என்ன போராட்டம் நடந்தாலும் ரஜினி,கமல் போன்ற நடிகர்கள் அதில் ஏதாவதொரு பங்களிப்பை செய்யணும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இது வெறும் எதிர்பார்ப்புடன் இருந்தால் ஓகே, அதைவிடுத்து கட்டாயப்படுத்தல், ஆதரவளிக்கும்பட்சத்தில் தாறுமாறா அவர்களுக்கெதிரா கதைத்தல் அர்த்தமற்றதொன்றே! அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நாங்கள் ஒருபோதும் தலையிடமுடியாது. நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசுக்கு அவர்களை எடுத்த எல்லாத்துக்கும் குரல் கொடுக்கணும் என்பது பிழையானததொன்றாகும். மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் திரையரங்கு சென்று டிக்கட் எடுக்கும் அந்தக்கணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு படம் நல்லா இருக்கணும், இரண்டரை மணிநேரம் சந்தோசமா இருக்கணும் என்றதா? இல்ல, நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசால அவங்க கோடிக்கணக்கா சம்பாதிக்கணும் எண்டதா? ஒரு படத்தை மக்கள் பார்க்கும்போது பார்ப்பவர்களும் சந்தோசப்படுகிறார்கள், படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் போன்றோரும் தங்கள் உழைப்புக்கேற்ப ஊதியத்தை பெற்றுக்கொள்கிராகள். இது நம்மவர் பலருக்கு பொறுக்குதே இல்ல. ஆனா சில நடிகர்கள் தாங்கள் மக்களின் தலைவர் என்ற மாயையை வேணுமெண்டே படங்களின் ஊடாக மக்களுக்கு சித்தரிக்கிறார்கள், கேட்டா அது படக்கதைக்கேற்பவே வடிவமைக்கப்பட்டது, அதுவும் இயக்குனர்களால்தான் வடிவமைக்கப்பட்டது என்று ரீல் விடுவார்கள். அது ரீல் என்றாலும் அதை நம்பி அவர்களை தலைவர் என்று கருதிற நாங்கள்தான் நம்பர் ஒன் முட்டாள் என்பதை மறந்துபோகவேணாம். இனியாவது சினிமா ஹீரோக்களை நிஜத்தலைவர்களாக கற்பனை பண்ணுவதை தவிருங்கள்.




அடுத்து மேட்டருக்கு வருவோம், தமிழக போராட்டங்களில் அஜித்தும் ஒன்றும் செய்யவில்லை என்றெல்லாம் அவ்வப்போது கிளப்பிவிடப்படுகிறது, மேலும் அடுத்து வரப்போற உண்ணாவிரத போராட்டத்தில் அஜித் கலந்துகொல்வதட்கான சாத்தியப்பாடுகளும் குறைவே! இதனால் வருகிற கிழமை அஜித் தவிர போராட்டத்தில் பங்கேற்ற மற்றைய நடிகர்கள் மக்கள் தலைவர்களாகவும் அஜித் போன்ற பங்கேற்காதவர்கள் வில்லனையும் சித்தரிக்கப்படப்போரார்கள். சிலவேள அஜித் போனா தல தப்பிடும்.இல்லாவிடில் அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கு பெரியதொரு சவால் காத்திருக்கிறது. ஆமா அஜித் எதிர்ப்பாளர்களுடன் முட்டி மோதுவதுதான். முதல்ல அவர்களுக்கு ஒரு விடயத்தை நாம புரியவைக்கணும். அஜித்தை ரஜினியோ,கமலோ,விஜயோ,சூர்யா உடனோ ஒப்பிடவேணாம் இந்தவிடயத்தில். அதற்கான காரணங்களை அலசிப்பார்ப்போம்.

1. அஜித் ஒரு தனிமனிதன். ரசிகர்கள் தவிர அஜித்துக்கு எந்தவொரு பின்புலமுமில்ல,குறிப்பாக அரசியல் மட்டத்திலோ, மீடியா மட்டத்திலோ அஜித்துக்கு அன்றும் இன்றும் சப்போட் இருந்ததில்லை, நாளையும் இருக்கப்போவதில்லை.காரணம் தமிழ் சினிமாவின் பிழைப்பிற்காக ஜால்ரா அடிக்காத ஒரே மனிதன் அஜித்தான்.. அதனால்தான் இந்த கதி.. மாணவர்களுக்கு ஆதரவாக சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதை தமிழக அரசு ஒருபோதும் விரும்பாது. விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த பிரச்சினைபோல் நாளை அஜித் படத்துக்கு எதிரா ஒரு பிரச்சினை கிளம்புமாயின் அஜித்துக்கு சப்போட்டா ரசிகர்கள் தவிர வேற யாரும் கதைக்கப்போறதில்லை. இதே வேறு முன்னணி நடிகர்களுக்கு நடந்தா உயர் மட்டங்களில் இருந்து நிறைய ஆதரவுகள் வரும். அல்லாவிடில் ஆட்சியாளரின் காலிலாவது போய் விழுவார்கள். அஜித்தான் அப்பிடி இல்லையே!


