Tuesday, March 26, 2013

அஜித்தும் சமூக போராட்டங்களும்


தற்போது தமிழகம் ,முழுவதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதராவாக மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். இவ்வளவு நாளும் மூச்சு பேச்சில்லாம இருந்த நடிகர் சங்கமும் ஏப்ரல் 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. என்ன போராட்டம் நடந்தாலும் ரஜினி,கமல் போன்ற நடிகர்கள் அதில் ஏதாவதொரு பங்களிப்பை செய்யணும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இது வெறும் எதிர்பார்ப்புடன் இருந்தால் ஓகே, அதைவிடுத்து கட்டாயப்படுத்தல், ஆதரவளிக்கும்பட்சத்தில் தாறுமாறா அவர்களுக்கெதிரா கதைத்தல் அர்த்தமற்றதொன்றே! அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நாங்கள் ஒருபோதும் தலையிடமுடியாது. நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசுக்கு அவர்களை எடுத்த எல்லாத்துக்கும் குரல் கொடுக்கணும் என்பது பிழையானததொன்றாகும். மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் திரையரங்கு சென்று டிக்கட் எடுக்கும் அந்தக்கணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு படம் நல்லா இருக்கணும், இரண்டரை மணிநேரம் சந்தோசமா இருக்கணும் என்றதா? இல்ல, நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசால அவங்க கோடிக்கணக்கா சம்பாதிக்கணும் எண்டதா? ஒரு படத்தை மக்கள் பார்க்கும்போது பார்ப்பவர்களும் சந்தோசப்படுகிறார்கள், படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் போன்றோரும் தங்கள் உழைப்புக்கேற்ப ஊதியத்தை பெற்றுக்கொள்கிராகள். இது நம்மவர் பலருக்கு பொறுக்குதே இல்ல. ஆனா சில நடிகர்கள் தாங்கள் மக்களின் தலைவர் என்ற மாயையை வேணுமெண்டே படங்களின் ஊடாக மக்களுக்கு சித்தரிக்கிறார்கள், கேட்டா அது படக்கதைக்கேற்பவே வடிவமைக்கப்பட்டது, அதுவும் இயக்குனர்களால்தான் வடிவமைக்கப்பட்டது என்று ரீல் விடுவார்கள். அது ரீல் என்றாலும் அதை நம்பி அவர்களை தலைவர் என்று கருதிற நாங்கள்தான் நம்பர் ஒன் முட்டாள் என்பதை மறந்துபோகவேணாம். இனியாவது சினிமா ஹீரோக்களை நிஜத்தலைவர்களாக கற்பனை பண்ணுவதை தவிருங்கள்.




அடுத்து மேட்டருக்கு வருவோம், தமிழக போராட்டங்களில் அஜித்தும் ஒன்றும் செய்யவில்லை என்றெல்லாம் அவ்வப்போது கிளப்பிவிடப்படுகிறது, மேலும் அடுத்து வரப்போற உண்ணாவிரத போராட்டத்தில் அஜித் கலந்துகொல்வதட்கான சாத்தியப்பாடுகளும் குறைவே! இதனால் வருகிற கிழமை அஜித் தவிர போராட்டத்தில் பங்கேற்ற மற்றைய நடிகர்கள் மக்கள் தலைவர்களாகவும் அஜித் போன்ற பங்கேற்காதவர்கள் வில்லனையும் சித்தரிக்கப்படப்போரார்கள். சிலவேள அஜித் போனா தல தப்பிடும்.இல்லாவிடில் அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கு பெரியதொரு சவால் காத்திருக்கிறது. ஆமா அஜித் எதிர்ப்பாளர்களுடன் முட்டி மோதுவதுதான். முதல்ல அவர்களுக்கு ஒரு விடயத்தை நாம புரியவைக்கணும். அஜித்தை ரஜினியோ,கமலோ,விஜயோ,சூர்யா உடனோ ஒப்பிடவேணாம் இந்தவிடயத்தில். அதற்கான காரணங்களை அலசிப்பார்ப்போம்.

1. அஜித் ஒரு தனிமனிதன். ரசிகர்கள் தவிர அஜித்துக்கு எந்தவொரு பின்புலமுமில்ல,குறிப்பாக அரசியல் மட்டத்திலோ, மீடியா மட்டத்திலோ அஜித்துக்கு அன்றும் இன்றும் சப்போட் இருந்ததில்லை, நாளையும் இருக்கப்போவதில்லை.காரணம் தமிழ் சினிமாவின் பிழைப்பிற்காக ஜால்ரா அடிக்காத ஒரே மனிதன் அஜித்தான்.. அதனால்தான் இந்த கதி.. மாணவர்களுக்கு ஆதரவாக சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதை தமிழக அரசு ஒருபோதும் விரும்பாது. விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த பிரச்சினைபோல் நாளை அஜித் படத்துக்கு எதிரா ஒரு பிரச்சினை கிளம்புமாயின் அஜித்துக்கு சப்போட்டா ரசிகர்கள் தவிர வேற யாரும் கதைக்கப்போறதில்லை. இதே வேறு முன்னணி நடிகர்களுக்கு நடந்தா உயர் மட்டங்களில் இருந்து நிறைய ஆதரவுகள் வரும். அல்லாவிடில் ஆட்சியாளரின் காலிலாவது போய் விழுவார்கள். அஜித்தான் அப்பிடி இல்லையே!


2. அஜித் ஒருபோதும் தன்னுடைய படங்களை வந்து பாருங்கள் என்று மக்களிடையே புரமோட் பண்ணுவதில்ல, ஏன் படம் சம்பந்தமான எந்தவொரு விழாக்களுக்கும் செல்வதில்லை. தனது பட விழாக்களுக்கோ வேறு தேவைக்காகவோ தனது ரசிகர்களை கூட்டம் கூட்டமாக வரவழைத்து பகடைக்காயா பயன்படுத்துவதில்லை.

3. தனது படங்களில் தான்தான் மக்களின் தலைவன் என்றெல்லாம் போலி மாயையை ஒருபோதும் உருவாக்கியதில்லை அல்லது மிகமிக குறைவு. ஆதலால் அஜித் ரசிகர்கள் ஒருபோதும் அஜித் அரசியலுக்கு வருவார், அவர்தான் அடுத்த முதலமைச்சராகணும், ஏதாவது அநீதி நடந்தா அஜித் குரல் கொடுக்கணும் என்றெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். அந்தளவுக்கு சினிமா நடிகர்கள் வேறு நிஜ தலைவர்கள் வேறு என்பதை தனது நடவடிக்கையால் ரசிகர்களுக்கு சரியான வழியை காட்டியுள்ளார்.

