Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா- சுருக்கமான விமர்சனம்.

பாக்கியராஜின் "இன்று போய் நாளை வா" திரைப்பட கதையை அனுமதியின்றி திருடி படம் எடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து சந்தானம்-பாக்கியராஜ் இடையேயான சமரசத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. படத்தின் கதை என்னவென்றா ஊரில வெட்டித்தனமா சுத்தித்திரியும் மூன்று பசங்க ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அந்தப்பெண் யாரை காதலிக்கிறாள் என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்... முன்று பசங்களாக சந்தானம்,பவர்ஸ்டார்,சேது ஆகியோரும் ஹீரோயினாக விசாகா சிங் உம், கௌரவத்தோற்றத்துக்கு சிம்புவும் மற்றும் பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

சந்தானம்- சொல்லவே தேவையில்ல, ஓகேஓகே, கலகலப்புக்கு பிறகு மீண்டும் ஒரு முழு நீள திரைப்படம் ஒன்று சந்தானத்தை நம்பியே எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றாட்போல் பின்னி எடுத்திருக்கிறாரெண்டே சொல்லணும். பவர்ஸ்டாரின் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரும்புதிருமாக சந்தானம் அடிக்கும் பஞ் தியேட்டரையே அதிரவைக்கிறது. 

பவர்ஸ்டார்- இன்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னாள் இப்பிடி ஒராள் இருக்கிறாரா? என்று கேட்டால் சினிமாவில் பைத்தியமா ஈடுபபாடுடையவர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. குறுகிய காலத்தில் கோமாளித்தனத்தாலும், அப்பாவித்தனத்தாலும், அனுதாபத்தாலும்(நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு) பெரிய ஸ்டாராக????... இல்லீங்க இல்லீங்க.... எல்லோருக்கும் அறிமுகமானார். நான் பார்த்த திரையரங்கின் பவர்ஸ்டார் அறிமுகமாகும் காட்சியின்போது எழுந்த ஆர்ப்பரிப்பு வேறு நடிகர்களின் படத்துக்கு இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். (இத்தனைக்கும் அவரின் எந்த படத்தை பார்த்து இம்பிரஸ் ஆனீங்க என்று ஒரு வார்த்தை நச்சென்று கேட்டா?..வேணாம் கேக்குறவனுக்கே வலிச்சிடும்.)
சரி, படத்தில் எப்பிடி என்று பார்த்தால். கஷ்டப்பட்டு நடிக்கிறது புரிகிறது..என்றாலும் படத்துக்கு தன்னால் மைனஸ் வராதவாறு தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்...

இதுதவிர இந்தப்படத்தில் நடித்த அனைத்து இதர நடிகர்,நடிகைகளும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.....பாடல்களும் பரவாயில்ல, குறிப்பாக பழைய பாடல்களின் ரிமேக் செய்யப்பட்ட பாடல்கள் நன்றாகவே இருந்தது. பின்னணி இசையும் நன்றாகவே இருந்தது...


படத்தின் பிளஸ் என்று பார்த்தால்....

தொடங்கியதிலிருந்து முடியும்வரை ஆடியன்சுக்கு அலுப்பு தட்டாமல்,எரிச்சலூட்டாமல் திரைக்கதையை இயக்குனர் மணிகண்டன் சிறப்பாகவே நகர்த்துகின்றார்...

குறிப்பாக கதாபாத்திரங்களுக்கான பாத்திரத்தேர்வு மிகப்பெரிய வெற்றியை முதல்லே அளித்துவிட்டது என்றுதான் சொல்லணும். குறிப்பாக சந்தானம்,பவர்ஸ்டார்,கணேஷ் ஆகியோர் திரையில் தென்படும்போது அவர்களின் கதைவசனங்களை கேட்கமுன்னரே ஆடியன்ஸ் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு வந்துகொண்டே இருந்தது.. இவ்வாறாக பாத்திரத்தேர்வு நேர்த்தியாக இருந்தா என்னதான் படத்தில் இடையிடையே ஓட்டைகள் இருப்பினும் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

முழுக்க முழுக்க காமெடிப்படம் மற்றும் முன்னணி ஹீரோக்கள் இல்லாததால் ரசிகர்களால் லாஜிக் பிழைகள் மற்றும் விதண்டாவாதமான எதிர்க்கருத்துக்கள் வெளிவராது............

எது எப்பிடியோ இந்த பொங்கலில் மூன்று படங்கள் வெளிவந்தாலும் இந்த ஒரு படமே போதும் பொங்கல் பொங்கி வழிய... சினிமா ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீர்கள்... குடும்பத்தினர்,நண்பர்களுடன் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்....

Tuesday, December 18, 2012

அஜித்தின் டாப் 10 திருப்புமுனைப் படங்கள்

அஜித்தின் திரைப்பட கரியரில் வெற்றிகள், தோல்விகளின் மத்தியில் சில படங்கள் அவரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன.அதில் எனது நோக்கின்படி பத்து படங்களை தரவரிசைப்படுத்தியுள்ளேன். குறிப்பு- இது அஜித்தின் டாப் 10 சிறந்த படங்களின் பட்டியல் அல்ல. திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களின் தரவரிசையே ஆகும்.

10. பவித்திரா 

1994 ஆம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் நாசர்,ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். வணிகரீதியாக பெரியளவு வெற்றி பெறாவிடினும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு படம். அஜித்தின் அன்றைய ஹீரோ வால்யூவிற்கு ஏற்றாட்போல ஹிட்டாக அமைந்தது. தமிழில் ஹீரோவா அஜித்துக்கு இது இரண்டாவது படம். 

9. காதல் மன்னன் 

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணின் முதல் படம். பரத்வாஜின் இசையில் 1998 இல் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் மானு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, விவேக், கரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். முழுநீள காதல் கதையுடன் அமைந்த இத்திரைப்படம் வணிக,விமர்சன ரீதியாக மிகப்பெரும் வெற்றியை அஜித்துக்கு பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல 1997 இல் வெளிவந்த அஜித்தின் நேசம்,ராசி,உல்லாசம்,பகைவன்,ரெட்டை ஜாடை வயது ஆகிய ஐந்து படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு வந்து மிகப்பெரிய ஹிட் என்பதால் அஜித்தின் வெற்றிகரமான பயணத்தில் காதல் மன்னனும் ஒரு திருப்புமுனையே! 

