Saturday, May 12, 2012

மங்காத்தாவும் நொந்துபோன உதயநிதியும்....


காலை நித்திரையால எழும்பி வெப்சைட்டுக்களில் என்ன செய்திகள் வந்திருக்குதெண்டு சும்மா தட்டி பார்த்தா செம அதிர்ச்சி, அது வேற ஒண்டுமில்லை "ஒருகல் ஒருகண்ணாடி" பற்றி உதயநிதி தெரிவித்த ஒரு கருத்துத்தான்... "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தவர்கள் எண்ணிக்கை 'மங்காத்தா' படத்தினை தாண்டி, 'ஏழாம் அறிவு' படத்தினை நெருங்கி கொண்டிருக்கிறது.".. இதுதான் அவர் கூறின கருத்து.... அவற்றை கருத்திண்ட ஆழம் இதுதான்.. தமிழ்நாடு அண்மைய வசூல் ஒப்பீட்டு நிலவரப்படி முதலாவது ஏழாம் அறிவு அடுத்தது ஓகேஓகே அடுத்தது மங்காத்தா எண்டு...... இதை நினைத்து சிரிக்கிறதா இல்லை அழுகிறதா எண்டு கொஞ்சநேரம் ஒரே குழப்பமா இருந்திச்சு.......... சரி, அதுக்குமுதல் தயாரிப்பாளராக உதயநிதியை பற்றி கொஞ்சம் பார்ப்பம்......

 ஒருகல் ஒருகண்ணாடியானது உதயநிதியின் தயாரிப்பில் வெளிவந்த ஐந்தாவது திரைப்படமாகும், ஓகேஓகே ஐ தவிர இவர் தயாரித்த மிகுதி நான்கு படங்களுமே வெற்றிப்படங்கள் அல்ல, அதில் குருவி,மன்மதன் அம்பு ஆகிய ரெண்டு படங்களும் படுதோல்விப்படங்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமும்கூட.. மற்றைய ரெண்டு படங்களான ஆதவன்,ஏழாம் அறிவு ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் மிக்ஸ் ரிப்போட்தான், கிளீன் ஹிட் என்றில்லை... இரண்டுமே அவேரேஜ் படம்தான். அப்பிடி என்றால் வெற்றியா தோல்வியா என்று பார்த்தால் தோல்வியென்றுதான் சொல்லணும்.. இதேபோலத்தான் அஜித்தின் திருப்பதி,பரமசிவன் படங்கள், மற்றும் விஜயின் ஒருசில தோல்விப்படங்களுக்கும் இதே கதிதான்... அவேராஜ்ஜா ஓடின படமென்றாலும் வெற்றியா/தோல்வியா என்றுதான் இறுதியில் பார்ப்பார்கள்.. அப்போது அவை தோல்வியாகவே கணிக்கப்படும்.. என்னதான் ஒவ்வொரு படத்திலயும் அடிவாங்கினாலும் விடுற பில்டப்புக்கு அளவே இல்லை.. குருவி படத்துக்கு 150வது நாள் வெற்றிவிழாவை பிரமாண்டமாய் செய்து, படங்களின் ஓடிய நாட்களை வைத்து வெற்றியை அறிவிக்கும் மரபையே கேவலப்டுத்தினார்கள். அதற்கப்புறம் ஆதவன் வெளிவந்தசமயம் வசூல் நிலவரங்களை "சிவாஜிக்கு அடுத்ததாய்" என்ற ஒரு சொல்லை பயன்படுத்தியே பில்டப் விட்டார்கள்.. அடுத்ததாய் மன்மதன் அம்பு படத்திற்கு வசூல் ரீதியில் பில்டப் விட்டதா தெரியவில்லை.. அதற்கப்புறம் கடைசியா வந்த ஏழாம் அறிவிற்கு விட்ட பில்டப்பை ஊரே அறியும்...... 100 கோடியே தாண்டாத படத்தை எந்திரன், சிவாஜிக்கு அடுத்ததாய் மிகப்பெரிய வசூலிச்ச படமாய் விளம்பரப்படுத்தினார்கள்.. இவ்வாறு உதயநிதி விடும் பில்டப்புக்கு அளவே இல்லை எண்டு சொல்லலாம்..... இவற்றை தயாரிப்பில அல்லது வெளியீட்டில் ஏதாவது படங்கள் ரிலீசானா டுவீட்டர் பக்கம் தலைகாட்டவே முடியாது... அந்தளவுக்கு ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொருநாளும் எல்லா சோவும் ஓடி முடிஞ்சாப்பிறகு வந்த கலக்சனை எல்லாம் கூட்டி பார்த்தாள்போல வசூல் கணக்குகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார்... பாவம் உதயநிதி.. ஊருக்கே தெரிஞ்சிட்டு இவற்றை பித்தலாட்டம்.. ஆனா, இன்னமும் இவர் தான் சொல்லுறதை எல்லாம் நம்பிட்டு இருக்காங்க எண்டு நம்பிட்டிருக்கார்...



சரி, நாம விடயத்துக்கு வருவோம்.....
எந்திரன் வெளிவந்து அடுத்த இரண்டாண்டுகளில் வெளிவந்த படங்களில் எந்தவொரு மிக்ஸ் ரிப்போட்டும் இல்லாமல், வெளியான அனைத்து இடங்களிலுமே சக்கைப்போடு போட்ட திரைப்படம் என்றால் மங்காத்தாதான்... மொத்த வசூலிலும் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்தபடியாய் இன்றுவரை அதிக வசூலிச்ச படம் என்றாலும் மங்காத்தாதான்.... நினைத்துக்கூட பார்க்கமுடியாதளவிலான வெற்றி அது, வெறும் நாற்பது கோடிகளில் தயாரிச்ச படம் மொத்தமாக 130 கோடிகள் வசூல் செய்தது.. அதற்கடுத்ததாய் மொத்தவசூல் அதிகம் என்றால் ஏழாம் அறிவை குறிப்பிடலாம்(net profit அல்ல).. ஆனால் உதயநிதியின் கருத்தை ரெண்டுவிதமாய் பார்த்தால், ஒன்று மங்காத்தாவை விட ஏழாம் அறிவின் தமிழ்நாட்டு வசூல் கூட என்பது.. மற்றது ஓகேஓகே ட தமிழ்நாடு வசூல் மங்காத்தாவை விட அதிகம் என்பது...

இதற்கு நான் சொல்லும் பதில் இதுதான்.....ஏழாம் அறிவுட பட்ஜெட் கிட்டத்தட்ட எண்பது கோடி என்று சொன்னார்கள், அதே சந்தேகப்படவேண்டிய ஒரு விடயம்தான்...அந்தப்படத்தை பார்த்தா தெரியும் எண்பது கோடி செலவழிக்கிற அளவுக்குக்கு பிரமாண்டம் எண்டு எதுவுமில்லை..குறிப்பாக முதல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒவ்வொரு நிமிட சீனுக்கும் ஒவ்வொரு கோடி செலவளித்தோம் என்று சொன்னாங்களே!! சப்பா தாங்கமுடியேலப்பா! சரி அதைவிடுவம், எண்பது கோடி எண்டே எடுத்தாலும்,எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவு படத்துக்கு விநியோகிஸ்தரும் உதயநிதிதான்.. ஆதலால் உதயிடமிருந்து நேரடியாக தியேட்டருக்கே சென்றிருக்கும். எப்பிடியும் 90 கோடியளவில் வியாபாரம் நடந்தாலும் மங்காத்தாட வசூலை முறியடித்தது என்றால் 130 கோடிகள் தாண்டியிருக்கணும், கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபா நிகரலாபம்.... எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவுக்கு நாற்பது கோடி நிகர லாபம் என்றால் ஏழாம் அறிவு சூப்பர்ஹிட் அல்லது பிளக்பஸ்டர் என்றல்லவா அறிவிக்கப்பட்டிருக்கணும்? ஏன் எல்லா வெப்சைட்டும் அவேரேஜ் எண்டு குடுத்திருக்காங்க?? என்ன சிரிப்பென்றால் ஹிட் என்றுகூட வெப்சைட்டுகள் அறிவிக்கவில்லை.. பட்ஜெட்டுக்கேற்ப நிகரலாபத்தை அடிப்படையா வைச்சு வருடமுடிவில் வெளியான அறிக்கையில் வேலாயுதத்துக்கு பிறகே ஏழாம் அறிவு இடம்பிடித்தது...... அவரேஜ் ரக படம் என்றதால் மட்டுமட்டாக 100 கோடிகளை எடுத்திருக்கவே சந்தர்ப்பம் அதிகம். பொதுவாக மொத்த வசூலில் 70% ஆனவை தமிழ்நாட்டிலே வசூல் ஆகும்.. அதற்கடுத்ததாய் rest of tamilnadu, malaysiya, uk, us and canada இல் முறையே அதிக கலக்சனை வசூலிக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.. இதில் தெலுங்கு, யூகே போன்றவற்றில் ஏழாம் அறிவு மங்காத்தாவை விட சற்று அதிகமாய் அதிகம் வசூலிச்சது, மற்றைய தமிழ் நாடு தவிர்ந்த இடங்களிலும் மங்காத்தாவிற்கு சற்று அதிகமான வசூல்..... அப்பிடி இருக்கும்போது தமிழ்நாட்டில் எப்பிடி மங்காத்தாவை விட ஏழாம் அறிவு கூட வசூலிச்சிருக்கும்?... சந்தர்ப்பமே இல்ல........


