Friday, July 19, 2013

மரியான்- சுருக்கமான விமர்சனம்


பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தனுஷ்,பார்வதி நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீசானது. அண்மையில் ஹிந்தியில் வெளியான ரஞ்சனா பெரும் வரவேற்பை கொடுத்ததையிட்டு அதன்மூலம் தமிழ் தவிந்த வடஇந்தியாவிலும் மரியானுக்கு ஓரளவு கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் கதைக்குள் செல்வோமாயின் கதாநாயகன்,கதாநாயகி இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருதலைக்காதலில் ஆரம்பித்து இருவரும் காதலர்களாகி, கதாநாயகியின் குடும்ப கடனை தீர்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சூடானுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனுஸ். அப்புறம் அங்கு அவர் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே படத்தின் கதை.


படத்தில் தனுஷ் வழமைபோல தனது அபரிதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். எனினும் சில சீனில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். அதைவிட ஆடுகளம் பட பாஷைபோல் கதைப்பது சில இடங்களில் விளங்கவில்லை. ஆடுகளம் கொடுத்த விருதுகளின் தாக்கத்தில் இருந்து தனுஷ் இன்னமும் மீளவில்லை என்றே தோணுகிறது. மற்றும் பார்வதி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். பாடல்கள், பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாமே மிகமெதுவாக செல்வது கொஞ்சம் போர். அதேபோல ஒளிப்பதிவும் அருமை, எனது கருத்துப்படி தனுஷின் பங்களிப்பின் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவும் செவ்வனே அமைந்துள்ளது. கடற்கரைக்காட்சிகளை துல்லியமாகவே படம்பிடித்துள்ளனர். நேரில் அந்த சூழலை அனுபவிப்பதுபோல் ஒரு உணர்வு.


இதைவிட இயக்குனரின் பங்களிப்பு என்று பார்த்தால் மேலே சொன்னதுபோல நடிகர்கள்,நடிகைகள், இசை,ஒளிப்பதிவு இவற்றையெல்லாம் சிறப்பாகவே ஒருங்கமைத்துள்ளார். ஸ்கிரீன்பிளேயும் ஓகே, ஆனால் கதை விடயத்தில் மிகப்பெரும்பிழையை விட்டுள்ளார். கதை தவிர மற்ற விடயங்கள் சிறப்பாக இருந்ததால் சிலருக்கு கதையில் உள்ள ஓட்டைகள் தெரியவில்லை. கதை விடயத்தில் விட்ட பிழை என்னவெனில், இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக ஆபிரிக்கா செல்லும் ஒருவர் அங்கு படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் ஸ்ரோறி. ஆனா இந்தப்படத்தை பார்த்தாப்பிறகு கதாநாயகன் அப்பிடி என்னதான் அங்கை கஸ்டப்பட்டார்? என்று பார்த்தால் அதன் உள்ளடக்கம் மிக மிக குறைவே.


தனுஸ் இரண்டு ஆண்டுகள் அங்குவேலை செய்கிறார். ஆனா என்ன வேலை செய்கிறார்? வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை?? அவை ஒன்றுமே காட்டப்படவில்லை. சரி, இயக்குனரின் நோக்கம் அதுவல்லாமல் இருக்கும் என்று தொடந்து பார்த்தால் ஆபிரிக்காவில் இருந்து தனுஸ் இந்தியாவை நோக்கி வெளிக்கிடுகிறதிலிருந்து ஆபிரிக்க காட்சிகள் தொடங்குகின்றது. அவ்வேளையில் அங்குள்ள தீவிரவாதிகள் தனுஸ் உட்பட அவரின் குழுவை பிடித்து கடுமையாக தாக்குகிறது, பிறகு வேற இடத்தில் கொண்டுபோய் தாக்குகிறது .. இப்பிடி மாறி மாறி அடிப்பதை தீவிரவாதிகள் தாக்குவதையே காட்டியிருக்கிறார்கள். இன்னமும் இதை சிறப்பாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். மற்றும் படம் ஆமை வேகத்தில் செல்வதும் கொஞ்சம் போர். இந்தப்படத்தின் உள்ளடக்கத்தை துல்லியமாக படக்குழுவினர் அறிந்துவிட்டனர்போலும், அதனால்தான் "3" படத்துக்கு செய்ததுபோல் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பவில்லை. எனினும் கதையளவில் உள்ள ஓட்டைகள் மற்றைய விடயங்களின் நேர்த்தியான தொகுப்பினால் பார்வையாளர்களை அந்தளவுக்கு வெறுக்கவைக்கவில்லை. எனது கருத்துப்படி படம் அவரேஜ். வணிக ரீதியாக ஹிட்டாவதும் சந்தேகமே!                        