4. அஜித் பொதுவாகவே எந்தவொரு விழாக்களிலும் பங்குபற்றுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றுபவர். நடிகர்களுக்கு ஆதாயம் தேடும் போராட்டங்களிலே அஜித் கலந்துகொள்வதில்லை, உதாரணமாக நடிகர்களை பாதிக்கும் வரிவிலக்கை எதிர்த்து அண்மையில் நடந்த போராட்டத்திலே அஜித் பங்குபற்றவில்லை. அப்பிடி இருக்கும்போது வேறு போராட்டங்களில் கலந்துகொள்ளும்படி நிர்ப்பந்திப்பது அர்த்தமற்றதொன்றாகும்.

5. நாலுபேருக்கு பப்ளிக்கில உதவிசெய்து தன்னை பெரியாளாக காட்டிக்கொள்ளுவதில்லை.மாறாக சத்தமின்றி எத்தனையோபேருக்கு உதவிகளை செய்து வருகின்றார். இதெல்லாம் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதில்லை. உதவிபெற்றவர்கள் மூலமாக பலவருடங்களுக்கு பிறகே தெரியவரும். அதனால் சமுக பிரச்சினைகளில் அவரின் பங்கை ரசிகர்கள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை.


இதற்குமுதல் இலங்கைத்தமிழருக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்குபற்றிய அஜித் மற்றும் அர்ஜுனுக்கு எதிரா சரத்குமார் போன்றோர் எப்பிடியெல்லாம் குற்றங்களை சோடிச்சார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் ஒரு அநீதிக்கெதிரா சுயலாபம் கருதாமல் போராடுபவர்கள் எப்போதும் பாராட்டுதலுக்குரியவர்கள். ஆனா, போராடாமல் ஒதுங்கி இருப்பவர்களை துரோகிகளாக பார்க்கும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. சினிமா நடிகர்களை ஒரு சராசரி மனிதர்களாக பாருங்கள். அவர்கள் எங்களால் கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பலவருட உழைப்புக்கு கிடைத்த பலன். இதுக்கப்புறமும் நடிகர்களை குறை சொல்பவர்களுக்குக்கு தில் இருந்தா அவர்களின் படத்தை பார்க்காமல் இருங்கள்..

Saturday, March 16, 2013

தமிழ் சினிமாவின் சாதாரண ரசிகர்கள் vs அறிவுஜீவிகள்


ரசிகர்களிடையே எவ்வளவு பாகுபாடு? எல்லோருக்கும் வெளிப்படையா பார்க்கும்போது எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் தமக்கிடையே முட்டி மோதிக்கொள்வதுதான் கண்ணுக்கு தெரிகிறது. ஆனா மறைமுகமா அடிமட்ட ரசிகர்களுக்கும் அறிவுஜீவிகளுக்குமிடையிலான மோதல்கள் கண்ணுக்கு தெரிவது அரிதே! சமுகவலைத்தளங்கள் குறிப்பாக பேஸ்புக் பாவிப்பவர்கள்,பிளாக் வாசிப்பவர்களுக்கே இவ்வாறான பிரச்சினைகள் தெரியவரும். அதாவது இப்பிடியொரு பிரிவினைவாதத்தை தூண்டுவது இந்த அறிவுஜீவிகள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டு திரியும் ஒருசிலர்தான். அவர்கள் பொதுவாக குறிப்பிட்டு தாக்குவது ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களைத்தான். அதாவது இவர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாம், தங்கள் கதாநாயகனை நடிகன் என்றதற்கு அப்பால் மேலே தூக்கி வைத்து கொண்டாடுவது, குறிப்பாக இவர்களின் கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது போன்ற செயல்கள் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்கிறதே இல்லை,மேலும் இவர்களின் படம் என்றால் நம்பமுடியாத ஒபெநிங் சீன், ஒரே டைம்ல இருபதுமுப்பது பேருக்கு சேர்த்துவைச்சு அடிக்கிறது, பஞ் டயலாக்,தத்ரூபமான படங்களைவிட்டு எப்ப பார்த்தாலும் கமர்சியல் படங்களை தேர்வுசெய்து நடிக்கிறது இதெல்லாம் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்காதாம்.. 
பாலாட படங்களைப்போல தலைக்கு மொட்டையடிச்சோ/ முகத்துக்கு வர்ணம் பூசியோ/ உடம்பில புழுதி பூசியோ/ தாடி,முடி வளர்த்தோ, ஹீரோக்களை எப்பபாரு ஏதோ ஒரு குறையை வைச்சு காட்டினாலோ அந்த கருமாந்திரங்களைஎல்லாம் ஆமை வேகத்தில போற படமெண்டாலும் பாப்பாங்க, பொதுவா கமல்,மணிரத்தினம்,பாலா படங்களை விரும்புவோர்தான் தங்களை தாமே அறிவு ஜீவிகள் என சமுகத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். காரணம் இவர்களின் படங்கள் எல்லோருக்கும் புரியாது ஆதலால் வசூலில் பெரிதா கல்லா கட்டுவதில்லை, இதனால் இவர்களின் படங்களை வாங்குவதில் தயாரிப்பாளர்கள் பின்நிற்பது கூட, இந்த விரக்தியில்தான் இவர்களின் ரசிகர்கள் தங்களின் ஆத்திரத்தை மற்றவர்களிடம் திணிக்கிறார்கள் "ரசனை குறைந்தவர்கள், வித்தியாசமா எடுத்தா அதை புரிந்துகொள்ளுற அளவுக்கு இவர்களிடம் அறிவில்லை" என்றெல்லாம் மற்றவர்களை எள்ளிநகையாடுவார்கள்.

ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ளவேணும், சினிமா என்பது பொழுதுபோக்கே! அந்த கண்ணோட்டத்தில்தான் அநேகமானோர் திரையரங்குக்கு செல்கின்றனர். ஆனா, பொழுதுபோக்கு அம்சங்களை தகுந்த முறையில் மக்கள் ரசிக்கும்படியாக வழங்குதல் வேணும். பில்லா 2, வேலாயுதம், அலெக்ஸ் பாண்டியன்,ராஜபாட்டை போன்ற படங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரித்து பேச வரேல.மாறாக மங்காத்தா, சிவாஜி,துப்பாக்கி,சிங்கம் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கை வழங்கியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பிடியான படங்களை பாமரை ரசிகர்களும் புரிந்துகொள்வார்கள். தசாவதாரம், விஸ்வரூபம் போல இதை புரிந்துகொள்ள ஏழாம் அறிவெல்லாம் தேவையில்லை. சரி, அவங்க வாதப்படி தொடந்து அரைச்ச மாவை அரைக்க்காது வித்தியாசமான படைப்புக்களை வழங்கவேனும் என்றாலும் முதலில் கவனிக்கவேண்டியது எவ்வாறு அந்தப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதென்பது!! இதுவே முக்கியம்... என்னதான் உலகத்தரத்தில் படம் எடுத்தாலும் மக்களுக்கு புரியிறமாதிரி படம் இல்லாவிடில் மக்கள் எப்பிடி அதற்கு வரவேற்பு அளிப்பார்கள்??? இன்றையதினம் பாலாவின் பரதேசி படம் பார்த்துவிட்டேன்,உண்மையில் சிறந்ததொரு படம். தேயிலைத்தொழிளார்கள் முன்னைய காலப்பகுதியில்(தற்போதும்???) பட்ட அவலங்களை துல்லியமாக பாலா சித்தரித்திருக்கிறார், வரவேற்கப்படவேண்டிய திரைப்படமும்கூட. ஆனா இந்தப்படத்தை எல்லோரும் விரும்பி பார்ப்பார்களா என்றா இல்லை. அதுக்காக அவர்களை குறை சொல்ல முடியுமா? சிறுவர்கள்,பெண்கள்,பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்களைப்போய் இந்தப்படம் பார் எண்டு சொல்லமுடியுமா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை. அதை இந்த அறிவுஜீவிகள் புரிந்துகொள்வார்களா? 
இந்த விடயத்தில் சில மசாலா பிரியர்கள் மத்தியில் வித்தியாசமான குழப்பங்கள் எழும் எவ்வாறெனின், கமல்,பாலா,மணி போன்றோரின் படங்களை பார்த்தவுடன் யாரவது படம் எப்பிடி என்று கேட்டா என்ன சொல்வது? சிலவேள மனசு பிடிக்கேல என்று சொன்னாலும் அதை பப்ளிக்கா சொன்னா தங்களை கேவலப்படுத்துவாங்களோ! என்ற தயக்கம். அதால அடிமட்ட ரசிகர்கள் அவ்வப்போது தங்களை அறிவுஜீவிகளா காட்டிக்கொள்கிற சந்தர்ப்பங்களும் உண்டு... மாசோ! கிளாசோ! மக்களுக்கு புரியிற மாதிரி படம் எடுங்கப்பா.........
இப்படிக்கு நானும் ஒரு சாதாரண சினிமா ரசிகன்தான்.

Wednesday, March 6, 2013

இந்திய மைதானங்களும் இடதுகை துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கமும்


இந்தப்பதிவில் 2000 ஆண்டிற்கு பின்னர் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் வெளிநாட்டு அணியின் ஆரம்ப இடதுகை  துடுப்பாட்ட வீரர்/வீரர்கள் இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் பெற்ற ஓட்டங்கள் பற்றி அலசப்பட்டுள்ளது. அது என்னவோ தெரியல, ஆரம்ப இடதுகை துடுப்பாட்டவீரர்களுக்கு இந்திய மைதானங்கள் சொர்க்காபுரியாகவே இன்றும் இருந்துவருகின்றது. ஒரு தொடரில் அனேகமாக அவர்களே அதிகப்படியான ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் விசேடம் என்னவென்றால் குறிப்பிட்டு சொல்லுற அளவுக்கு பெரிய துடுப்பாட்ட வீரர்களல்லாத சில இடதுகை துடுப்பாட்ட வீரர்களும் இந்தியாவில் சாதித்துள்ளார்கள். மேற்கிந்தியாவின் வேவல் ஹைன்ட்ஸ், பாகிஸ்தானின் சல்மான் பட், நசீர் ஜாம்செட் போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம். சரி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த நாடுகளின் ஆரம்ப இடதுகை துடுப்பாட்டவீரர்கள் பெற்ற ஓட்டங்களின் பட்டியலுக்கு செல்வோம்.

தென்னாபிரிக்க இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.


south africa in india 2000kristen- 115, 0, 93, 72,1 ஓட்டங்கள் 
south africa in india 2005smith- 48,3,134,24 ஓட்டங்கள் 
south africa in india 2010 (ஆரம்ப இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அணியில் இடம்பெறவில்லை)
Icc world cup 2011- smith- 16 ஓட்டங்கள் 

அவுஸ்திரேலியா இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.




australia in india 2001
hyden- 99,57,111,36 ஓட்டங்கள் 
ghilli- 63,6,76 ஓட்டங்கள் 

hyden-47, 0,44,19 ஓட்டங்கள் 
ghilli-83,41,111,7 ஓட்டங்கள் 

ghilli..-12,0,29,18,79,51,19 ஓட்டங்கள் 
hyden-34,75,60,92,29 ஓட்டங்கள் 

marsh-5,112,6 ஓட்டங்கள் 

marsh- 0 ஓட்டங்கள் 


இங்கிலாந்து இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.




treskothick 121,13,36,18,35,95 ஓட்டங்கள் 
knight  0,14,10,74,105,0 ஓட்டங்கள் 

strauss- 0,61,7,7,74,25 ஓட்டங்கள் 



england in india 2008 
cook 11 ஓட்டங்கள் 

cook 60,0,3,10,63 ஓட்டங்கள் 

cook 75,17,17,76,22 ஓட்டங்கள் 

strauss- 158 ஓட்டங்கள் 




பாகிஸ்தான் இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.




butt-108 ஓட்டங்கள் 

butt- 26,36,101,48,21,3 ஓட்டங்கள் 

butt- 50,37,129,0,36 ஓட்டங்கள் 




jamshed- 101,106,35 ஓட்டங்கள் 









இலங்கை இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.



sanath- 27,0,15,16,8,19 ஓட்டங்கள் 
sanga-27,138,8,39 ஓட்டங்கள் 
tharanga-28,6 ஓட்டங்கள் 













tharanga-14,11,1 ஓட்டங்கள் 
sanath-63,9,2,22 ஓட்டங்கள் 

tharanga-67,37,73,118,0 ஓட்டங்கள்

Icc world cup 2011
tharanga- 2 ஓட்டங்கள்






மிகுதி அடுத்த பதிவில்...





Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா- சுருக்கமான விமர்சனம்.

பாக்கியராஜின் "இன்று போய் நாளை வா" திரைப்பட கதையை அனுமதியின்றி திருடி படம் எடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து சந்தானம்-பாக்கியராஜ் இடையேயான சமரசத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. படத்தின் கதை என்னவென்றா ஊரில வெட்டித்தனமா சுத்தித்திரியும் மூன்று பசங்க ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அந்தப்பெண் யாரை காதலிக்கிறாள் என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்... முன்று பசங்களாக சந்தானம்,பவர்ஸ்டார்,சேது ஆகியோரும் ஹீரோயினாக விசாகா சிங் உம், கௌரவத்தோற்றத்துக்கு சிம்புவும் மற்றும் பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

சந்தானம்- சொல்லவே தேவையில்ல, ஓகேஓகே, கலகலப்புக்கு பிறகு மீண்டும் ஒரு முழு நீள திரைப்படம் ஒன்று சந்தானத்தை நம்பியே எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றாட்போல் பின்னி எடுத்திருக்கிறாரெண்டே சொல்லணும். பவர்ஸ்டாரின் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரும்புதிருமாக சந்தானம் அடிக்கும் பஞ் தியேட்டரையே அதிரவைக்கிறது. 

பவர்ஸ்டார்- இன்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னாள் இப்பிடி ஒராள் இருக்கிறாரா? என்று கேட்டால் சினிமாவில் பைத்தியமா ஈடுபபாடுடையவர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. குறுகிய காலத்தில் கோமாளித்தனத்தாலும், அப்பாவித்தனத்தாலும், அனுதாபத்தாலும்(நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு) பெரிய ஸ்டாராக????... இல்லீங்க இல்லீங்க.... எல்லோருக்கும் அறிமுகமானார். நான் பார்த்த திரையரங்கின் பவர்ஸ்டார் அறிமுகமாகும் காட்சியின்போது எழுந்த ஆர்ப்பரிப்பு வேறு நடிகர்களின் படத்துக்கு இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். (இத்தனைக்கும் அவரின் எந்த படத்தை பார்த்து இம்பிரஸ் ஆனீங்க என்று ஒரு வார்த்தை நச்சென்று கேட்டா?..வேணாம் கேக்குறவனுக்கே வலிச்சிடும்.)
சரி, படத்தில் எப்பிடி என்று பார்த்தால். கஷ்டப்பட்டு நடிக்கிறது புரிகிறது..என்றாலும் படத்துக்கு தன்னால் மைனஸ் வராதவாறு தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்...

இதுதவிர இந்தப்படத்தில் நடித்த அனைத்து இதர நடிகர்,நடிகைகளும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.....பாடல்களும் பரவாயில்ல, குறிப்பாக பழைய பாடல்களின் ரிமேக் செய்யப்பட்ட பாடல்கள் நன்றாகவே இருந்தது. பின்னணி இசையும் நன்றாகவே இருந்தது...


படத்தின் பிளஸ் என்று பார்த்தால்....

தொடங்கியதிலிருந்து முடியும்வரை ஆடியன்சுக்கு அலுப்பு தட்டாமல்,எரிச்சலூட்டாமல் திரைக்கதையை இயக்குனர் மணிகண்டன் சிறப்பாகவே நகர்த்துகின்றார்...

குறிப்பாக கதாபாத்திரங்களுக்கான பாத்திரத்தேர்வு மிகப்பெரிய வெற்றியை முதல்லே அளித்துவிட்டது என்றுதான் சொல்லணும். குறிப்பாக சந்தானம்,பவர்ஸ்டார்,கணேஷ் ஆகியோர் திரையில் தென்படும்போது அவர்களின் கதைவசனங்களை கேட்கமுன்னரே ஆடியன்ஸ் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு வந்துகொண்டே இருந்தது.. இவ்வாறாக பாத்திரத்தேர்வு நேர்த்தியாக இருந்தா என்னதான் படத்தில் இடையிடையே ஓட்டைகள் இருப்பினும் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

முழுக்க முழுக்க காமெடிப்படம் மற்றும் முன்னணி ஹீரோக்கள் இல்லாததால் ரசிகர்களால் லாஜிக் பிழைகள் மற்றும் விதண்டாவாதமான எதிர்க்கருத்துக்கள் வெளிவராது............

எது எப்பிடியோ இந்த பொங்கலில் மூன்று படங்கள் வெளிவந்தாலும் இந்த ஒரு படமே போதும் பொங்கல் பொங்கி வழிய... சினிமா ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீர்கள்... குடும்பத்தினர்,நண்பர்களுடன் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்....

Tuesday, December 18, 2012

அஜித்தின் டாப் 10 திருப்புமுனைப் படங்கள்

அஜித்தின் திரைப்பட கரியரில் வெற்றிகள், தோல்விகளின் மத்தியில் சில படங்கள் அவரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன.அதில் எனது நோக்கின்படி பத்து படங்களை தரவரிசைப்படுத்தியுள்ளேன். குறிப்பு- இது அஜித்தின் டாப் 10 சிறந்த படங்களின் பட்டியல் அல்ல. திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களின் தரவரிசையே ஆகும்.

10. பவித்திரா 

1994 ஆம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் நாசர்,ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். வணிகரீதியாக பெரியளவு வெற்றி பெறாவிடினும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு படம். அஜித்தின் அன்றைய ஹீரோ வால்யூவிற்கு ஏற்றாட்போல ஹிட்டாக அமைந்தது. தமிழில் ஹீரோவா அஜித்துக்கு இது இரண்டாவது படம். 

9. காதல் மன்னன் 

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணின் முதல் படம். பரத்வாஜின் இசையில் 1998 இல் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் மானு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, விவேக், கரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். முழுநீள காதல் கதையுடன் அமைந்த இத்திரைப்படம் வணிக,விமர்சன ரீதியாக மிகப்பெரும் வெற்றியை அஜித்துக்கு பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல 1997 இல் வெளிவந்த அஜித்தின் நேசம்,ராசி,உல்லாசம்,பகைவன்,ரெட்டை ஜாடை வயது ஆகிய ஐந்து படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு வந்து மிகப்பெரிய ஹிட் என்பதால் அஜித்தின் வெற்றிகரமான பயணத்தில் காதல் மன்னனும் ஒரு திருப்புமுனையே! 