அடுத்த விடயம் ஓகேஓகே.........மூன்றாம் வார முடிவில் behindwoods இன் தரவுப்படி சென்னை வசூல் மங்காத்தாவை விட அதிகம்தான். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலும் மங்காத்தாவிட அதிகம் என்பது சின்னப்பிள்ளைத்தனமா இல்ல? 70% ஆன கலக்சன் தமிழ்நாட்டில இருந்து வரேக்க, உதயநிதியின் கருத்துப்படி மொத்த வசூலை மதிப்பிட்டால் கிட்டத்தட்ட 90 கோடிகளை தாண்டியல்லவா இருக்கணும்???............. அப்பிடியாயின் ஏன் behindwoods verdict- superhit என்று குடுத்திருக்காங்க? Blockbuster குடுத்திருக்கலமே!................. அண்ணை உதயநிதி! உங்கட பிராட்டு வேலையெல்லாம் ஊருக்கு தெரிஞ்சுபோச்சு.... இனியாவது ரூட்டை மாத்துங்க...............................
(behindwoods இணையத்தளம் ஒருபோதுமே அஜித்துக்கு ஆதரவா இருந்ததில்ல, எப்பவுமே அஜித்தை நான்காம்,ஐந்தாம் இட நடிகராகவே தரப்படுத்துவார்கள்.. அதனால்தான் எதிரிரியின் தகவல்களை source ஆக எடுத்துள்ளேன்......)

                                            வருகைக்கு நன்றி..

Friday, May 11, 2012

கலகலப்பு- கலக்கலான விமர்சனம்..


ஒரு கல் ஒரு கண்ணாடி வந்து ஒரு மாதங்களே ஆகவில்லை, அதற்குள் மீண்டுமொரு முழுக்க முழுக்க காமெடியிலான படம்... சுந்தர்சியின் இருபத்தைந்தாவது படமும்கூட.. எல்லோருக்கும் வாற அந்த கதாநாயகன் ஆசைதான் சுந்தர்சியின் இயக்குனர் எண்ட சினிமா பயணத்திற்கு இடையே சின்ன தடங்கல் ஏற்பட்டாலும், மனுஷன் நல்லா பட்டு தெளிந்துவிட்டார்போலும்.. மீண்டும் இயக்குனராகவே விஸ்வருபம் எடுத்திட்டார். சுந்தர்சி ஹீரோவாக நடிக்கும்போது அந்த படங்கள் தோல்வியடையவேணும் என்று நான் நினைத்ததுண்டு, ஏனென்டா அப்பதானே மீண்டும் முழுநேர இயக்குனராக மாறுவார் எண்ட அந்த ஆசைதான்.... மணிரத்தினம்,சங்கர்,பாலா,அமீர் போன்ற முதல்தர இயக்குனர் இல்லாவிடினும் ரசிகர்களை ஏமாற்றாத இயக்குனர்களில் இவர் முதன்மையானவர்... உள்ளத்தை அள்ளித்தா, வின்னர்,கிரி,லண்டன்,ரெண்டு என்று சந்ததி சந்ததியா பேசும் அளவுக்கு நகைச்சுவைகளை இவரின் படங்களில் அவதானிக்கலாம்.. அதே வரிசையில்தான் இந்த "கலகலப்பு" திரைப்படமும்.....................


சரி இனி விமர்சனத்துக்கு போவோம்.....


நடிகர்கள்- விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா
இயக்கம்- சுந்தர்சி
இசை- விஜய் எபநிசியர்
ஒளிப்பதிவு- சுந்தர்
தயாரிப்பு- குஸ்பு சுந்தர்சி
வெளியீடு- திருப்பதி பிரதர்ஸ்(UTV)

முதற்பாகம்..................
விமலுக்கு சொந்தமான மசாலா கபேயானது சந்ததி சந்ததியாக சிறப்பாக பேணிபாதுகாக்கப்பட்டுவந்ததொன்றாகும்.. ஆனால், விமலால் அந்த பெருமையை கட்டிக்காக்கமுடியேல.. எப்பிடியாவது கபேயை முன்னுக்கு கொண்டரனுமெண்டு ஊர் ஊரா கடன் வாங்கியும் முடியல... இதற்கிடையில திருட்டு குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிவாவும் சிறையிலிருந்து வெளிவருகிறார். விமல் இருக்கும் ஊரிலுள்ள போலிஸ்டேசனில் ஒவ்வொருநாளும் கையெழுத்துபோடணும் எண்டதால விமலோடையே சேர்ந்து இருக்கிறார்... அப்பிடியே ரெண்டு அழகுப்பதுமைகளும் விமலுக்கு அஞ்சலியும், சிவாக்கு ஓவியாவுமாக ஆளுக்கொன்றாக செட் ஆகுறார்கள்.. இதற்கிடையில் அஞ்சலிக்கு ஊரில மாப்பிளை பார்க்க, அவசரம் அவசரமாக அஞ்சலிட ஊருக்கு கிளம்புறார் விமல்.... இதோட முதற்பகுதி ஓவர்......................


இரண்டாம் பாகம்...
இந்தப்பட கதையை ரெண்டு பகுதியா பிரிச்சு எழுத காரணமே சந்தானம்தான்... காரணம், அவர் முதற்பாதியில் இல்லை... அவர் இல்லாத அந்த முதற்பாதி என்னைப்பொறுத்தவரையில் பெரிதாக இல்லை எண்டே சொல்லத்தோன்றுகிறது.. சிவாவின் மொக்கை ஜோக்குகளை முதற்பாதியில சகிக்கவே முடியல.. ஏதோ ஜோக் அடிக்கிறேன் எண்டு கோவம் வாறமாதிரி காமெடி பண்ணினார்.... ரெண்டாம் பாகத்தில சந்தானத்திண்ட அறிமுகத்தோட படமும் விறுவிறுப்பாக நகரத்தொடங்கியது.. குறிப்பாக சந்தானத்திண்ட அறிமுகமே செமையா இருந்திச்சு, ரஜினி,அஜித்,விஜய்க்கே இல்லாத ஒரு மாஸ் இன்ட்ரோடக்சன்.. ஆனா அவர் மாசா இல்ல தூசா எண்டு படத்தை பார்த்து அறிந்துகொள்ளுங்க..........