Saturday, July 6, 2013

ஹாப்பி பேர்த்டே மகேந்திரசிங் டோனி:))


*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டோனி*
எனக்கு பிடித்த தென்னாபிரிக்க அணி வீரர்களைப்பற்றிக்கூட இதுவரை எந்தவொரு பதிவும் இடவில்லை கிரிக்கட்டில் தனியொருவரைப்பற்றி நான் எழுதும் முதல் ஆக்கம் இதுவே. வேடிக்கை என்னவெனில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முதலெல்லாம் இந்திய டீமில பிடிக்காத பிளேயர் யாரெண்டு கேட்டா டோனி எண்டுதான் முதலில் சொல்வேன். இதுக்காகவாவது இந்தியா தோற்கணும், டோனி வேளைக்கு அவுட் ஆகணும் என்று விருப்பப்படுவேன். காரணம், கங்குலி மீது எனக்கிருந்த பிடிப்புத்தான். நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கிய காலத்தில் கங்குலி இந்திய அணித்தலைவராயிருந்தார். அக்காலகட்டத்தில் அதாவது அசாருதீன், ஜடேயா, மொங்கியா போன்ற வீரர்கள் இந்திய அணியிலிருந்து விலகிய சமயத்தில் இந்திய அணி பலங்குன்றியதாகவே இருந்தது. துடுப்பாட்டவரிசையில் சச்சின், கங்குலி, திராவிட் தவிர எவருமே சிறப்பான, தொடர்ச்சியான பெறுபேற்றை வழங்குபவர்களல்ல. அதேபோலவே பந்துவீச்சும் சொதப்பல், களத்தடுப்பு ஆகலும் மோசம். அப்பவெல்லாம் பந்தை விழுந்து பிடிப்பதற்கே வீரர்களிடம் போதிய பயிற்சி இல்ல, கீப்பர் திராவிட், அஜய் ராத்ரா, விஜய் டஹியா எண்டு ஆள்தான் அவ்வப்போது மாறினார்களே தவிர உருப்படியான ஹீப்பர் என்று சொல்ல எவருமில்ல. அப்பிடி மோசமாக இருந்த காலத்திலும் இந்திய அணியினர் மண்டித்து கீழே விழவில்லை. இயலுமானவரை போட்டி கொடுத்தனர். அதற்கு முக்கிய காரணம் துடுப்பாட்டத்தில் அக்காலத்தில் கங்குலியின் ஆதிக்கமும், வெறித்தனமான தலைமைத்துவமும்தான். இதனால்தான் எனக்கு இன்றுவரை கங்குலியை மறக்கமுடியவில்லை. கங்குலி போய் ராவிட்டின் தலைமைப்பதவி போகும்வரையிலும் இந்தியாவின் சிறந்த கப்டன் என்றால் கங்குலிதான் என்று மீடியாக்கள், ரசிகர்கள் கங்குலியை புகழ்ந்தன.


ஆனால் டோனியின் அணித்தலைமை பிரவேசம் எப்போது ஆரம்பிச்சோ அன்றிலிருந்து எல்லாமே டோனிமேனியா ஆகிவிட்டது. டோனி கப்டனா வந்த காலப்பகுதியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது, அதுமட்டுமில்ல கங்குலி காலப்பகுதியைவிட தோனி காலப்பகுதியில் மற்றைய அணிகளும் பலவீனமடைந்துவிட்டன. அதனால் என்னிடம் ஒரு கேள்வி நல்ல டீம் இருந்தா எந்த கப்டனாலும் ஜெயிக்கலாம். டாடா மோசமான அணியை வைச்சே எவ்வளவு சாதிச்சிட்டார்.. அப்பிடி இருக்கேக்க தோனிக்கு இவ்வளவு புகழா?? இதுதான் நம்ம கடுப்பு. இந்த கடுப்பெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது சென்னைக்கு வெறித்தனமா சப்போட் பண்ணத்தொடங்கினேனோ அதிலிருந்து முற்றுமுழுதாக போய்விட்டது. இண்டைக்கு தோனியை ஹீரோவாக நினைக்கிற ரசிகர்களில் நானும் ஒருத்தன்.