8. வரலாறு 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எவ்வளவோ சிக்கலுக்குப்பிறகு வெளிவந்த திரைப்படம். ஆரம்பத்தில் இந்த திரைப்பட கதையை அஜித்துக்கு சொல்லும்போது அதில் நடிக்க அஜித் சம்மதிக்கவே இல்லை. ஆனாலும் கமல், ரஜினிகாந்தின் அறிவுரைக்கு பிறகே அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்பா, இரண்டு பிள்ளைகள் இதில் தந்தை வேடமானது நடனம் பயின்று அதன் ஒவ்வொரு அசைவுகளையும் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிற கரக்டர், ஒரு மகன் வேடம் சைக்கோ வில்லனாயும், மற்றைய மகன் நண்பர்களுடன் குடித்து கும்மாளமடிக்கும் ஒரு இளைஜனின் வேடம்.. கிட்டத்தட்ட முன்று வேடமுமே எதிரும் புதிருமான வேடம்.. இந்த முன்று கரக்டரையும் உணர்ச்சி ததும்ப நடிக்க அஜித்தைவிட வேறு எவராலுமே இயலாததால் அஜித்திடம் சம்மதம் பெற கடும் முயற்சியை மேற்கொண்டு இறுதியில் இயக்குனர் வென்றே விட்டார். இந்தப்படமானது ஜி என்ற தோல்விக்கும், திருப்பதி,பரமசிவன் என்ற அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு வந்து பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் படத்துக்கு பிறகு வரலாறு தான் தமிழ் சினிமாவில் ஐம்பது கோடியை தாண்டிய திரைப்படம். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களிலே அதிகமாக வசூலிச்ச படமும் இதுதான். மேலும் இந்த படத்துக்காக அஜித்துக்கு பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.

(பதிவு நீண்டுகொண்டு செல்வதால் சுருக்கமா சொல்லிவிடுகிறேன் )

7. மங்காத்தா 

ஏகன்,அசல் ஆகிய இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு 2011 இல் வெளிவந்த திரைப்படம். வெளியான அனைத்து இடங்களிலுமே கலக்சனில் கல்லா கட்டிய திரைப்படம். தமிழ்சினிமாவில் முதன்முதலா ஒரு நடிகர் சிங்கிள் ரோலில் படம் முழுவதுமா வில்லனா தோன்றி நடிச்ச திரைப்படம். 2011 இல் வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் முடியடிச்சு நம்பர் ஒன்னாக திகழ்ந்த படம். அதுமட்டுமல்லாமல் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்ததாய் அதிக வசூலிச்ச படமும்கூட. விமர்சன அடிப்படையிலும், வசூல் அடிப்படையிலும் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் திருப்புமுனையையும் ஏற்படுத்திய திரைப்படம்.

6. காதல் கோட்டை

1996 இல் வெளிவந்த முழுநீள காதல் காவியம். அன்றைய தேதியில் அஜித்துக்கென தனியா மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படம். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி, கமல்-சிறீதேவிக்கு அடுத்து சினிமாவின் சிறந்த ஜோடியாக அஜித்-தேவயானியை எல்லோரும் மெச்சுமளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த திரைப்படம். வசூலில் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு இயக்குனர் அகத்தியனுக்கு சிறந்த கதைக்கான தேசிய விருதும் இப்படத்துக்கு கிடைத்தது.

5. அமர்க்களம் 

1999 இல் வெளிவந்த திரைப்படம். வாலி, ஆனந்த பூங்காற்றே, நீவருவாயென என்ற ஹாட்ரிக் ஹிட்டுக்கு பிறகு வந்தாலும் அஜித்துக்கு கிடைத்த முதல் மாஸ் ஹிட் இதென்பதில் அஜித்தின் கரியரில் அமர்க்களம் ஒரு முக்கியமான படமே! ஒவ்வொரு நடிகனுக்குமே தாங்கள் ஏதாவது மாஸ் ஹிட் குடுத்து மாஸ் ஹீரோவாகணும் என்றே விரும்புவார்கள். ரஜினி-கமல் தலைமுறைக்கு பிறகு முதல் மாஸ் அந்தஸ்துள்ள ஹீரோ என்றால் அஜித்தான்.இவரின் ஏனைய சமகால போட்டி நடிகர்கள் இதற்கு 3/4 வருடங்களுக்கு பிறகே மாஸ் ஹீரோவாகினார்கள். அஜித்துக்கென்று பெண்கள்,குடும்ப ரசிகர்கள் தாண்டி இளையோர் பட்டாளங்கள் அவரை ரசிக்க ஆரம்பித்தது இதற்குப்பிறகே. அதுமட்டுமல்ல வாழ்க்கைத்துணைவியை பெற்றுக்கொடுத்ததும் இந்த திரைப்படமே!

4. வாலி 

1999 இல் வெளிவந்த திரைப்படம். உயிரோடு உயிராக,தொடரும் தோல்விகளுக்கும், உன்னைத்தேடி என்ற அவேரேஜ் ஹிட்டுக்கு பிறகு வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டியளிக்கையில் "இயக்குனர்களை தாண்டி நடிகனா எனது வெற்றியில் உரிமை கொள்ளவைத்த படம் வாலி" என்றார். இளவயதிலே நெகடிவ் ரோல் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்திய படம். "நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாயே நடிக்கிறது" எண்டதுக்கு முதன்முதலில் போட்ட பிரேக் வாலிதான். இந்த படம் வந்த காலத்தில் ஊடகங்கள் அஜித்தை கமலுடன் ஒப்பிட்டனர் என்பது அஜித்துக்கு கிடைத்த மேலுமோர் கௌரவம். அது மட்டுமல்ல இந்த படத்துக்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. 

3. தீனா 

2001 இல் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். "மாஸ் னா" அஜித் எண்டதுக்கு ஏற்றாற்போல் அமைந்த திரைப்படம். ஏற்கனவே அமர்க்களத்திலே மாஸ் ஹீரோவாகிவிட்ட நிலையில், இது அவருக்கு மேலுமோர் பரிமாணத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மீடியா,ரசிகர்களால் "தல" என அழைக்கத்தொடங்கியது இந்தப்படத்திலிருந்துதான். வெறுமனே அடிதடி என்றில்லாமல் அதை ஸ்டைலிசாக வேற அஜித்தை நடிக்கவைத்தார் முருகதாஸ். காதல் கோட்டை, அமர்க்களத்துக்கு பிறகு மிகப்பெருமளவு ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த படம் தீனா. தொடர் வெற்றிகளின் உச்சத்தில் இருந்த அஜித்துக்கு தீனாவும் ஒரு திருப்புமுனையே!

2. ஆசை

1995 இல் வெளிவந்த திரைப்படம். இது பற்றி இயக்குனர் வசந்த் சொல்கையில் "எத்தனையோ இயக்குனர்களுக்கு பிரேக் கொடுத்து முன்னேற்றிய அஜித்துக்கு,முதன் முதலில் பெரிய பிரேக் கொடுத்தவன் நான்தான், அது மட்டுமல்ல அன்றைய தேதியில் கல்லூரி மாணவிகளிடையே கேட்டால் அஜித்தை மாதிரியான ஒரு ஆண்கிடைக்கணும் என்றே சொல்வார்கள்." என்றார். அந்தளவுக்கு அஜித்தின் மீதான கிரேஸி அந்தக்காலத்திலே உருவாகிவிட்டது. இது அஜித்தின் ஆறாவது படம், ஹீரோவாக மூன்றாவது படம். பவித்திரா என்ற வெற்றிக்குப்பிறகு ஹீரோவாக மூன்றாவது படத்திலே மிகப்பெரியதொரு வெற்றியை அஜித்துக்கு முதன்முதலில் கொடுத்த படம் ஆசை.இதனால்தான் எத்தனையோ சூப்பர் டூப்பெர் ஹிட் படங்களுக்கு மேலே இதை வரிசைப்படுத்தியுள்ளேன்.  