சந்தானம்- ஒருவிதத்தில் நோக்கும்போது சூப்பர்ஸ்டாருக்கும் சந்தானத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. ரஜினிட படங்களை பார்த்தால் தெரியும், கிட்டத்தட்ட மல்டிஸ்டார்ஸ்ட படம்போலவே இருக்கும், படத்தில வாற ஒவ்வொருத்தருமே அடிக்கடி திரையில் பார்த்த முகங்களாய் இருக்கும்.. ஆனால், எத்தனை பேர் வந்தாலும் படம்பார்த்துமுடிய ரஜினி மட்டுமே மனதுக்குள் நிற்பார்.. அதுபோலவே சந்தனமும்.. மற்ற எல்லா நடிகர்களையும் பின்தள்ளிவிட்டு அவற்றை காட்சிகளே படம் பார்த்துமுடிந்தபின் மனதில் நிற்கும்... ஓகேஓகே கு பிறகு மீண்டும் கலக்கியிருக்கிறார்..... இந்தப்படத்திலும் இடைவேளையின்பின் சந்தானத்தின் வருகைக்குப்பிறகுதான் படம் செம கலாட்டாவா போகுது.....

சுந்தர்சி- இடைவேளைக்கு பிறகு காமெடியுடன் விறுவிறுப்பாகவும் எடுத்திருக்கிறார். பரவாயில்ல ரகமே குடுக்கலாம்... இன்னமும் அவருடைய பழையபாணியிலே நிக்கிறார்... சந்தானம் எண்ட ஒராள் படத்தில் இருப்பதால் சுந்தர்சிட தலை தப்பிக்கும்போல இருக்கு...

விமல்- விமலுக்கு முழுநீள காமெடிப்படம் சரிப்பட்டுவராதுபோலவே தோன்றுகிறது... சீரியசான கதாபாத்திரத்துடன் அப்பப்ப சில காமெடி சீன்களே இவருக்கு மிகப்பொருந்தும்.. என்றாலும் பரவாயில்ல.. சொதப்பல் என்று சொல்வதற்கில்லை. இயன்றளவு முயற்சித்திருக்கின்றார்...


சிவா- கடுப்பேத்திட்டார் மைலோட்..... இவரு மேடையில நிகழ்ச்சி தொகுத்துவழங்கும்போது எப்பிடி இருப்பாரோ! அதேபோலவே படத்திலும் ஒவ்வொரு dialog delivery and face reactions. எனக்கு சிவாவின் நடிப்பில் திருப்தியில்லை.... நான் படம் பார்த்த திரையரங்கில் கொஞ்சப்பேர்தான் இருந்தபடியால் மற்றவர்களின் response எப்பிடி என்று சொல்லமுடியாதுள்ளது....

அஞ்சலி,ஓவியா- அசத்திட்டாங்க... (எல்லாத்திலையும்)

இசையமைப்பாளர், பாடல்கள்- முதன்முதலா தியேட்டர்ல படம் பார்க்கும்போதுதான் பாடல்கள் கேட்டேன்.. நல்லாய் இருந்ததுபோன்றதொரு உணர்வு.... பின்னணி இசையும் நன்றாகேவே இருக்கின்றது..

ஒளிப்பதிவு- குறை சொல்வதற்கில்ல... சிறப்பாகவே உள்ளது.


படத்தில் மேலும்சில குறைநிறைகள்...

எடிட்டிங் படு சொதப்பல்.. காட்சிகள் திடீர் திடீரென துண்டாடப்படுகின்றது. interest ஆக ஒரு சீன் போய்க்கொண்டிருக்கையில் திடீரென துண்டாடப்பட்டு மற்ற சீன் வருகிறது. எடிட்டரின் பிழை என்றாலும் சுந்தர்சி இதை திருத்தியிருக்கணும்... கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பார்முலாவில் இதுவொரு பெரிய பிழையாக தெரியாது..காரணம் ரசிகர்கள் அப்போது கதைக்கும்,நடிப்புக்குமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. பிலிம் மேக்கிங்,ஸ்கிரீன்பிளே தொடர்பில் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள்... ஆனால், இப்போ காலம் மாறிட்டு, சுந்தர்சிதான் இன்னும் மாறேல.. இது சுந்தர்சியின் update ஆகாத direction formula ஐயே காட்டுகின்றது.....

சந்தானம்,விமல், மனோபாலா இந்த மூன்றுபேரும் தங்களுக்கிடையில் வாகனத்தில் துரத்துப்படும் காட்சி எல்லோரையும் ரசிக்கவைக்கிறது.....
படத்தில் வரும் காமெடி பஞ்வசனங்களும் சூப்பரா இருக்கு....

படத்தில பஞ்ச சுப்பு குழுவினரின் ஆரம்பகாட்சிகள், குறிப்பாக வைரக்கடை வைத்திருந்து பின் வைரத்தை எடுத்திட்டு தாங்களே கடைக்கு நெருப்புவைத்திட்டு, அவங்க போடுற சீன்கள் ரெம்ப போரா இருந்திச்சு......


காமெடி படம் என்றபடியால் லாஜிக் பிழைகள் பெரிதாக அவதானிக்கப்படாது... இது இந்தப்படத்துக்கு ஒரு பிளசாக இருக்கும்... மேலும்,
பொதுவாக காமெடி படங்கள் பெரிதாக சூப்பர்ஹிட்டோ, பிளாக்பஸ்டர் ஹிட்டோ அடித்ததாய் இல்லை.. அந்தளவுக்கு தமிழக ரசிகர்கள் விரும்பி பார்க்கமாட்டார்கள்.. ஆனால், எதிர்பாராதவிதமாக ஓகேஓகே வெளிவந்து தற்சமயம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கு.. இன்னிலையில் ஓகேஓகே வெளிவந்து ஒருமாதமே ஆகாதநிலையில் இன்னொரு முழுநீள காமெடிப்படமான கலகலப்பு படத்தின் வெளியீடு வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது......

ஓகேஓகே அளவுக்கு இல்லையென்றாலும் ஓகே அளவுக்கு இருக்கின்றது..
மொத்தத்தில் எனது கருத்துப்படி படம் என்ஜாய் பண்ணி பார்க்கலாம்........


Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9 விமர்சனம்...


சே இப்பிடியொரு நல்ல படத்தை வெறும் ஒன்றே முக்கால் மணிநேரத்தில ஏன்தான் முடித்தாங்களோ தெரியேல... மூன்று மணிநேரம் என்றாலும் சலிக்காம பார்த்துக்கொண்டிருக்காலாம்... படம் கமெர்ஷியல் படமோ, ஆக்சன் படமோ அல்லது commedy sequence அதிகம் உள்ள படமோ இல்லை... கிட்டத்தட்ட அங்காடித்தெருபோல நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கதையை பக்காவா எடுத்திருக்கிறார்கள்... சாமுராய், காதல், கல்லூரிக்கு பிறகு பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் வழக்கு எண் 18/9.. முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றே சொல்லலாம், முக்கியமான பாத்திரங்கள் எல்லாவற்றையுமே புதுமுகங்களை வைத்து பின்னியிருக்கிறார்...


சரி இனி கதைக்கு வருவோம்....

நடிகர்கள்- மிதுன் முரளி, சிறீ, ஊர்மிளா மகன்தா, மகேஷ் யாதவ்.
இயக்கம்- பாலாஜி சக்திவேல்.
இசை- ஆர்.பிரசன்னா.
ஒளிப்பதிவு- விஜய் மில்டன்.
தயாரிப்பு- சுபாஸ் சந்திரபோஸ், ரூனி ஸ்கிரீவ்லா.

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன்(இந்த படத்தின் ஹீரோ) வீட்டு கஷ்டத்தை உணர்ந்து கடனை அடைப்பதற்காக படிப்பை கைவிட்டு வெளியூர் செல்கிறான்.. அங்கே ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வரும்போது அவனின் பெற்றோர் ஊரில் இறந்த செய்தியை ஊரில் இருந்து தொலைபேசியில் ஹோட்டல் முதலாளிக்கு தெரியப்படுத்தியும் முதலாளி அவனுக்கு சொல்லாமல் வேலைவாங்கிட்டு இருக்கையில் அங்கு வந்த நண்பன் மூலம் நிலைமையை கேட்டறிந்து அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் வேளையில் சேர்ந்து பிளாட்பாரத்திலே வாழ்க்கையோ செலுத்திக்கொண்டிருக்கிறான்....