8. வரலாறு 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எவ்வளவோ சிக்கலுக்குப்பிறகு வெளிவந்த திரைப்படம். ஆரம்பத்தில் இந்த திரைப்பட கதையை அஜித்துக்கு சொல்லும்போது அதில் நடிக்க அஜித் சம்மதிக்கவே இல்லை. ஆனாலும் கமல், ரஜினிகாந்தின் அறிவுரைக்கு பிறகே அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்பா, இரண்டு பிள்ளைகள் இதில் தந்தை வேடமானது நடனம் பயின்று அதன் ஒவ்வொரு அசைவுகளையும் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிற கரக்டர், ஒரு மகன் வேடம் சைக்கோ வில்லனாயும், மற்றைய மகன் நண்பர்களுடன் குடித்து கும்மாளமடிக்கும் ஒரு இளைஜனின் வேடம்.. கிட்டத்தட்ட முன்று வேடமுமே எதிரும் புதிருமான வேடம்.. இந்த முன்று கரக்டரையும் உணர்ச்சி ததும்ப நடிக்க அஜித்தைவிட வேறு எவராலுமே இயலாததால் அஜித்திடம் சம்மதம் பெற கடும் முயற்சியை மேற்கொண்டு இறுதியில் இயக்குனர் வென்றே விட்டார். இந்தப்படமானது ஜி என்ற தோல்விக்கும், திருப்பதி,பரமசிவன் என்ற அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு வந்து பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் படத்துக்கு பிறகு வரலாறு தான் தமிழ் சினிமாவில் ஐம்பது கோடியை தாண்டிய திரைப்படம். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களிலே அதிகமாக வசூலிச்ச படமும் இதுதான். மேலும் இந்த படத்துக்காக அஜித்துக்கு பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.

(பதிவு நீண்டுகொண்டு செல்வதால் சுருக்கமா சொல்லிவிடுகிறேன் )

7. மங்காத்தா 

ஏகன்,அசல் ஆகிய இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு 2011 இல் வெளிவந்த திரைப்படம். வெளியான அனைத்து இடங்களிலுமே கலக்சனில் கல்லா கட்டிய திரைப்படம். தமிழ்சினிமாவில் முதன்முதலா ஒரு நடிகர் சிங்கிள் ரோலில் படம் முழுவதுமா வில்லனா தோன்றி நடிச்ச திரைப்படம். 2011 இல் வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் முடியடிச்சு நம்பர் ஒன்னாக திகழ்ந்த படம். அதுமட்டுமல்லாமல் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்ததாய் அதிக வசூலிச்ச படமும்கூட. விமர்சன அடிப்படையிலும், வசூல் அடிப்படையிலும் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் திருப்புமுனையையும் ஏற்படுத்திய திரைப்படம்.

6. காதல் கோட்டை

1996 இல் வெளிவந்த முழுநீள காதல் காவியம். அன்றைய தேதியில் அஜித்துக்கென தனியா மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படம். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி, கமல்-சிறீதேவிக்கு அடுத்து சினிமாவின் சிறந்த ஜோடியாக அஜித்-தேவயானியை எல்லோரும் மெச்சுமளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த திரைப்படம். வசூலில் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு இயக்குனர் அகத்தியனுக்கு சிறந்த கதைக்கான தேசிய விருதும் இப்படத்துக்கு கிடைத்தது.

5. அமர்க்களம் 

1999 இல் வெளிவந்த திரைப்படம். வாலி, ஆனந்த பூங்காற்றே, நீவருவாயென என்ற ஹாட்ரிக் ஹிட்டுக்கு பிறகு வந்தாலும் அஜித்துக்கு கிடைத்த முதல் மாஸ் ஹிட் இதென்பதில் அஜித்தின் கரியரில் அமர்க்களம் ஒரு முக்கியமான படமே! ஒவ்வொரு நடிகனுக்குமே தாங்கள் ஏதாவது மாஸ் ஹிட் குடுத்து மாஸ் ஹீரோவாகணும் என்றே விரும்புவார்கள். ரஜினி-கமல் தலைமுறைக்கு பிறகு முதல் மாஸ் அந்தஸ்துள்ள ஹீரோ என்றால் அஜித்தான்.இவரின் ஏனைய சமகால போட்டி நடிகர்கள் இதற்கு 3/4 வருடங்களுக்கு பிறகே மாஸ் ஹீரோவாகினார்கள். அஜித்துக்கென்று பெண்கள்,குடும்ப ரசிகர்கள் தாண்டி இளையோர் பட்டாளங்கள் அவரை ரசிக்க ஆரம்பித்தது இதற்குப்பிறகே. அதுமட்டுமல்ல வாழ்க்கைத்துணைவியை பெற்றுக்கொடுத்ததும் இந்த திரைப்படமே!

4. வாலி 

1999 இல் வெளிவந்த திரைப்படம். உயிரோடு உயிராக,தொடரும் தோல்விகளுக்கும், உன்னைத்தேடி என்ற அவேரேஜ் ஹிட்டுக்கு பிறகு வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டியளிக்கையில் "இயக்குனர்களை தாண்டி நடிகனா எனது வெற்றியில் உரிமை கொள்ளவைத்த படம் வாலி" என்றார். இளவயதிலே நெகடிவ் ரோல் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்திய படம். "நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாயே நடிக்கிறது" எண்டதுக்கு முதன்முதலில் போட்ட பிரேக் வாலிதான். இந்த படம் வந்த காலத்தில் ஊடகங்கள் அஜித்தை கமலுடன் ஒப்பிட்டனர் என்பது அஜித்துக்கு கிடைத்த மேலுமோர் கௌரவம். அது மட்டுமல்ல இந்த படத்துக்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. 