1. பில்லா (2007)

2007 இல் வெளிவந்து பாக்ஸ் ஆபீசில் மட்டுமல்ல தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம். முழுநீள ஸ்டைலிசான படம். அதுவரை தமிழ் சினிமா கண்டிராதவாறு இயக்குனர் விஸ்ணுவர்த்தனின் கற்பனையில் உருவான படம். அஜித்தின் ஒவ்வொரு அசைவிலுமே ஒரு ஸ்டைல் இருக்கும். ஆழ்வார் என்ற தோல்விப்படத்துக்கும், கிரீடம் என்ற சராசரி வெற்றிப்படத்துக்கும் அடுத்ததாய் வந்த படம். அந்த சீசனில் ஏன் இன்றும் கூட பில்லா மோகம் தமிழ்ரசிகர்களை விட்டகலவில்லை. அன்றைய தேதியில் ரஜினியின் சிவாஜிக்கப்புறம் அதிக வசூலிச்ச படம் பில்லாதான். வசூலிலும்சரி, அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் பிஸ்னஸ், ரசிகர்கள், ஒபெநிங் எல்லாவற்றிலுமே அஜித்தை மிகத்தூர இடத்துக்கு திடீரென ஏற்றி வைச்சது பில்லாதான்...சந்தேகமே இல்லை... அதனால்தான் பில்லாவுக்கு முதலிடம்.

இது எனது கண்ணோட்டத்தில் உருவான தரப்படுத்தல்.. இதில் உங்கள் அபிப்பிராயத்தை பின்னூட்டலில் இடுக..

-வருகை தந்தமைக்கு நன்றி. 







Friday, December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம்- திரைப்பட விமர்சனம்

ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லுமளவுக்கு ஹிட் படங்களை தனக்கேயுரிய பாணியில் ஸ்டைலிசா கொடுத்துவந்த கௌதம் வாசுதேவ மேனனுக்கு யார் கண் பட்டுதோ, இப்பவெல்லாம் இறங்குமுகமாகவே இருக்கின்றது. இறுதியாக விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்கு பிறகு வந்த "நடுநிசி நாய்கள்", "ஏக் திவானா தா" (விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்) இந்த இரண்டும் தோல்வியடைந்ததது. அதுமட்டுமல்ல திரைக்கதை,இயக்கத்தில தனது பிடிவாதமான போக்கால் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய்,சூர்யாவின் படங்களும் கைநழுவி போய்விட்டன. எது எப்பிடியோ எனினும் கௌதமின் படங்களுக்கான கிரேஸி இன்னமும் குறையவில்லை. இந்தப்படத்துக்கான இசையமைப்பாளரை தேர்வுசெய்வதில் ரஹுமான், ஹரிஸ் என போய் இறுதியில் இளையராயாவிடமே அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் இசைவெளியீட்டு விழாவை வேற மிகப்பிரமாண்டமாக செய்தார்கள். இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்க செய்துவிட்டது. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முன்று மொழிகளும் எடுக்க தீர்மானித்தார்கள். அப்புறமாக ஹிந்தியை கைவிட்டு தமிழ்,தெலுங்கில் மட்டும் எடுக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தெலுங்கில் ஜீவாவின் கரக்டருக்கு பதிலாக "நானீ" நடிக்கிறார்.
அடுத்ததாய் பட விமர்சனத்துக்கு போவோம்..


நடிகர்கள்- ஜீவா,சமந்தா,சந்தானம் 
இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் 
இசை- இளையராஜா 
ஒளிப்பதிவு- எம்.எஸ்.பிரபு, ஓம் பிரகாஷ்
தயாரிப்பு- ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்றேட் குமார்,ஜெயராம், கௌதம் மேனன்.
வெளியீடு- போட்டான் காதாஸ், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.

படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இது கௌதம் மேனனின் படங்களில் எதிர்பார்க்கமுடியாது.. அவரின் படங்களை பொறுத்தவரை கதையை நம்பி படம் எடுப்பதில்லை, சிறியதொரு கருவை வைச்சு தனது மேக்கிங்கால் வித்தியாசமான முறையில் ஆடியன்ஸிடம் கொண்டுபோய் சேர்ப்பார். மணிரத்தினம்,ராஜீவ் மேனன்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு பட இயக்குனர்) பாணியிலான இவரது மேக்கிங் வேற இயக்குனர்களிடம் காணக்கிடைக்காததாலும், மணிரத்தினத்தின் படங்கள் இப்போதெல்லாம் பெரிதா வராததாலும் இவரின் இயக்கம் ஒரு தனித்துவமானதாகவே இருக்கின்றது. கதையின்படி ஜீவா,சமந்தா இருவருமே சிறுவயதிலிருந்து பாடசாலை,காலேஜ் என ஒன்றாக படித்து பழகியவர்கள், காதல் வயப்படுகிறார்கள்.. அவ்வப்போது இருவரிடையே ஈகோ பிரச்சினை. பின்னர் பிரிந்து சென்றுவிடுகிறார்கள், சமந்தாவுடனான காதல் சரிப்பட்டுவராதெண்டு தெரிந்த ஜீவா பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்... அப்புறம் என்ன நடக்கிறது?? இதுதான் சுவாரிஸ்யம்.. வழமையான கௌதம் படங்களிலிருந்து கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. இதை படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளுங்கள்.......  
ஜீவா,சமந்தா- இந்த படத்தின் பெரிய பிளசே இவர்கள் இருவரும்தான். ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக இளமையாக, அழகாக சும்மா லட்டுமாதிரி இருக்கிறார்கள். அதனால படம் பிடிக்காதவர்களும் இவர்களை பார்த்தே ஓரளவு திருப்திப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பதிலாக ஹாண்ட்சம் இல்லாத ஹீரோவையும், அட்டு பிகரையும் போட்டிருந்தா முப்பது நிமிடத்துக்குமேல எவரும் பொறுமையாக திரையரங்கில் இருந்திருக்கமாட்டார்கள்.