அப்போது அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்குகின்றான்... இதற்கிடையில் அந்த பெண்ணும் இன்னொரு வீட்டை வேலை செய்யும் ஒரு வேலைக்காரி என்பது குறிப்பிடத்தக்கது.. இதற்கு சமாந்தரமாக ஹீரோவின் காதலி பணிபுரியும் வீட்டு பெண்ணுக்கும், இன்னொரு பையனுக்குமிடையிலான காதல்வேற போய்க்கொண்டிருக்கும்.. அதை காதல் எண்டு சொல்லேல்லாது, காதலிக்கிற மாதிரி அவன் நடிச்சு ஏமாத்த முயற்சிக்கிறான்... இவ்வாறே சமாந்தராமாக இரு கதைகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும்.... அதற்கப்புறம் ஹீரோவின் ஒருதலைக்காதல் ஜெயிக்குதா? மற்ற ஜோடிகளுக்கு என்ன ஆச்சு என்பதே படத்தின் தொடர்ச்சி.. அதை படத்தை பார்த்தே அனுபவியுங்கள்.....


இயக்குனர்- சாமுராய்,கல்லூரி என்ற தோல்விப்படத்தையும் காதல் என்ற வெற்றிப்படத்தையும் வழங்கிய பாலாஜி சக்திவேலுக்கு நிச்சயம் இது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.. முழுக்க முழுக்க இயக்குனரின் ஆதிக்கம்தான் இந்தப்படத்தில்.... ஸ்கிரீன்பிளே, பிலிம் மேக்கிங் இரண்டுமே சூப்பர்... தரமான பாத்திரத்தெரிவு, குறிப்பாக தன்னை மட்டும் நம்பி புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் தரமானதொரு படைப்பை வழங்கியிருக்கின்றார்... அவருக்கு ஒரு சல்யூட்.....

ஒளிப்பதிவாளர்- இயக்குனருக்கு அடுத்ததாய் இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான்... அவருடைய ஒவ்வொரு காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றது. குறிப்பாக படம் தொடங்கையில் ஒரு பெண் கண்சிகிச்சைக்காக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது கண்ணுக்குள் இருந்து கமெரா பிடிக்கப்பட்டதுபோல் ஒரு காட்சி எடுத்திருந்தார்... மற்றும் சமையல் செய்யும்போது அடுப்பினுள் இருந்து கேமரா ஷாட் எடுத்ததுபோன்ற சீன்.... இதைவிட background colour எல்லாமே சூப்பராக இருந்தது..


ஹீரோ- சங்கர்,கே.வி ஆனந்த, முருகதாஸ் போன்றோரின் படமெண்டால் இவரை பாட்டு சீனுக்கு ஹீரோக்கு பின்னால நின்று ஆடவிடுவாங்க என்று சொல்வதே சந்தேகம்தான்... சராசரியான படம் ஒன்றின் ஹீரோவுக்குரிய தோற்றப்பாடு இல்லாவிடினும், இந்த படக்கதைக்கு மிக நன்றாகவே பொருந்துகின்றார், ஒவ்வொரு அசைவும் படத்துடன் நன்றாகவே ஒட்டிக்கொள்கிறது.... சொல்லப்போனால் ஆடுகளம் படத்தில் தனுஷ்ட body language எவ்வாறு படத்துடன் ஒன்றித்துப்போனதோ அதேபோல கிட்டத்தட்ட இந்தபட ஹீரோவும் சிறப்ப்பனதொரு perfomanceஐ வழங்கினார்.. மற்றைய நடிகர்களும் தத்தமது பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்...

இசையமைப்பாளர்- இசையமைப்பாளரும் படத்திற்கேற்ப சிறப்பாகவே பணிபுரிந்திருக்கிறார்.. சிலசில சீன்களில் வேறு படப்பாடல் வரிகளை background music ஆக போட்டு அசத்தியிருக்கிறார்(அதை சிறப்பாக கருதமுடியாது)... rinhing tone கு அவர் குடுத்த பாடல்வரி, மற்றும் கவுண்டமணியின் ஜோக் வரிகள் தியேட்டரில் நிறைய கைதட்டல்களை வாங்கியிருக்கின்றது....படத்தில் இரண்டு பாடல்கள், இரண்டுமே பின்னணியில் செல்லும்... அதில் ஒரு பாடல் சிறப்பானதாக அமைந்திருக்கின்றது...


படத்தில் ஒருசில குறைநிறைகள்.......

படத்தின் இரண்டாவது ஹீரோ எப்பிடிப்பட்டவர் என்று அவரின் சீன் வந்து கொஞ்ச நேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிகிறது, அப்பிடி இருக்கும்போது தொடந்தும் அவர் நல்ல பிள்ளைபோல காதலியிடம் கொஞ்சிகுலாவுவதை நீண்ட நேரம் காட்டுவது சலிப்பை ஏற்படுத்துகிறது... அவர் எப்பிடிப்பட்டவர் என்றதை கடைசியிலே காண்பித்திருக்கலாம்...

அண்மையில் வெளிவந்த தனுசின் 3 படத்தின் இரண்டாம்பாகம் நிறையப்பேருக்கு பிடிக்காமல் போனதுபோன்றதொரு பிழையை இப்பட இயக்குனர் விடவில்லை.படம் என்னதான் சீரியஸா போய்க்கொண்டிருந்தாலும், இடையிடையே சிலசில வசனங்கள், நடிகர்களின் அசைவுகள் பார்வையாளர்களை சிரிக்கவைக்கிறது, மேலும் படம் ஓரளவு வேகத்துடன் திரில்லிங்காயும் நகர்கிறது.. இதுவும் ஒரு பிளஸ் என்றே சொல்லணும்.....


படம் வெறும் 1.45 மணிநேரத்தில் முடிவடைகிறது... ஏன் இவர்களுக்கு இந்த விபரீத முடிவோ தெரியவில்லை...குறைந்தது 2.15 மணிநேரமாவது இருந்திருக்கணும்...

எப்பவும் படத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது இலகுவான விடயம்..இந்தப்படத்துக்கு நிறைகளை சொல்லப்போனால் இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் தேவைப்படும்...... மொத்தத்தில் படம் சூப்பர்.. தமிழ் சினிமா மீண்டும் ஒரு நல்ல படைப்பை ரசிகர்களுக்கு தந்திருக்கின்றது......

Saturday, May 5, 2012

சூர்யா! இது உங்களுக்கே நியாயமா? பாகம் 1


இந்த பதிவு சூர்யாவை கலாய்ப்பதற்காக எழுதப்படவில்லை.... தற்போதைய தலைமுறையில் அஜித்துக்கு பிறகு எனக்கு பிடித்த சூர்யாவின் சினிமா வரலாற்றின் சில மறுபக்கங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.... சூர்யாவின் சினி அத்தியாயமே மற்ற நடிகர்கள் குறிப்பாக அஜித் வேண்டாம் எண்டு கைவிட்ட படங்களால்தான் நிரப்பப்பட்டதென்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்... அதை குறை சொல்லவும் முடியாது வேண்டாம் என்று கைவிட்ட படங்களை எடுத்து நடிக்கிறது தப்பில்லை.. ஆனால், ஒரு நடிகனுக்கு புக் ஆகி அவரும் நடிக்க சம்மதிக்கும்போது இடையில புகுந்து ஆட்டையைப்போடுறதென்பது மகாகொடுமையான விடயம்....... இந்த விடயத்தில சூர்யா இருக்கிறாரே ரெம்ப கில்லாடி..... அதுக்குமுதல் சின்னதா ஒரு அறிமுகத்தை சூர்யாவுக்கு வழங்கிட்டு விடயத்துக்கு போவோம்.....