சரி டோனியில் அப்பிடி என்ன ஸ்பெசல்? என்னுடைய மனதில் தோன்றியதை அப்பிடியே பகிர்ந்துக்கிறேன். (வரலாற்றுத்தகவல்களின் உதவியில்லாமல் எழுதுகிறேன், பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்)

1. இந்தியாவின் நம்பர் ஒன் வெற்றிகரமான கப்டன் இவர்தான். இவரின் காலப்பகுதியில்தான் அதிகப்படியான வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

2. இவரின் அணித்தலைமையின்கீழ் 50/50, T20, Chambion trophy ஆகிய மூன்று கிண்ணங்களும் இந்திய அணிக்கு கிடைத்தன.

3. போட்டியை அணுகும் முறை, அதாவது போட்டியின் எத்தருணத்திலும் குழப்பமடையமாட்டார். வீரர்களை மைதானத்தில் கண்டிப்பதில்லை. வெற்றி பெற்றால் துள்ளிக்குதிப்பதுமில்ல, தோல்வி என்றால் துவள்வதுமில்லை. ஒரு அணித்தலைவருக்கு திறமைக்கு அப்பால் இருக்கவேண்டிய உளவியல் சிறப்புக்கள் முழுவதும் டோனியிடம் உண்டு.


4. இந்திய கிரிக்கட் வரலாற்றிலேயே துடுப்பாட்டம், பந்துவீச்சுக்கு அப்பால் களத்தடுப்புக்கு அதிக சிரத்தை எடுத்தவர் டோனிதான். அண்மையில் Chambion trophy கிண்ணத்தை வென்றுவிட்டு வெற்றிக்கு முதலாவது காரணம் என்றுமில்லாத திறமையான களத்தடுப்புத்தான் என்று டோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

5. நான் அறிந்தவரையில் இந்திய கிரிக்கட் வரலாற்றிலே சிறந்த விக்கட் காப்பாளர் டோனிதான். அது மட்டுமல்ல இந்திய விக்கட் காப்பாளர்களிடையே சிறப்பாக துடுப்பெடுத்தாடவல்லவர்களில் டோனி முதலாமவர். (ராவிட்டை முழுநேர விக்கட் கீப்பாளராக கருதமுடியாதெனின்)

6. இளையோருக்கு ஊக்கப்படுத்தல், வெற்றிக்காக ரிஸ்க் எடுத்தல்.. அதாவது அண்மையில் நடந்த Chambion trophy போட்டிக்கான குழாமில் துணிச்சலாக கம்பீர், சேவாக், யுவராஜ், சஹீர்கான், ஹர்பஜன் போன்ற சிரேஸ்ட வீரர்களை நீக்கி சாதிச்சும் காட்டினார்.


இவ்வாறான அம்சங்கள்தான் இன்று தோனியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இங்கிலாந்து, அவுஸ்டேலிய மண்ணில் இடம்பெற்ற தொடர்ச்சியான டெஸ்ட் தோல்வியை அடுத்து டோனி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகணும் என்று அறிக்கைகள் விட்ட கங்குலி, கவாஸ்கர் போன்றோர் தற்போது டோனியின் தொடர்ச்சியான அணித்தலைவர் பங்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்றைய இந்திய அணியில் டோனி ஒரு தவிர்க்கமுடியாத வீரர். இவரின் அணித்தலைமைப்பதவிக்கு போட்டிக்கு இப்போதுள்ள வீரர்களிடையே எவருக்கும் சரியான தகுதி இல்ல. ஆகவே இன்னும் நீண்ட காலத்துக்கு அணித்தலைவர் அரியாசனத்தில் டோனியை பார்க்கலாம்.


((தற்போது காயத்தில் இருக்கும் டோனியின் மீள்வருகைக்காக காத்திருப்போம்:))

Friday, July 5, 2013

சிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே!)


ஒருவழியாக பலரும் எதிர்பார்த்த சிங்கம் 2 திரைப்படமானது உலகமெங்கும் 2000 இற்கு அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகிவிட்டது. 2010 இல் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் அதன் தொடர்ச்சியாகவே சிங்கம் 2 திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் ஹரி கூறுகையில் இதுவரை சிங்கம் 2 இற்காக பாடுபட்டதுபோல் எந்தவொரு திரைப்படத்திற்கும் பாடுபடவில்லை, இனியும் பாடுபடப்போவதில்லை என்றார். சூர்யாவின் கடந்த இரு படங்களும் பெரிதாக எடுபடாத நிலையில் இந்த படத்தை நிச்ச்சயம் ஹிட்டாக்கவேணும் என்ற முனைப்பில் ஹரி சூர்யாவை வைச்சு செவ்வனே செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லணும். இந்தப்படத்தின் டெயிலர்,டீசர் போன்றவற்றில் உரத்த சத்தங்களுடனான வசனங்கள், காரமசாலா அம்சங்கள் இருந்ததால் இந்தப்படம் தேறாதெண்டே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனா மெயின் பிக்சர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது. அடுத்ததாய் விமர்சனத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.