3. தீனா 

2001 இல் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். "மாஸ் னா" அஜித் எண்டதுக்கு ஏற்றாற்போல் அமைந்த திரைப்படம். ஏற்கனவே அமர்க்களத்திலே மாஸ் ஹீரோவாகிவிட்ட நிலையில், இது அவருக்கு மேலுமோர் பரிமாணத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மீடியா,ரசிகர்களால் "தல" என அழைக்கத்தொடங்கியது இந்தப்படத்திலிருந்துதான். வெறுமனே அடிதடி என்றில்லாமல் அதை ஸ்டைலிசாக வேற அஜித்தை நடிக்கவைத்தார் முருகதாஸ். காதல் கோட்டை, அமர்க்களத்துக்கு பிறகு மிகப்பெருமளவு ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த படம் தீனா. தொடர் வெற்றிகளின் உச்சத்தில் இருந்த அஜித்துக்கு தீனாவும் ஒரு திருப்புமுனையே!

2. ஆசை

1995 இல் வெளிவந்த திரைப்படம். இது பற்றி இயக்குனர் வசந்த் சொல்கையில் "எத்தனையோ இயக்குனர்களுக்கு பிரேக் கொடுத்து முன்னேற்றிய அஜித்துக்கு,முதன் முதலில் பெரிய பிரேக் கொடுத்தவன் நான்தான், அது மட்டுமல்ல அன்றைய தேதியில் கல்லூரி மாணவிகளிடையே கேட்டால் அஜித்தை மாதிரியான ஒரு ஆண்கிடைக்கணும் என்றே சொல்வார்கள்." என்றார். அந்தளவுக்கு அஜித்தின் மீதான கிரேஸி அந்தக்காலத்திலே உருவாகிவிட்டது. இது அஜித்தின் ஆறாவது படம், ஹீரோவாக மூன்றாவது படம். பவித்திரா என்ற வெற்றிக்குப்பிறகு ஹீரோவாக மூன்றாவது படத்திலே மிகப்பெரியதொரு வெற்றியை அஜித்துக்கு முதன்முதலில் கொடுத்த படம் ஆசை.இதனால்தான் எத்தனையோ சூப்பர் டூப்பெர் ஹிட் படங்களுக்கு மேலே இதை வரிசைப்படுத்தியுள்ளேன்.  

1. பில்லா (2007)

2007 இல் வெளிவந்து பாக்ஸ் ஆபீசில் மட்டுமல்ல தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம். முழுநீள ஸ்டைலிசான படம். அதுவரை தமிழ் சினிமா கண்டிராதவாறு இயக்குனர் விஸ்ணுவர்த்தனின் கற்பனையில் உருவான படம். அஜித்தின் ஒவ்வொரு அசைவிலுமே ஒரு ஸ்டைல் இருக்கும். ஆழ்வார் என்ற தோல்விப்படத்துக்கும், கிரீடம் என்ற சராசரி வெற்றிப்படத்துக்கும் அடுத்ததாய் வந்த படம். அந்த சீசனில் ஏன் இன்றும் கூட பில்லா மோகம் தமிழ்ரசிகர்களை விட்டகலவில்லை. அன்றைய தேதியில் ரஜினியின் சிவாஜிக்கப்புறம் அதிக வசூலிச்ச படம் பில்லாதான். வசூலிலும்சரி, அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் பிஸ்னஸ், ரசிகர்கள், ஒபெநிங் எல்லாவற்றிலுமே அஜித்தை மிகத்தூர இடத்துக்கு திடீரென ஏற்றி வைச்சது பில்லாதான்...சந்தேகமே இல்லை... அதனால்தான் பில்லாவுக்கு முதலிடம்.

இது எனது கண்ணோட்டத்தில் உருவான தரப்படுத்தல்.. இதில் உங்கள் அபிப்பிராயத்தை பின்னூட்டலில் இடுக..

-வருகை தந்தமைக்கு நன்றி. 







Friday, December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம்- திரைப்பட விமர்சனம்

ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லுமளவுக்கு ஹிட் படங்களை தனக்கேயுரிய பாணியில் ஸ்டைலிசா கொடுத்துவந்த கௌதம் வாசுதேவ மேனனுக்கு யார் கண் பட்டுதோ, இப்பவெல்லாம் இறங்குமுகமாகவே இருக்கின்றது. இறுதியாக விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்கு பிறகு வந்த "நடுநிசி நாய்கள்", "ஏக் திவானா தா" (விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்) இந்த இரண்டும் தோல்வியடைந்ததது. அதுமட்டுமல்ல திரைக்கதை,இயக்கத்தில தனது பிடிவாதமான போக்கால் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய்,சூர்யாவின் படங்களும் கைநழுவி போய்விட்டன. எது எப்பிடியோ எனினும் கௌதமின் படங்களுக்கான கிரேஸி இன்னமும் குறையவில்லை. இந்தப்படத்துக்கான இசையமைப்பாளரை தேர்வுசெய்வதில் ரஹுமான், ஹரிஸ் என போய் இறுதியில் இளையராயாவிடமே அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் இசைவெளியீட்டு விழாவை வேற மிகப்பிரமாண்டமாக செய்தார்கள். இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்க செய்துவிட்டது. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முன்று மொழிகளும் எடுக்க தீர்மானித்தார்கள். அப்புறமாக ஹிந்தியை கைவிட்டு தமிழ்,தெலுங்கில் மட்டும் எடுக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தெலுங்கில் ஜீவாவின் கரக்டருக்கு பதிலாக "நானீ" நடிக்கிறார்.
அடுத்ததாய் பட விமர்சனத்துக்கு போவோம்..


நடிகர்கள்- ஜீவா,சமந்தா,சந்தானம் 
இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் 
இசை- இளையராஜா 
ஒளிப்பதிவு- எம்.எஸ்.பிரபு, ஓம் பிரகாஷ்
தயாரிப்பு- ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்றேட் குமார்,ஜெயராம், கௌதம் மேனன்.
வெளியீடு- போட்டான் காதாஸ், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.

படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இது கௌதம் மேனனின் படங்களில் எதிர்பார்க்கமுடியாது.. அவரின் படங்களை பொறுத்தவரை கதையை நம்பி படம் எடுப்பதில்லை, சிறியதொரு கருவை வைச்சு தனது மேக்கிங்கால் வித்தியாசமான முறையில் ஆடியன்ஸிடம் கொண்டுபோய் சேர்ப்பார். மணிரத்தினம்,ராஜீவ் மேனன்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு பட இயக்குனர்) பாணியிலான இவரது மேக்கிங் வேற இயக்குனர்களிடம் காணக்கிடைக்காததாலும், மணிரத்தினத்தின் படங்கள் இப்போதெல்லாம் பெரிதா வராததாலும் இவரின் இயக்கம் ஒரு தனித்துவமானதாகவே இருக்கின்றது. கதையின்படி ஜீவா,சமந்தா இருவருமே சிறுவயதிலிருந்து பாடசாலை,காலேஜ் என ஒன்றாக படித்து பழகியவர்கள், காதல் வயப்படுகிறார்கள்.. அவ்வப்போது இருவரிடையே ஈகோ பிரச்சினை. பின்னர் பிரிந்து சென்றுவிடுகிறார்கள், சமந்தாவுடனான காதல் சரிப்பட்டுவராதெண்டு தெரிந்த ஜீவா பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்... அப்புறம் என்ன நடக்கிறது?? இதுதான் சுவாரிஸ்யம்.. வழமையான கௌதம் படங்களிலிருந்து கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. இதை படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளுங்கள்.......  
ஜீவா,சமந்தா- இந்த படத்தின் பெரிய பிளசே இவர்கள் இருவரும்தான். ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக இளமையாக, அழகாக சும்மா லட்டுமாதிரி இருக்கிறார்கள். அதனால படம் பிடிக்காதவர்களும் இவர்களை பார்த்தே ஓரளவு திருப்திப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பதிலாக ஹாண்ட்சம் இல்லாத ஹீரோவையும், அட்டு பிகரையும் போட்டிருந்தா முப்பது நிமிடத்துக்குமேல எவரும் பொறுமையாக திரையரங்கில் இருந்திருக்கமாட்டார்கள்.

சந்தானம்- கௌதமின் கைகிளாஸ் படத்துக்கு சந்தானம் மாதிரியான காமெடியன்கள் அவ்வளவு பொருத்தமில்லை எண்டாலும் ஆமை வேகத்தில் செல்லும் ஸ்கிரீன்பிளேக்கு சந்தானத்தின் காமெடிதான் ஆடியன்சை நித்திரை கொள்ளவிடாமலாவது வைச்சிருந்தது.
இயக்குனர் கௌதம் மேனன்- கௌதமிடமிருந்து எதிர்பார்த்தளவு இல்லை. முதற்பாகம் மெதுவாகவே நகருகிறது, அதைவிட எடிட்டிங்கில் படு சொதப்பல். நிறைய காட்சிகள் துண்டாடப்பட்டுவிட்டது.  இரண்டாம் பாகம்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. 

இசையமைப்பாளர்- ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை சொதப்பலெண்டே சொல்ல தோன்றுகிறது. குறிப்பாக பின்னணியில் இவர் கொடுக்கும் குரல் தாங்கமுடியல... அதை வேறு பாடகர்களைக்கொண்டு குரல் கொடுக்கவைத்திருக்கலாம். பாடல்கள் மட்டும் பார்க்கக்கூடியதாயுள்ளது.

சுருக்கமா சொல்லப்போனால் இந்தப்படத்தில் ஜீவா,சமந்தா, சந்தானம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். பாடல்கள் நல்லாயுள்ளன. பின்னணி இசை சொதப்பலாயுள்ளது... கௌதமின் இதற்கு முன்னைய முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்ககூடியதாயுள்ளது..
எனது கருத்துப்படி முதற்பாகம் அவரேஜ், இரண்டாம் பாகம் சூப்பர்.... மொத்தத்தில் ஓகே ரகம்.... 
கௌதமின் வழமையான ஹிட் படங்களே "ஏ" சென்றரில்தான் வசூலில் கல்லா கட்டும். "பி","சி" ஆடியன்சை பெரிதாக கவருவதில்லை. அப்பிடி இருக்கும்போது இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தேறுவது சந்தேகம்தான்..

Friday, November 23, 2012

அஜித்தும் கிங் ஆப் ஓபெநிங்கும்....