1997 இல் நேருக்குநேர் என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர்தான் இந்த சூர்யா... அதுசரி, எப்பிடி அவருக்கு இந்த வாய்ப்பு என்றால், இந்த படத்தில் ஆரம்பத்தில் வசந் இயக்கத்தில் அஜித்-விஜய் ஆகிய இருவரும்தான் இணைந்து நடிக்கவிருந்தார்கள்.. அதனால் கதையமைப்பு கிட்டத்தட்ட சரிசமனாகவே உருவாக்கப்பட்டது.அஜித்துக்கு சிம்ரனும்,விஜய்க்கு கௌசல்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.. இதில் இருநடிகைக்களுமே அந்த காலத்தில் தமிழுக்கு பெரிதாக பிரபல்யம் இல்லாவிடினும் சிம்ரன் ஓரளவுக்கு கௌசல்யாவைவிட பிரபல்யமானவர் என்றே சொல்லணும்... சரி, இவ்வாறே திட்டமிட்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ஒருவாரத்துக்கு பிறகு அஜித் அதிலிருந்து விலக, அந்த இடத்தை நிரப்பியவரே சரவணன் என்ற இப்போதைய சூர்யா....


அப்பொழுது பூவே உனக்காக, லவ்டுடே என்ற இரு ஹிட்களை குடுத்த விஜய் தனக்கு ஈகுவலா சூர்யா நடிப்பதை மறுத்திருக்கலாம்.. ஆனால், நண்பராச்சே! எண்டதுக்காக மறுக்கவில்லை.... அது மட்டுமில்ல, இந்த பட பாடல்கள் வெளியாகியபோது சூர்யாவுக்கு உருவான "அவள் வருவாளா", "மனம் விரும்புதே" என்ற இரண்டு பாடல்களும் பயங்கர ஹிட் ஆகின..ஏன் இப்பவும் இந்த இரண்டு பாடல்களும் நிறையப்பேரின் உதடுகளில் தவழ்ந்துகொண்டே இருக்கும்... மறுபக்கம் விஜய்க்குரிய பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை... இதனால் இன்றும் சிலர் நேருக்குநேர் சூர்யாவின் படம்போலவே கருதுவார்கள்.. அதற்கப்புறம் 2001 இல் மீண்டும் விஜய்-சூர்யா கூட்டணி "பிரண்ட்ஸ்" படத்தில் ஒன்று சேர்ந்தது... அப்பொழுதுகூட சினிமாவில் சூர்யா பெரிதாக ஒன்றுமே சாதிக்கவில்லை.. இருந்தாலும் கிட்டத்தட்ட அரைக்கரைவாசி முக்கியத்துவம் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது... உண்மையை சொல்லப்போனால் சூர்யாவை சினிவாழ்வுக்கு அத்திவாரமிட்டதே விஜய்தான்.....



ஆனால் இப்ப சூர்யாவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை விஜயை பரம எதிரியாயே பார்க்கிறார், விஜயின் ஒவ்வொரு நகர்வுக்கும் செக் வைக்கிறார்... இன்று பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அஜித்தை காட்டினும் சூர்யாவின்மேல் எரிச்சலாய் இருப்பது சமூகவலைத்தளங்களில் பார்க்கக்கூடியதாயுள்ளது... இது சிங்கம் படத்திலிருந்தே ஆரம்பமானாலும் விஜய் ஒப்பந்தமான நண்பன் படத்தை ஆட்டையைப்போட வெளிக்கிட்டதிலிருந்து பூதாகாரமாக வெடிக்க தொடங்கிட்டு... அந்த சமயம் சங்கருக்கு விஜயை வைத்து எடுக்கத்தான் விருப்பம் இருந்தது, ஆனால் தயாரிப்பு தரப்புக்கு சூர்யாவை வைத்து எடுக்கவே விருப்பம் இருந்தது.. ஆனால், சூர்யா கேட்ட மலையளவு சம்பளத்தால் நிலைகுலைந்த படத்தரப்பு சூர்யாவை நிரந்தரமாகவே தூக்கி எறிந்தது.. நண்பன் படத்தில் விஜயை தூக்க முற்பட்டத்தில் அரசியல் காரணங்களும் இருந்தாதகவும் அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. எது எப்பிடியோ அந்த பிரச்சனை ஓவர்......


அதுக்கப்புறம் விஜய் டீவியால் நடத்தப்படும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சிக்கும் முதலில் ஒப்பந்தமானவர் விஜய்தான்.. பிறகு உள்ளுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிகழ்ச்சி தொகுப்பு உரிமை சூர்யாவுக்கு கைமாறிட்டு.... உண்மையில் உள்ளுக்குள் என்னதான் நடந்துதோ!!...


அப்புறமாய் தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்சு வெற்றிகரமாய் ஓடிய "Business man" திரைப்பட உரிமையை முண்டியடிச்சுக்கொண்டு சூர்யா தரப்பு வாங்கிட்டு, சரி அப்பிடி வாங்கினாலும் அதை சூர்யாவோ,கார்த்தியோ நடிக்கப்போவதாக தெரியவில்லை.. சூர்யா பொதுவாக தெலுங்கு காரமசாலா பார்முலாவை விரும்பமாட்டார்.. சரி கார்த்தியை பார்த்தால் தற்போது "அலெக்ஸ் பாண்டியன்" இல் நடிக்கிறார்.. இதுமுடிய ராஜேசுடன் "ஆல் இன் அழகுராஜா" வில் நடிக்கவுள்ளார்.. அப்புறமாய் வெங்கட்பிராவுடன் இணையவுள்ளார்.... அப்பிடி என்றால் ஏன் Business man இன் உரிமையை முண்டியடிச்சுக்கொண்டு வாங்கினார்கள்? விஜய் வாங்கக்கூடாது என்ற காரணத்துக்காகவா?.. ஏனென்றால் பொதுவா மகேஷ்பாபுவின் ஹிட் படங்களை விஜய்தான் தமிழ் ரீமேக் பண்ணி நடிப்பார்... அதனால்தான் அப்பிடியொரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியதாயுள்ளது.......
(பாகம் 2 அடுத்துவரும் நாட்களில்...........)


(அருமையான குடும்பம்..... அடுத்தவனுக்கு ஆப்படிக்காமல் இருந்தால் எல்லோராலும் விரும்பப்படுவீங்க..........)
                                                         
                              வருகை தந்தமைக்கு நன்றி..

Sunday, April 29, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 2 (பிறந்தநாள் ஸ்பெசல்)

                              Happy advance birthday to my dear Thala Ajith

பாகம் 1 ஐ படிக்க
இன்று உச்சத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்தால் சொந்த உழைப்புக்கு அப்பால் ஆரம்பத்தில் யாராவது ஒருவரின் ஆதரவு இருந்ததெண்டே சொல்லலாம்.. ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் எவருமே இல்லை. அவர் எப்பிடி வந்தார்? யாரால வந்தார் என்பது இன்னமும் புரியாத புதிராய்த்தான் இருக்கு. ஏனெனில் அவர் ஒரு சுயம்பு, தன்னந்தனியே போராடி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தைரியத்துடன் உழைத்து வெற்றிக்கொடியை ஏற்றியுள்ளார். இன்றும்கூட அவரின் வெற்றிக்கு,வளர்ச்சிக்கு யாருமே சொந்தமோ,உரிமையோ கொண்டாட முடியாது.. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்,வெற்றியிலும் அவர் மட்டுமே உரித்துரையவராவார்.. அஜித்தின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் அஜித்தாலே செதுக்கப்பட்டது.. வாழ்க்கை கொடுத்த வலி இன்று அவரை பூரண மனிதனாகிவிட்டது.. தான் வாழ்வில் பட்ட துன்பங்களை தன்னுடைய ரசிகர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதில் அவருக்கு அதீத வெறி உண்டு.. 