நடிகர்கள்- சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், ரஹ்மான்,                             ராதாரவி, நாசர்
இயக்கம்- ஹரி
இசை-தேவிசிறீ பிரசாத்
ஒளிப்பதிவு- பிரியன்
தயாரிப்பு- லக்ஸ்மன் குமார்
வெளியீடு- பிரின்ஸ் பிக்சர்ஸ்(தமிழில்), ஸ்ரூடியோ கிரீன்(தெலுங்கு)

கதைக்குள் போவோமாயின் சிங்கம் படத்தின் இறுதியில் போலிசை ராஜினாமா பண்ணிவிட்டு மளிகைக்கடை வைக்கப்போவாதாக சொல்வார் சூர்யா, ஆனா உண்மையில் அவர் பொதுமக்களின் பார்வையில் போலிசை ராஜினாமா பண்ணியதுபோல் பாவனை செய்துகொண்டு தூத்துக்குடியில் ஆயுதம் கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அப்புறம் ஒரு கட்டத்தில் பப்ளிக்கா டி.ஜி ஆகி கடத்தல்காரர்களை வேட்டையாடுகிறார். இதுவே ஒன் லைன் கதை. அவர் எப்பிடி வேட்டையாடுகிறார் என்பதை திரைக்கு சென்று பாருங்கள்.


சூர்யா- போலிசுக்கேற்ற எடுப்பான,மிடுக்கான தோற்றம், ஆவேசம், வேகமான உரத்த தெளிவான வசன உச்சரிப்பு, டான்ஸ் என சீனுக்கு சீன் பின்னி எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் முக்கியமான பிளசே சூர்யாதான்.

ஹரி- வழமைபோலவே இப்படத்திலும் சிறப்பாக செயற்பட்டுள்ளார், எனினும் கதையில் பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி சற்று குழப்பமடைய செய்துவிட்டார். படத்தின் நீளமும் கூட. எனினும் வேகமான ஸ்கிரீன்பிளே, கமெர்சியல் அம்சங்களின் சரியானா கலைவையினால் பார்ப்பவர்களை சலிப்படைய செய்யவில்லை.

அனுஷ்கா,ஹன்சிகா- அனுஸ்காவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவிற்கு காட்சிகள் அதிகம். heavy role என்று இல்லை. ஆதலால் வழமைபோலவே படத்தை மெருகேற்றியுள்ளனர்.

விவேக்,சந்தானம்- இப்பகுதியில் சந்தானத்துக்கு விவேக்கைவிட அதிக காட்சிகள். சிங்கம் ஒருபுறம் வேட்டையாட அவ்வப்போது இவர்களின் காமெடி பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியது.

பாடல்கள்- ஆடியோ, வீடியோ இரண்டுமே அவரேஜ். சூர்யாவை மட்டும் ஓரிரு பாடல் காட்சிகளில் வழமைக்கு மாறான டான்ஸ்சில் ரசிக்கலாம்.


படத்தில் வெளிப்படையா சொல்லுமளவுக்கு குறை என்னவென்றால் கடத்தல்காரர்கள் சர்வதேச வலையமைப்பில் இருந்து தூத்துக்குடிக்கு போதைபொருட்களை கடத்துவதாகவே கதை, ஆனா இவற்றை கண்காணிக்கும் சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏதோ பக்கத்து வீட்டில என்ன நடக்கிறது என்பதை வேலி துவாரத்தின் ஊடாக ஒட்டி நின்று பார்ப்பதுபோல அவதானிக்கிறார். இது சற்று நடைமுறைச்சாத்தியமற்றதே!! நிறைகள் என்று பார்த்தால் சந்தானம் எந்திரன்,தசாவதாரம்,சிங்கம் பட காட்சிகள் போல் வருபவை, இடைவேளைக்கு பின்னரான அனல் தெறிக்கும் வேகம்.... இவ்வாறு குறைகளை விட நிறைகளை சொல்லிட்டே போகலாம். எனது கருத்துப்படி படம் சூப்பர். மிஸ் பண்ணிடாதீங்க..

*கடந்த வாரம் இயக்குனர் ஹரி பற்றி நான் எழுதிய பதிவு, தவறாமல் இதையும் ஒருதடவை படிக்கவும்.

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


comment