2. அஜித் ஒருபோதும் தன்னுடைய படங்களை வந்து பாருங்கள் என்று மக்களிடையே புரமோட் பண்ணுவதில்ல, ஏன் படம் சம்பந்தமான எந்தவொரு விழாக்களுக்கும் செல்வதில்லை. தனது பட விழாக்களுக்கோ வேறு தேவைக்காகவோ தனது ரசிகர்களை கூட்டம் கூட்டமாக வரவழைத்து பகடைக்காயா பயன்படுத்துவதில்லை.

3. தனது படங்களில் தான்தான் மக்களின் தலைவன் என்றெல்லாம் போலி மாயையை ஒருபோதும் உருவாக்கியதில்லை அல்லது மிகமிக குறைவு. ஆதலால் அஜித் ரசிகர்கள் ஒருபோதும் அஜித் அரசியலுக்கு வருவார், அவர்தான் அடுத்த முதலமைச்சராகணும், ஏதாவது அநீதி நடந்தா அஜித் குரல் கொடுக்கணும் என்றெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். அந்தளவுக்கு சினிமா நடிகர்கள் வேறு நிஜ தலைவர்கள் வேறு என்பதை தனது நடவடிக்கையால் ரசிகர்களுக்கு சரியான வழியை காட்டியுள்ளார்.

4. அஜித் பொதுவாகவே எந்தவொரு விழாக்களிலும் பங்குபற்றுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றுபவர். நடிகர்களுக்கு ஆதாயம் தேடும் போராட்டங்களிலே அஜித் கலந்துகொள்வதில்லை, உதாரணமாக நடிகர்களை பாதிக்கும் வரிவிலக்கை எதிர்த்து அண்மையில் நடந்த போராட்டத்திலே அஜித் பங்குபற்றவில்லை. அப்பிடி இருக்கும்போது வேறு போராட்டங்களில் கலந்துகொள்ளும்படி நிர்ப்பந்திப்பது அர்த்தமற்றதொன்றாகும்.

5. நாலுபேருக்கு பப்ளிக்கில உதவிசெய்து தன்னை பெரியாளாக காட்டிக்கொள்ளுவதில்லை.மாறாக சத்தமின்றி எத்தனையோபேருக்கு உதவிகளை செய்து வருகின்றார். இதெல்லாம் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதில்லை. உதவிபெற்றவர்கள் மூலமாக பலவருடங்களுக்கு பிறகே தெரியவரும். அதனால் சமுக பிரச்சினைகளில் அவரின் பங்கை ரசிகர்கள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை.


இதற்குமுதல் இலங்கைத்தமிழருக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்குபற்றிய அஜித் மற்றும் அர்ஜுனுக்கு எதிரா சரத்குமார் போன்றோர் எப்பிடியெல்லாம் குற்றங்களை சோடிச்சார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் ஒரு அநீதிக்கெதிரா சுயலாபம் கருதாமல் போராடுபவர்கள் எப்போதும் பாராட்டுதலுக்குரியவர்கள். ஆனா, போராடாமல் ஒதுங்கி இருப்பவர்களை துரோகிகளாக பார்க்கும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. சினிமா நடிகர்களை ஒரு சராசரி மனிதர்களாக பாருங்கள். அவர்கள் எங்களால் கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பலவருட உழைப்புக்கு கிடைத்த பலன். இதுக்கப்புறமும் நடிகர்களை குறை சொல்பவர்களுக்குக்கு தில் இருந்தா அவர்களின் படத்தை பார்க்காமல் இருங்கள்..