இவர்தான் ராம்ஜி

அண்மையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "யாரையும் கண்மூடித்தனமாய் நம்பவேண்டாம்" என்று சொன்னார்.. இதுகூட அவரின் வாழ்வில் சந்தித்த ஒரு ஏமாற்றம்தான்... கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் "ராம்ஜி" என்று ஒரு நடன பயிற்சிவிப்பாளர் கொடிகட்டி பறந்தார், நடன இயக்குனர் என்பதற்கு அப்பால் ஹீரோக்களுக்கு டூப்பாக, ஹீரோக்களுடன் சிறுசிறு வேடங்களிலும் வந்து போனவர்.. இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர், இவரின் வளர்ச்சியில் அஜித்தின் பங்கு நிறையவே உண்டு.. ஒருதடவை பணஉதவி கேட்டு அஜித்திடம் சென்றபோது எவ்வளவு தேவை என்று கேட்க சற்று தயங்கவே... நண்பராச்சே வெற்று காசோலையில் கையொப்பம் இட்டு குடுத்தார் தேவையானதை எடுக்கச்சொல்லி.. ஆனா, இதை சாதகமாக பயன்படுத்திய ராம்ஜி மிகப்பெருமளவு பணத்தை அபகரித்துவிட்டு வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார்... இது அஜித்தின் வாழ்விலே மறக்கமுடியாத நம்பிக்கை துரோகமாச்சு......... (ராம்ஜி காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு என்ற பாட்டு சீனில் ஆடியவர்) 

அஜித்தும் சூப்பர்ஸ்டாரும்...


அஜித்தும் சூப்பர்ஸ்டாரும் என்பதை பார்க்கமுன் ஒருவிடயத்தை உணர்ந்துக்கொள்ளணும்... தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வளர்ந்து வரும்போது முன்னைய தலைமுறை நடிகர்களே பிரிந்து புது தலைமுறை நடிகர்களுக்கு ஆதரவளிப்பார்கள்... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தலைமுறை நடிகர்களில் ஒருவர் மாஸ் ஹீரோவாக இருப்பார், அவரின் ரசிகர்களை யார் அடுத்த தலைமுறை நடிகர்கள் கவர்கிறார்கள் என்பதுதான் போட்டி.... எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பெருமளவானோர் அடுத்த தலைமுறையில் ரஜினிக்கு ஆதரவளித்தார்கள்... அதேபோல ரஜினியின் ரசிகர்களை அடுத்த தலைமுறை நடிகர்களில் யார் கவருவது??? இதுதான் இப்போதுள்ள தலைமுறை நடிகர்களான அஜித்,விஜய்க்கு இடையிலான போட்டி... இந்த விடயத்தில் ஆரம்பத்தில் அஜித் இது பற்றி கண்டும் காணாமலே இருந்தார்.. ஆனால் விஜய் மேடைக்கு மேடை ரஜினியை தலைவர் தலைவர் என்று துதிபாடி பக்காவா காய்நகர்த்தினார்..ரஜினியே ஒரு சமயத்தில் விஜய் தன்னுடைய ரசிகர்தான் என்றும், ஒரு மேடையில் விஜய்,விக்ரமை பார்த்து "இவர்களை பார்க்க நானும் கமலும் போல இருக்கு" என்றார்.. அதே சமயத்தில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஜித் "எனக்கு சூப்பர்ஸ்டாராக வர ஆசை உண்டு" என்று சொன்னார், அதை திருபடுத்திய மீடியாக்கள் அஜித் தான்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொன்னதாக பப்ளிசிட்டி பண்ணினார்கள்.. மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் அந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களை விஜய் பக்கம் விரும்பியோ விரும்பாமலோ இழுக்க முக்கிய காரணமா போச்சு... அதன் தாக்கம் அன்று அஜித்தை வெகுவாய் பாதித்தது...


ஆனால், என்னதான் பாம்பை அணைத்து பால் குடுத்தாலும் அது பால் குடுத்தவனை கொத்தவே செய்யும்... அதை ரஜினி ரசிகர்கள் 2005/07 காலப்பகுதியில்தான் உணந்தார்கள்.. சந்திரமுகியுடன் போட்டியா சச்சினை இறக்கியது, மற்றும் வெறும் 2000 பேர் பங்குபற்றிய லோயா கல்லூரி வாக்கெடுப்பில் இரண்டு சதவீத வித்தியாசத்தில் வென்றுவிட்டு போட்ட கூத்துக்கள்..... உடனேயே ரஜினி ரசிகர்களை அஜித் பக்கம் சாதுவாக திசை திருப்ப செய்தன..... அதுக்கப்புறம் அஜித்தின் காட்டிலும் அடமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது... 2006 இல் அஜித் மூன்று வேடங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் சக்கைப்போடு போட்ட வரலாறு படத்தில் அஜித்தின் பிரமாத நடிப்பை பார்த்து தன்னுடைய இல்லத்துக்கு அஜித்தை விருந்துக்கு அழைத்தார் சூப்பர்ஸ்டார்... அன்றைய அந்தநாள் அஜித்தின் தலையெழுத்தையே மாற்றும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்... ஆமா, அப்போதுதான் தனது பலவருட கனவான பில்லா ரீமேக் உரிமையை ரஜினியிடம் கேட்டார் அஜித்... சூப்பர்ஸ்டாரும் உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார்.. அதுமட்டுமில்லை பட தொடக்கவிழாவுக்கு வந்து விளக்கேற்றியும் விட்டார்... படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது.... பாட்ஷா படம் வரும்போது அப்போதைய போட்டி நடிகர்களிலிருந்து ரஜினி எப்பிடி எட்டாத உயரத்துக்கு போனாரோ அதேபோல பில்லா வந்தாப்பிறகு அஜித்தும் போட்டி நடிகர்களுடன் ஒப்பிடுகையில் எங்கேயோ உச்சத்துக்கு போய்விட்டார்.. தமிழ் சினிமாவிலே பில்லா மாதிரி ஒரு முழுக்கமுழுக்க ஸ்டைலிசான படத்தை அதுவரை ரசிகர்கள் பார்த்ததே இல்லை.. அதே பில்லாபோல தாங்களும் ஸ்டைலிசா நடிக்க ஆசைப்பட்டு போட்டிநடிகர் தோல்வியுற்றதும் எல்லோருக்கும் தெரிந்ததே..


அது மட்டுமில்லாது, ஆரம்ப காலத்தில் மனம்போல மேடைகளில்,மீடியாக்களுக்கு முன்னாள் பேசிவந்த அஜித்துக்கு ரஜினி வழங்கிய ஆன்மீக புத்தகம் அஜித்துக்கு வாய்க்கட்டு போட்டு அவரை பூரண மனிதனாக்கியது.. அதற்குப்பிறகு அவரின் பேச்சில் பக்குவம்,முதிர்ச்சி பளிச்சிட்டது....பின்னர் பாலா, அஜித்தை பணம் கேட்டு மிரட்டியபோது ரஜினி செய்த உதவி, அப்புறம் அசல் பட தொடக்கவிழாக்கும் ரஜினி வந்து சிறப்பித்தார்... அப்புறமாய் சந்திரமுகி பாகம் ரெண்டு கதையுடன் வந்த இயக்குனர் வாசுவுக்கு அஜித்தை சிபாரிசு செய்தார்..எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" வில் அஜித்தின் பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டியது.. இவ்வாறு இன்றுவரை ரஜினி-அஜித் உறவு பலம் மிக்கதாய் இருக்கின்றது..ஒரு அஜித் ரசிகனாய் எந்தக்காலத்திலுமே ரஜினி மீது மிகுந்த மரியாதையை ஒவ்வொரு அஜித் ரசிகனும் வைத்திருப்பான். எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது தமிழகத்தில் உள்ள ஒரு அஜித் ரசிகர் மன்றத்தினர்(எந்த இடம் என்று நினைவில் இல்ல) ரஜினியின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம்கூட செய்தார்கள். அதேபோல ரஜினி ரசிகர்களும் இன்று அஜித்தை ரெம்பவே நேசிக்கிறார்கள்......





