Tuesday, December 18, 2012

அஜித்தின் டாப் 10 திருப்புமுனைப் படங்கள்

அஜித்தின் திரைப்பட கரியரில் வெற்றிகள், தோல்விகளின் மத்தியில் சில படங்கள் அவரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன.அதில் எனது நோக்கின்படி பத்து படங்களை தரவரிசைப்படுத்தியுள்ளேன். குறிப்பு- இது அஜித்தின் டாப் 10 சிறந்த படங்களின் பட்டியல் அல்ல. திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களின் தரவரிசையே ஆகும்.

10. பவித்திரா 

1994 ஆம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் நாசர்,ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். வணிகரீதியாக பெரியளவு வெற்றி பெறாவிடினும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு படம். அஜித்தின் அன்றைய ஹீரோ வால்யூவிற்கு ஏற்றாட்போல ஹிட்டாக அமைந்தது. தமிழில் ஹீரோவா அஜித்துக்கு இது இரண்டாவது படம். 

9. காதல் மன்னன் 

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணின் முதல் படம். பரத்வாஜின் இசையில் 1998 இல் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் மானு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, விவேக், கரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். முழுநீள காதல் கதையுடன் அமைந்த இத்திரைப்படம் வணிக,விமர்சன ரீதியாக மிகப்பெரும் வெற்றியை அஜித்துக்கு பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல 1997 இல் வெளிவந்த அஜித்தின் நேசம்,ராசி,உல்லாசம்,பகைவன்,ரெட்டை ஜாடை வயது ஆகிய ஐந்து படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு வந்து மிகப்பெரிய ஹிட் என்பதால் அஜித்தின் வெற்றிகரமான பயணத்தில் காதல் மன்னனும் ஒரு திருப்புமுனையே! 

8. வரலாறு 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எவ்வளவோ சிக்கலுக்குப்பிறகு வெளிவந்த திரைப்படம். ஆரம்பத்தில் இந்த திரைப்பட கதையை அஜித்துக்கு சொல்லும்போது அதில் நடிக்க அஜித் சம்மதிக்கவே இல்லை. ஆனாலும் கமல், ரஜினிகாந்தின் அறிவுரைக்கு பிறகே அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்பா, இரண்டு பிள்ளைகள் இதில் தந்தை வேடமானது நடனம் பயின்று அதன் ஒவ்வொரு அசைவுகளையும் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிற கரக்டர், ஒரு மகன் வேடம் சைக்கோ வில்லனாயும், மற்றைய மகன் நண்பர்களுடன் குடித்து கும்மாளமடிக்கும் ஒரு இளைஜனின் வேடம்.. கிட்டத்தட்ட முன்று வேடமுமே எதிரும் புதிருமான வேடம்.. இந்த முன்று கரக்டரையும் உணர்ச்சி ததும்ப நடிக்க அஜித்தைவிட வேறு எவராலுமே இயலாததால் அஜித்திடம் சம்மதம் பெற கடும் முயற்சியை மேற்கொண்டு இறுதியில் இயக்குனர் வென்றே விட்டார். இந்தப்படமானது ஜி என்ற தோல்விக்கும், திருப்பதி,பரமசிவன் என்ற அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு வந்து பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் படத்துக்கு பிறகு வரலாறு தான் தமிழ் சினிமாவில் ஐம்பது கோடியை தாண்டிய திரைப்படம். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களிலே அதிகமாக வசூலிச்ச படமும் இதுதான். மேலும் இந்த படத்துக்காக அஜித்துக்கு பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.

(பதிவு நீண்டுகொண்டு செல்வதால் சுருக்கமா சொல்லிவிடுகிறேன் )

7. மங்காத்தா 

ஏகன்,அசல் ஆகிய இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு 2011 இல் வெளிவந்த திரைப்படம். வெளியான அனைத்து இடங்களிலுமே கலக்சனில் கல்லா கட்டிய திரைப்படம். தமிழ்சினிமாவில் முதன்முதலா ஒரு நடிகர் சிங்கிள் ரோலில் படம் முழுவதுமா வில்லனா தோன்றி நடிச்ச திரைப்படம். 2011 இல் வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் முடியடிச்சு நம்பர் ஒன்னாக திகழ்ந்த படம். அதுமட்டுமல்லாமல் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்ததாய் அதிக வசூலிச்ச படமும்கூட. விமர்சன அடிப்படையிலும், வசூல் அடிப்படையிலும் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் திருப்புமுனையையும் ஏற்படுத்திய திரைப்படம்.