சந்தானம்- கௌதமின் கைகிளாஸ் படத்துக்கு சந்தானம் மாதிரியான காமெடியன்கள் அவ்வளவு பொருத்தமில்லை எண்டாலும் ஆமை வேகத்தில் செல்லும் ஸ்கிரீன்பிளேக்கு சந்தானத்தின் காமெடிதான் ஆடியன்சை நித்திரை கொள்ளவிடாமலாவது வைச்சிருந்தது.
இயக்குனர் கௌதம் மேனன்- கௌதமிடமிருந்து எதிர்பார்த்தளவு இல்லை. முதற்பாகம் மெதுவாகவே நகருகிறது, அதைவிட எடிட்டிங்கில் படு சொதப்பல். நிறைய காட்சிகள் துண்டாடப்பட்டுவிட்டது.  இரண்டாம் பாகம்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. 

இசையமைப்பாளர்- ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை சொதப்பலெண்டே சொல்ல தோன்றுகிறது. குறிப்பாக பின்னணியில் இவர் கொடுக்கும் குரல் தாங்கமுடியல... அதை வேறு பாடகர்களைக்கொண்டு குரல் கொடுக்கவைத்திருக்கலாம். பாடல்கள் மட்டும் பார்க்கக்கூடியதாயுள்ளது.

சுருக்கமா சொல்லப்போனால் இந்தப்படத்தில் ஜீவா,சமந்தா, சந்தானம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். பாடல்கள் நல்லாயுள்ளன. பின்னணி இசை சொதப்பலாயுள்ளது... கௌதமின் இதற்கு முன்னைய முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்ககூடியதாயுள்ளது..
எனது கருத்துப்படி முதற்பாகம் அவரேஜ், இரண்டாம் பாகம் சூப்பர்.... மொத்தத்தில் ஓகே ரகம்.... 
கௌதமின் வழமையான ஹிட் படங்களே "ஏ" சென்றரில்தான் வசூலில் கல்லா கட்டும். "பி","சி" ஆடியன்சை பெரிதாக கவருவதில்லை. அப்பிடி இருக்கும்போது இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தேறுவது சந்தேகம்தான்..

Friday, November 23, 2012

அஜித்தும் கிங் ஆப் ஓபெநிங்கும்....

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஒபெநிங் யாரெண்டு கத்துக்குட்டி ரசிகனை கேட்டாலே சொல்லுவான் அஜித்தான் எண்டு, இந்த "கிங் ஆப் ஒபெநிங்" எண்ட சொல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் குறிப்பிட்ட நடிகருக்கெண்டு பழக்கத்தில் இல்லாத சொல். தமிழ் சினிமா நடிகர் அஜித்துக்கெண்டு இருக்கும் விசேட பட்டப்பெயர்தான் இது.. இது சூப்பர்ஸ்டார்,உலக நாயகன் போல பட இயக்குனரால்,தயாரிப்பாளரால் வைக்கப்பட்ட பெயரோ "தல" என்ற பெயர்மாதிரி படத்தில் வரும் கரக்டருக்கான பெயரோ இல்லை.. அஜித் படம் வெளியாகும்போது முதல் வாரத்தில் தியேட்டருக்கு வரும் அஜித் ரசிகர்களின் எண்ணிக்கை, ஒபெநிங் கலக்சனை வைச்சு மீடியாக்கள் மற்றும் சினி விமர்சகர்களால்தான் அஜித் "கிங் ஆப் ஓபனிங்" என அழைக்கப்படுகிறார். இது இன்று நேற்றல்ல பத்துவருடத்துக்கு மேலாகவே கிங் ஆப் ஒபெநிங் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் அஜித். ஜனா,ஆஞ்சநேயா மற்றும் ஏகன்,அசல் போன்ற தொடர் தோல்விகளிலும்கூட அஜித்தின் கிங் ஆப் ஒபெநிங்க்கு எதிர் விமர்சனம் இல்லை.. எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கு அடுத்தாற்போல வரும் படத்திற்கு முந்தயதிலும் பார்க்க பிரமாண்ட ஒப்நிங்கை அஜித் ரசிகர்கள் வழங்குவார்கள்.. இதுதான் அஜித்துக்கு உள்ள மிகப்பெரிய பலம். 
சரி, இப்போ இன்னொரு முக்கிய பிரச்னைக்கு போவோம்.... வேற ஒண்டுமில்ல பில்லா 2 ஒபெநிங்கும் துப்பாக்கி ஒபெநிங்கும்... பில்லா 2 படம் வெளியாக முன்னர் அஜித்தை பிடிக்காதவர்கள் இது "ஏ" சேட்டிபிக்கட் படம், அது இதெண்டு நிறைய புலம்பினாங்க... ஆனா படம் வந்தாப்பிறகு அதை பாதிப்பேரு மறந்துவிட்டார்கள், அதிலும் துப்பாக்கி வந்தாப்பிறகு அனைத்து அஜித் எதிர்ப்பாளர்களுமே பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதை மறந்துவிட்டார்கள்... ஏனென்டா பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதால அதற்கு 30% வரி உண்டு..அதாவது பில்லா 2 இன் மொத்த கலக்சனில் 30% ஆனா பங்கு அரசாங்கத்துக்கு வரியாக சென்றுவிடும். மீதி 70% ஆனா பங்கே கலக்சனாக கருதப்படும்.. அதாவது தமிழக பாக்ஸ் ஆபீஸ் தரவுகள் யாவுமே வரியாக செலுத்தவேண்டியது போக மீதி 70% ஆனா பங்கே ஆகும்.. 70% ஆனா பங்கை துப்பாக்கியின் முழு கலக்சனுடன்  ஒப்பிடுவதற்காக சேட்டிபிக்கட் விஷயத்தை மறந்தே போனார்கள்போலும். ஆனால் அதைவைத்துத்தான் படம் வெற்றியா? தோல்வியா?அவரேஜ்ஜா? என கணிக்கப்படும்.. ஏனென்டா மீதி 70% ஆனா பங்கு கலக்சன்தானே விநியோகிஸ்தர்கள்,தியேட்டர் அதிபர்களுக்கு போகப்போகுது???......
ஆனா, அஜித்தை பிடிக்காதவர்கள்(எல்லோருமல்ல, குறிப்பிட்ட சிலர்) இதை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே இந்தப்பதிவை நான் எழுதணும் என்று எண்ணினேன்... கொஞ்சம் அடிப்படையிலிருந்தே போவோமென்...உதாரணத்துக்கு அஜித் ரசிகர்களின் பல்வகமையை பார்த்தால் அதில் கிட்டத்தட்ட 90% ஆனோர் இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களே!, ஆனா விஜய் ரசிகர்களை பார்த்தா அவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது வீதமானோர்தான் ஆண்கள், அதிலும் அநேகமானோர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள்.. மிகுதி தரப்பினர் பெண்கள்,மற்றும் குடும்ப ரசிகர்கள்.. சூர்யா ரசிகர்களை பார்த்தா கிட்டத்தட்ட முப்பது வீதமானோர்தான் ஆண்களா இருப்பார்கள்.... சுருக்கமா சொன்னால் அஜித்தின் ரசிகர்கள் இளைஜர்கள், விஜயின் ரசிகர்கள் சிறுவர்கள்,பெண்கள்.... சூர்யாவின் ரசிகர்கள் பெண்கள்,குடும்பத்தினர் .... இந்த ரசிகர்களின் பல்வகமைதான் அஜித்தின் "கிங் ஆப் ஒபெநிங்" கு அடிப்படை காரணம்......    
ஆனா, இதில காமெடி என்னவெண்டா இன்னொரு நடிகரின் பட கலக்சனோடு அஜித்தின் பில்லா 2 பட கலக்சனை ஒப்பிடேக்க 30% வரி போக மீதி 70% ஆனா பங்கை வைச்சு ஒப்பிடுவதுதான்... நான் தெரியாமல்தான் கேக்குறேன் வரியா செலுத்திய 30% ஆனா கலக்சன் என்ன வானத்தில இருந்தா வந்திச்சு? அதுவும் பில்லா 2 படத்தை பார்க்கவந்தவர்களால வந்த கலக்சன்தானே!..  அப்போ இன்னொரு படத்துடன் பில்லா 2 பட கலக்சன்களை ஒப்பிடும்போது உண்மையான கலக்சனையல்லவா ஒப்பிடணும்??? குறிப்பாக துப்பாக்கி வெளிவந்தாப்பிறகுதான் இவ்வாறான சுவாரிசயங்கள் இடம்பெறத்தொடங்கின. 
சரி முதல்ல சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை பார்ப்பம்... 
பில்லா 2 இன் முதல் முன்று நாள் மொத்த கலக்சன் 4 கோடிகள் (நெட் கலக்சன் 2.8 கோடிகள்.(source)
துப்பாக்கி முதல் 6 நாள் மொத்த கலக்சன் 4.83 கோடிகள் (source)