Saturday, April 28, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 1 (பிறந்தநாள் ஸ்பெசல்)


மே முதலாம் திகதியை உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.. அஜித் ரசிகர்களுக்கு இந்த நாள் தொழிலாளர்தினம் என்பதற்கு ஒருபடி மேலே போய் "தல தினம்" ஆகவே கொண்டாடுகிறார்கள்.. வீட்டில பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜத்தில் காட்டிலே தனியாளாய் வேட்டையாடும் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டிருப்பவர்.. "ஏற்றிவிடவும் தந்தையுமில்ல, ஏந்திக்கொள்ளவும் தாய்மடியில்லை.. தன்னை தானே சிகரத்தில் வைத்தவர்" ஆமா யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்று எத்தனையோ எதிர்ப்புகள், நம்பிக்கை துரோகங்களுக்கு மத்தியில் தனியாளாய் நின்று வசூல் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒப்பற்ற நடிகர் அஜித்குமாரின் பிறந்ததினம்தான் மே ஒன்று...... தல என்ற ஒரு சகமனிதனின் அசைவிற்கு பின்னால் விசில் சத்தம், வெடிச்சத்தம், கைதட்டல்கள் என்று விண்ணை பிளக்குமென்றால் அதுதான் தமிழ் சினிமாவிற்கு "தல தினம்".. உழைப்பால் உயர்ந்த உயரிய மனிதன்.. அமராவதி தொடங்கி மங்காத்தா வரை இருபது ஆண்டுகளில் ஐம்பது படங்கள் நடித்து அட்டகாசம் செய்து ஒவ்வொரு ரசிகனையும் அசலும் வட்டியுமா அமர்க்களப்படுத்திய ஒரே ராஜா.... அவரை பற்றி சொல்ல சன் டீவியோ, விஜய் டீவியோ, ஜெயா டீவியோ தேவையில்லை.. ஏனென்றால் தலைகளுக்கெல்லாம் அவரே தல.. ஒரு நல்ல மனிதன் நல்ல நடிகன் ஆகலாம், ஆனா ஒரு நல்ல நடிகன் நல்ல மனிதனாகினான் என்றால் அது அஜித்தான்...



தமிழ் சினிமாவின் சரித்திரத்தை ஒருதடவை திரும்பி பாருங்கள்.. அப்போது உங்களுக்கு புரியும், கீழே உள்ள கேள்விகளுக்கு யார்?, எத்தனை பேர் பொருத்தமானவர்கள் என்று?...

தமிழ் சினிமாவில் யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்றி நிலைத்து நின்று சாதித்தவர்கள் யார்யார்?

ரசிகர்களையே சந்திக்காது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் யார்?

அடுத்தவனை வீழ்த்தணும் என்று நினைக்காது "வாழு வாழவிடு" என்ற கொள்கையுடன் தன்பாட்டில் இருப்பவர்கள் எத்தனை பேர்?

ரசிகர்களுக்கென்றும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குதென்று உணர்ந்து, அதனால் தனக்கு வரப்போகும் பாதக தன்மைகளையும் பொருட்படுத்தாது தனது ரசிகர் மன்றங்களை கலைக்கும் துணிவு எத்தனை பேருக்குண்டு?

மூன்றாம் தரப்பினர் அறியாமல் பிறருக்கு உதவி செய்வோர் எத்தனை பேர்?



தன்னுடைய படத்தை பாருங்கள் என்று ஊர் ஊரா போய் புரமோஷன் செய்யாமல் பிடித்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லுகின்ற தைரியம் எத்தனை பேருக்குண்டு? 

பொது இடங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் மேடையில் இருப்பவர்களை துதிபாடாமல் தனது மனதில் பட்டத்தை பயப்பிடாமல் சொல்லும் தைரியம் எத்தனை பேருக்குண்டு?

தனது தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக ரசிகர்களையோ, அரசியல்வாதிகளையோ, மற்றைய எந்தவொரு தரப்பினர்களையோ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எத்தனைபேர்?

படப்பிடிப்பு தளத்தில் அடிமட்ட ஊழியர்களை மதித்து அவர்களின் குறைநிறைகளை விசாரித்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகக்கூடிய உயர்ந்த பண்பு எத்தனை பேருக்குண்டு?

ஊரில உள்ள எல்லா டீவி சனல்களுக்கும் போய் தன்னை பப்ளிசிட்டி பண்ணாம இருப்பவர்கள் எத்தனைபேர்?

படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே ஊடகங்களுக்கு போய் தன்னுடைய படம் வெற்றி வெற்றி என்று கூவாதவங்க எத்தனை பேரு?

காசு குடுத்து தியேட்டர்ல படத்தை ஓட்டுறவங்க, ஓடாத படத்துக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டுறவங்க மத்தியில் அவ்வாறு செய்யாது மக்களின் தீர்ப்பை மதிக்கும் ஹீரோக்கள் யார்யார்?



மேலே கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.... தற்போதைய தலைமுறையில் அத்தனை கேள்விகளுக்கு பொருந்தக்கூடிய நடிகர் என்றால் அது அஜித் ஒருவராக மட்டும்தான் இருக்கமுடியும்.... ஒரு காலத்தில் அஜித் என்ற நடிகருக்கென்று ஆரம்பித்த ரசிகர் கூட்டம் இன்று ஒருபடி மேலே போய் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அஜித் என்ற மனிதரை நேசிக்கத்தொடங்கிவிட்டது.... அதனால்தான் எதிரிகள் வெட்ட நினைக்கும்போதும் கோடரியை உடைக்கும் அளவுக்கு காட்டுமரம்போல் விருட்சமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறார்.. ரசிகர்களை சந்திப்பதில்லை, ரசிகர் மன்றங்களை கலைத்தார்,விழாக்களுக்கு செல்வதில்லை,ஊடகங்களின் செல்வாக்கில்லை..ஆனாலும் எத்தனை படங்கள் தோத்தாலும் அதையும் மிஞ்சும் வகையில் அதற்கு அடுத்து வரும் படங்களுக்கு இருக்கும் மலையளவு ஒபெநிங்தான் தமிழ் சினிமாவையே அஜித்தை நோக்கி வாய்பிளக்க வைக்கின்றது..


பல வருடங்களுக்கு முன்னர் அப்போதைய ஊடகங்கள் அஜித்தை "வாய்க்கொழுப்பு" நடிகர் என்று வர்ணித்துள்ளார்.. காரணம் இவரது பேச்சிலுள்ள அந்த திமிர்.. ஏன் இப்பகூட அஜித்தை பிடிக்காதவர்கள் சொல்லும் ஒரு கருத்து இதுதான்.... ஆமா அஜித்துக்கு திமிர்தான்.. அதை நானும் ஒத்துக்கொள்ளுறேன், அடிபட்டு பள்ளத்தில் இருக்கும்போது ஏறி மிதித்தவர்களை பீனிக்ஸ் போல எழுந்துவந்ததன் பிற்பாடு கொஞ்சிகுலாவவா சொல்றீங்க???.... என்னதான் பேச்சில் ஒரு திமிர் இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும், அண்மையில்கூட ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் "உங்க தன்மானத்தை யாருக்காவது விட்டுக்குடுக்காதீங்க, உங்க வேலையை நூறு சதவீதம் ரசித்து செய்யுங்கள்....நல்லா படியுங்கள்...யாரையும் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள், யார் பின்னாலும் போகாதீர்கள்..மற்றவன் காலை மிதித்து முன்னேறாதீர்கள்.. சிம்பிளா சொல்றேன்.. வாழு வாழவிடு"......................Hats off my dear thala...... இந்த..இந்த..இந்த திமிர்தான் அஜித்தை பின்பற்றும அவரது ரசிகர்களுக்கு ஒரு "கிக்" ஐ கொடுக்கின்றது.......



-வருகை தந்தமைக்கு நன்றி-

Wednesday, April 4, 2012

தப்புமா கார்த்தியின் சகுனி ஆட்டம்??.