Saturday, March 16, 2013

தமிழ் சினிமாவின் சாதாரண ரசிகர்கள் vs அறிவுஜீவிகள்


ரசிகர்களிடையே எவ்வளவு பாகுபாடு? எல்லோருக்கும் வெளிப்படையா பார்க்கும்போது எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் தமக்கிடையே முட்டி மோதிக்கொள்வதுதான் கண்ணுக்கு தெரிகிறது. ஆனா மறைமுகமா அடிமட்ட ரசிகர்களுக்கும் அறிவுஜீவிகளுக்குமிடையிலான மோதல்கள் கண்ணுக்கு தெரிவது அரிதே! சமுகவலைத்தளங்கள் குறிப்பாக பேஸ்புக் பாவிப்பவர்கள்,பிளாக் வாசிப்பவர்களுக்கே இவ்வாறான பிரச்சினைகள் தெரியவரும். அதாவது இப்பிடியொரு பிரிவினைவாதத்தை தூண்டுவது இந்த அறிவுஜீவிகள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டு திரியும் ஒருசிலர்தான். அவர்கள் பொதுவாக குறிப்பிட்டு தாக்குவது ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களைத்தான். அதாவது இவர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாம், தங்கள் கதாநாயகனை நடிகன் என்றதற்கு அப்பால் மேலே தூக்கி வைத்து கொண்டாடுவது, குறிப்பாக இவர்களின் கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது போன்ற செயல்கள் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்கிறதே இல்லை,மேலும் இவர்களின் படம் என்றால் நம்பமுடியாத ஒபெநிங் சீன், ஒரே டைம்ல இருபதுமுப்பது பேருக்கு சேர்த்துவைச்சு அடிக்கிறது, பஞ் டயலாக்,தத்ரூபமான படங்களைவிட்டு எப்ப பார்த்தாலும் கமர்சியல் படங்களை தேர்வுசெய்து நடிக்கிறது இதெல்லாம் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்காதாம்.. 
பாலாட படங்களைப்போல தலைக்கு மொட்டையடிச்சோ/ முகத்துக்கு வர்ணம் பூசியோ/ உடம்பில புழுதி பூசியோ/ தாடி,முடி வளர்த்தோ, ஹீரோக்களை எப்பபாரு ஏதோ ஒரு குறையை வைச்சு காட்டினாலோ அந்த கருமாந்திரங்களைஎல்லாம் ஆமை வேகத்தில போற படமெண்டாலும் பாப்பாங்க, பொதுவா கமல்,மணிரத்தினம்,பாலா படங்களை விரும்புவோர்தான் தங்களை தாமே அறிவு ஜீவிகள் என சமுகத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். காரணம் இவர்களின் படங்கள் எல்லோருக்கும் புரியாது ஆதலால் வசூலில் பெரிதா கல்லா கட்டுவதில்லை, இதனால் இவர்களின் படங்களை வாங்குவதில் தயாரிப்பாளர்கள் பின்நிற்பது கூட, இந்த விரக்தியில்தான் இவர்களின் ரசிகர்கள் தங்களின் ஆத்திரத்தை மற்றவர்களிடம் திணிக்கிறார்கள் "ரசனை குறைந்தவர்கள், வித்தியாசமா எடுத்தா அதை புரிந்துகொள்ளுற அளவுக்கு இவர்களிடம் அறிவில்லை" என்றெல்லாம் மற்றவர்களை எள்ளிநகையாடுவார்கள்.

ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ளவேணும், சினிமா என்பது பொழுதுபோக்கே! அந்த கண்ணோட்டத்தில்தான் அநேகமானோர் திரையரங்குக்கு செல்கின்றனர். ஆனா, பொழுதுபோக்கு அம்சங்களை தகுந்த முறையில் மக்கள் ரசிக்கும்படியாக வழங்குதல் வேணும். பில்லா 2, வேலாயுதம், அலெக்ஸ் பாண்டியன்,ராஜபாட்டை போன்ற படங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரித்து பேச வரேல.மாறாக மங்காத்தா, சிவாஜி,துப்பாக்கி,சிங்கம் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கை வழங்கியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பிடியான படங்களை பாமரை ரசிகர்களும் புரிந்துகொள்வார்கள். தசாவதாரம், விஸ்வரூபம் போல இதை புரிந்துகொள்ள ஏழாம் அறிவெல்லாம் தேவையில்லை. சரி, அவங்க வாதப்படி தொடந்து அரைச்ச மாவை அரைக்க்காது வித்தியாசமான படைப்புக்களை வழங்கவேனும் என்றாலும் முதலில் கவனிக்கவேண்டியது எவ்வாறு அந்தப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதென்பது!! இதுவே முக்கியம்... என்னதான் உலகத்தரத்தில் படம் எடுத்தாலும் மக்களுக்கு புரியிறமாதிரி படம் இல்லாவிடில் மக்கள் எப்பிடி அதற்கு வரவேற்பு அளிப்பார்கள்??? இன்றையதினம் பாலாவின் பரதேசி படம் பார்த்துவிட்டேன்,உண்மையில் சிறந்ததொரு படம். தேயிலைத்தொழிளார்கள் முன்னைய காலப்பகுதியில்(தற்போதும்???) பட்ட அவலங்களை துல்லியமாக பாலா சித்தரித்திருக்கிறார், வரவேற்கப்படவேண்டிய திரைப்படமும்கூட. ஆனா இந்தப்படத்தை எல்லோரும் விரும்பி பார்ப்பார்களா என்றா இல்லை. அதுக்காக அவர்களை குறை சொல்ல முடியுமா? சிறுவர்கள்,பெண்கள்,பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்களைப்போய் இந்தப்படம் பார் எண்டு சொல்லமுடியுமா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை. அதை இந்த அறிவுஜீவிகள் புரிந்துகொள்வார்களா? 
இந்த விடயத்தில் சில மசாலா பிரியர்கள் மத்தியில் வித்தியாசமான குழப்பங்கள் எழும் எவ்வாறெனின், கமல்,பாலா,மணி போன்றோரின் படங்களை பார்த்தவுடன் யாரவது படம் எப்பிடி என்று கேட்டா என்ன சொல்வது? சிலவேள மனசு பிடிக்கேல என்று சொன்னாலும் அதை பப்ளிக்கா சொன்னா தங்களை கேவலப்படுத்துவாங்களோ! என்ற தயக்கம். அதால அடிமட்ட ரசிகர்கள் அவ்வப்போது தங்களை அறிவுஜீவிகளா காட்டிக்கொள்கிற சந்தர்ப்பங்களும் உண்டு... மாசோ! கிளாசோ! மக்களுக்கு புரியிற மாதிரி படம் எடுங்கப்பா.........
இப்படிக்கு நானும் ஒரு சாதாரண சினிமா ரசிகன்தான்.