தமிழகத்தில் முதன் நாள் வசூல் 
பில்லா 2 மொத்த கலக்சன் 10.85 கோடிகள் (நெட் கலக்சன் 7.525 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 9.25 கோடிகள் (source)

தமிழகத்தில் முதன் 3 நாள் வசூல் 
பில்லா 2 மொத்த கலக்சன் 27.15 கோடிகள் (நெட் கலக்சன் 19 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 22.15 கோடிகள் (source)
இப்போ புரிந்திருக்கும் யார் கிங் ஆப் ஒபெநிங் எண்டு. 
துப்பாக்கி படத்துக்கு யூ சேட்டிபிகேட் எண்டதால எந்தவித வரி அறவிடலும் இல்ல...மொத்த கலக்சன்தான் நெட் கலக்சன். ஆனா உண்மை நிலை (தெரிந்தும்) தெரியாது ஒரு சில அஜித் எதிர்ப்பாளர்கள் சமுக வலைத்தளங்களில் துப்பாக்கியின் மொத்த கலக்சனை பில்லா 2 இன் நெட் கலக்சனுடன் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்..  இதிலிருந்து அவர்களின் இயலாத்தன்மை புலப்படுகிறது..
தமிழகம் தவிர்ந்த கேரளாவில் முதன் நாள் வசூலில் மாற்றான் 96.5 லட்சங்களும் துப்பாக்கி 87 லட்சங்களும் வசூலிச்சுள்ளமை குறிப்பிடத்தக்கது (source)..வெளிநாடுகளில் வசூல் நிலைமைகள் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம்.. என்னதான் பெரிய ஹிட் எண்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா சிங்கப்பூரில் 5 கோடிகள், யூ .கே, அமெரிக்காவில் மொத்தமா முன்று கோடிகளும், கேரளாவில் நான்கு கோடிக்களும்தான் வசூலிக்கும்.  இதனால் தமிழகம் தவிர்ந்த ஏனைய பிரதேச கலக்சன் நிலவரங்கள் மொத்த கலக்சனில் பெரிதாக பாதிப்பு செலுத்தாது. பொதுவா மொத்த கலக்சன்களில் வெறும் 10% - 15% ஆனைவையே தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து தமிழ் படம் ஒன்றுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                                          thala-the king of opening forever

Sunday, November 11, 2012

அஜித்தும் அஜித் ரசிகர்களும்... ஸ்பெசல் அலசல்;