ஜனவரி முதல் நாள் வருகிறது, பொங்கலுக்கு வருகிறது, புதுவருடத்துக்கு வருகிறதென்று ஏப்ரல் மாதமே வந்துவிட்டது.. இன்னமும் படம் எப்ப ரிலீஸ் ஆகுதென்ற திகதியை உறுதிப்படுத்தமுடியாமல் தவிர்க்கிறது சகுனி படக்குழு... கடசியாக 2011  பொங்கலுக்கு வந்த சிறுத்தைக்கு பிறகு ஒன்றரை வருடங்களுக்கு பிறகுதான் அடுத்த படமான சகுனி வெள்ளித்திரைக்கு வரும்போல....   அப்பிடி என்னதானையா செய்யிறாங்க என்று கொஞ்சம் அலசித்தான் பார்ப்போமேன்.........


கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஆடுகளம்,காவலனுடன் கார்த்தியின் சிறுத்தையும் வந்தது.. சிறுத்தை படமானது தெலுங்கின் "கமெர்சியல் கிங் இயக்குனர்" என வர்ணிக்கப்படும் ராஜமௌலியின் இயக்கத்தில் ரவிதேயா மற்றும் அனுஷ்கா நடிப்பில் 2006 இல் வெளிவந்த "விக்ரமகுரு" என்ற படத்தின் ரீமேக் ஆகும்... முழுக்க முழுக்க தெலுங்கின் காரமசாலாவை அடையாளப்படுத்தும் இந்த படம் தமிழில் எப்பிடி போகும்? ....அதுவும் வெறும் மூன்றே மூன்று படங்கள் நடித்த கார்த்தி ஒரே நேரத்தில இருபது வில்லன்களை போட்டுத்தள்ளினா தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம்வேற அவர்களுக்குள் இருந்தது... ஆதலால் இயக்குனர் சிவா, ராஜமௌலியுடன் கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மாதங்கள் வரை கதைவிவாதத்தில் ஈடுபட்டாராம், அதாவது தமிழ் இந்த படத்தை ரீமேக் பண்ணும்போது எந்தெந்த சீன்களை மாற்றவேணும், எதை மாற்றக்கூடாது என்பது பற்றி... சரி, ஒருவாறு படம் திரைக்கு வந்தவுடன் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்,எப்பிடித்தான் மாற்றினாலும் அச்சொட்டா தெலுங்கு வாடை இருப்பது.. 


 இந்த படத்தை நான் திரையரங்கில் பார்த்து ஏன்டா இந்த படத்தை பார்த்தேன் என்றிருந்தது.. கார்த்தி வில்லன்களுக்கு அடிக்கிற ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்ததுபோன்றதொரு பீலிங்க்ஸ். செம மொக்கையா இருந்திச்சு.... படம் நிச்சயமாக ஊத்தப்போகுது என்றுதான் நான் நம்பி இருக்க, ஒருவார முடிவில் வசூல் நிவரங்கள் வரத்தொடங்க பெரிய ஆச்சரியமா இருந்தது... வசூலில் ஆடுகளம், காவலனை பின்தள்ளிவிட்டு சக்கைப்போடு போட்டது.. இன்றுவரை இந்தப்படம் எப்பிடி தமிழ் ரசிகர்களால் "சூப்பர் ஹிட்" ஆனது என்பதற்கான காரணம் சரிவர புரியவில்லை.. எப்பிடியோ கொஞ்சம் படத்துக்கு அப்பால் அலசும்போது ஒருசில காரணங்கள் எழுந்தன, ஒன்று இந்தப்படம் பண்டிகைக்காலங்களில் வந்ததமை,  பண்டிகைக்காலம் என்றா இயல்பாகவே திரையரங்குக்கு கூட்டம் ஒதுங்குவது புதிதல்ல, மற்றது சிறுத்தையுடன் போட்டிக்கு வந்த காவலன்,ஆடுகளம் படங்கள் ஆக்சன் படமாக அமையாதது.. போட்டிப்ப்டங்கள் ரெண்டு மூன்று வரும்போது என்னதான் மொக்கை அக்சன் படங்களும் கொஞ்சம் தப்பித்துவிடும்... மேலும் விஜய் படம் வந்ததால் விஜய் 
எதிர்ப்பாளர்கள் சிறுத்தைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம்...  


சரி , ஏதோ சிறுத்தை சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.. சரி இனி நாம சகுனி ஆட்டத்துக்குள் நுழைவோம்... அறிமுக இயக்குனரின் படம் எண்டதால இயக்குனர் மீதான எதிர்பார்ப்பை தூக்கி போடலாம்... முழுக்க முழுக்க கார்த்தி மீதான எதிர்பார்ப்புத்தான்... படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி, அரசியல்வாதிகளை நக்கலடிப்பதாகவே இருக்கும் என மீடியா வாயிலாக கேள்விப்பட்டேன்... குறிப்பாக ஸ்பெக்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. உண்மையில் எந்த பிரச்னையை சித்தரிக்கப்போறார்கள் என்று சரியாக புரியாவிடினும், படத்தின் போக்கு நிச்சயமாக தெலுங்கு சாயலைத்தான் கொண்டிருக்கபோகிறது என்பது படத்தின் டெயிலரை பார்க்க ஊகிக்கமுடிகிறது..... இக்கதையை தெரிவுசெய்வதட்கு "சிறுத்தை" அளித்த வெற்றிதான் முக்கிய காரணியாக இருக்கலாம்....


சிறுத்தை படத்தில் உண்மையிலே கார்த்தியை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா? அல்லது நான் மேலே சொன்ன காரங்களால்தான் படம் ஒடினதா என்பதுதான் இப்போது இருக்கும் பிரச்சனை... அஜித், விஜய், சூர்யா போன்றோர்களே இருபது படத்திற்கு அப்பால்தான் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார்கள்... அஜித் 25வது படத்தில்(அமர்க்களம்), விஜய் 36 வது படத்தில்(திருமலை), சூர்யா 23வது படத்தில்(அயன்)...தனுஷ்,சிம்பு,ஜீவா,ஜெயம் ரவி போன்றோர் இன்னமும் அந்த லிஸ்டுக்குள் இல்லை... அப்பிடி இருக்கும்போது கார்த்தியால் எப்பிடி முடியும்???? ............... படமே வரேல அதுக்குள்ளே இப்பவே வெற்றி தோல்வி பற்றி கதைக்கிறதா? சரி..சரி... அப்பிட்யே இந்த விசயத்திலிருந்து "எஸ்" ஆவோம்....


ம்ம்ம்.... அடுத்து ஆரம்பத்திலே சொல்லவந்ததை சொல்லிமுடித்திடுவோம்.. சகுனி பட தாமதத்துக்கு என்ன காரணம்??, இந்த படம் கொஞ்ச நாளைக்கு முதல்லே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாம்... சரி படம் எப்பிடி என்று சிவகுமார் மற்றும் சூர்யாவுக்கு காண்பிக்கப்பட்டதாம், அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமானது.. சகுனி படத்தில் கார்த்திக்கு வில்லனா நடித்தவரின் பெர்போமான்ஸ் சூர்யாவுக்கு திருப்தியளிக்கவில்லையாம்.. ஆதலால் பழைய வில்லனுக்கு பதிலாக பிரகாஸ்ராஜ்ஜை போட்டு வில்லன் வார சீன் முழுவதையும் திருப்பி எடுக்கச்சொல்லிட்டாராம்... பாவம் கார்த்தி, சின்னப்பிள்ளையாச்சே அப்பா, அண்ணாட சொல்லை தட்டேலாது.... சரி ஏதாவது நடத்துங்கப்பா என்று சொல்லிட்டு அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் "அலெக்ஸ் பாண்டியன்" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்....
(அயன் படத்தின்ட மைனசே வில்லன்தான்... எப்பிடி அதை சூர்யா மறப்பார்?)


எது எப்பிடியோ சகுனி ஆட்டத்தை பார்க்கப்போற ரசிகர்களில் திணிக்காது வில்லன்களில் திணித்தா போதும்...

comment