Wednesday, March 6, 2013

இந்திய மைதானங்களும் இடதுகை துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கமும்


இந்தப்பதிவில் 2000 ஆண்டிற்கு பின்னர் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் வெளிநாட்டு அணியின் ஆரம்ப இடதுகை  துடுப்பாட்ட வீரர்/வீரர்கள் இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் பெற்ற ஓட்டங்கள் பற்றி அலசப்பட்டுள்ளது. அது என்னவோ தெரியல, ஆரம்ப இடதுகை துடுப்பாட்டவீரர்களுக்கு இந்திய மைதானங்கள் சொர்க்காபுரியாகவே இன்றும் இருந்துவருகின்றது. ஒரு தொடரில் அனேகமாக அவர்களே அதிகப்படியான ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் விசேடம் என்னவென்றால் குறிப்பிட்டு சொல்லுற அளவுக்கு பெரிய துடுப்பாட்ட வீரர்களல்லாத சில இடதுகை துடுப்பாட்ட வீரர்களும் இந்தியாவில் சாதித்துள்ளார்கள். மேற்கிந்தியாவின் வேவல் ஹைன்ட்ஸ், பாகிஸ்தானின் சல்மான் பட், நசீர் ஜாம்செட் போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம். சரி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த நாடுகளின் ஆரம்ப இடதுகை துடுப்பாட்டவீரர்கள் பெற்ற ஓட்டங்களின் பட்டியலுக்கு செல்வோம்.

தென்னாபிரிக்க இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.


south africa in india 2000kristen- 115, 0, 93, 72,1 ஓட்டங்கள் 
south africa in india 2005smith- 48,3,134,24 ஓட்டங்கள் 
south africa in india 2010 (ஆரம்ப இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அணியில் இடம்பெறவில்லை)
Icc world cup 2011- smith- 16 ஓட்டங்கள் 

அவுஸ்திரேலியா இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.




australia in india 2001
hyden- 99,57,111,36 ஓட்டங்கள் 
ghilli- 63,6,76 ஓட்டங்கள் 

hyden-47, 0,44,19 ஓட்டங்கள் 
ghilli-83,41,111,7 ஓட்டங்கள் 

ghilli..-12,0,29,18,79,51,19 ஓட்டங்கள் 
hyden-34,75,60,92,29 ஓட்டங்கள் 

marsh-5,112,6 ஓட்டங்கள் 

marsh- 0 ஓட்டங்கள் 


இங்கிலாந்து இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.




treskothick 121,13,36,18,35,95 ஓட்டங்கள் 
knight  0,14,10,74,105,0 ஓட்டங்கள் 

strauss- 0,61,7,7,74,25 ஓட்டங்கள் 



england in india 2008 
cook 11 ஓட்டங்கள் 

cook 60,0,3,10,63 ஓட்டங்கள் 

cook 75,17,17,76,22 ஓட்டங்கள் 

strauss- 158 ஓட்டங்கள் 




பாகிஸ்தான் இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.




butt-108 ஓட்டங்கள் 

butt- 26,36,101,48,21,3 ஓட்டங்கள் 

butt- 50,37,129,0,36 ஓட்டங்கள் 




jamshed- 101,106,35 ஓட்டங்கள் 









இலங்கை இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.



sanath- 27,0,15,16,8,19 ஓட்டங்கள் 
sanga-27,138,8,39 ஓட்டங்கள் 
tharanga-28,6 ஓட்டங்கள் 













tharanga-14,11,1 ஓட்டங்கள் 
sanath-63,9,2,22 ஓட்டங்கள் 

tharanga-67,37,73,118,0 ஓட்டங்கள்

Icc world cup 2011
tharanga- 2 ஓட்டங்கள்






மிகுதி அடுத்த பதிவில்...





comment