நீண்டகாலமா அஜித் பற்றிய எந்தவொரு பதிவும் போடாததால் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்... அஜித்,அஜித் ரசிகர்கள் போக்குகள் பற்றிய சிறியதொரு தொகுப்பே இது... முதலில் அஜித் ரசிகர்கள் எப்பிடிப்பட்டவர்கள் என்று பார்ப்பம்.. அஜித் ரசிகர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள்தான். பொதுவா எல்லோரினதும் கருத்து என்னவென்றால் அஜித் ரசிகர்கள் எல்லாம் வில்லங்கம் பிடித்தவர்கள் என்பது, ஓரளவுக்கு உண்மையும்கூட அதற்கு காரணம் இல்லாமலல்ல..  அமர்க்களத்தில் தான் ஒரு மாஸ் ஹீரோ எண்டதை வெளிக்காட்டினபின் இன்றுவரை அவருக்கு பெரிய ஹிட் படங்கள் என்று சொல்பவையில் பெரும்பாலானவை நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில் நடித்த படங்களே! ஹீரோ படத்தில் எப்பிடியிருப்பாரோ அது அவரின் வெறித்தனமான ரசிகர்களின் போக்கிலும் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதில் மறுப்பில்லை. இதை நீங்க ரஜினி,கமல் ரசிகர்களுக்கிடையிலான வித்தியாசத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம்..  அதுமட்டுமல்ல அஜித் என்ற நடிகனை தாண்டி நிஜ வாழ்க்கையில் அஜித் என்ற மனிதனை நேசிக்கிறதுக்கே ஒரு பெரிய கூட்டம் இருக்கு... 
தனக்கெண்டு ஒரு கொள்கை, எந்த சமயத்திலும் யார் எதிர்த்தாலும் விட்டுக்கொடுக்காத மனத்தைரியம், தனக்கொன்று சரியெண்டு பட்டால் அது பிழையென்றாலும் சரிவர செய்துமுடிக்கின்ற துணிச்சல், தானும் தன்வேலையும் என்றிருக்கும் நேர்மைத்தனமும், யார் புத்திமதியையும் கேட்கவிரும்பாத அடங்காத்தனமும், யாருக்கும் ஜால்ரா அடிக்கவிரும்பாத வெறித்தனமும், யார் நிழலிலும் உறங்க விரும்பாத ரோசத்தனமும் அஜித்திடம் ரசிகர்களுக்கு வெறி உண்டாக முக்கிய காரணங்களாகும். அஜித் ரசிகர்கள் அஜித்திடம் வைத்துள்ள வெறித்தனத்தை வேற எந்தவொரு நடிகர்களிடமுமே பார்க்கமுடியாது.. தமிழ் சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவா இருந்தா மட்டுமே ரசிகர்கள் வெறித்தனமா இருப்பார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாகும்... எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரும் நிஜத்திலும் ஹீரோவாக இருப்பதாலேயே அவர்களுக்கு பின்னால் வெறித்தனமான ரசிகர்கள் நிறையவே இருந்தார்கள்.
 அதில், எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோருக்கு அப்போதைய மக்களின் அறியாமையும் ஒரு சாதகமாக அமைந்தது என்பதில் மறுப்பில்லை.. எம்.ஜி.ஆர் தனது வாழ்நாள் முழுவதுமே மக்களின் அறியாமைத்தனத்தால் நன்றாகவே பிழைத்தார்.. அதேபோல ரஜினியின் ஆரம்ப தசாப்தகாலங்களும் இதேபோலவே.. ஆனால் இன்றைய காலத்தில் மக்கள் எல்லோரும் விழிப்படைந்துவிட்டார்கள்.. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை நன்றாகவே புரிந்துவிட்டார்கள். அப்பிடியிருக்கையில் அஜித்துக்கு இருக்கும் இவ்வளவு பெரிய வெறித்தனமான கூட்டம் எல்லோரையுமே வியக்கவைக்கிறது.. சரி, அஜித் ரசிகர்கள் அஜித்தை எவ்வாறு திரையில் பார்க்க விரும்புகிறார்கள்? எதை ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்... 
அஜித்துக்கு மிகப்பெரிய மைனசே டான்ஸ் மற்றும் காமெடிதான். இதில் அஜித் டான்சிலுள்ள குறைபாடு அஜித் ரசிகர்களுக்கு ஒரு வருத்தத்தை கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் ஜோக்கை அஜித் ரசிகர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அஜித் எப்போதுமே தீனா, அட்டகாசம், பில்லா, மங்காத்தாவில் வந்ததுபோல கெத்தா இருக்கணும் என்பதே அஜித் ரசிகர்களின் விருப்பம். தமது ஹீரோவை ஒரு காமெடிப்பீசாக பார்ப்பதற்கு எந்தவொரு அஜித் ரசிகனும் விரும்பமாட்டான். அதனால்தான் என்னவோ எல்லோராலும் விரும்பப்பட்ட கிரீடம் திரைப்படம் அஜித் ரசிகர்களை கவராததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதே காமெடி அம்சங்களுடன் விஜய் நடித்திருந்தால் அவரது ரசிகர்கள் நிச்சயம் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்திருப்பார்கள்.. 
இதைவிட ஹீரோயினுக்கு பின்னால முன்னால திரியிறது, அதிகம் அலம்புறது, ஹீரோயினுடன் பாடல் காட்சிகளில் சல்லாபப்படுறது, சாப்டான பாத்திரங்களில் நடிப்பது.. இப்பிடி ஏதாவது படத்தில் இருக்குமாயின் காறித்துப்பக்கூட தயங்கமாட்டார்கள்.. சில நடிகர்கள் லிப்டு லிப் கிஸ் குடுத்திட்டு அதை எப்பிடி குடுத்தேன் எண்டு பப்ளிக்கில விளக்கம்வேற சொல்வார்கள், சிலர் லிப்டையே கடிப்பார்கள், சிலர் உண்மையிலே கிஸ் குடுக்காம வேற தொழிநுட்பங்களை பயன்படுத்தி லிப்டு லிப் கிஸ் சீனை வைச்சிடுவாங்க..ஆனா, அஜித் அதெல்லாம் சரிப்பட்டுவராதெண்டு மங்காத்தாவில் வெங்கட்பிரபுவிடம் உறுதியாகவே சொல்லிட்டார்.. ஆரம்பத்தில் யாரின் துணையின்றி கஷ்டப்பட்ட காலங்களில் கைவிட்ட மீடியாக்கள் இப்ப என்னடா எண்டா அஜித் ஒரு இடத்துக்கு போனால் என்ன நிற சேட்டு போட்டு போனார்? எப்பிடி ஹெயார் ஸ்டைல் இருந்திச்சு? எண்டதையெல்லாம் புட்டு புட்டு எழுதுறாங்கள்(சத்தியம் தியேட்டருக்கு அஜித் போனபோது அண்ட் வேறு சில தருணங்களில்).. அது மட்டுமல்ல அண்மையில் விஜய் டிவியால் அஜித்துக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகள் அஜித் விழாவுக்கு போகாததால் விஜய் டீவி நிறுவனரே நேரடியாக அஜித்தின் வீட்டுக்கு சென்று வழங்கி, அப்போது எடுத்துக்கொண்ட போட்டோக்களை விழாவின் காணொளிபிரதியுடன் சேர்த்து டீவியில் ஒளிபரப்பாகி பப்ளிசிட்டி தேடினார்கள்.. இதற்குமுதல் ரஜினிக்கு எந்திரனுக்கான மக்கள் விருது மற்றும் செவாலியார் சிவாஜி விருதை, ரஜினி வராததால் அவரின் வீடு தேடி சென்று கொடுத்து இதேபோல செய்தார்கள்..
எது எப்பிடியோ எத்தனையோ எதிரிகளின் எதிர்ப்புக்கும்,சூழ்ச்சிக்கும் நடுவே விடாப்பிடியாக அஜித் கடைப்பிடித்த கொள்கைகள் இன்று ரசிகர்களால் அவருக்கு தலைக்கு மேல் ஆதரவை அள்ளிக்குடுத்துக்கொண்டிருக்கிறது.. விழாக்களுக்கு செல்லாமை, தனது படங்களுக்கு புரோமோஷன் செய்யாமை, ரசிகர் மன்றங்களை கலைத்தமை இவற்றையெல்லாம் ஒரு குறையாக பப்ளிசிட்டி பண்ணின வேளையிலும் அஜித் ரசிகர்கள் அஜித் மேலுள்ள அந்த விசுவாசத்தை கடுகளவேனும் குறைக்கவில்லை மாறாக படத்துக்கு படம் ரசிகர்கள் அளிக்கும் ஒபெநிங் எல்லோரையும் வியக்கவைக்கிறது.. 
                          வாழ்க தல! வளர்க உன் புகழ்....

Monday, October 22, 2012

பலிக்கடாவாகிய சூர்யா..........