6. காதல் கோட்டை

1996 இல் வெளிவந்த முழுநீள காதல் காவியம். அன்றைய தேதியில் அஜித்துக்கென தனியா மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படம். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி, கமல்-சிறீதேவிக்கு அடுத்து சினிமாவின் சிறந்த ஜோடியாக அஜித்-தேவயானியை எல்லோரும் மெச்சுமளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த திரைப்படம். வசூலில் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு இயக்குனர் அகத்தியனுக்கு சிறந்த கதைக்கான தேசிய விருதும் இப்படத்துக்கு கிடைத்தது.

5. அமர்க்களம் 

1999 இல் வெளிவந்த திரைப்படம். வாலி, ஆனந்த பூங்காற்றே, நீவருவாயென என்ற ஹாட்ரிக் ஹிட்டுக்கு பிறகு வந்தாலும் அஜித்துக்கு கிடைத்த முதல் மாஸ் ஹிட் இதென்பதில் அஜித்தின் கரியரில் அமர்க்களம் ஒரு முக்கியமான படமே! ஒவ்வொரு நடிகனுக்குமே தாங்கள் ஏதாவது மாஸ் ஹிட் குடுத்து மாஸ் ஹீரோவாகணும் என்றே விரும்புவார்கள். ரஜினி-கமல் தலைமுறைக்கு பிறகு முதல் மாஸ் அந்தஸ்துள்ள ஹீரோ என்றால் அஜித்தான்.இவரின் ஏனைய சமகால போட்டி நடிகர்கள் இதற்கு 3/4 வருடங்களுக்கு பிறகே மாஸ் ஹீரோவாகினார்கள். அஜித்துக்கென்று பெண்கள்,குடும்ப ரசிகர்கள் தாண்டி இளையோர் பட்டாளங்கள் அவரை ரசிக்க ஆரம்பித்தது இதற்குப்பிறகே. அதுமட்டுமல்ல வாழ்க்கைத்துணைவியை பெற்றுக்கொடுத்ததும் இந்த திரைப்படமே!

4. வாலி 

1999 இல் வெளிவந்த திரைப்படம். உயிரோடு உயிராக,தொடரும் தோல்விகளுக்கும், உன்னைத்தேடி என்ற அவேரேஜ் ஹிட்டுக்கு பிறகு வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டியளிக்கையில் "இயக்குனர்களை தாண்டி நடிகனா எனது வெற்றியில் உரிமை கொள்ளவைத்த படம் வாலி" என்றார். இளவயதிலே நெகடிவ் ரோல் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்திய படம். "நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாயே நடிக்கிறது" எண்டதுக்கு முதன்முதலில் போட்ட பிரேக் வாலிதான். இந்த படம் வந்த காலத்தில் ஊடகங்கள் அஜித்தை கமலுடன் ஒப்பிட்டனர் என்பது அஜித்துக்கு கிடைத்த மேலுமோர் கௌரவம். அது மட்டுமல்ல இந்த படத்துக்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. 

3. தீனா 

2001 இல் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். "மாஸ் னா" அஜித் எண்டதுக்கு ஏற்றாற்போல் அமைந்த திரைப்படம். ஏற்கனவே அமர்க்களத்திலே மாஸ் ஹீரோவாகிவிட்ட நிலையில், இது அவருக்கு மேலுமோர் பரிமாணத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மீடியா,ரசிகர்களால் "தல" என அழைக்கத்தொடங்கியது இந்தப்படத்திலிருந்துதான். வெறுமனே அடிதடி என்றில்லாமல் அதை ஸ்டைலிசாக வேற அஜித்தை நடிக்கவைத்தார் முருகதாஸ். காதல் கோட்டை, அமர்க்களத்துக்கு பிறகு மிகப்பெருமளவு ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த படம் தீனா. தொடர் வெற்றிகளின் உச்சத்தில் இருந்த அஜித்துக்கு தீனாவும் ஒரு திருப்புமுனையே!