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஒபெநிங் யாரெண்டு கத்துக்குட்டி ரசிகனை கேட்டாலே சொல்லுவான் அஜித்தான் எண்டு, இந்த "கிங் ஆப் ஒபெநிங்" எண்ட சொல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் குறிப்பிட்ட நடிகருக்கெண்டு பழக்கத்தில் இல்லாத சொல். தமிழ் சினிமா நடிகர் அஜித்துக்கெண்டு இருக்கும் விசேட பட்டப்பெயர்தான் இது.. இது சூப்பர்ஸ்டார்,உலக நாயகன் போல பட இயக்குனரால்,தயாரிப்பாளரால் வைக்கப்பட்ட பெயரோ "தல" என்ற பெயர்மாதிரி படத்தில் வரும் கரக்டருக்கான பெயரோ இல்லை.. அஜித் படம் வெளியாகும்போது முதல் வாரத்தில் தியேட்டருக்கு வரும் அஜித் ரசிகர்களின் எண்ணிக்கை, ஒபெநிங் கலக்சனை வைச்சு மீடியாக்கள் மற்றும் சினி விமர்சகர்களால்தான் அஜித் "கிங் ஆப் ஓபனிங்" என அழைக்கப்படுகிறார். இது இன்று நேற்றல்ல பத்துவருடத்துக்கு மேலாகவே கிங் ஆப் ஒபெநிங் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் அஜித். ஜனா,ஆஞ்சநேயா மற்றும் ஏகன்,அசல் போன்ற தொடர் தோல்விகளிலும்கூட அஜித்தின் கிங் ஆப் ஒபெநிங்க்கு எதிர் விமர்சனம் இல்லை.. எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கு அடுத்தாற்போல வரும் படத்திற்கு முந்தயதிலும் பார்க்க பிரமாண்ட ஒப்நிங்கை அஜித் ரசிகர்கள் வழங்குவார்கள்.. இதுதான் அஜித்துக்கு உள்ள மிகப்பெரிய பலம். 
சரி, இப்போ இன்னொரு முக்கிய பிரச்னைக்கு போவோம்.... வேற ஒண்டுமில்ல பில்லா 2 ஒபெநிங்கும் துப்பாக்கி ஒபெநிங்கும்... பில்லா 2 படம் வெளியாக முன்னர் அஜித்தை பிடிக்காதவர்கள் இது "ஏ" சேட்டிபிக்கட் படம், அது இதெண்டு நிறைய புலம்பினாங்க... ஆனா படம் வந்தாப்பிறகு அதை பாதிப்பேரு மறந்துவிட்டார்கள், அதிலும் துப்பாக்கி வந்தாப்பிறகு அனைத்து அஜித் எதிர்ப்பாளர்களுமே பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதை மறந்துவிட்டார்கள்... ஏனென்டா பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதால அதற்கு 30% வரி உண்டு..அதாவது பில்லா 2 இன் மொத்த கலக்சனில் 30% ஆனா பங்கு அரசாங்கத்துக்கு வரியாக சென்றுவிடும். மீதி 70% ஆனா பங்கே கலக்சனாக கருதப்படும்.. அதாவது தமிழக பாக்ஸ் ஆபீஸ் தரவுகள் யாவுமே வரியாக செலுத்தவேண்டியது போக மீதி 70% ஆனா பங்கே ஆகும்.. 70% ஆனா பங்கை துப்பாக்கியின் முழு கலக்சனுடன்  ஒப்பிடுவதற்காக சேட்டிபிக்கட் விஷயத்தை மறந்தே போனார்கள்போலும். ஆனால் அதைவைத்துத்தான் படம் வெற்றியா? தோல்வியா?அவரேஜ்ஜா? என கணிக்கப்படும்.. ஏனென்டா மீதி 70% ஆனா பங்கு கலக்சன்தானே விநியோகிஸ்தர்கள்,தியேட்டர் அதிபர்களுக்கு போகப்போகுது???......
ஆனா, அஜித்தை பிடிக்காதவர்கள்(எல்லோருமல்ல, குறிப்பிட்ட சிலர்) இதை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே இந்தப்பதிவை நான் எழுதணும் என்று எண்ணினேன்... கொஞ்சம் அடிப்படையிலிருந்தே போவோமென்...உதாரணத்துக்கு அஜித் ரசிகர்களின் பல்வகமையை பார்த்தால் அதில் கிட்டத்தட்ட 90% ஆனோர் இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களே!, ஆனா விஜய் ரசிகர்களை பார்த்தா அவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது வீதமானோர்தான் ஆண்கள், அதிலும் அநேகமானோர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள்.. மிகுதி தரப்பினர் பெண்கள்,மற்றும் குடும்ப ரசிகர்கள்.. சூர்யா ரசிகர்களை பார்த்தா கிட்டத்தட்ட முப்பது வீதமானோர்தான் ஆண்களா இருப்பார்கள்.... சுருக்கமா சொன்னால் அஜித்தின் ரசிகர்கள் இளைஜர்கள், விஜயின் ரசிகர்கள் சிறுவர்கள்,பெண்கள்.... சூர்யாவின் ரசிகர்கள் பெண்கள்,குடும்பத்தினர் .... இந்த ரசிகர்களின் பல்வகமைதான் அஜித்தின் "கிங் ஆப் ஒபெநிங்" கு அடிப்படை காரணம்......    
ஆனா, இதில காமெடி என்னவெண்டா இன்னொரு நடிகரின் பட கலக்சனோடு அஜித்தின் பில்லா 2 பட கலக்சனை ஒப்பிடேக்க 30% வரி போக மீதி 70% ஆனா பங்கை வைச்சு ஒப்பிடுவதுதான்... நான் தெரியாமல்தான் கேக்குறேன் வரியா செலுத்திய 30% ஆனா கலக்சன் என்ன வானத்தில இருந்தா வந்திச்சு? அதுவும் பில்லா 2 படத்தை பார்க்கவந்தவர்களால வந்த கலக்சன்தானே!..  அப்போ இன்னொரு படத்துடன் பில்லா 2 பட கலக்சன்களை ஒப்பிடும்போது உண்மையான கலக்சனையல்லவா ஒப்பிடணும்??? குறிப்பாக துப்பாக்கி வெளிவந்தாப்பிறகுதான் இவ்வாறான சுவாரிசயங்கள் இடம்பெறத்தொடங்கின. 
சரி முதல்ல சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை பார்ப்பம்... 
பில்லா 2 இன் முதல் முன்று நாள் மொத்த கலக்சன் 4 கோடிகள் (நெட் கலக்சன் 2.8 கோடிகள்.(source)
துப்பாக்கி முதல் 6 நாள் மொத்த கலக்சன் 4.83 கோடிகள் (source)

தமிழகத்தில் முதன் நாள் வசூல் 
பில்லா 2 மொத்த கலக்சன் 10.85 கோடிகள் (நெட் கலக்சன் 7.525 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 9.25 கோடிகள் (source)

தமிழகத்தில் முதன் 3 நாள் வசூல் 
பில்லா 2 மொத்த கலக்சன் 27.15 கோடிகள் (நெட் கலக்சன் 19 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 22.15 கோடிகள் (source)
இப்போ புரிந்திருக்கும் யார் கிங் ஆப் ஒபெநிங் எண்டு. 
துப்பாக்கி படத்துக்கு யூ சேட்டிபிகேட் எண்டதால எந்தவித வரி அறவிடலும் இல்ல...மொத்த கலக்சன்தான் நெட் கலக்சன். ஆனா உண்மை நிலை (தெரிந்தும்) தெரியாது ஒரு சில அஜித் எதிர்ப்பாளர்கள் சமுக வலைத்தளங்களில் துப்பாக்கியின் மொத்த கலக்சனை பில்லா 2 இன் நெட் கலக்சனுடன் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்..  இதிலிருந்து அவர்களின் இயலாத்தன்மை புலப்படுகிறது..
தமிழகம் தவிர்ந்த கேரளாவில் முதன் நாள் வசூலில் மாற்றான் 96.5 லட்சங்களும் துப்பாக்கி 87 லட்சங்களும் வசூலிச்சுள்ளமை குறிப்பிடத்தக்கது (source)..வெளிநாடுகளில் வசூல் நிலைமைகள் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம்.. என்னதான் பெரிய ஹிட் எண்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா சிங்கப்பூரில் 5 கோடிகள், யூ .கே, அமெரிக்காவில் மொத்தமா முன்று கோடிகளும், கேரளாவில் நான்கு கோடிக்களும்தான் வசூலிக்கும்.  இதனால் தமிழகம் தவிர்ந்த ஏனைய பிரதேச கலக்சன் நிலவரங்கள் மொத்த கலக்சனில் பெரிதாக பாதிப்பு செலுத்தாது. பொதுவா மொத்த கலக்சன்களில் வெறும் 10% - 15% ஆனைவையே தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து தமிழ் படம் ஒன்றுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                                          thala-the king of opening forever

comment