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முதலெல்லாம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களை நஸ்டப்படுத்தாத நடிகர்கள் யாரெண்டு பார்த்தா ரஜினிக்கு அப்புறம் எல்லா சினிமா விற்பன்னர்களும் முணுமுணுப்பது சூர்யாதான்... சூர்யாவிடம் கால்சீட் பெற்றுவிட்டால் கோடிகளில் இலாபத்தில் புரளலாம் என்பது அவர்களின் எதிர்பாப்பு.. உண்மையும்கூட... தொட்டதெல்லாம் பொன் என்று உச்சத்துக்கு சென்ற சூர்யாவுக்கு யார் கண் பட்டுதோ தெரியேல இறுதி இரு படங்களுமே பெருத்த ஏமாற்றம்.. ஏழாம் அறிவு, மாற்றான் இரண்டுமே சரிவர போகவில்லை.. அதற்கு முதல் 2005 முதல் 2010 வரை அவர் ஹீரோவாக நடித்த படங்களில் "மாயாவி" தவிர எதுவுமே தோல்விப்படமல்ல.. அதற்குள் "ஆறு", "ஆதவன்" சராசரியாக ஓடியது, மிகுதி எல்லாமே கிளீன் ஹிட்... இவ்வாறு உச்சத்துக்கு போன சூர்யாவின் அண்மைய சறுக்கலுக்கு என்ன காரணம்? இதுதான் தற்போதைய கேள்வி.... 
இதற்கு நிறைய காரணங்கள் இருப்பினும்.. பிரதான காரணம் ஒன்றை அலசுவது சாலச்சிறந்தது.. பொதுவாக ஒரு ஹீரோக்கு மாஸ் படங்கள் ஹிட் குடுத்து மாஸ் ஹீரோ ஆகிவிட்டாலே அதற்குப்பிறகு அவர்களிடம் தரமான படங்களை காணுவது அபூர்வம்.. ஐந்து பாட்டு, ஐந்து பைட், பஞ்ச டயலாக் எண்டு ரசிகர்களை சாவடிக்காத குறையாக கதைகளை தேர்வுசெய்து படம் நடிப்பார்கள்.. அதேபோல சூர்யாவும் அயன்,ஆதவன்,சிங்கம் ஆகிய படங்களுக்கு பிறகு அந்த வழியில்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அதுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கு அவ்வகையிலான படங்களில் ஆர்வம் இல்லையெனவும்.. வித்தியாசமான கதைக்களங்கள்தான் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதட்கேற்றால்போலவே அவரின் அடுத்தடுத்த படங்களான ஏழாம் அறிவு, மாற்றான் கதைத்தேர்வும் இருந்தது....  அது மட்டுமல்ல முன்னணி இயக்குனர்களான முருகதாஸ் மற்றும் கே.வி ஆனந்தின் படங்கள்... இங்கைதான் சூர்யா மிகப்பெரிய தவறை விட்டிருந்தார்.. 
எல்லா இயக்குனர்களிடையேயும் ஒரு பொதுவான குணாதிசியம் இருக்கின்றது என்னவெனில்.. அவர்களின் படங்களின் பாணி ஒரேமாதிரியிருக்கும்.. உதாரணமாக பாரதிராயாவின் படமெண்டால் கிராமத்து மண்வாசனை அள்ளிவீசும்,.. ரவிக்குமார், விக்ரமன் படங்கள் என்றால் குடும்ப கதைகளை சித்தரிப்பவையாக இருக்கும், ஹரி படங்கள் முழுக்க முழுக்க ஆக்சன் படங்களாக இருக்கும்...... இதற்கு மாறுதலாக அவர்கள் பொதுவாக படங்கள் எடுப்பதில்லை, அவ்வாறு எடுப்பினும் சரிவராமலே போயின.. இதற்கு நல்ல உதாரணம் சரணின் அசல், பிரபுதேவாவின் வில்லு எண்டு ஒரு பட்டியலை சொல்லிக்கிட்டே போகலாம்... அதேபோலவே முருகதாசுக்கும் ஒரு ரெண்ட் உள்ளது, கே.வி.ஆனந்துக்கும் ஒரு ரெண்ட் உள்ளது.. ஆனால் இவர்கள் கடைசியா எடுத்த படத்தை பார்த்தா இவர்களின் முந்தைய படங்களின் ரெண்டிலிருந்து முற்றிலும் விலகியிருப்பதை நீங்க அறியலாம்... தீனா, கஜினி, ரமணா போன்ற படங்களை எடுத்த முருகதாசுக்கு ஏன் சூர்யா ஏழாம் அறிவு படத்தை கொடுத்தார்? அயன், கோ மாதிரியான படங்களை இயக்கிய கே.வி.ஆனந்துக்கு ஏன் மாற்றான் படத்தை கொடுத்த்தார்? மசாலா ஹிட் குடுத்த இயக்குனர்களுக்கு வரலாற்று கதைகளையும், விஞ்ஞான ரீதியிலான படங்களை எடுக்க சொன்னால் அவங்களால என்னதான் பண்ணமுடியும்?
சூர்யா நடிக்கவெண்டு வந்திட்டா எந்தவகையிலான ரிஸ்கையும் எடுக்கவல்ல நடிகர் எண்டதை கச்சிதமாக பயன்படுத்தி முருகதாசும்,கே.வி.ஆனந்தும் ஒருக்கா புதுசா ஏதாவது செய்து பார்ப்போமேன் எண்டு சூர்யாவை பலிக்காடா வைச்சு பழகிட்டார்கள். தன்னால இந்த ரெண்ட் சரிவராதெண்டு புரிந்த முருகதாஸ் துப்பாக்கி படத்தில தண்ட பழைய ரெண்டுக்கே போய்விட்டார்.. கே.வி.ஆனந்தும் பெரும்பாலும் தண்ட பழைய பாணிக்கே மாறிடுவார்.. அப்போ சூர்யா என்ன இளிச்சவாயனா? உங்க உங்க பாணியிலே சூர்யாவுக்கும் ஒரு ஹிட் குடுத்திருக்கலாமே! ....... லஞ்சம், ஊழல் பிரச்சனைகளை மையமா வைச்சு பிரமாண்டமா படங்களை எடுத்துவந்த சங்கர் தண்ட பாணிக்கு முற்றிலும் மாறாக எந்திரன் என்ற படத்தை எடுத்து மிகப்பெரிய ஹிட் குடுத்து இந்திய அளவில நம்பர் ஒன் இடத்தை பிடித்ததுக்கு பதிலடியாக தாங்களும் சாதிச்சு காட்டுவம் எண்டுதான் முருகதாசும்,ஆனந்தும் முயட்சிசெய்திருக்கினம்போல.. ஆனா எல்லாமே புஸ்வாணம் ஆகிட்டு..... ஒருவேள ஏழாம் அறிவும், மாற்றானும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தால் சங்கரின் இடத்தை இவர்கள் பிடித்திருக்கலாம் எண்டதை மறுக்கேலாது............. என்னவோ முருகதாஸ்,ஆனந்தின் பேராசைக்கு சூர்யா பலிக்காடாகிட்டார் எண்டது மட்டும் உண்மை...
வித்தியாசமாக கதைத்தேர்வு செய்திட்டு பெரிய இயக்குனர்களுக்கு படத்தை கொடுப்பது  மட்டும் முக்கியமல்ல... அந்தக்கதைக்கு அந்த இயக்குனர் பொருத்தமானவரா என்பதையும் தீர்மானிக்கவேணும்..