2. ஆசை

1995 இல் வெளிவந்த திரைப்படம். இது பற்றி இயக்குனர் வசந்த் சொல்கையில் "எத்தனையோ இயக்குனர்களுக்கு பிரேக் கொடுத்து முன்னேற்றிய அஜித்துக்கு,முதன் முதலில் பெரிய பிரேக் கொடுத்தவன் நான்தான், அது மட்டுமல்ல அன்றைய தேதியில் கல்லூரி மாணவிகளிடையே கேட்டால் அஜித்தை மாதிரியான ஒரு ஆண்கிடைக்கணும் என்றே சொல்வார்கள்." என்றார். அந்தளவுக்கு அஜித்தின் மீதான கிரேஸி அந்தக்காலத்திலே உருவாகிவிட்டது. இது அஜித்தின் ஆறாவது படம், ஹீரோவாக மூன்றாவது படம். பவித்திரா என்ற வெற்றிக்குப்பிறகு ஹீரோவாக மூன்றாவது படத்திலே மிகப்பெரியதொரு வெற்றியை அஜித்துக்கு முதன்முதலில் கொடுத்த படம் ஆசை.இதனால்தான் எத்தனையோ சூப்பர் டூப்பெர் ஹிட் படங்களுக்கு மேலே இதை வரிசைப்படுத்தியுள்ளேன்.  

1. பில்லா (2007)

2007 இல் வெளிவந்து பாக்ஸ் ஆபீசில் மட்டுமல்ல தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம். முழுநீள ஸ்டைலிசான படம். அதுவரை தமிழ் சினிமா கண்டிராதவாறு இயக்குனர் விஸ்ணுவர்த்தனின் கற்பனையில் உருவான படம். அஜித்தின் ஒவ்வொரு அசைவிலுமே ஒரு ஸ்டைல் இருக்கும். ஆழ்வார் என்ற தோல்விப்படத்துக்கும், கிரீடம் என்ற சராசரி வெற்றிப்படத்துக்கும் அடுத்ததாய் வந்த படம். அந்த சீசனில் ஏன் இன்றும் கூட பில்லா மோகம் தமிழ்ரசிகர்களை விட்டகலவில்லை. அன்றைய தேதியில் ரஜினியின் சிவாஜிக்கப்புறம் அதிக வசூலிச்ச படம் பில்லாதான். வசூலிலும்சரி, அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் பிஸ்னஸ், ரசிகர்கள், ஒபெநிங் எல்லாவற்றிலுமே அஜித்தை மிகத்தூர இடத்துக்கு திடீரென ஏற்றி வைச்சது பில்லாதான்...சந்தேகமே இல்லை... அதனால்தான் பில்லாவுக்கு முதலிடம்.

இது எனது கண்ணோட்டத்தில் உருவான தரப்படுத்தல்.. இதில் உங்கள் அபிப்பிராயத்தை பின்னூட்டலில் இடுக..

-வருகை தந்தமைக்கு நன்றி. 







Friday, December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம்- திரைப்பட விமர்சனம்

ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லுமளவுக்கு ஹிட் படங்களை தனக்கேயுரிய பாணியில் ஸ்டைலிசா கொடுத்துவந்த கௌதம் வாசுதேவ மேனனுக்கு யார் கண் பட்டுதோ, இப்பவெல்லாம் இறங்குமுகமாகவே இருக்கின்றது. இறுதியாக விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்கு பிறகு வந்த "நடுநிசி நாய்கள்", "ஏக் திவானா தா" (விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்) இந்த இரண்டும் தோல்வியடைந்ததது. அதுமட்டுமல்ல திரைக்கதை,இயக்கத்தில தனது பிடிவாதமான போக்கால் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய்,சூர்யாவின் படங்களும் கைநழுவி போய்விட்டன. எது எப்பிடியோ எனினும் கௌதமின் படங்களுக்கான கிரேஸி இன்னமும் குறையவில்லை. இந்தப்படத்துக்கான இசையமைப்பாளரை தேர்வுசெய்வதில் ரஹுமான், ஹரிஸ் என போய் இறுதியில் இளையராயாவிடமே அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் இசைவெளியீட்டு விழாவை வேற மிகப்பிரமாண்டமாக செய்தார்கள். இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்க செய்துவிட்டது. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முன்று மொழிகளும் எடுக்க தீர்மானித்தார்கள். அப்புறமாக ஹிந்தியை கைவிட்டு தமிழ்,தெலுங்கில் மட்டும் எடுக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தெலுங்கில் ஜீவாவின் கரக்டருக்கு பதிலாக "நானீ" நடிக்கிறார்.
அடுத்ததாய் பட விமர்சனத்துக்கு போவோம்..


நடிகர்கள்- ஜீவா,சமந்தா,சந்தானம் 
இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் 
இசை- இளையராஜா 
ஒளிப்பதிவு- எம்.எஸ்.பிரபு, ஓம் பிரகாஷ்
தயாரிப்பு- ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்றேட் குமார்,ஜெயராம், கௌதம் மேனன்.
வெளியீடு- போட்டான் காதாஸ், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.

படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இது கௌதம் மேனனின் படங்களில் எதிர்பார்க்கமுடியாது.. அவரின் படங்களை பொறுத்தவரை கதையை நம்பி படம் எடுப்பதில்லை, சிறியதொரு கருவை வைச்சு தனது மேக்கிங்கால் வித்தியாசமான முறையில் ஆடியன்ஸிடம் கொண்டுபோய் சேர்ப்பார். மணிரத்தினம்,ராஜீவ் மேனன்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு பட இயக்குனர்) பாணியிலான இவரது மேக்கிங் வேற இயக்குனர்களிடம் காணக்கிடைக்காததாலும், மணிரத்தினத்தின் படங்கள் இப்போதெல்லாம் பெரிதா வராததாலும் இவரின் இயக்கம் ஒரு தனித்துவமானதாகவே இருக்கின்றது. கதையின்படி ஜீவா,சமந்தா இருவருமே சிறுவயதிலிருந்து பாடசாலை,காலேஜ் என ஒன்றாக படித்து பழகியவர்கள், காதல் வயப்படுகிறார்கள்.. அவ்வப்போது இருவரிடையே ஈகோ பிரச்சினை. பின்னர் பிரிந்து சென்றுவிடுகிறார்கள், சமந்தாவுடனான காதல் சரிப்பட்டுவராதெண்டு தெரிந்த ஜீவா பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்... அப்புறம் என்ன நடக்கிறது?? இதுதான் சுவாரிஸ்யம்.. வழமையான கௌதம் படங்களிலிருந்து கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. இதை படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளுங்கள்.......  
ஜீவா,சமந்தா- இந்த படத்தின் பெரிய பிளசே இவர்கள் இருவரும்தான். ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக இளமையாக, அழகாக சும்மா லட்டுமாதிரி இருக்கிறார்கள். அதனால படம் பிடிக்காதவர்களும் இவர்களை பார்த்தே ஓரளவு திருப்திப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பதிலாக ஹாண்ட்சம் இல்லாத ஹீரோவையும், அட்டு பிகரையும் போட்டிருந்தா முப்பது நிமிடத்துக்குமேல எவரும் பொறுமையாக திரையரங்கில் இருந்திருக்கமாட்டார்கள்.

சந்தானம்- கௌதமின் கைகிளாஸ் படத்துக்கு சந்தானம் மாதிரியான காமெடியன்கள் அவ்வளவு பொருத்தமில்லை எண்டாலும் ஆமை வேகத்தில் செல்லும் ஸ்கிரீன்பிளேக்கு சந்தானத்தின் காமெடிதான் ஆடியன்சை நித்திரை கொள்ளவிடாமலாவது வைச்சிருந்தது.
இயக்குனர் கௌதம் மேனன்- கௌதமிடமிருந்து எதிர்பார்த்தளவு இல்லை. முதற்பாகம் மெதுவாகவே நகருகிறது, அதைவிட எடிட்டிங்கில் படு சொதப்பல். நிறைய காட்சிகள் துண்டாடப்பட்டுவிட்டது.  இரண்டாம் பாகம்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. 

இசையமைப்பாளர்- ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை சொதப்பலெண்டே சொல்ல தோன்றுகிறது. குறிப்பாக பின்னணியில் இவர் கொடுக்கும் குரல் தாங்கமுடியல... அதை வேறு பாடகர்களைக்கொண்டு குரல் கொடுக்கவைத்திருக்கலாம். பாடல்கள் மட்டும் பார்க்கக்கூடியதாயுள்ளது.

சுருக்கமா சொல்லப்போனால் இந்தப்படத்தில் ஜீவா,சமந்தா, சந்தானம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். பாடல்கள் நல்லாயுள்ளன. பின்னணி இசை சொதப்பலாயுள்ளது... கௌதமின் இதற்கு முன்னைய முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்ககூடியதாயுள்ளது..
எனது கருத்துப்படி முதற்பாகம் அவரேஜ், இரண்டாம் பாகம் சூப்பர்.... மொத்தத்தில் ஓகே ரகம்.... 
கௌதமின் வழமையான ஹிட் படங்களே "ஏ" சென்றரில்தான் வசூலில் கல்லா கட்டும். "பி","சி" ஆடியன்சை பெரிதாக கவருவதில்லை. அப்பிடி இருக்கும்போது இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தேறுவது சந்தேகம்தான்..

comment