(மாற்றான் எனக்கு நல்லாவே பிடித்தது... ஆனா பொதுவான விமர்சனங்களின் அடிப்படையிலும், கலக்சனின் அடிப்படையிலுமே இப்பதிவை எழுதியுள்ளேன்....)




Wednesday, June 27, 2012

சகுனியும் கேவலங்களும் (இது விமர்சனம் இல்லை )

பலத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை போடுகின்றதென்று ஒருசில மீடியாக்களால் சகுனி தூக்கிவைத்துகொண்டாடப்படும் இவ்வேளையில், சத்தமில்லாமல் இன்னுமொரு காரியத்தையும் சகுனி படக்குழுவினர் செய்துவிட்டனர்.. ஆமாங்க "சக்சஸ் மீட்டிங்" ஐ வைத்துவிட்டார்கள்.. தமிழகத்தின் புதிய பாக்ஸ் ஆபீஸ் கிங் எண்டு கார்த்தி,சூர்யா ரசிகர்களால் விளம்பரப்படுத்தப்படும் கார்த்தி, தமிழகத்தின் புதிய சக்சஸ் மீட்டிங் கிங் எண்டு எல்லா ரசிகர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். உண்மையை சொல்லப்போனால் கார்த்தியின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும்போது சகுனியின் ஒபெநிங் கலக்சனானது கிட்டத்தட்ட ஒன்றரை,இரண்டு மடங்காகியுள்ளது உண்மைதான்.. காரணம் முன்னைய படத்தைவிட அதிக விளம்பரப்படுத்தல், மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை.. அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டால் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு தப்பித்துக்கொள்ளலாம்.. எவ்வாறெனின் படம்வரமுதல் முற்பதிவு செய்வதால் ஒரு குறிப்பிட்ட வருமானம் முதல்லே கிடைக்கும். மேலும் எப்பிடியும் படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே விமர்சங்கள் அதிகப்படியா வரத்தொடங்கும், இதற்கிடையில் அதிகப்படியானோர் படத்தை பார்த்துவிடுவார்கள்.. இதன் காரணமாக சகுனியும் ஒபெநிங் கலக்சனில தப்பிச்சுக்கொண்டதெண்டே சொல்லலாம்..
சரி, நாம சக்சஸ் மீட்டிங் பக்கம் திரும்புவம்... இந்த கொடுமை எப்பதான் தமிழ் சினிமாவை விட்டு போகப்போகுதோ தெரியேல.. ரெண்டு வருடங்களுக்கு முதல் பாரத்தமண்டா ஒரு முன்னணி நடிகர் மட்டுமே இந்த விடயத்தில கில்லாடியா இருந்தார்.. அட்டர் பிளாப் படங்களுக்கெல்லாம் அவர் நடத்தின சக்சஸ் மீட்டிங்கை அவரது ரசிகர்களே இப்பவும் மனதுக்குள் நினைத்து நினைத்து சிரிப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படியான சில நடவடிக்கையால்தான் குறித்த அந்த நடிகர் சமுகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தவிர மிகுதி எல்லா ரசிகர்களாலும் மோசமாக கலைய்க்கப்பட்டு வருகின்றார்.. இப்ப என்னடா என்றா கார்த்தி தம்பியும் ஏட்டுக்கு போட்டியா சக்சஸ் மீட்டிங் வைத்துவிட்டார்.. நான் நினைக்கிறேன் சகுனிக்கு வந்த மோசமான விமர்சங்கள் படத்தின் கலக்சனுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் என்ற பயத்தில ஒரு முன்னெச்சரிக்கையா இந்தவேலையை கச்சிதமா முடித்துவிட்டார்போலும்..
சக்சஸ் மீட்டிங்:பாகம் 1 (video)
சக்சஸ் மீட்டிங்:பாகம் 2 (video)
சக்சஸ் மீட்டிங் வைக்கிறது என்னைப்பொறுத்தவரையில் தப்பென்று சொல்லமாட்டேன்.. ஆனால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியா, நம்பும்படியா வைக்கணும்.. படம் வெளிவந்து மூன்றாம்,நான்காம் வாரங்களில் படம் உண்மையிலே அதிகப்படியாக வசூலிக்கும் பட்சத்தில் வைத்தா அதை ஏற்றுக்கொள்ளலாம்.. அதைவிடுத்து முப்பது,நாற்பது கோடிகளுக்கு படத்தை விநியோகிஸ்தர்களுக்கு விற்றுவிட்டு முன்றாம், நான்காம் நாளில் சக்சஸ் மீட்டிங் வைத்தா என்னய்யா கதையிது? கிட்டத்தட்ட முப்பது முதல் நாற்பது கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சகுனி திரைப்படம் கடந்த ஜூன் 22 இல் உலகெங்கும் ரிலீசாகி ஜூன் 25 அன்று(படம் ரிலீசாகி நான்காம் நாள்) காலை ஹைதராபாத்திலும், மதியம் சென்னையிலும் சக்சஸ் மீட்டிங் வைத்தார்கள்.. அப்பிடியாயின் முதல் முன்று நாளில் அதன் வசூல் ஐம்பது கோடியை தாண்டிவிட்டதா?.... இருபதுகோடிகூட தாண்டியிராது.. அதற்குள் சக்சஸ் மீட்டிங் வைத்து கொண்டாடுறாங்க... தயாரிப்பாளரும், விநியோகிஸ்தர்களும் படத்தின்ட உண்மையான வசூலை ஹீரோக்களுக்கு பயப்பிடாது எப்ப பகிரங்கமாக தெரிவிக்கிறார்களோ! அப்பத்தான் இவ்வாறான பேர்வழிகளும் திருந்துவாங்கள்....
தற்போது காலம் எங்கையோ போய்விட்டது..இதொண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி, மற்றும் ரஜினி-கமல்,அஜித்-விஜயின் ஆரம்ப காலம் இல்ல.. சக்சஸ் மீட்டிங், போஸ்டர்ல பந்தா காடுறது, ஓடாத படங்களை காசு குடுத்கு ஓடவைத்து ரசிகர்களை ஏமாற்ற.....இப்பவெல்லாம் பேஸ்புக்,டுவீட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் நன்கு பிரபல்யமாகிவிட்டது.. என்னதான் வெட்டி பந்தா விட்டாலும் மக்கள் மத்தியில் எடுபடாது.. ஒவ்வொரு ரசிகனும் தத்தமது பிரதேசங்களில் ஒரு படம் எப்பிடி ஓடுகின்றதெண்டு பலபேருடன் கருத்துக்களை சமுகவலைத்தளங்களின் ஊடாக பகிருவதால் எது உண்மை எது பொய் என்ற நிலவரங்களை எல்லோராலும் பெற்றுக்கொள்ளமுடிகிறது...

comment